<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>இஸ்லாமிய வரலாற்றில் புதுத் ...</title>
		<description>Comments for இஸ்லாமிய வரலாற்றில் புதுத் திருப்பம்! at http://www.satyamargam.com , comment 1 to 50 out of 20 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:22:47 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2983</link>
			<description>Link யை பதிய மறந்து விட்டோன். இதே Link கிழே,

http://www.allaahuakbar.net/SHIITES/index.htm

அன்புடன்,
சைஃபுதீன் - சைஃபுதீன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2981</link>
			<description>சகோதரர் அப்துல் அஜீஸ் மற்றும் அபுசுஃபா,

உங்களின் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...

நான் சொல்ல வந்த கருத்து வெரும் சேர்ந்து தொழுவதால் மட்டும் ஒற்றுமை வந்து விடாது. அவர்களின் தவருகளை திருத்த வேண்டும் என்பதாகும். நீங்களாவே பல விஷயங்களை கற்பனை செய்து எழுதியுள்ளீர்கள். 

அபுசுஃபா அவர்களே, 

நீங்கள் ஷியாக்கள் சம்பந்தமாக கேட்ட கேள்விகளுக்கு பதில், கிழே உள்ள Link ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து ஷியாக்கள் எப்படிபட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஷியாக்களை திருத்த முயலுவது நம் கடமை.

அன்புடன்,
சைஃபுதீன் - சைஃபுதீன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2982</link>
			<description>சகோதரர் அப்துல் அஜீஸ் மற்றும் அபுசுஃபா,

உங்களின் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...

நான் சொல்ல வந்த கருத்து வெரும் சேர்ந்து தொழுவதால் மட்டும் ஒற்றுமை வந்து விடாது. அவர்களின் தவருகளை திருத்த வேண்டும் என்பதாகும். நீங்களாவே பல விஷயங்களை கற்பனை செய்து எழுதியுள்ளீர்கள். 

அபுசுஃபா அவர்களே, 

நீங்கள் ஷியாக்கள் சம்பந்தமாக கேட்ட கேள்விகளுக்கு பதில், கிழே உள்ள Link ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து ஷியாக்கள் எப்படிபட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஷியாக்களை திருத்த முயலுவது நம் கடமை.

அன்புடன்,
சைஃபுதீன் - சைஃபுதீன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2980</link>
			<description>அஸ்ஸாலாமு அலைக்கும் அபுசுபா அவர்களே நீங்கள் சற்று சிந்தித்து பதில் கூறுங்கள்



ஷியாயிஸம் பற்றி தமிழ்முஸ்லிம்.காம் வெளியிட்ட செய்தி பார்க்க

 
அகில உலக அளவிலும் இஸ்லாத்தின் மிகப் பெரிய கொள்கை மாறுபாடாகக் கருதப்படுவது 'ஷியாயிஸம்' என்பதுதான். முஸ்லிம்களின் அரசியல் மற்றும் வளர்ச்சி ரீதியாக அன்றுமுதல் இன்றுவரை இடற்பாடுகளை நாம் சந்திப்பதற்கு ஷியாயிஸம் முக்கியப்பங்கு வகிப்பது நாம் மனதில் நிறுத்த வேண்டிய ஒன்று,

இஸ்லாத்தின் புரிந்துணர்வில் பல மாறுபாடுகளை கண்ட ஷியாக்கள் இந்த உம்மத்தின் ஒரு பகுதியினர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் அவர்களின் கொள்கை புரிந்துணர்வு எடுத்துக் காட்டப்பட வேண்டும், பிறரை எச்சரிக்கைப் படுத்த வேண்டும். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கான் போன்ற நாடுகளில் ஷியாக் கொள்கையின் தாக்கம் (இதுதான் ஷியாக் கொள்கை என்று அந்த மக்கள் அறியாமலே) பரவலாக ஆட்கொண்டுள்ளதை அவர்கள் இஸ்லாத்தை வெளிபடுத்தும் போது தெரிந்துக் கொள்ளலாம். தர்கா வழிபாடு, முஹர்ரம் மாதத்தில் நடக்கும் பல்வேறு (பூ மிதித்தல் என்ற பெயரில் நடக்கும் நெருப்பு மிதித்தல் உட்பட) தன்னை வறுத்திக் கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஷியாக் கொள்கையேயாகும்.

எனவே அதுபற்றி ஓரளவு தமிழ் முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்தவே இந்தக் கட்டுரை.

ஷியா என்பது ஒரு அரபுப் பதமாகும். இலக்கண அடிப்படையில் இதற்கு 'பிரிவு' என்று பொருள். குர்ஆனில் பரவலாக இந்தப்பதம் பிரிவினர் (குரூப்) வழிதோன்றல் போன்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது ஜனாதிபதியான உஸ்மான்(ரலி) அவர்களின் படுகொலைக்குப் பிறகு ஏற்பட்ட படுமோசமான அரசியல் நெருக்கடிகள் முஸ்லிம் சமூகத்தை வெகுவாக பாதித்தது. ஆதரவு - எதிர்ப்பு என்ற கோஷங்கள் எழுந்த போது அலி(ரலி) அவர்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டம் (பிரிவு) களமிறங்கியது. அன்றைக்கு இவர்களை கூட்டிக் காட்ட 'ஷியதுஅலி' அலியின் ஆதரவாளர்கள் (அலி பிரிவினர்) என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து நடந்தேறிய பல்வேறு நிகழ்வுகளுக்குப் பின்னால் 'ஷியது அலி'யில் இருந்த அலி என்ற வார்த்தை நீக்கப்பட்டு 'ஷியா'வாக சுருங்கியது. அதுவே அவர்களை சுட்டிக் காட்டும் பெயராகவும் நிலைத்து விட்டது.

பொதுவாகவே அரசியல் கொந்தளிப்பு - நெறுக்கடி ஏற்படும் போது பொய்கள் சர்வசாதாரணமாக பிறப்பெடுத்து சமூகத்தை மொத்தமாக ஆட்கொள்ளும் என்பது நாம் அனுபவ ரீதியாக அறிந்த ஒன்றுதான். இதே நிலை அன்றைக்கும் நீடித்தது. அலியின் ஆதரவாளர்கள் என்று களமிறங்கியவர்கள் தங்களையும் தங்கள் தரப்பையும் நியாயப்படுத்திக் கொள்ள பொய்களை துணிந்து பரப்பினர். (அவர்களின் இந்த நிலைப்பாட்டிற்கும் அலி(ரலி) அவர்களுக்கும் எந்த சம்பதமும் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்) அன்றைக்கு இஸ்லாம் என்ற கொள்கையே மிகப் பெரும் ஆதிக்கம் செய்துக் கொண்டிருந்ததால் கொள்கைத்தனமான பொய்களே மக்களை வெகுவாக கவரும் என்பதை உணர்ந்தவர்கள் அதையே கடைபிடித்தனர். தாம் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்களுக்காக இவர்கள் இத்தகைய பொய்களை பரப்பினாலும் அந்தப் பொய்கள் பலகாலகட்டங்களை கடந்தும் ஒரு பிரிவினரை தன் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கின்றன. 

எனவே ஷியா என்பது 'ஷியதுஅலி' (அலி குரூப்) என்று துவங்கி அரசியலுக்காக பொய்களை புனைந்து பின்னர் 'ஷியா' என்றாகி அந்த பொய்களின் மீதே நிலைத்து விட்டவர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

அவர்களின் அரசியல் ரீதியான பொய்கள் கொள்கை ரீதியாக எப்படியெல்லாம் வியாபித்தது என்பதில் சிலவற்றை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

நபி(ஸல்) அவர்கள் மீது பொய்களை துணிந்து சொல்வதில் அரசியல் பிரிவுகள் முன்னணியில் நின்றன. இப்பிரிவினரில் ஷியாக்கள் அதிகமாக பொய்களை பரப்பியவர்களாவர். இவர்களில் மிக மோசமானவர்கள் அவர்களில் ஒரு பிரிவான ''ராபிழா'' என்ற பிரிவைச் சார்ந்தவர்கள் தான்.
'ராபிழாக்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்' என மாலிக்(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது,

'அவர்களிடம் பேசாதீர்கள், அவர்களிடமிருந்து கிடைக்கும் எந்தச் செய்தியையும் அறிவிக்காதீர்கள், அவர்கள் பொய்யர்கள்' என்று கூறினார்கள. (மின்ஹாஜுஸ்ஸுன்னத்)

'நாங்கள் ஒன்று கூடும்போது எதையாவது ஒரு செயலை நல்லது என நாங்கள் நினைத்தால் உடனே அதை ஹதீஸ் என்று கூறிவிடுவோம்' என்று 'ராபிழா' பிரிவினர் ஷைகுகளில் ஒருவர் கூறியதாக பிரபல ஹதீஸ் கலை மேதை 'ஹம்மது பின் ஸலமா'(ரஹ்) அவர்கள் கூறினார்கள், (மின்ஹாஜுஸ்ஸுன்னத்)

'தாங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்றி கூட்டங்களில் 'ராபிழா' பிரிவினரைவிட அதிகமாக பொய் சொல்லக்கூடிய எந்த கூட்டத்தையும் நான் பார்க்கவில்லை' என இமாம் ஷாஃபி(ரஹ்) கூறியுள்ளார்கள். (உலூமுல்ஹதீஸ்: இப்னுகஸீர்)

தங்கள் மனோ இச்சைக்குத் தக்கவாறு பல ஹதீஸ்களை ராபிழாக்கள் உருவாக்கிக் கூறியுள்ளனர். அவைகளில் பின்வரக்கூடிய செய்திகள் குறிப்பிடத் தக்கவையாகும்.

நபி(ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜிலிருந்து திரும்பி வரும்போது 'கதீர்ஃகம்' என்ற இடத்தில் சஹாபாக்களை ஒன்றுசேர்த்து, எல்லா நபித்தோழர்களையும் பார்க்கும்படி அலி(ரலி) அவர்களின் கையை பிடிக்து 'இவர் தான் என்னால் வசிய்யத்துச் செய்யப்பட்டவர், எனது சகோதரர், எனக்குப் பின்னால் கலீபாவாக வர வேண்டியவர், எனவே இவர் சொல்வதை கேளுங்கள், அவருக்கு வழிபடுங்கள், என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அவர்கள் மீது ஒரு பெரும் பொய்யைக் கூறியுள்ளனர்.

'யாரும் ஆதம்(அலை) அவர்களுடைய அறிவையும், நூஹ்(அலை) அவர்களுடைய தக்வாவையும், இப்ராஹீம்(அலை) அவர்களுடைய பொறுமையையும், மூஸா(அலை) அவர்களுடைய கம்பீரத்தோற்றத்தையும், ஈஸா(அலை) அவர்களுடைய வணக்கத்தையும் பார்க்க விரும்பினால், அவர்கள் அலி(ரலி) அவர்களைப் பார்த்துக் கொள்ளட்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டி கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

''நான் அறிவின் தராசு, அலி அதன் இருதட்டுகள். ஹஸன், ஹுஸைன் இவ்விருவரும் அத்தராசின் கயிறாக இருக்கிறார்கள். ஃபாத்திமா அத்தராசின் தொடர், எங்களிலிருந்து வரும் இமாம்கள் அத்தராசின் தூண்கள், அத்தராசில் தான் எங்களை நேசிப்பவர்களுடையவும், எங்களை வெறுப்பவர்களுடையவும் செயல்கள் எடைப் போடப்படுகின்றன. அலி (ரலி) யை நேசிப்பது நற்செயலாகும், அந்நேசத்தோடு எத்தனை பாவங்கள் செய்தாலும் அவன் தண்டிக்கப்பட மாட்டான், அவர்களை வெறுப்பது பாவமாகும். அவ்வெறுப்போடு செய்யப்படும் எந்த நற்செயல்களும் பயனளிப்பதில்லை'' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

''நான் கல்வியின் பட்டணம், அலி அதன் வாயில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பொய்யாகப் புனைந்து கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

இவ்வாறு அலி(ரலி) அவர்களைப் பற்றியம், அவர்களின் குடும்பத்தார்களைப் பற்றியும் புகழ்ந்து பல ஹதீஸ்களை ஷியாக்கள் இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர்.

இப்படிப்பட்ட ஹதீஸ்கள் மூன்று லட்சத்தை எட்டும் என 'கலீலி' என்பவர் தனது ''அல்இர்ஷாத்'' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுவதில் ஈடுபட்டிருந்த ''அபுல் அவ்ஜாயி'' என்பவரைப் பிடித்துக் கொண்டு வந்து அவருடைய தலையை வெட்டுமாறு 'பாஸரா' என்ற ஊரில் அமீராக இருந்த அலி(ரலி) அவர்களின் பேரரான முஹம்மது என்பவர் கட்டளையிட்டார். அந்நேரத்தில் ''நான்காயிரம் ஹதீஸ்களை நான் இட்டுக்கட்டி உங்களுக்குக் கூறியுள்ளேன், அவற்றில் ஹலாலை ஹராமாகவும், ஹராமை ஹலாலாகவும் ஆக்கிக் கூறினேன்'' என்று ''அபுல் அவ்ஜாயி'' கூறினார். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

ஷியாக்கள் தங்கள் தலைவர்களைப் புகழ்வதோடு நின்றுவிடாமல் அபூபக்கர், உமர், உதுமான் (ரலி - அன்ஹும்) போன்ற பெரும் நபித்தோழர்களை இகழ்ந்து பல ஹதீஸ்களை உருவாக்கிக் கூறியுள்ளனர்.

இதை அறிந்த சில அறிவிலிகள் ஷியாக்களை எதிர்க்க வேண்டுமென்பதற்காக சில ஸஹாபாக்களைப் புகழ்ந்து இட்டுக்கட்டி சில ஹதீஸ்களைக் கூற ஆரம்பித்தார்கள். பொய்யை, பொய்யைக் கொண்டே எதிர்க்கும் மோசமான பழக்கத்தைக் கடைப்பிடித்தார்கள்.

''சுவர்க்கத்தின் மரத்திலுள்ள ஒவ்வொரு இலையிலும் லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்றும் அபூபக்கர், உமர், உதுமான் என்றும் எழுதப்பட்டிருக்கும்'' என்று ஒரு ஹதீஸைப் புனைந்து கூறினார்கள். (தன்ஸீஹ்)

இவ்வாறே முஆவியா (ரலி) அவர்களது அணியைச் சார்ந்தவர்கள் தங்கள் அணிக்குச் சாதமாகப் பல ஹதீஸ்களை உண்டாக்கிக் கூறலானார்கள். சத்தியத்தைச் சொல்பவர்களும், அசத்தியத்தைப் பரப்புபவர்களும் தங்கள் கொள்கைகளை வலுப்படுத்துவதற்காக தாங்களாகவே ஹதீஸ்களை உற்பத்தி செய்து கொண்டார்கள்.

ஷியாயிஸம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்கையாகும். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு தனி மதம் என்று கூட சொல்லலாம்.

நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) அவர்களை உயர்வானவர்களாகச் சித்தரிப்பவர்கள் ஷியாக்கள். மேலும் அபூபக்ர், உமர், உஸ்மான் போன்ற கலீஃபாக்களும் நபித்தோழர்களும் காஃபிர்கள் என்பது ஷியாக்களின் நம்பிக்கை. 

ஷியாக் கொள்கை இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஷியாக்கள் புனிதமாகப் போற்றும் நூல்களிலிருந்து சிலவற்றை இங்கு தருகின்றோம்.

''தொழுகைகளைப் பேணிக் கொள்ளுங்கள்! நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்'' என்பது திருக்குர்ஆன் வசனம். இதற்கு விளக்கம் கூறப் புகுந்த ஷியாக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

(ஐந்து) தொழுகைகள் என்பது ரசூல் (ஸல்), அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவராவர். நடுத் தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது அலீ (ரலி) ஆவார். அய்யாஷி தப்ஸீர் பாகம் 1, பக்கம் 128, நூருஸ்ஸகைன் பாகம் 1, பக்கம் 238 

ஷியாக்களின் மற்றொரு தப்ஸீரில், நபி (ஸல்) அவர்கள் ருகூவு, ஸஜ்தா செய்ய நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள், இறைவா! உன் அடியார் அலீயின் பொருட்டால் அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக! என்று துஆ செய்தார்கள் என இப்னு மஸ்ஊது (ரலி) கூறினார்கள். அல் புர்ஹான் ஃபீ தப்ஸீரில் குர்ஆன் பாகம் 4, பக்கம் 226 

''நான் மூஸா (அலை), கிழ்ரு (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால் அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன்'' என்று அலீ (ரலி) கூறினார்களாம். ஷியாக்களில் புகாரி இமாமைப் போல் மதிக்கப் படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார். அல் உஸுலுல் காபி கிதாபுல் ஹுஜ்ஜத் பாகம் 1, பக்கம் 261 

''உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியை பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியைச் சோதித்தான்'' என்று அலீ (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸீ (ரலி) கூறினார்கள். அல் புர்ஹான் முன்னுரை பக்கம் 27 

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போது ''முஹம்மதே! திரும்பிப் பாரும்'' என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலீ (ரலி) நிற்கின்றார்கள். தஃப்ஸீருல் புர்ஹான் பாகம் 2, பக்கம் 404

எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப் படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்குத் தெரியாமல் நடந்திராது, நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலீ (ரலி) கூறினார்கள்.  அல்உஸுலு மினல் காபி பாகம் 19, பக்கம் 197 

அலீ (ரலி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்கள். காஷானியின் கிதாபுஸ்ஸாயி பாகம் 1 பக்கம் 837 

நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) உயர்ந்தவர்கள் என்பது இவர்களின் கொள்கை என்பதற்கு இவை சான்றுகளாகத் திகழ்கின்றன.

நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித்தோழர்களும் மதம் மாறி விட்டனர் என்று ஷியாக்களின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸலிம் இப்னு கைஸ் அல் ஆமிரீ தனது நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.

மிக்தாத் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித்தோழர்களும் காபிர்களாகி விட்டனர். 
கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 8, பக்கம் 245 

அபூபக்ரும், உமரும், அலீ (ரலி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்பு கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும், மலக்குகளின் சாபமும், எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும். 
கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 246 

(அபூபக்ருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸார்கள் மட்டும் அபூபக்ருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றோர் அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர். கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 296 

எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலீ என்ற ஒரு நபரைத் தவிர, அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார். கிதாபுஷ்ஷியா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு 

அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் புகழ்ந்துரைத்த நபித்தோழர்களைப் பற்றி தரக்குறைவாகவும், காஃபிர்கள் என்றும் திட்டுவது ஷியாக்களின் கொள்கை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இவை தவிர ஷியாக்களின் இமாம்கள் எனப்படும் 12 பேரைப் பற்றிய இவர்களின் நம்பிக்கையும் ஷியாக்கள் இஸ்லாத்திற்குத் துளியும் சம்பந்தமில்லாத கொள்கையுடவர்கள் என்பதை நிரூபிக்கின்றன.

ஷியாக்களின் பன்னிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள். அல் உஸுலு மினல் காபி பக்கம் 258 

இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்கள். அல் உஸுலுமினல் காபி பக்கம் 398 

இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம், அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாது. அல் உஸுலுமினல் காபி பக்கம் 402 

எந்த மனிதனின் பேச்சாயினும், பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பனிரெண்டு இமாம்களும் அறிவர். குர்புல் இஸ்ஸாத் பக்கம் 146 

பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பூரியான் பாத்தியா நாயகர்) ''வானம் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன், நடந்ததையும் நடக்கவிருப்பதையும் நான் அறிவேன்'' என்றார்கள். அல்உஸுலு மினல் காபி, பாகம் 1, பக்கம் 261 

இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும், பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா? என்று அபூஜஃபர் அவர்களிடம் கேட்ட போது முடியுமே என்றார்கள். கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி, பாகம் 1, பக்கம் 470 

''யார் அலீயை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே, எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலீயை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன்'' என்று அல்லாஹ் அலீ (ரலி) யைப் பற்றி கூறினானாம். பஹ்ரானியின் புர்ஹான் எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23 

அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷியாக்கள். 

அல்லாஹ்வின் பெயராலும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் பெயராலும் இது போல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் ''வரவேண்டியவர்'' என்றொரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். அல் காயிம் என்று இவர்களால் குறிப்பிடப்படக் கூடிய ஒருவர் வருவாராம், அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா?

காயிம் வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார். தப்ஸீர் சாபி பாகம்1, பக்கம் 172 

காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாத்திமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார். தப்ஸீர் ஸாபி பாகம் 2, பக்கம் 108 

இத்தகைய கொள்கைக்காரர்களே ஷியாக்கள். ஷியாக்களைப் பற்றி எழுத வேண்டும் என்றால் இப்படி நிறைய எழுதலாம். அவர்களையும் அவர்களின் கொள்கைகளையும் புரிந்துக் கொள்ளும் சில உதாரணங்களே இவை. பிறிதொரு சந்தர்பத்தில் விரிவாக விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்
 
இப்போது எனது கேள்வி கேட்கிரேன்
//தர்கா வழிபாடு, முஹர்ரம் மாதத்தில் நடக்கும் பல்வேறு (பூ மிதித்தல் என்ற பெயரில் நடக்கும் நெருப்பு மிதித்தல் உட்பட) தன்னை வறுத்திக் கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஷியாக் கொள்கையேயாகும்.//

இது போல் நாமும் அவர்கள் பின்னால் சேர்ந்து நின்று கை தட்டி அவர்களின் செயலை செய்ய சொல்கிரீர்களா?இது எந்த விததில் நியாயம் என்பதை நீங்கள் சொல்லுங்கள்.
நபி(ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்:
'யாரேனும் ஒருவர் எம்முடைய விஷயமொன்றில் புதுமையைச் சேர்க்கின்றாரோ, அது அந்த விஷயம் சார்ந்தது அல்ல, அது நிராகரிக்கப்பட வேண்டும்.' (புகாரி, முஸ்லிம்)


'முஸ்லிம்' ஹதீஸ் கிரந்தத்தில் உள்ள மற்றுமோர் அறிவிப்பின்படி,
'யாரேனும் ஒருவர் நமக்கு உடன்பாடு இல்லாத செயலொன்றை செய்வாரெனில் அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் மொழிந்ததாக வருகின்றது.
எவன் மாற்றுமத கலாசாரத்தை  பின் பற்றுகிறானோ அவன் அந்த மததை சார்ந்தவன் 

//நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) அவர்களை உயர்வானவர்களாகச் சித்தரிப்பவர்கள் ஷியாக்கள். மேலும் அபூபக்ர், உமர், உஸ்மான் போன்ற கலீஃபாக்களும் நபித்தோழர்களும் காஃபிர்கள் என்பது ஷியாக்களின் நம்பிக்கை. //

அல்லா தெளிவாக இவ்வாறு அறிவிக்கிறான்,
கண்ணியம் மிக்க நபித்தோழர்கள் மார்க்கத்தில் மிகத்தெளிவான ஞானத்தை உடையவர்களாகத் திகழ்ந்தனர் என்பதற்கு எல்லாம் அறிந்தவனாகிய அல்லாஹ்வே சான்றளிக்கின்றான். மகத்தும் மிக்க அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்


قُلْ هَـذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللّهِ عَلَى بَصِيرَةٍ أَنَاْ وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللّهِ وَمَا أَنَاْ مِنَ الْمُشْرِكِينَ


(நபியே!) நீர் சொல்வீராக! 'இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தௌ¤வான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.' (12:108)


நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம் என்ற வாசகத்தில் தெளிவான ஞானம் என்பதற்கு அரபியில் இடம்பெற்ற வார்த்தை 'பஸீரத்' என்பதாகும். பின்பற்றியவர்கள் என்பதில் மறுமை நாள் வரை நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுபவர்களும் அடங்குவர் என்றிருந்தாலும் இதில் முதல் பட்டியலில் இடம்பெறுபவர்கள் கண்ணியம் மிக்க ஸஹாபாக்கள் என்பதில் ஐயம் இல்லை

அவர்கலுடன் எங்களையும் சேர்ந்து துதித்து  இது போல் பாட சொல்கிறீர்களா!அவர்கள் நம்மிக்கை போல் எங்களையும்  நம்ம சொல் கிறீர்களா

//ஷியாக்களின் மற்றொரு தப்ஸீரில், நபி (ஸல்) அவர்கள் ருகூவு, ஸஜ்தா செய்ய நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள், இறைவா! உன் அடியார் அலீயின் பொருட்டால் அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக! என்று துஆ செய்தார்கள் என இப்னு மஸ்ஊது (ரலி) கூறினார்கள். அல் புர்ஹான் ஃபீ தப்ஸீரில் குர்ஆன் பாகம் 4, பக்கம் 226 //

இவ்வாறு எங்களையும் அவர்கலுடன் சேர்த்து இது போல் கேட்க சொல் கிரீர்களா!


மேலே உள்ள அந்த சான்று படிக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.இந்த மாதரி கேவலமான கொள்கை உடைவர்களின் பின்னால் எப்படி நின்று தொழுகை உங்களுக்கு மனம் வருமா?உங்களுக்கு மனம் வந்தளும் சரி,இவ்வாறு அலி(ரலி) அவர்களை  நபி(ஸல்) அவ்ர்களை விட உயர்த்தியும்,சங்கை மிகு அருமை சகாபாக்களை மட்டம் தட்டும் அவர்களின் பின்னால் நின்று தொழுகை செய்ய எனக்கு மனம் வராது

மேலும் //நமது மார்க்கம் 'இறைவன் ஒருவனே' என்பது.//
//இவற்றையும் ஏற்றுக்கொள்வது தான் 'எம்மதமு சம்மதம்' என்பது. ஷியாக்கள் 'இறைவன் ஒருவனே' என்பதற்கு மாற்றமானவர்கள் என நீங்கள் கூற வருகின்றீர்களா?//


ஷியாக்கள் மட்டும் இல்லை உலகத்தில் எந்த மததை சேர்ந்த வர்கலை கேட்டு பாருங்க அவர்கள் அனைவரும் இரைவன் ஒருவன் என்று தான் கூறுவார்கள்,இஸ்லாம் என்பது 'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்' என்பதே ,இறைவன் மட்டும் ஏற்று கொண்டு நபி(ஸல்) அவர்களையும் ஏற்று கொள்ள வெண்டும்.  இறைவன் மட்டும் ஏற்று கொண்டு நபி(ஸல்) அவர்களை ஏற்க வில்லை என்றால் எவரும் இஸ்லாம் ஏற்றவன் கிடையாது.
ஆனால் ஷியாக்கள்  அவர்களின் கலிமா ஒரு இஸ்லாம் சொல்லும் கலிமா போல் இல்லை,அவர்கள் சொல்லும் அந்த கலிமாவை என் கைகளால் எழுத எனக்கு விருப்பம் இல்லை,மேலும் அவர்கள் தொழுகைக்காக் கூரும் பாங்கு வின் அவர்களின் வாசகம் ''அஸ்ஸகது அன்ன முகம்மது ரஸுல்லில்லா' என்பதை அவர்கள் 
''அஸ்ஸகது  அலி வலியுல்லா'
''அஸ்ஸகது  அலி வலியுல்லா'
'''அஸ்ஸகது  ஹசன் ,ஹுசைன் வலியுல்லா'
'''அஸ்ஸகது  ஹசன் ,ஹுசைன் வலியுல்லா'

இவர்கள் முகம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தை கூறவில்லை,
அலி,ஹச்ன்(ரலி),ஹுசைன்(ரலி)அவர்களை பின்பற்றுவர்களுக்கு தான்  அந்த கூற்று.

இவ்வாறு கூறும் அவர்களின்  பின்னால் நின்று தொழுகை நிறை வேற்ற வேண்டுமா?
னீங்கள் சற்று சிந்தித்து பதில் கூறுங்கள்

'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்' என்று எவன் மனதார ஈமானை ஏற்று கொண்டாணோ அவனே உண்மையான முஸ்லிம்,மு.'.மீன்.
இதை தவிற்து ஒருவன்  கலிமாவில் கூட்டி,குறைத்து சொல்லுவனோ அவன் எப்படி அழைப்பது என்று எனக்கு தெரியவில்லை.

அல்லா நமது அனைவரையும் நேர் வழிபடுத்துவனாக! ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன். - M.Mohamed Abbas</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2973</link>
			<description>//மனதில் அகம்பாவத்துடன் இக்கருத்தை அவர் கூறியதற்காக//

அவர் அகம்பாவத்துடன் தான் அக்கருத்தைக் கூறினார் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? - இப்ராகீம்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2972</link>
			<description>First the changes should be done in Saudi Arabia, especially shia muslim living in Saudi Arabia. - Noor Mohammed</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2958</link>
			<description>கருத்து வேறுபாடுகளை களைய முயற்சிக்கும் அதே வேளையில் தமது கருத்தை பிறர் மீது திணிக்காமல் இருப்பதும், கருத்து வேறுபாடுகள் மீது நிலைப்பவர்களுக்கு மறுமையில் இறைவன் சரியான தீர்ப்பு வழங்குவான் என்று நம்பி ஒருங்கிணைந்து வாழ்வதுமே ஒற்றுமைக்கான முடிவாக இருக்க முடியும். - ஜி.என் (பரங்கிப்பேட்டை)</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2949</link>
			<description>அன்புள்ளச் சகோதரர் சைஃபுதீன்,

நீங்கள் கூறிய கருத்து தவறு என நினைக்கின்றேன். இணைந்தத் தொழுகையினால் மட்டுமே ஒற்றுமை ஓங்கி விடும் என சொல்வதற்கில்லை. மாற்றம் மனதிலிருந்து வர வேண்டும். ஆனால், மாற்றம் மனதிலிருந்து வராமல் இணைந்து தொழவும் முடியாது என்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். அதே போன்று ஜமாஅத் தொழுகை, ஹஜ் போன்றவற்றின் மூலம் இஸ்லாம் சமுதாய ஒருங்கிணைப்பையும் தலைமைக்குக் கட்டுப்படுதலையும் பயிற்றுவிக்கின்றது என்பதையும் நாம் கவனித்தால் இணைந்து தொழுகை நடத்துவது ஒற்றுமைக்கான ஆரம்பமாக தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

//ஷியாக்கள் அடிப்படையில் பல விசயங்களில் இஸ்லாத்துடன் மாறுபடுகின்றனர்.//

இஸ்லாத்தின் எந்த அடிப்படைகளில் ஷியாக்கள் மாறுபடுகின்றனர் என்ற பட்டியலைத் தர முடியுமா?

இஸ்லாத்தின் அடிப்படையாக,

1. வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே; முஹம்மது அவனின் தூதர்

2. மறுமை நாள், 3. மலக்குகள், 4. சுவர்க்கம், நரகம் 5. நன்மை, தீமை இறவனால் ஏற்படுவது

மேற்கண்டவற்றின் மீது மனதார நம்பிக்கை வைத்து சாட்சி கூறுதலே இஸ்லாத்தின் அடிப்படையாக நான் புரிந்துள்ளேன். இவற்றில் எதனை ஷியாக்கள் நம்பவில்லை அல்லது மறுதலிக்கின்றனர் என்பதைக் கூறுங்கள்.

//பல ஸஹாபாக்களை காபிர்கள் என்று கூறுகின்றனர்.//

அவ்வாறு கூறினால்(அவ்வாறு கூறுவதிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக, சஹாபாக்களை மட்டுமல்ல தன்னை முஸ்லிம் என கூறிக் கொள்ளும் எவரையுமே காஃபிர் என கூறுவதிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக.) ஒருவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவன் ஆகி விடுவானா?. இது நான் மேலே பட்டியலிட்ட இஸ்லாத்தின் எந்த அடிப்படைக்கு மாறானது?. 

ஒருவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவன் என நிச்சயிக்கும் தகுதி இவ்வுலகில் யாருக்கு இருக்கிறது?

ஒருவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதற்குரிய அடிப்படைக் காரணங்கள் யாவை?

'தொழாதவன் காஃபிராகி விட்டான்' என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனில் இன்று ஸுன்னத் வல் ஜமாஅத்தினரில் ஏன், ஏகத்துவத்தில் உறுதியாக இருப்பதாக மார்தட்டும் தவ்ஹீத் ஜமாஅத்தினரிலேயே எத்தனை பேர் 5 வேளை தொழுகைக்கு முறையாகச் செல்கின்றனர்?. இவர்களை எல்லாம் காஃபிர்கள் என இவ்வுலகில் ஒருவரால் கூற இயலுமா?

ஷியாக்கள் சஹாபிகளைக் காஃபிர்கள் என்பது பயங்கரமான தவறு தான். அந்தக் காரணத்திற்காக அவர்களை நாம் காஃபிர் என கூறுவது நாமும் அதே தவறை செய்வதாகாதா?

சரி, ஆயிஷா(ரலி) மற்றும் அலி(ரலி) அவர்களுக்கு இடையில் நடந்த அரசியல் யுத்தத்தைச் சுட்டிக்காட்டி, 'அவர்களை விட நாம் எவ்வளவோ மேல்; அவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு செத்தனர். நாம் அவ்வாறு செய்யவில்லையே' என ஒருவர் கூறினால் இவரின் நிலை என்ன?. சத்திய சஹாபாக்களை அவர்களின் ஈமானுக்கும் இறைவனிடத்தில் வாக்களிக்கப்பட்ட அவர்களின் தகுதிக்கும் கால் தூசுக்குக் கூட தகுதி பெறாத நம்மை விட தாழ்த்தி வைத்து, மனதில் அகம்பாவத்துடன் இக்கருத்தை அவர் கூறியதற்காக அவரை நாம் காஃபிர் என கூறலாமா?

//இவர்களை திருத்த முயல வேண்டுமே தவிர,//

எவராலும் எவரையும் திருத்த முடியாது. நபி(ஸல்) அவர்களாலேயே முடியவில்லை.

நமது பணி இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எடுத்தியம்பிக் கொண்டு இருத்தல் மட்டுமே. நபி(ஸல்) அவர்கள் அப்பணியைத் தான் நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றார்கள். 

இஸ்லாத்தை முறையாக விளங்காத ஒரு முஸ்லிமுக்கு இஸ்லாத்தைப் பயிற்றுவிப்பதற்கும் அவருடன் இணைந்து தொழுவதற்கும் என்ன தொடர்பு உள்ளது?

மதீனாவில் உள்ள புதிதாக இஸ்லாத்திற்கு இணைந்த மக்களுக்கு இஸ்லாமிய அடிப்படை விஷயங்களைப் போதிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் ஆட்களை அனுப்பி வைத்தனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்தச் சஹாபி மதீனாவில் மக்களுக்கு போதனை நடத்திய காலகட்டத்தில் அவர்களுடன் இணைந்து தொழாமல் தனியாகவா தொழுது கொண்டிருந்தார்?. நபி(ஸல்) அவர்கள் அந்தச் சஹாபிக்கு அவ்வாறா கட்டளையிட்டார்கள்?. இல்லையே. 

//சும்மா இவர்களுடன் சேர்ந்து தொழுகை நடத்துவது, எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைக்கு உப்பானது.//

அடிப்படையை விட்டே விலகி நிற்கின்றீர்கள். முதலில் ஷியாக்களை முஸ்லிம்களாக நீங்கள் கருதுகின்றீர்களா? இல்லையா?

'எம்மதமும் சம்மதம்' என்பதன் அர்த்தம் அறியாமல் கூறுகின்றீர்கள்.

நமது மார்க்கம் 'இறைவன் ஒருவனே' என்பது.

இதற்கு மாறாக 'இறைவன் பலர் உண்டு', 'எல்லோரும் இறைவனே', 'தூணும் துரும்பும் இறைவன் தான்', 'இறைவன் இல்லை' போன்ற மார்க்கங்களும் உண்டும்.

இவற்றையும் ஏற்றுக்கொள்வது தான் 'எம்மதமு சம்மதம்' என்பது. ஷியாக்கள் 'இறைவன் ஒருவனே' என்பதற்கு மாற்றமானவர்கள் என நீங்கள் கூற வருகின்றீர்களா?

சகோதரர் சைஃபுதீனிடமிருந்து பதிலை எதிர்பார்க்கின்றேன்.

- அபுசுஃபா - அபுசுஃபா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2947</link>
			<description>அன்பான வாசகர்களுக்கு,

பின்னூட்டமிடும் சகோதரர்களின் கருத்துகள் அனைத்தும் அவர்களது சொந்தக் கருத்துகள் என்பதையும் சத்தியமார்க்கம் தளத்தின் 'இயக்க/அமைப்பு சாராக் கொள்கைக்கு' அவை மாற்றமாக இருந்தாலும் வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்பளித்து, முடிந்தவரை அனைத்துக் கருத்துகளும் இங்கு அனுமதிக்கப் படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றாலும் கட்டுரைக்குத் தொடர்பில்லாத சில தேவையற்ற தனிநபர்/இயக்கத் தாக்குதல்/தூக்குதல் ஆகியவற்றைப் பின்னூட்டமிடும் சகோதரர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுகிறோம்.

புரிதலுக்கு நன்றி! - சத்தியமார்க்கம்.காம்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2953</link>
			<description>சகோதரர் ஸைப்புதீன் அவர்களே ஒற்றுமையை நடைமுறைப்படுத்த இஸ்லாம் மார்க்கத்தில் கொள்கை அடிப்படையிலோ அல்லது இன்னபிற நிபந்தனைக்கு உட்பட்டாலன்றி ஒன்றாக இருக்கக்கூடாது என்று சட்டவரைமுறைகள் இருக்கின்றதா? ஒரே கொள்கையில் இருக்கின்ற நாம் பல இயக்கங்களிலும், பிரிவுகளிலும், மத்ஹபுகளிலும் இருக்கின்றோமே! இந்த அனைத்து பிரிவுகளிலும் உள்ளவர்களுக்கு இறைவன் ஒன்று தான். நபி முஹம்மது ( ஸல் ) அவர்கள்தான். வேதம் குர்ஆன் ஒன்று தான். ஆகா எல்லாம் ஒத்த மார்க்க கருத்தில் உள்ள நாம் இப்பொழுது ஒற்றுமையாக இருக்கமுடிகிறதா ? உங்களுடைய சலாமுக்கு பதில் கிடைக்கிறதா ? பள்ளிவாசலுக்கு ஒன்றாக தொழ முடிகிறதா ? இல்லையே !

ஆக கொள்கை ஒன்றாக இருந்தால் தான் ஒற்றுமை என்பதெல்லாம் சும்மா சொல்லக்கூடிய வார்த்தை. அபச வதவல்லா சூரா எதை நமக்கு போதிக்கிறது. யார் உங்களிடம் வருகிறாரோ அவரை அரவணைக்க சொல்லவில்லையா ? வீண் தர்க்கம் செய்கிறவர்களை விட்டுதள்ளசொள்ளவில்லையா ? 

அவர்கள் முஸ்லிம்கள் தான் வேற எந்த மதமும் கிடையாது. ஏன் ? வேதம் வழங்கப்பட்டவர்களான பெண்களை நீங்கள் மனமுடித்துகொள்ளலாம். என்கிறது நம் மார்க்கம் அப்படி வேதம் வழங்கப்பட்டவர்கள் கிருஸ்துவர்கள், மற்றும் யூதர்கள், இவர்களுடைய அடிப்படையே வேறு அப்படிப்பட்டவர்களின் பெண்களை நம் படுக்கைவரை அனுமதித்த மார்க்கம் இஸ்லாம் மார்க்கம். தன்னை முஸ்லிம்கள் என்று சொல்லும் மக்களை  ஒன்றாக தொழ கூடாது என்று  எப்படி உங்களால் சொல்லமுடிகிறது. ஆதாரத்தை முன்வையுங்கள். தங்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
மா சலாம்.
அப்துல் அசீஸ். - abdul azeez</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2938</link>
			<description>//கொள்கையின் அடிப்படையில் அமையாத ஒற்றுமை நிலைக்குமா?//

சகோதரர் அனீஸ், இதனைக் கொள்கை அடிப்படையில் அல்லாத ஒற்றுமை என எதை வைத்துக் கூறுகின்றீர்கள்?

எது இஸ்லாமிய கொள்கையோ அதனைத் தான் இந்த இரு பிரிவினரும் கொண்டுள்ளதாக நான் அறிகிறேன்.

'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்' என்பதே இஸ்லாமிய கொள்கை. சரி தானா?

இந்தக் கொள்கையில் என்ன மாறுபாட்டை இவ்விரு பிரிவினரிலும் நீங்கள் கண்டீர்கள்?

மாயையிலிருந்து விடுபடும் காலம் கனிகிறது.

அடுத்தவர் கூறுவதைக் கண்ணை மூடி ஏற்காமல்...

சிந்திப்போம்; ஒன்றுபடுவோம். - அல் அமீன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2937</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்.

கேட்பதற்கு சந்தேஷமான விஷயமாக தெரிந்தாலும், வெறும் சேர்ந்து தொழுகை நடத்துவதால் மட்டும் ஒற்றுமை ஓங்கிவிடாது. ஷியாக்கள் அடிப்படையில் பல விசயங்களில் இஸ்லாத்துடன் மாறுபடுகின்றனர். பல ஸஹாபாக்களை காபிர்கள் என்று கூறுகின்றனர். இவர்களை திருத்த முயல வேண்டுமே தவிர, சும்மா இவர்களுடன் சேர்ந்து தொழுகை நடத்துவது, எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைக்கு உப்பானது. - சைஃபுதீன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2935</link>
			<description>இந்த கட்டுரையின் மூலம் சமுதாயம் ஒன்று படவேண்டும் என்று சத்தியமார்க்கம் தளத்தினரின் ஆர்வமும் அதே சமயம் அதில் உள்ள ஒரு சிறு துளி போன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்றதும் அதைப் பார்த்து சந்தோஷமடைந்து அதற்காக பின்னூட்டமிட்டுள்ள எனதருமை சகோதரர்களுக்கும், பின்னூட்டமிடாமல் படித்துவிட்டு மகிழ்ச்சியுடன் விடைபெற்ற சகோதரர்களுக்கும் எனது சலாத்தினைத் தெரிவித்துக்கொண்டு அந்த சகோதரார்களுடைய எண்ணம் விரைவில் ஈடேர நான் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். 

ஆனால் இந்த தமிழ் நாட்டில் தவ்ஹீத் பெயரைச் சொல்லி தங்களுக்காக ஒரு கூட்டத்தை தக்கவைப்பதற்கு சில சமுதாய துரோகிகள் சமுதாயத்தைக் கூறுபோட்டுக்கொண்டிருக்கும் நிலையைப் பற்றி என்ன வென்று சொல்வது? யாரோடும் கூட்டு சேரக்கூடாது. தவ்ஹீத் ஜமாத்தினரால் ஒதுக்கப்பட்டவர்களோடு பேசுவது தெரிந்தாலே அவன் தவ்ஹீதை (ஏகத்துவக்கொள்கையை) விட்டு வெளியேறிவிட்டான் என்று ஃபத்வா கொடுத்து இந்தச் சமுதாயத்தை கூறுபோடுகிறார்களே அவர்கள் பற்றி என்ன சொல்கின்றீர்கள்? 

ஏராளமானோரை மாநாட்டிற்கு அழைத்து அந்த மாநாட்டில் ஒரு கண்காட்சியாக 'தவ்ஹீதிலிருந்து வெளியேறியோர்' என்று பட்டியலிட்டு பிஜே யாரைவிட்டு வெளியேறிவந்தாரோ, இவர் யாரை ஷிர்க்கான குற்றச்சாட்டு அல்லாமல் தங்கள் சொந்த விருப்பு வெறுப்பிற்காகவும், பொருளாதாரக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வெளியேற்றினாரோ அந்த சகோதரர்களை 'தவ்ஹீத் (ஏகத்துவக்) கொள்கையை விட்டு வெளியேறியோர் என்று ஃபத்வாக் கொடுப்பதற்கு இவர்களுக்கு என்ன தகுதி? இவர்கள் என்ன இறைவனா? அல்லது இவர்கள் இறைவனின் தூதுச்செய்தியைப் பெற்ற நபிமார்களா? இவர்கள் இப்படி ஃபத்வாக் கொடுப்பது தான் தவ்ஹீதா? பிஜேயை விட்டு வெளியேறிவிட்டால் அவன் தவ்ஹீதைவிட்டு வெளியேறிவிட்டான் என்று ஒரு புது மார்க்கத்தை - தவ்ஹீதுக்கென்ற புது விளக்கத்தை உருவாக்கியிருக்கும் - இன்றைய தமிழக தவ்ஹீத் வாதிகளை எந்தக் கொள்கையில் சேர்ப்பது? 

இது மிகப்பெரிய சமுதாய துரோகம் இல்லையா? இவர்கள் குற்றம் சுமத்தக்கூடிய அந்த சகோதரர்கள் எந்த விதத்தில் இறைவனுக்கு இனைவைத்து விட்டார்கள்? இந்த நவீன தவ்ஹீத் வாதிகளால் நிரூபிக்க முடியுமா? அல்லது குறைந்தபட்சம் இவர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் செய்ததாக ஒரு பாலியல் குற்றச்சாட்டு (இவராலே குற்றம் சாட்டப்பட்டு சில நாட்கள் இவர் இயக்கத்தலிருந்து நீக்கி பிறகு சேர்த்தது) போன்ற தவறாவது செய்தார்கள் என்று நிரூபிக்க முடியுமா?

நீங்கள் உலக சமுதாயத்தின் ஒற்றுமையை வாரவேற்கின்றீர்கள். ஆனால் இவர்கள் போண்ற நவீன போலித் தவ்ஹீத் வாதிகளுக்கு (?) உங்கள் எழுத்தின் மூலம் சமுதாயத்தைக் கூறு போட ஊக்குவிக்கின்றீர்கள். 

ஒருசிலரிடம் காரணம் கேட்டால் ஒற்றுமை என்பது கொள்கைச் சார்ந்து வரவேண்டும் என்று ஒரு புது விளக்கம் கொடுக்கப்படுகின்றது. நாம் கேட்கின்றோம் இவரிடம் என்ன கொள்கை இருக்கின்றது? இவர் என்னென்ன குற்றச்சாட்டு சொல்கின்றாரோ அந்த அத்தனைக்குற்றச்சாட்டுகளும் மற்றவர்களைக் காட்டிலும் இவரிடம் தானே இருக்கின்றது. இதை யாரும் மறுக்க முடியுமா?

அடுத்து ஓரளவு இவரைப் பற்றி விவரம் தெரிந்த சிலரிடம் கேட்டால் மனிதர்களுக்கு ஒரு சில தவறு வரத்தானே செய்யும் என்கின்றனர். அறியாமல் செய்யும் தவறு வேறு அவர் அறிந்தே வேண்டும் என்றே செய்யும் தவறு வேறு. உதாரனமாக தவ்ஹீதிலிருந்து வெளியேறியோர் என்று பல சகோதரர்களுடைய பெயர் பட்டியலைப் போட்டது தெரிந்து செய்த தவறா அல்லது தெரியாமல் செய்த தவறா? இந்த சமுதாய துரோகிகளுக்கு குறைந்தபட்ட ஆதரவை தெரிவித்தால் கூட அது சமுதாய பிரிவினைக்கு முழு ஆதரவு கொடுப்பதற்கு சமமானதே என்று சொல்லி இந்தக் சமுதாய துரோகிகளை சகோதரர்கள் இனம் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இதை செய்ய ஒவ்வொறு சகோதரரும் முன்வர வேண்டும் என்று சொல்வி முடிக்கின்றேன். வஸ்ஸலாம். 

அதிரை அப்துல்லாஹ் - அப்துல்லாஹ், அதிரை</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2921</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் 
கண்ணியமிக்க சகோதரர்களே

மிகவும் சந்தோஷமான செய்தியாகிய இதை அறிந்த இந்நேரத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் 1993களின் போது இது போன்று முஸ்லிம்கள் ஒன்றிணைந்து 

'' லா ஷியா  லா ஸுன்னி  இஸ்லாமியா இஸ்லாமியா'' 
(No Shia, No Sunni ,Only Islam Only Islam)
என்று கோஷமிட்டு ஒற்றுமையாக ஊர்வலமாக வந்த செய்தி நினைவுக்கு வருகிறது.

இது போன்ற முயற்சிகள் தொடரவேண்டும். பரவ வேண்டும். முஸ்லிம்கள் எல்லாவித கருத்து வேறுபாடுகளையும் விட்டு ஒன்றிணைந்து ஒற்றுமையாக ஓரணியாக செயல்படவேண்டும்.

அதன் மூலம் இஸ்லாம் எனும் ஓரிரை கொள்கையை மக்களுக்கும் முறையாக விளக்கிட எல்லா விதத்திலும் முயற்சிகள் செய்ய வேண்டும்.

இறைவன் சமுதாய ஒற்றுமையை வலுபடுத்திட அனைவரும் முயற்சியும் துவாவும் செய்வோம்.

அன்புடைய
மும்பைகர் - மும்பைகர்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2920</link>
			<description>அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நீண்ட காலத்திற்குப் பின் இணையத்தில் காணக்கிடைத்த இனிப்பான செய்தி. மனதில் இனம்புரியாத ஓர் மகிழ்ச்சி அலை பரவுகின்றது.

குறுகிய வட்டத்தினுள் சுற்றிவரும் ஒரு சில முஸ்லிம் குழுக்களும் பரந்த மனப்பான்மையுடன் செயல்பட வேண்டிய கட்டாயநிலையை உத்தரபிரதேச முஸ்லிம்கள் உருவாக்கியுள்ளனர்.

உலக முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தித்திப்பான செய்தியை வெளியிட்ட சத்தியமார்க்கம்.காம் தளத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்.

இறைவன் சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்தட்டும்.

அன்புடன்
இறை நேசன். - இறை நேசன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2916</link>
			<description>அல்ஹம்து லில்லாஹ்!

பலகோடி உலக முஸ்லிம்களின் உள்ளத்துக்குள் பன்னெடுங் காலமாகக் கனன்று கொண்டிருந்த வேதனை அகலும் 'காலம் நெருங்கி விட்டது'.

அல்லாஹ்வின் கருணைமழை இடையறாது பொழிவதற்கும் பிரிவினைக்கோடு அழிவதற்கும் நாம் அனைவரும் தொடர்ந்து துஆச் செய்வோம்.

செய்தியைத் தந்த சத்தியமார்க்கம் தளத்தினருக்கு வாழ்த்துகள்! - ஜமீல்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2915</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ....)

கொள்கையின் அடிப்படையில் அமையாத ஒற்றுமை நிலைக்குமா? பித் அத் என்ற வழிகேடு நரகில் கொண்டு சேர்க்குமே.  அது பற்றிய கவலை வேண்டாமா?

அன்புடன்

அனீஸ் முனவ்வர் - Aneez Munower</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2930</link>
			<description>நானும் சத்யமார்கம் தளம் வாழ்த்துவதில் சேர்ந்துகொண்டேன்.

// அல்லாஹ்வின் கருணைமழை இடையறாது பொழிவதற்கும் பிரிவினைக்கோடு அழிவதற்கும் நாம் அனைவரும் தொடர்ந்து துஆச் செய்வோம். //

சகோதரர் ஜமீளின் துஆவோடும் 

// இறைவன் சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்தட்டும்.//
 சகோதரர் இறைநேசன் துஆவோடும் 
 
// இறைவன் சமுதாய ஒற்றுமையை வலுபடுத்திட அனைவரும் முயற்சியும் துவாவும் செய்வோம். //

சகோதரர் மும்பைகர் துஆவோடும் 

சேர்ந்து பிரார்த்திக்கிறேன்
மா சலாம்.
அப்துல் அசீஸ். - abdul azeez</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2929</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு சகோதரர் அனீஸ் முனவ்வர் அவர்களே
கொள்கை அடிப்படையில் அமையாத ஒற்றுமை நிலைக்காது என்பது,

 அல்லது கொள்கை அடிப்படையில் தான் ஒற்றுமை நிலைக்கும் என்பதும் ஒரு மாயை என ஒன்றுக்கு பல முறை உலகளவில் பல்வேறு இடங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. ஆக...

பல்வேறு கொள்கைகளில் இருந்த நிலையில் அதைப் பற்றி பேசாததால் ஒற்றுமையாக இருக்க முடிகிறது,

 ஒரே கொள்கையில் இருப்பதாக கருதும் போதும் கருத்து வேறுபாடுகளை பெரிது படுத்தினால் ஒற்றுமையாக இருக்க இயலுவதில்லை.

 கொள்கையில் உறுதியில்லையெனிலும் ஒன்றை எதிர்க்க வேண்டும் என்பதால் ஒற்றுமையாக இருக்க முடிகிறது, ஒரு விஷயத்தை சாதிக்க வேண்டுமெனில் ஒற்றுமையாக இருக்க இயலுகிறது.

ஆக ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று எண்ணி உறுதியாக இருந்தால் ஒற்றுமை என்பது எக்காலத்திலும் எல்லோருக்கும் சாத்தியமே.

 இன்று ஒற்றுமையாக இருப்பதாக காட்சியளிக்கும் எத்தனையோ அமைப்புகள் ஜமாத்துகள் உண்மையில் ஒத்த கொள்கையில்,ஒத்த கருத்தில் இல்லையெனிலும் ஒற்றுமையாக இருப்பதாக பிறர் அறிய வேண்டும் என்று நாடினால், அவ்வாறு ஒன்றாக, ( நாடிய காலம் வரை)இருக்க முடிகிறது இருக்க முடியும் என்பதும் யதார்த்தம்.

அதே போல் கொள்கையடிப்படையில் தான் ஒற்றுமை என்று கூறுபவர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் தாம் கூறும் கொள்கையை முழுமையாக பின்பற்றக்கூடியவர்களை கொண்டுள்ள ஒற்றுமையான குழு என்று கூறுவதும் சரியல்ல.

இவ்வடிப்படையில் அல்லாஹ் 3:103 ல் 'நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக அல்லாஹ்வின் கயிற்றை (வேதத்தை) பற்றிப் பிடியுங்கள் பிரிந்து விடாதீர்கள்' என்று கூறியுள்ளது மிகவும் முக்கியம் என்ற எண்ணம் இருந்தால் அதற்காக எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக் இருந்த நிலையில் அதை சரி செய்ய தீர்த்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம்.
 
மேலும் மனிதர்கள் அனைவரும் ஒரே உம்மத்தினர் என்று அல்லாஹ் கூறுகின்றான் என்பதை கவனத்தில் எப்போதும் வைக்க வேண்டும்.

அதே நேரம் பிரிந்து கிடந்து ஒருவர் அடுத்தவரை குறைகண்டு, ஃபத்வாக்கள் வழங்கி அதற்கேற்ப ஆதாரங்கள் சமர்பிப்பதில் காலத்தை கடத்தினால் அல்லாஹ்வின் முக்கிய கட்டளையாகிய ஒற்றுமையென்பது சாத்தியமாகாது. 

கொள்கை அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் ஏனெனெல் நாங்கள் அனைவரும் 100 சதவீதம் கொள்கையை முழுமையாக பின்பற்றுகிறோம் அப்படி பட்டவர்களையே பரிசீலித்து இணைக்கிறோம் என்பது எல்லாம் முழுமையாக சாத்தியமாகாத வெறும் வார்த்தை ஜாலங்கள் என்பதை சிந்திப்ப்வர்கள் உணர முடியும்.

இப்படி கருதுபவர்கள் அறிந்தோ அறியாமலோ தங்களையும் தங்களை நம்புபவர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதே உண்மையாகும்.

அதே போல் இந்த ஒற்றுமை அல்லது ஒற்றுமையாக தொழுவது பித்தத் ஆகாது. பித்தத் என்றால் மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்துவது.

இங்கு புதிதாக ஏதும் ஏற்படுத்தப் பட வில்லை, மார்க்கம் அனுமதிக்காத பிரிவை களைந்து ஒற்றுமையாக தொழுகை எனும் மார்க்க கடமையை நிறைவேற்றுவது பித்தத்தில் அடங்காது ஆகையால் அஞ்சத் தேவையில்லை. இது போன்ற ஒற்றுமை மலர வழி செய்தால் தான் எதிர் கருத்து அறிந்து ஆய்வு செய்து தன்னை திருத்திக் கொள்ள அதிகம் வாய்ப்புள்ளது.  

இதற்காக முயற்சிப்போம் . அல்லாஹ் நமது இந்த எண்ணத்திற்கும் நிச்சயம் அருள் புரிவான். - S.S.K.</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/923#comment-2926</link>
			<description>அன்புச் சகோதரர் அனீஸ் முனவ்வர்,

எதுவும் நிலைக்குமா நிலைக்காதா என்பதை முடிவு செய்ய வேண்டியவன் அல்லாஹ்; நாமல்ல. முயற்சி செய்ய வேண்டியது நம் கடமை; முடித்துத் தரவேண்டியது அவன் உரிமை.

கொள்கையில் ஒன்றானவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களின் ஒற்றுமை நிலைக்கவில்லையே! ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லிக் கொள்வதுமில்லை; ஒருவர் ஸலாம் சொன்னாலும் மற்றவர் பதில் தருவதில்லை என்ற நிலை ஒரே கொள்கையை உடையவர்களிடம் காணப் படுகிறதே! இதற்கு என்ன சொல்வீர்கள்? 

ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டால்தானே தத்தம் கொள்கை எதுவெனச் சொல்ல முடியும்?

நெருங்கி வருபவரை விரட்டியடிக்கும் உரிமை, பெருமானார் (ஸல்) அவர்களுக்கே இல்லை (80:8,9,10) எனும்போது நமக்கு அந்த உரிமை இல்லவே இல்லை.

நல்லவை நினைப்போம்; அல்லவை தவிர்ப்போம். - ஜமீல்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

