ஒருங்குறி (Unicode) எழுத்துரு முன்னோடி உமர்தம்பி மறைந்தார்
தமிழ் இணைய வளர்ச்சியில் மிகப் பெரும்பங்கு வகிக்கும் தேனீ எனப்படும் ஒருங்குறி இயங்கு எழுத்துரு உருவாக்கிய தமிழகத்தின் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த யுனிகோடு உமர் என அறியப்படும் உமர்தம்பி அவர்கள் , கடந்த 12 ஜூலை 2006 மாலை 5:30 மணியளவில் மறைந்தார். உமர்தம்பி அவர்கள் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். தணியாத தமிழார்வம் கொண்டிருந்த உமர்தம்பி அவர்கள் உருவாக்கிய தேனீ எழுத்துரு இன்று தொண்ணூறு விழுக்காடு தமிழ்க் கணினிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர அவர் தமிழ்க்கணிமைக்குப் பல செயலிகளை அளித்துள்ளார். இவற்றுடன் தமிழ் இணைய…