முஸ்லிம் பெயரில் குண்டு மிரட்டல். மாணவர் ஹரீஷ் கைது!

Share this:

http://4.bp.blogspot.com/-_JBk8-NzgyU/UQZ4H4qbjNI/AAAAAAAAAWM/Jj4y4BeCRqA/s1600/hindutva-terrorism.jpgந்து மாணவர் ஒருவர் “முஸ்லிம் பெயரில்” வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிக்கியிருப்பது இன்று (04-05-2015) தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக “முகமது அலாவுதீன்” என்ற பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஹரீஷ் என்ற இந்து மாணவர் காவல்துறையிடம் சிக்கியுள்ளார். கைது செய்யப்பட்டவரின் பின்னணிக்கு ஏற்றவாறு இவரும் “மனநலம் பாதிக்கப் பட்டவர்” என்ற செய்தியை ஊடகங்களில் விரைவில் எதிர்பார்க்கலாம்.

சமீபத்தில் பெங்களூருவில் சிக்கிய ஹிந்துத்துவ பயங்கரவாதி ஒருவர் ட்விட்டரில் அப்துல் கான் என்ற பெயரில் போலியாக மிரட்டல் விடுத்திருந்தார். காவல் துறையிடம் மாட்டியவுடன் “மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆனார்.

http://telugu.greatandhra.com/newphotos1/godse1420740342.jpgமுஸ்லிம் பெயரை பொய்யாகப் புனைந்து, இந்திய தேசத்தந்தை மஹாத்மா காந்தியை சுட்டுக் கொன்று மிகப் பெரும் மதக் கலவரத்திற்கு வித்திட்ட கோட்சே, மும்முறை இந்தியா தடை செய்த R.S.S இயக்கத்தைச் சேர்ந்தவர் ஆவார். கோட்சேவைப் பின் தொடர்ந்து ஹிந்துத்துவ தீவிரவாதிகள் “முஸ்லிம் பெயரால்” ஆங்காங்கே செய்து வரும் பயங்கரவாதச் செயல்களில் திட்டத்தில் தவறுதலாக கோட்டை விட்ட ஒரு சில காரியங்கள் மட்டும் சிக்கி வருகின்றன. அதில் ஒன்று மீண்டும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெரும்பாலான இந்திய ஊடகங்களில் சென்னை எக்மோரை தகர்ப்பது தொடர்பான இச்செய்தி வெளியாகவில்லை. வெளியான ஒன்றிரண்டிலும் காவல்துறை விசாரணைக்கு முன்பே “வெறும் புரளி” (Hoax) என்று எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே காரியத்தைச் செய்து முஸ்லிம் ஒருவர் பிடிபட்டிருப்பாரேயானால் அனைத்து ஊடகங்களும் இணைந்து அவருக்கு இல்லாத ஒரு இயக்கத்தின் பெயரைச் சூட்டி தலைப்புச் செய்தியில் அலங்கோலப்படுத்தியிருக்கும் என்பது உறுதி.


ரயில் நிலையத்திற்கு குண்டு மிரட்டல் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கைது!

சென்னை:சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இன்ஜினியரிங் கல்லுாரி மாணவரை, ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

சென்னை, வேப்பேரியில் உள்ள, காவல் கட்டுப்பாட்டு அறையை, கடந்த, 27ம் தேதி மாலை, 6:10 மணிக்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், தன் பெயர் முகமது அலாவுதீன் என, தெரிவித்து உள்ளார். அதன்பின், ‘சற்று நேரத்தில், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்க உள்ளது; முடிந்தால் தடுத்து பாருங்கள்’ என, தெரிவித்துவிட்டு, தொடர்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து, ரயில் நிலையம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, சோதனை பணி நடந்தது. வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை; மிரட்டல் வெறும் புரளி என, தெரியவந்தது. மிரட்டல் வந்த மொபைல் போன் எண்ணின், ‘சிம் கார்டு’ ஓசூரைச் சேர்ந்த, காந்திமதி என்பவரது பெயரில் வாங்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. ஓசூருக்கு ரயில்வே போலீசார் சென்று விசாரணை நடத்தினர். சென்னை, வண்டலுாரில் உள்ள காந்திமதியின் உறவு பெண் ஒருவர், அந்த சிம் கார்டை பயன்படுத்தி உள்ளார். சமீபத்தில், சிம் கார்டு காணாமல் போயுள்ளது தெரியவந்தது.

சென்னையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஹரீஷ், 20 என்பவர், அந்த சிம் கார்டை எடுத்து உள்ளார். போதை பாக்கு போடும் பழக்கம் உள்ள அந்த மாணவர், சம்பவ தினத்தன்று முதலில், ‘108’க்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து உள்ளார். பின், ‘100’க்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து உள்ளார். அவரை ரயில்வே போலீசார் நேற்று கைது செய்தனர்

நன்றி: தினமலர் (04-05-2015)


Teen Held for Hoax Call to Egmore Station

CHENNAI: Government railway police (GRP) on Sunday arrested a 19-year- old youth for making a hoax bomb call to Egmore railway station on April 27.

According to sources, Harisha, of Bengaluru, is a third year polytechnic student at a college in Tambaram and was staying with his relatives at Alapakkam.

On April 24, he stole a cellphone and laptop while meeting a woman he was in touch with through social media.

Using that phone, he made a number of calls to 108 before dialling 100 to issue a bomb threat to Egmore station.

He was picked up from Villivakkam and two mobiles and the laptop were recovered. Egmore police are probing further.

Source: New Indian Express (04-05-2015)

தொடர்புடைய செய்திகள்:

விளம்பரத்திற்காக குண்டு வீசிக் கொள்ளும் பா.ஜ.க நிர்வாகிகள்!

ராம் – பாம் என்று மீடியாக்கள் ஏன் தலைப்பிட வில்லை?

ரயில் குண்டுவெடிப்பும் தயாநிதி மாறனும்! – ஆளூர் ஷாநவாஸ்

காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்!

கோவையில் தவிர்க்கப்பட்ட பெரும் மதக் கலவரம்!

இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்!

ஆர்.எஸ்.எஸ்ஸும் வி.ஹெச்.பியும் வெடிகுண்டுகள் தயாரிக்கின்றன

தொடர்ந்து தோல்வியுறும் இராம கோபாலனின் மத வியாபாரம்!

கலவரம் ஏற்படுத்த பாகிஸ்தான் கொடியேற்றிய கயவர்கள்; கண்டுபிடித்த Blogger..!

விளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்!

வெடிகுண்டுகளின் பிறப்பிடம் ஆர்.எஸ்.எஸ்!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.