ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனோகரன் கைது: விளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கும்மிண்டிபூண்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் செல்போனுக்கு கடந்த 10-ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர், சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், இந்து முன்னணி அலுவலகம், பாரிமுனையில் உள்ள ஒரு பிரபலமான கோயில் ஆகியவற்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்து ராஜேஷ், சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில்…