மனிதர்கள் (அந்நாஸ்)

Share this:

காவல் நிலையத்திலோ – வழக்
காடு மன்றத்திலோ
சட்டாம் பிள்ளையிடமோ – கடுங்
கட்டப் பஞ்சாயத்திலோ…

பாதுகாவல் தேடுவது
போதுமான தாகிடுமோ?
மானுடத்தைப் படைத்தவன் – அந்த
மாபெரும் இறையிடம்தேடு !

அவனன்றோ ஆக்குபவன் – துயர்
அனைத்தும் நீக்குபவன்;
மனிதகுலம் மீட்சியுற – நல்
மார்க்கம் தந்த மன்னனவன் !

நிற்கின்ற நிலையினிலோ – முன்
நெற்றிநிலம் தொட்டவாறோ
மனிதரெலாம் வணங்குதற்கு
இணையில்லா இறைவனவன் !

பிணிநீக்கிப் பாதுகாக்க – பல
மருத்துவர்கள் இங்குண்டு
பசியிலிருந்தும் மீட்டுவிடும் – சில
புண்ணியர்தம் பூமியிது !

கண்ணுக்குத் தெரியாமல் – நம்
கணிப்புக்கும் அடங்காமல்
பதுங்கி ஐயநோய் விதைப்போர்
தீங்கைவிட்டும் நீக்கக்கேள் !

இயல்பிலேயே பலவீனம் – இம்
மாந்தர்தம் இதயங்கள்
சந்தேக நோய்விதைக்கும் – அத்
தீயோரிடமிருந்து காக்கக்கேள் !

இத்தகைய தீயோர்கள்…

கண்ணுக்குப் புலப்படாத
படைப் பினங்களிலும் – நம்
கண்முன் நடமாடும் மனிதர்களிலும்
உளரென்று உணர் !

oOo

(ஸூரத்துந்நாஸ் /அல் குர்ஆன் அத்தியாயம் 114ஐத் தழுவி எழுதியது)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.