
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான கட்டுரைப் போட்டிக்கான அறிவிப்பினைத் தொடர்ந்து எங்களைத் தொடர்பு கொண்டு வரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்! மேலும், கட்டுரைப்போட்டிக்கான இந்த அறிவிப்பை தங்கள் பகுதிகளில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் சென்றடைய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதனை கட்டுரைப்போட்டி அறிவிப்புப் பக்கத்தினை மின்னஞ்சல் மூலமாகவோ, அச்செடுத்தோ விநியோகம் செய்யுமாறு வாசக அன்பர்களை வேண்டுகிறோம். இறைவனிடமிருந்து நற்கூலி பெற்றுத் தரும் இவ்விழிப்புணர்வு போட்டி அறிவிப்பை தன்னார்வத்துடன் முன்வந்து பலர் அறிந்திடச் செய்ய முன்வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
– நிர்வாகி(சத்தியமார்க்கம்.காம்)