RSS இன் 13 கட்டளைகள்!

Share this:

காலை தினசரியைக் கையில் எடுத்துப் பார்க்கையில் “இஸ்ரேலிய படைவீரர்கள் மூலம் இன்று இறந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை வெறும் ஐம்பது பேர்தானாம்” என்று நிதம் காணும் செய்திகளில், அநீதியாகக் கொல்லப்படும் மனித உயிர்களின் எண்ணிக்கை கண்டு புளித்துப்போனாலும், கொசுவை விட அற்பமாகிப்போன சக சகோதரனின் உயிர் பறிபோவதைப்பற்றி அரபுலகம் உள்பட அனைத்து முஸ்லிம்களும் ஃபலஸ்தீன மண்ணில் நடைபெறும் அநியாயங்களை கண்டுகொள்ளாமலும், அங்கு நிலவும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஒன்றிணைந்து போராடாமலும் இருக்கையில், இஸ்ரேலை வலுப்படுத்தவும் இஸ்லாமியர்களை அழிக்கவும் வல்ல விஷ விதைகள் வளைகுடா நாடுகளிலும் ஏனைய மேற்கு நாடுகளில் பணிபுரியும் இந்துக்கள் மீது பல்வேறு வழிகளில் விதைக்கப்படுகின்றன.

உலகில் மொழி, இன வேறுபாடுகள் மிகுந்து ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பல காரணங்களுக்காக இஸ்லாமிய எதிரிகள் தம்மிடையே அடித்துக் கொண்டாலும், இஸ்லாம் என வரும் பொழுது அனைத்து வேறுபாடுகளையும் மறந்து அவர்கள் ஒரு குடை கீழ் ஒன்றிணைய எப்பொழுதுமே தயங்கியதில்லை. இதனை இஸ்லாமிய வரலாற்றில் வழிநெடுகக் காணமுடியும்.


விஞ்ஞான முன்னேற்றத்தின் உச்சியில் இருக்கும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட தங்கள் கடவுளாக வழிபடும் இயேசுவை அநியாயமாக சிலுவையில் அறைந்து கொன்ற யூத ஃபாஸிஸவாதிகளோடு கூட்டு சேர்ந்து இஸ்லாத்தை அழித்தொழிக்க முயலும் அமெரிக்க ஏகாதிபத்திய கொடுமையை இன்று காணமுடிகிறது. இந்தியாவை தலைமையாக கொண்டு இயங்கும் இஸ்லாமிய எதிர்ப்பு ஹிந்துத்துவ ஃபாஸிஸ கூட்டமான ஆர்.எஸ்.எஸ், யூத தலைமையான இஸ்ரேலுடன் மறைமுகமாக இணைந்து செயல்பட்டுவருவதும் இதனோடு இணைத்துப்பார்க்கப்பட வேண்டியதாகும்.


சமீபத்தில் டாக்டர். R.சிங் என்பவர் எழுதி வெளியிட்டுள்ள “அனைத்து இந்துக்களும் விழிப்படையுங்கள்” என்ற புத்தகம், சில காலங்களுக்கு முன் வெளியாகி பரபரப்புக்குள்ளான ஆர்.எஸ்.எஸ் தனது உறுப்பினர்களுக்கு அனுப்பிய ஓர் உள்சுற்றறிக்கையில் காணப்படும் கட்டளைகள் அனைத்தையும் தாங்கி வெளிவந்து வளைகுடா நாடுகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஹிந்துக்களின் உடன்படிக்கை குறிப்பேடு(Protocol of Hindus) என்று பெயரிடப்பட்டு “இந்துக்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய 13 கட்டளைகள்” என்று பல நச்சுக் கருத்துக்களைகளையும், கட்டளைகளையும் உள்ளடக்கியிருக்கும் இப்புத்தகம் இலண்டனில் வெளியான ஐந்து நாட்களிலிலேயே தடை செய்யப்பட்டது இங்கு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும்.


அரபுலகத்தில் வாழ்ந்து வரும் ஏராளமான இந்துக்களுக்கு எதிராக பிரச்னைகளும், இனக் கலவரங்களும் உண்டாகலாம் என்ற அதீத பயமே இதனைத் தடை செய்வதற்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அமீரகத்திலுள்ள ஷார்ஜா ஒளிபரப்புச் சேவை (Sharjah broadcasting Channeல்) வெளிநாட்டு இலக்கியங்கள் (Foreign Writings) என்ற பெயரில் ஒளிபரப்பும் நிகழ்ச்சியை நடத்துபவரான ராயத் அமான் என்பவர் இதை வெளிப்படுத்தியுள்ளார்.


டாக்டர். R. சிங் எழுதியுள்ள அனைத்து இந்துக்களும் விழிப்படையுங்கள் (All Hindus Wake up), “இந்துத் தலைவர்களின் உடன்படிக்கைக் குறிப்பேடு” என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தில் மற்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் படியான அந்த 13 கட்டளைகள் என்ன? கீழே படியுங்கள்:


1. இஸ்லாமியர்களைக் குறிவைத்து எதிர்மறையான செயல்களை இஸ்ரேல் தொடர்ந்து செய்து வருவதால் அந்நாட்டை இந்துக்கள் மிகவும் நேசமுடைய ஒரு நாடாக கருதவேண்டும்.

2. இயன்றவரையிலான தீய ஒழுக்கங்களையும், நெறிகளையும்  இஸ்லாமிய சமூகத்தினரிடையே பரப்பிட வகை செய்ய வேண்டும்

3. ஹிந்து கோயில்கள் இயன்றவரை அனைத்து இடங்களிலும் நிறுவப்படவேண்டும். ராமரின் உருவச் சிலைகள் பணியிடங்களில் வைக்கப்படல் அவசியம்.

4. இஸ்லாத்திற்கு எதிரான கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படவேண்டும்.

5. இஸ்லாமிய நாடுகளுக்கும், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையேயும் போதைமருந்துகள் விநியோகமும், விபச்சாரமும் பெருமளவு நடைபெற வழிவகை செய்திட வேண்டும்.

6. முஸ்லிம் சமூகத்தினுள் ஊடுறுவிச் சென்று முஸ்லிம் பெண்களுடன் உறவு கொண்டு கருத்தரிக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஹிந்துவாக பிறக்க வைப்பது மிகவும் வலியுறுத்தப்படுகிறது.

7. ஹிந்துவான நீங்கள் ஒரு மருத்துவராக இருக்கும் பட்சத்தில் முஸ்லிம்களுக்கு கருத்தரிப்பதில் சிக்கல் உண்டாக்கிவிட வேண்டும். இயன்றால் பிறவி ஊனமாக்கவும் முயற்சி செய்திடல் வேண்டும்.

8 நீங்கள் ஒரு ஹிந்து நர்ஸ் அல்லது டாக்டராக இருக்கும் பட்சத்தில் பிறந்த முஸ்லிம் குழந்தையின் காதில் ஓம் மந்திரம் ஓதி விட வேண்டும்.

9. நீங்கள் ஒரு இஸ்லாமியரின் கடையில் வேலை செய்தால் இயன்ற வரையில் அங்குள்ள பொருள்களை வீணாக்குவது அவசியம்.

10. முஸ்லிம்களுடன் ஒன்று சேர்ந்து நட்புடன் பழகுவதுபோல் நடித்து, முழு நம்பிக்கைக்கு உள்ளானபின்பு அவர்களின் முதுகில் குத்த வேண்டும்.

11. முடிந்தவரை அனைவரையும் முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பி விட முயற்சி செய்திட வேண்டும்.

12.  முஸ்லிகளின் வீட்டில் நீங்கள் பணிபுரிபவராக இருப்பின் அவர்கள் மனைவி மற்றும் குழந்தைகளை உங்களின் பால் ஈர்த்து உங்களை அவர்களின் மிகுந்த நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும், அன்பிற்குரியவர்களாகவும் வைத்திருப்பது மிக அவசியம்.

13. கறுப்பு நிறக் கயிறை உங்கள் மணிக்கட்டில் கட்டிக் கொள்ளுங்கள்.


இவை அனைத்தும் நீண்டகால திட்டங்கள் வகுத்து தற்போது அமோக விளைச்சலைக் கொய்து வரும் ஆர்.எஸ்.எஸ் தனது தொண்டர்களுக்கு அளித்து வரும் பயிற்சியின் ஒருபகுதி என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். ஆனால் அதனை தற்போது புத்தகவடிவில் அச்சடித்து வெளிப்படையாக வினியோகிக்கும் அளவுக்கு அவர்களுக்கு துணிச்சல் வந்திருப்பதற்கு இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமையின்மையும், பிரச்சினையின் வீரியத்தை சமூகம் சரியாக இன்னும் புரிந்து கொள்ளாமையுமே முக்கிய காரணங்களாகும்.


உலகளாவிய அளவில் முஸ்லிம்களை குறிவைத்து உலக வன்சக்திகள் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இஸ்லாமிய நாடுகளில் பணிபுரிந்து தங்களது வருமானத்தை ஈட்டும் பெரும் அளவிலான இந்துக்களிடையில் கூட ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கக் கூடிய இவ்விஷக்கருத்துக்கள் பரப்பப்பட்டு அவர்களுக்கு தொடர்பயிற்சிகள் கொடுக்கப்படுவதை பார்க்கும்பொழுது, முஸ்லிம் சமுதாயம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதோ என்ற அச்சம் மேலிடுவதை தவிர்க்க இயலவில்லை.


– அப்துல்லாஹ்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.