|
ஞாயிறு, 29 ஏப்ரல் 2012 11:00 |
|

ஸல்மான் அல்-ஃபாரிஸி
سلمان الفارسي
பகுதி - 2
அம்மூரியாவைச் சேர்ந்த பாதிரியை கடைசித் தருணம் நெருங்கியதும் தமது வழக்கமான கேள்வியை அவரிடம் முன்வைத்தார் ஸல்மான். ஆனால் இம்முறை இந்தப் பாதிரியின் பதில் வழக்கம்போல் துவங்கி வித்தியாசமாய் முடிந்தது.
“மகனே! நீ இதுவரை சேர்ந்து பயின்ற எங்களைப் போன்ற பாதிரிகள் இக்காலத்தில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அரபுகள் மத்தியில் அவர்களிலிருந்து ஒருவர் இறைத் தூதராக தோன்றப்போகும் காலம் நெருங்கிவிட்டது. நபி இப்ராஹீமின் மார்க்கத்தை மீளெழுச்சி பெறச் செய்வார் அவர். சில அடையாளங்களின் மூலம் அவரை நீ அறிந்து கொள்ளலாம்.”
உன்னிப்பாய் ஸல்மான் கேட்டுக் கொண்டிருந்தார். தோன்றப்போகும் இறுதி நபி குறித்து மூன்று அடையாளங்களை அறிவித்தார் பாதிரி.
|
|
வியாழன், 26 ஏப்ரல் 2012 22:09 |
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 14 உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் அரசியல் சட்டப்படி ஆட்சியதிகாரம் நடக்கிறதா என்றால் சனநாயகம் இங்கே கேலிக்குரிய வடிவில் அரங்கேறி வருவதைப் பார்க்கமுடியும். அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான போக்குகளில் அரசியல் சட்டமாவது வெங்காயமாவது.
|
|
சனி, 28 ஏப்ரல் 2012 22:08 |
|
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பள்ளிவாசலின் முன்பு சித்திரை முதல் நாள் அன்று எக்கச்சக்கக் கூட்டம். தமிழ்ப் புத்தாண்டுக்காகச் சிறப்புத் தொழுகை நடந்தது ஒரு பக்கம் என்றால், பாவாஜான் சாகிப் தாத்தா தன்னுடைய 101-வது பிறந்த நாளைக் கொண்டாடியது இன்னொரு காரணம். '101 வயதா?’ என்று புருவம் உயர்த்திப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் அனைவரும்.
|