{mosimage}காஷ்மீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்படும் வரை ஆயுதப்போராட்டம் தொடரும் என ஹிஸ்புல் முஜாஹிதீன் அறிவித்துள்ளது. "ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்வு காணும் வழிக்கு மீண்டும் வரவேண்டும்" என்ற மத்திய மற்றும் மாநில அரசுகளின் அழைப்பிற்கு பதிலளிக்கும் பொழுது, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதிகளில் ஒருவரான காஜி மிஸ்பாஹுத்தீன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சிவசேனையினரின் தாக்குதலுக்கு உள்ளான இக்பாலின் மீட்பு அமைப்பு பங்கு பெறும் ஹுரியத் மாநாடு, ஜம்மு காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தின் மிதவாதப் பிரிவினராவர். இவர்கள் ஆயுதம் ஏந்தி போராடுபவர்களை எதிர்த்து வருபவர்கள் என்பதும் பேச்சு வார்த்தையின் மூலமே காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தி வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சிவசேனாவினரின் இத்தாக்குதலை ஹுரியத் மாநாடு மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. "சிவசேனாவினர் நடத்தியது மிகவும் மோசமான தீவிரவாதம்" என மீர் வாயிஸ் உமர் ஃபாரூக்கின் செயலாளர் வழக்கறிஞர். ஷாஹிதுல் இஸ்லாம் கருத்து தெரிவித்தார். "மிதவாதிகளான ஹுரியத் தலைவர்களுக்குப் பாதுகாப்பு தருவதில் அரசு தொடர்ந்து தோல்வியை தழுவுகின்றது; அதன்மூலம் அரசு சிவசேனாவை உற்சாகப்படுத்தும் செயலை செய்து வருகின்றது" என்றும் அவர் கூறினார்.
காஷ்மீர் விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடத்தும் அமைப்பினரை, ஆயுதத்தைக் கைவிட்டு பேச்சு வார்த்தைக்குத் தயாராக அரசு அழைப்பு விடுத்திருக்கும் இவ்வேளையில், மிதவாதிகளான ஹுரியத் அமைப்பின் மீது சிவசேனாவினர் தொடுத்திருக்கும் இந்த கொடூரத்தாக்குதல் ஆயுதப் போராட்ட குழுவினரின் செயலை மேலும் ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்துள்ளது கவலையளிக்கின்றது.