செய்முறை
அரை மணி நேரம் ஊறிய கலவையை வாணலியில் எண்ணை ஊற்றி வறுத்து எடுக்கவும். சிறிது பல்லாரியை நேர்வாக்கில் அரிந்து எடுத்துக் கொண்டு, மீதி இருக்கும் பல்லாரியையும் தக்காளியையும் நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். சிறிது எண்ணையை வாணலியில் ஊற்றி சூடான பின் அரிந்து வைத்துள்ள பல்லாரியை அதில் போட்டு நன்றாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.
பின்னர் பொரித்த பல்லாரி, தக்காளி கலவை மற்றும் காலிஃப்ளவர் கலவை வறுத்து அனைத்தையும் வாணலில் போட்டு நன்றாக வேக வைக்கவும். இடையே ருசி பார்த்து தேவையான காரத்திற்கு பச்சை மிளகாயை நேர்வாக்கில் அரிந்து சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் நிறம் சேர்த்து தேவையான அளவுக்கு ஸாஸ், உப்பு சேர்த்து நன்றாக வெந்தபின் இளம் சூட்டோடு எடுத்து பரிமாறலாம்.
குறிப்பு: வேக வைக்கும்பொழுது பரிமாற அவசியமான வடிவத்திற்குத் தகுந்தது போல் நீர் சேர்த்துக் கொள்ளவும்.
|