|
ஏடு-இட்டோர்-இயல் -
தலையங்கம்
|
|
திங்கள், 21 நவம்பர் 2011 17:36 |
|
குஜராத் காவல்துறையினர் அரங்கேற்றிய பல 'என்கவுண்டர்' நாடகங்களுள் இஷ்ரத் ஜஹான் குழுவினரைக் கொத்துக் கொலை செய்ததும் அடக்கம். "குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டு குஜராத்துக்கு வந்த லஷ்கரே தொய்பா குழுவினர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று கடந்த 15.06.2004இல் குஜராத் அரசின் குற்றப் புலனாய்வுத் துறை (Detection of Crime Branch - DCB) ஒரு நாடகத்தை அரங்கேற்றியது.
அந்த நாடகத்தின் திரை இப்போது முற்றாக விலகியுள்ளது. கதை, வசன கர்த்தாக்களின் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் 302இன் கீழ் புதிய வழக்குப் பதிவதற்கு, குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் காவல்துறையின் முகத்திரையைக் கிழிக்கும் இந்த உத்தரவை நீதிபதிகள் ஜெயந்த் பட்டேல், அபிலாஷா குமாரி ஆகிய இருவரும் இட்டுள்ளனர்.
|
|
|
ஏடு-இட்டோர்-இயல் -
தலையங்கம்
|
|
சனி, 15 அக்டோபர் 2011 14:03 |
|
ஐந்து கிலோ ஆர் டி எக்ஸ் வெடிமருந்துகளோடு கஷ்மீரிலிருந்து டெல்லியை நோக்கி வந்து கொண்டிருந்த டாட்டா இண்டிகா ( HR-03-0054) லேடன் காரை, நமது உளவுத் துறை கடந்த புதன்கிழமை மாலை ஹரியானா மாநிலத்தின் அம்பாலா ரயில்வே ஸ்டேஷன் பார்க்கிங் பகுதில் மடக்கிப் பிடித்தது. அந்த வண்டியில் பயணித்து வந்தவர்கள் சிறப்புக் காவல்படையினருக்கு 'டிமிக்கி' கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்களாம். ஒருவர்கூட பிடிபடவில்லையாம்.
|
|
ஏடு-இட்டோர்-இயல் -
தலையங்கம்
|
|
சனி, 01 அக்டோபர் 2011 12:36 |
|
நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முஸ்தீபுகளில் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எடுத்துள்ள முடிவுகள் வருத்தப்பட வைக்கின்றன. ஏற்கெனவே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்துப்போட்டு, பெண்களுக்காக எனவும் தலித்களுக்காக எனவும் ஒதுக்கி, முன்னாள் இந்நாள் முதல்வர்கள் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைப்பதில் ஒன்றுபட்டுள்ளனர்.
|
|
|
ஏடு-இட்டோர்-இயல் -
தலையங்கம்
|
|
செவ்வாய், 06 செப்டம்பர் 2011 14:45 |
|
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனையிலிருந்து வடிகட்டப்பட்டவர்களுள் இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பவர்களான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனைக்கு எதிராக, மொழியை முன்வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் கட்சிகளும் அமைப்புகளும் மொழியை வைத்துப் பிழைப்பு நடத்தும் ஊடகங்களும் முழக்கி முடித்துவிட்டனர்.
அவற்றுள் ஆனந்த விகடனில் 'சிறைச்சாலைகள் கொலைக்களம் அல்ல' எனும் தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளிவந்து நமது கவனத்தை ஈர்த்தது.
|
|
ஏடு-இட்டோர்-இயல் -
தலையங்கம்
|
|
வெள்ளி, 29 ஜூலை 2011 19:38 |
|
கடந்த மாதத்தில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதும் நார்வேயில் Anders Behring Breivik எனும் தனிநபரின் பயங்கரவாதத் தாக்குதலில் 92 பேர் கொல்லப்பட்டதும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கன. ஆனால் இரண்டு தாக்குதல்களும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கமும் அதை ஊடகங்கள் காட்சிப்படுத்திய விதமும், கொடுத்த முக்கியத்துவமும் ஊடக தர்மத்தை கேள்விக்குறியாக்கி இருப்பதோடு கவலைக்குரிய பல விஷயங்களை நம்முன் எழுப்பியுள்ளன.
|
|
|
|
|
|
|
|