தலைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார்! இந்தியா தயாரா? இப்படி ஊதிப் பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார்? இந்தியத் தொழில் துறை மோடியைத் தூக்கிவைத்துக் கொண்டாடக் காரணம் என்ன?
உலகில் வாழும் மக்களை இரண்டு பிரிவினராகப் பிரித்து விடலாம். அவை,
A) இறைவன் உண்டு (ஆன்மீகவாதிகள்)
B) இறைவன் இல்லை (நாத்திகர்)
இதில் நாத்திகர்களை விட்டுவிடுவோம். இறைவன் உண்டு என நம்பும் A கேட்டகரி மக்களை மேலும் இரு பிரிவினராகப் பிரிக்கலாம். அவை,
அழிப்பவன் மட்டுமே இறைவன் என
எதிர்மறையாய் எண்ணாதே
அளிப்பவனும் அவனே!
ஆலுக்குப் பிடிமானம் முதுமையில்
விழுதுகள்
ஆளுக்கு வெகுமானம் மறுமையில்
தொழுதுகொள்
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஆட்சித்துறை, இந்தியக் காவல்துறை முதலான பொதுப்பணித் துறைகளுக்கான தேர்வு முடிவில் 31 முஸ்லிம்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2012 ஆம் ஆண்டுக்கான UPSC தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளியன்று (03-05-2013) வெளியானது.
என் சகோதரன் அநீதி இழைக்கப்பட்டு
கைதி ஆனான்; அவனது தாயோ
மன உளைச்சலில்
பைத்தியக்காரி ஆனாள்!
மனைவி இருந்தாள்
இறை அச்சத்தோடு பத்தினியாக...
வாரிசுகள் கிடந்தன
பசியும் பட்டினியுமாக...
ஸைது இப்னு ஹாரிதா
زيد ابن حارثة
மக்காவிற்கு யாத்திரை சென்று திரும்பி வந்த தம் குலத்து மக்கள் சொன்ன செய்தியைக் கேட்ட அவருக்கு அதை நம்ப முடியவில்லை. அது அவருக்கு அடிவயிற்றில் பால் வார்த்தது. சோகத்தில் வாடியிருந்த தேகத்தில் சடுதியில் புத்துணர்வு பரவி, முகத்தில் அப்படியொரு பிரகாசம்.
நெதர்லாந்தில் Geert Wilders என்பவர் தோற்றுவித்த Party for Freedom எனும் வலதுசாரி கட்சியின் உறுப்பினர் அர்னோட் வேன் டோர்ன் (Arnoud van Doorn). சமீபத்தில் இவர் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். கடந்த சனிக்கிழமையன்று (20-04-2013) மதீனாவிற்கும், ஞாயிறு அன்று (21-04-2013) மக்காவிற்கும் வருகை தந்த டோர்ன் தனது உம்ராவை நிறைவு செய்துள்ளார். அத்துடன் ஷேக் அப்துர் ரஹ்மான் அல் ஸுதைஸி உட்பட பல மார்க்க அறிஞர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். சரி இதில் என்ன பெரிய பிரமாதம் இருக்கிறது?
கடந்த 15-04-2013 அன்று, ஐந்து வயதுப் பிஞ்சு ஒன்றைக் காமுகன் ஒருவன் கற்பழித்த டெல்லி சம்பவத்தினைக் கண்டித்துள்ள குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோர், "குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்!" என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங்-கும் இச்செய்தியைக் கேட்டு கடுமையான கோபமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணியும் காலம் இது. இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என மாடர்ன் கலாசாரத்தில் சிட்டாகப் பறக்கின்றனர். 'நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம்’ என்பது அவர்களின் கருத்து. ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உகந்தவைதானா? தோல் மருத்துவ நிபுணர் ரவிச்சந்திரனிடம் கேட்டோம்.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நீண்ட காலமாக நான் வாடகை வீடுகளில்தான் வசித்து வருகிறேன். பாவம் என் மனைவி ஜெயா, கொரடாசேரியில் ஒரு பெரிய வீட்டில் வாழ்ந்து வந்தவள்.
நான் இப்போது அடையாறு வண்ணாந்துறையில் வசிக்கும் வாடகை வீடு மிகச் சிறிது. பக்கத்தில் மகள் வீடு. பேத்தியை விட்டுப் பிரிய இயலாமலும், பேத்திக்குத் துணையாய் இருப்பதற்காகவும் ஒரு மிகச் சிறிய வீட்டில் அதிக வாடகை கொடுத்து வாழ்ந்து வருகிறோம்.
பர்மா என்ற மியான்மரில் கடந்த வருடம் மீண்டும் தலைதூக்கிய பவுத்தமத வெறியர்களின் தீவிரவாதம் காரணமாக ஆயிரக் கணக்கான பர்மிய முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டனர். இந்தப் படுகொலைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் கூடத் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தது வெட்கக்கேடு. சூடான், மாலி போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் வன்முறை தலைதூக்கியபோது படை பரிவாரங்களுடன் கூடாரமடிக்கும் அமெரிக்கக் கூட்டுப்படைகள், மியான்மரில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலை விசயத்தில் துரும்பையும் அசைக்கவில்லை.
சுய
சுத்திகரிப்புச் சோதனை
செய்து கொண்டாயிற்றா?
படைப்பின் இயல்பாம்
இச்சைகள் தலைதூக்க
படைத்தவன் வழிகொண்டு
அடக்கியாண்டு விட்டீரா?