செய்முறை
துவரம் பருப்பை நன்றாக கழுவி பாதி புளி மற்றும் பாதி மஞ்சள் தூள் சேர்த்து ப்ரெஷ்ஷர் குக்கரில் நன்றாக வேக வைக்கவும். வேறொரு பாத்திரத்தில் ஒரு கப் நீரில் மீதி புளி மற்றும் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். வெந்த துவைரையை நன்றாக ஒரு கரண்டியால் நசுக்கி அதனுடன் இரண்டு கப் நீர் மற்றும் தக்காளி சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். முதல் கொதியிலேயே அதனுடன் மிளகு, சீரகம், சிவப்பு மிளகாய் சேர்த்து விடவும். ஒரு நிமிடம் கழித்து முன்பு செய்த புளி+மஞ்சள்+உப்பு நீர் கலவையை ஊற்றி பைனாப்பிள் சேர்த்து அடுப்பிலிருந்து உடனே இறக்கிவிடவும்.
வாணலியில் நெய் விட்டு அதில் கடுகு போட்டு பொரிந்ததும், தயாரித்த கலவையை அதில் ஊற்றி மூடியால் மூடி பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும். இறக்கி நறுக்கிய கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை தூவ சுவையான பைனாப்பிள் ரசம் ரெடி.
குறிப்பு
சூடான சாதத்துடன் சாப்பிட இனிமை. சூப்பாகவும் பரிமாறலாம்.
|