ஹிஜாப் !!!

Share this:

பத்திரமாயிருக்கிறேன்…
எனக்குள் – நான்
மிக மிகப்பத்திரமாய்….!!!

எச்சில் இலைமீதான
இலையான்களைப்போல
எவர் கண்ணும்
என்னை
அசிங்கப்படுத்துவதும் இல்லை…!!!

டீக்கடை தாண்டி
நடந்து போகையில்…
எல்லோர் கவனமும் பறித்து
என்னைப்பற்றியே
விமர்சித்துத் தொலைத்து
பாவங்களால் நிரம்பிவழிய…
வாய்ப்பளிப்பதில்லை- நான்…!!!

என்னைப்
பின்தொடர்ந்து வா…
விசிலடி..!!!!
கேலிசெய்….!!!
என யாரையும்…
என் உடைகளால்
சீண்டிவிடுவதில்லை நான்…!!!

வகுப்பறைகளிலும்…
பாடப்புத்தகம் மீதான
அடுத்தவர் கண்களை
ஒருபோதும்
கிழித்துப்போடுவதில்லை-நான்!!!

விழிகளால் ஊரே ரசித்து…
கழித்துப்போட்ட
எச்சில் பண்டமாய்
எப்போதும் இருந்ததில்லை – நான்!!!

அல்லாஹ்வின் கட்டளைகளில்;
கணவனின் கண்களில்;
நான் மிகப்பெரும்
அழகியாய்
உயர்ந்து நிற்கிறேன்…!!!

அறியாமையினால்;
இவர்கள்தான்
உரத்துக்கூவுகிறார்கள்….
ஹிஜாப்
அடக்குமுறையென்று!!!!!!!!!

பாவம் அவர்கள்….;
…………………..
அநாவசிய பார்வைகளை….
அந்நியரின் விமர்சனங்களை ….
அனாச்சாரங்களை ….
அடக்கிவைக்கும்
அதிஉன்னத ஆயுதம்….
ஹிஜாப்
என்பதை அறியாமல்….!!!!

நன்றி : றஹீமா பைஷால்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.