<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>கொல்லுமோ கொலெஸ்ட்ரோல்?</title>
		<description>Comments for கொல்லுமோ கொலெஸ்ட்ரோல்? at http://www.satyamargam.com , comment 1 to 10 out of 10 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:37:09 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/922#comment-2951</link>
			<description>பயன் மிக்கதொரு ஆக்கம். அல்லாஹ் அருள் புரியட்டும்.. - ARB</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/922#comment-2919</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே

அல்ஹம்துலில்லாஹ் வ ஜஸாக்கல்லஹு கைர்

இயந்திரமாக இயங்கும் மனிதவர்க்கம் அல்லது இணையம் இணையம் என்று இயங்காமல் இருக்கும் மனிதவர்க்கம் ஆகிய அனைவரும் படித்து பின்பற்றி பலனடைய தக்க மட்டும் சகோ அபு ஸாலிஹா அவர்கள் குறிப்பிட்டது போல் பிறருக்கும் அறிமுகப்படுத்த வல்ல நல்ல பயனுள்ள
ஆக்கம் என்பதில் சந்தேகமில்லை.

இதை அனைவரும் பேணி பலன் பெறுவோமாக. - மு முஹம்மத்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/922#comment-2918</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்.

பல புதிய தகவல்களை கொண்ட அருமையான கட்டுரை. மிக்க நன்றி.

அன்புடன்


அனீஸ் முனவ்வர் - Aneez Munower</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/922#comment-2913</link>
			<description>மாறிவரும் பணிச்சூழல்கள் முன்பிருந்த காலங்களில் உள்ளதை விட உடலுழைப்பை வெகுவாகக் குறைத்திருக்கிறது. காலில் சக்கரம் கட்டிச் சுழலும் அன்றாட இயந்திர வாழ்வில் உடற்பயிற்சி என்பதே கேள்விக்குறியாகி விட்டது.

இது ஒரு புறம் இருக்க, செயற்கையான உணவுக் கலவைகள், அவசர உணவகங்கள் (ஃபாஸ்ட் ஃபுட்), டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள், நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பதப்படுத்தப்பட்ட இறைச்சி, கலோரியாவது மண்ணாவது என்ற அலட்சியமாக விரும்பியதை உண்டுகழிக்கும் மனோபாவம் போன்ற பல விஷயங்கள் நம் அன்றாட வாழ்வில் பெருகிவிட்டன.

இவையனைத்தையும் அழகாகச் சுட்டிக்காட்டி அறிவுறுத்தும் நல்லதொரு ஆக்கத்தினை அளித்துள்ளீர்கள். பிரிண்ட் எடுத்து தமிழ் அறிந்தோர் மத்தியில் வினியோகிக்கத் துவங்கியுள்ளேன். நன்றி! - அபூ ஸாலிஹா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/922#comment-2908</link>
			<description>அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
\\!!!!கொல்லுமோ கொலெஸ்ட்ரோல்!!!////
இன்றைய கால கட்டத்தில் மிகமிக அவசியமான ஒரு சிறந்த ஆக்கம் இது/ இன்றைய இளைஞர்கள் உணவு வகையில் கவனக்குறைவால் அதிக அளவில் உயிர் இழக்க நிரைய வாய்ப்புகள் இருக்கு/இன்னும் 35-40வயதுக்குள் இறந்து இருக்கிறார்கள்/முரையான உணவுகலும் நல்ல உடற்பயிற்சிகளும் எல்லாவற்றிக்கும் மேல் நல்லபழக்கவழக்கங்களூம் தேவை,,,,
இந்த நல்ல ஆக்கத்தை வெளியிட்ட சத்தியமார்க்கத்திற்க்கு வாழ்த்துக்கள் பல ஆயிரம்
ஹனீஃப்-குவைத் - haneefm</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/922#comment-3021</link>
			<description>Excellent artical thank you very much also i have one question we can take Omega 3 tablet everyone talking about this tablet and Centrum tablet Silver or gold which is good please advice me. - Ibrahim</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/922#comment-3290</link>
			<description>ஆனந்த விகடனில் வெளியான, இந்த ஆக்கத்துடன் தொடர்புடைய ஒரு கட்டுரை...

லப்டப் லப்டப் சொல்லும் சம்திங்..! 

'மனிதர்களைக் கொல்லும் நோய்களில் இதய நோய் 2030ம் ஆண்டில் முதலிடத்தில் இருக்கும்' என்று உலக சுகாதார அமைப்பு, சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டிருக் கிறது. இந்த அறிக்கை குறித்துப் பிரபல இதயநோய் மருத்து வர் என்.சிவகடாட்சத்திடம் கேட்டோம். 
''ஒரு நாடு வளர்ச்சி அடையும்போதும் மக்கள் தொகைப் பெருக்கத்தின்போதும் இப்படிப்பட்ட புள்ளிவிவரங்களும் பயமுறுத்தல்களும் அதிகமாக வரத்தான் செய்யும். 2020ம் ஆண்டு இதய ரத்தக்குழாய்கள் பாதிப்பு நோய் இந்தியாவில் அதிகமாகப் பரவும் ஆபத்து இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு ஏற்கெனவே எச்சரித்திருக்கிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் இந்த நோய்களின் தாக்கம் இருக் கும் என்கிறது இன்னொரு ஆய்வின் முடிவு. இந்தியர்களுக்கு பரம்பரையாகவே இந்த நோய்த் தாக்குதல் உள்ளது என்பதைக் காரணமாகச் சொல்கிறார்கள். 

 
ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலில் HDL, LDL என இரு வகை உண்டு. இதில், HDL கொலஸ்ட்ரால் எந்தத் தீங்கையும் விளைவிப்பது இல்லை. தவிர, LDL கொலஸ்ட்ராலின் அளவை இது குறைப்பதால், இந்த HDL கொலஸ்ட்ராலை நல்ல கொலஸ்ட்ரால் என்று புகழ்கிறார்கள். இந்த நல்ல வகை கொலஸ்ட்ரால் இந்தியர்களின் ரத்தத்தில் பொதுவாகவேகுறை வாக இருக்கிறது. இது அதிகரிக்க வேண்டுமானால் முறையான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். ஆனால், இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் LDL என்கிற கெட்ட வகை கொலஸ்ட்ரால் ரத்தத்தில்அதிக ரித்து ஹார்ட் அட்டாக்குக்கு வழி செய்கிறது என்கிறார்கள். அத்துடன் ஹோமோசிஸ்டின் (Homocystin), எல்.பி. லிட்டில் 'ஏ' (Lp 'a') என்கிற புரதங்களும் அதிக அளவில் இந்தி யர்களுக்கு இருக்கிறது. இதனாலும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். 

இந்த ஆய்வுகள் ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் வாழும் முறை உண்மையிலேயே சரியானதாக, ஆரோக்கியமானதாக இருக்கிறதா?

இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ரத்த அழுத்தமும் நீரிழிவு நோயும் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. நீரிழிவு நோய் பரம்பரையாகத் தொடரக்கூடியது என்றாலும், பலர் இந்த வகை நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாமல் கடைசி வரை அலட்சியமாகவே இருக்கிறார்கள். 2004ம் ஆண்டில் இறப்புக்குக் காரணமான நோய்களின் எண்ணிக்கையில், நீரிழிவு நோய் 12வது இடத்தில் இருந்தது. சில வருடங்களில் நீரிழிவு நோய் இந்தப் பட்டியலில் இன்னும் சில படிகள் முன்னேறும் என்பதில் சந்தேகம் இல்லை. 

இன்று நாட்டில் புகையிலையைப் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.பலர், 'சிகரெட் குடித்தால்தானே நாற் றம் அடிக்கிறது! போதைப் பாக்கு போடுவோம். வாசனையாகஇருக் கும்' என்று புகையிலையின் மாறு பட்ட அவலங்களைத் தேடிக் கண்டுபிடித்து, நோயின் அடித் தளங்களைத் தாங்களே அமைத் துக்கொள்கிறார்கள். முன்பு வட மாநிலங்களில் இந்த போதைப் பாக்குகளின் சிவப்பு நிற எச்சங்கள் தெருவெல்லாம் வியாபித்து இருக்கும். இப்போது அந்த அடையாளங்களைத் தமிழ்நாட்டிலும் காண முடிகிறது. 

அடுத்தது, உடல் பருமன் (besity). ஆண்களின் இடுப்பளவு 38 'இன்ச்'சுக்குக் குறைவாகவும், பெண்களின் இடுப்பளவு 30அல் லது 32 'இன்ச்'சுக்குக் குறைவாக வும் இருக்க வேண்டும். நாம்பயன் படுத்தும் துணிகளின்அளவு இந்த அளவுக்குள் இருந்தால்தான் ஆரோக்கியம். ஆனால், இன்றைக்கு எக்ஸ்ட்ரா லார்ஜ், டபுள் எக்ஸ், ட்ரி பிள் எக்ஸ் என கணக்கில் லாமல் போய்க்கொண்டு இருக்கிறோம்.

நம்மில் பெரும்பாலான வர்கள் திருமணம் ஆகும் வரை ஒல்லியாக இருப்பார்கள். திருமணம் முடிந்ததும் குண்டாகி விடுவார்கள். இதற்கு 'மனைவி வந்த பூரிப்பு', 'வீட்டுச் சாப்பாடு' என்பதெல்லாம் கப்சா காரணங் கள். உண்மையில் மனைவியோடு டூவீலரோ, காரோ வந்துவிடும். சோம்பேறித்தனம் அதிக மாகிவிடும். வயிறு கெட்டுவிடும் என்று ஓட்டலில் பார்த்துப் பார்த்துச் சாப்பிட்டவர், இப் போது 'வீட்டுச் சாப்பாடு' என்று அதிக அளவு உண்பார். இதுதான் உடல் பருமனுக்கான முக்கிய காரணம். 

கால், கைகள், மார்பு எல்லாம் சின்னதாக இருக்கும். வயிறும் பின்பக்கமும் வீங்கிப் புடைத்தி ருக்கும். இதற்கு 'சென்ட் டர் ஒபிசிட்டி' என்று பெயர். நம் ஊரில் இப் படிப்பட்டவர்கள் எக் கச்சக்கமாக இருக்கிறார் கள். சமையல் எண் ணெயை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்துவது, அளவில்லாமல் கண்ட படி சாப்பிடுவது, ஸ்டைலுக்காக சிகரெட், நண்பர்களோடு பார்ட்டி என்கிற பெயரில் பீர் என்கிற பழக்கத்தையெல்லாம் விட்டுவிட வேண்டும். 

உலக சுகாதார அமைப்பு குறிப்பிடும் விஷயத்தைப்பார்த்து யாரும் பீதி அடையத் தேவை யில்லை. அதேசமயம், டீன்ஏஜில் இருந்தே நம் லைஃப் ஸ்டைலை முறைப்படுத்திக்கொள்ளத் தொடங்கிவிட வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை இதய நோய்களுக்குக் காரணமான ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய் பரிசோதனைகளைச் செய்து விடுங்கள். ஆறு மணி நேரத்தூக் கமும் ஒரு மணி நேர உடற்பயிற்சி யும் உடல் எடையைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கும். 'இதற்கெல்லாம் எங்கே சார் நேரம் இருக்கு?' என்று கேட்க லாம். நீங்கள் அலுவலகம் செல்பவர்களா? பஸ், வேன், ஆட்டோவில் செல்பவர்கள் இறங்க வேண் டிய இடத்துக்கு 2 கிலோ மீட்ட ருக்கு முன்பாகவே இறங்கிஅலுவ லகத்துக்கு நடந்தே செல்லுங்கள். டூவீலர் வைத்திருப்பவர்கள் நடந்து போகிற தொலைவில் உள்ள இடங்களுக்கு நடந்தே போக வேண்டும். 

அலுவலகம் இரண்டாவது மாடியிலோ மூன்றாவது மாடியிலோ இருக்கிறதா? நல்லது. படிகளில் ஏறி, இறங்குங்கள். அதுவும் செய்ய முடியாவிட்டால் தினமும் 20 நிமிட நீச்சல் அல்லது 30 நிமிட சைக்கிளிங் அல்லது 40 நிமிட வாக்கிங்... இதில் ஏதாவது ஒன்றை வாரத்தில் ஐந்து நாட்கள் செய்யப் பழகினாலே போதும்!

ரிமோட் உங்களின் எதிரி. எழுந்து போய் சேனலை மாற்றப் பழகுங்கள். ரிமோட் பேட்டரி யைக் கழற்றிவிட்டால் உங்கள் குடும்பத்துக்கே நல்லது செய்த வர் ஆவீர்கள்!

இதய நோய்கள் 'காஸ்ட்லி நோய்கள்'. இவற்றுக்கு அளிக்கப் படுகிற சிகிச்சைகள் 'காஸ்ட்லி வைத்தியம்'. ஆனால், இவற்றை அருகிலேயே சேர்க்காமல் தடுக் கிற இலவச மருந்துகள்தான் மேலே சொன்ன பழக்க வழக்கங் கள். இதைப் புரிந்துகொண்டாலே போதும், புள்ளிவிவரங்கள் எல்லாம் பொடிப் பொடியாகிப் போகும்!'' என்கிறார் டாக்டர் சிவகடாட்சம்.

நன்றி: ஆனந்த விகடன் - இப்னு பஷீர்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/922#comment-4750</link>
			<description>நல்ல கருத்துகள் விளக்கங்கள் வளரட்டும் உங்கள் பனி தொடரட்டும் உங்கள் ஆர்வம் நன்றி - kader</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/922#comment-3446</link>
			<description>Very Excellant Article and too usfull for me, thanks for you - Abdul  Guthoose</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/922#comment-3532</link>
			<description>arumai ,melum valara vazhthukkal. - balakumar</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

