அறிவுப் போட்டி – 29 : விடைகளும் வெற்றியாளர்களும்

Share this:

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்.

 

அறிவுப் போட்டி 29இல் மாஷா அல்லாஹ், ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

 

(1) நஸீமா பேஹம் (முதலாம்பரிசு) nasimab… at gmail

(2) ஹாரூன் இப்ராஹீம் (இரண்டாம்பரிசு) amharoo… at yahoo

(3) பன்ஸுரா (மூன்றாம்பரிசு) pansu.b… at gmail

 

 

 

 

அறிவுப்போட்டி-29 க்கான சரியான விடைகள்:

 

வினா-01: குர் ஆனில் அன்கபூத் (சிலந்திப்பூச்சி) எனும் அத்தியாயம் எண் எது?

 

விடை : 29

 


 

வினா-02: நபி (ஸல்) அவர்கள் சுவர்க்கத்தில் யாருடைய காலடியோசையைக் கேட்டார்கள்?

 

விடை : பிலால் (ரலி)

 


 

வினா-03: இதில் எந்த நபித்தோழரைக் கஃபனிட முழுமையான ஆடை இருக்கவில்லை?

 

விடை : முஸ்அப் (ரலி)

 


 

வினா-04: ஓர் ஆட்டையாவது வலிமாவாக வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறிய நபித்தோழர் யார்?

 

விடை : அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி)

 


 

வினா-05: கண்ணியமிகு காயிதே மில்லத் ஸாஹிப் அவர்களின் இயற்பெயர் என்ன?

 

விடை : இஸ்மாயீல் ஸாஹிப்

 


 

வினா-06: பைத்துல் மஃமூர் எனும் பள்ளி எங்குள்ளது?

 

விடை : ஏழாம் வானத்தில்

 


 

வினா-07: பைத்துல் மஃமூர் எனும் பள்ளியில் தினமும் எத்தனை வானவர்கள் தொழுகிறார்கள்?

 

விடை : எழுபதினாயிரம்

 


 

வினா-08: கலீஃபா உமர் (ரலி) அவர்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள்?

 

விடை : பத்து

 


 

வினா-09: உஸ்மான் (ரலி) அவர்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள்?

 

விடை : பன்னிரண்டு

 


 

வினா-10: அலி (ரலி) அவர்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள்?

 

விடை : ஐந்து ஆண்டுகள்

 


 

oOo

 

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 29இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தை admin[at]satyamargam.com எனும் மின் முகவரியுடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.