தவறான நடைமுறைகள் (பிறை-24)

Share this:

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 24

தவறான கருத்துகள்:

  • எட்டு ரக்அத்கள் + வித்ரு மூன்று ரக்அத்கள் தொழுவதற்குப் பதிலாக 20 ரக்அத்களும் வித்ரு மூன்றும் தொழுவது.
  • இந்தத் தொழுகையில் முழுக் குர்ஆனையும் ஓதியாக வேண்டும் என்று நம்புவது; அதற்காக நிறுத்தி நிதானமாக ஓதாமல் அவசர அவசரமாக ஓதுவது.
  • சபீனா என்ற பெயரில் ஒரே இரவில் முப்பது ஜுஸ்வையும் ஓதி குர்ஆனுடன் விளையாடுவது.
  • தமாம் செய்தல் என்ற பெயரில் தொழுகையில் இல்லாத வாசகங்களைத் தொழுகையினூடே சேர்ப்பது. ஒவ்வொரு, இரண்டு ரக்அத்களுக்கு இடையே குறிப்பிட்ட சில திக்ருக்களைக் கூறுவது. தமிழகத்தின் சில ஊர்களில், இவ்வாறு சில திக்ருகளைக் குறிப்பிட்ட சிலர் பெருங்குரலெடுத்து ஓதுவதும் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்துவதும் நடக்கிறது.

ரமளான் இரவுகளில் இஷாவுக்குப் பின், ஃபஜ்ருக்கு முன் குறைந்த பட்சம் 7, அதிக பட்சம் 13 ரக்அத்கள் தொழுவதுதான் சுன்னத் (நபிவழி) என்று கூறுவோம். 20 ரக்அத் தொழுவதற்கு ஆதாரப்பூர்வ நபிவழியில் அடிப்படை இல்லை.

7 முதல் 13 வரை ரக்அத் எண்ணிக்கையையே செயல்படுத்துவோம்; அவை முடிந்தபின் அவரவர் வீடுகளில் இயன்றவரையில் தொழுவோம். உபரியான (நஃபிலான) தொழுகைக்கு எண்ணிக்கை நிர்ணயம் செய்ய வேண்டாம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

oOo

(மீள் பதிவு)
-தொடரும், இன்ஷா அல்லாஹ் …


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.