103. காலம்!

Share this:

ன்னும் விடிந்திராத

இருள்சூழ்ந்த நேரமல்ல;

இனிதாய் உதித்துவிட்ட

இளங்காலைப் பொழுதுமல்ல;

 

உலகே விழித்துக்கொள்ள

உருவான வேளையல்ல;

உச்சியில் செங்கதிரின்

உஷ்ணமான காலமல்ல;

 

கதிரவன் மங்கிச்சாயு மந்தக்

காலத்தின் மீ தாணை…

மனிதன் என்றென்றும்

இழப்பில்தான் இருக்கின்றான் !

 

மறை வானவற்றையும்

மறை ஆணையிட்டவையும்

இறை தந்த மார்க்கத்தையும்

நிறை மனதாய் ஏற்று…

 

சோதனைகளைச் சகித்து

வேதனைகளைப் பொறுத்து

நல்லறங்கள் செய்து

அல்லாதவற்றைத் தவிர்த்து…

 

சத்தியத்தை நேர்மையாகவும்

பொறுமையைக் கனிவாகவும்

தமக்கிடையே உபதேசிக்கும்

நல்லோர்களைத் தவிர !

oOo

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

(மூலம்: அல் குர் ஆன் /சூரா 103:அல்-அஸ்ரு)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.