<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ...</title>
		<description>Comments for பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு! at http://www.satyamargam.com , comment 1 to 4 out of 4 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:10:56 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/918#comment-3923</link>
			<description>இருக்காதா பின்னே 
நாங்கள் ( முஸ்லிம்கள் தீவிர வாதிகள் ) என்று சொல்லும் கருத்தை ரசிப்பீர்கள். அப்போது மொழி நடையோ மொழி வேறுபாடோ புலப்படாது. ஒன்று மட்டும் நிச்சயம் நாங்கள் ( முஸ்லிம்கள் ) வதைப்பட்டு நிற்கையிலும் கூட எங்களுக்கு நாங்களே ஆதரவு எங்கள் இறைவனே எங்கள் காவலன். 
ரசித்துக் கொள்ளுங்கள் எத்தனைக் காலத்துக்கு ரசிப்பீர்கள்..? ஒரு ஆயுள் முடியுமட்டும் தான் உங்கள் ரசனை எல்லாம். மறுமையில் எல்லாம் தலை கீழாக மாறும் அப்போது ரசிப்பவர் எங்களை( முஸ்லிம்கள் )த்தவிர வேறெவருக்கும் அருகதை இருக்காது இது சத்தியம்.
ஹாரூன் ரஷீத் - ஹாரூன் ரஷீத்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/918#comment-2868</link>
			<description>ஐயா பிரபு,

கருத்த மொழியால சொல்லலாம்.

மொழிய கருத்தால சொல்ல முடியுங்ளா?

மொழிய நடையாக்கலாம்.

நடைய மொழியாக்க முடியுங்ளா?

படிக்கும்போது ரசிக்கலாம்.

ரசிக்கும்போது படிக்க முடியுங்ளா? - ஏழை</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/918#comment-2867</link>
			<description>படித்தேன்
ரசித்தேன்
கருத்தை அல்ல
உற்சாகமான மொழி நடையை... - பிரபு</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/918#comment-2845</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே

 முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக களங்கம் கற்பிக்கும் வகையில் உலக அளவில் மீடியாக்கள் செயல் படும் போதும், முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்த அல்லது செய்யாமல் சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட நிலையிலும் கூட அது செய்தியாக்கப் பட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் தவறாக சித்தரிக்கப் படும் நிலையிலும்... முஸ்லிம்கள் ஒரு முக்கியமான காரியத்தை செய்ய வேண்டியுள்ளதாக நான் கருதுகிறேன்.

1) முஸ்லிம்கள் சத்திய இஸ்லாத்தின் எல்லா கட்டளைகளயும், எல்லாவகையிலும் முழுமையாக செயல்படுத்தக் கூடிய முஸ்லிம்களாக மாற, மாற்றிட முயல வேண்டும்.

2) இதன் மூலம் தனக்கும் தனது குடும்பத்திற்கும் மட்டுமின்றி தன்னை சுற்றியுள்ள சமுதாயத்திற்கும் நலன் விளையும் என்பதில் உறுதியான நம்பிக்கை யுடையவர்களாக, செயல் ஆற்ற வேண்டும் அதன் மூலம் அனைவருக்கும் நிதர்சனமாக இஸ்லாத்தின் முஸ்லிம்களாக வாழ்வதின் நன்மையை எடுத்துரைக்க வேண்டும்.

3) அதே போல் முஸ்லிம்கள் இஸ்லாத்தினை பின் பற்றுவதன் தனி நபர்களாக அல்லது இணைந்த குழுவாக  சமுதாயத்திற்கு செய்த சாதனைகள், செய்து வரும் நற்பணிகள் தொண்டுகள் போன்றதை செய்தியாக்க பரவலாக இயன்ற வகையில் சிற்றேடுகள் முதல் நாளிதழ்கள் மாத இதழ்கள், நூலகங்கள், ஊடகங்கள், குறுந்தகடுகள், இணையம் என்று  எவ்வித சார்புமின்றி அறிமுகப்படுத்திடவும் எடுத்துரைக்கவும் முன் வர வேண்டும்.

4) இஸ்லாம் பற்றிய தவறான கருத்துக்கள் முஸ்லிம்கள் பற்றிய தவறான சிந்தனையை எழுத்தாலும் சொல்லாலும் முக்கியமாக செயலாலும் அனைத்துலகிற்கும் எத்திவைக்க ஒவ்வொரு முஸ்லிமும் முனைய வேண்டும்.

5) இவ்வகையில் ஒருமித்த குரலாக முஸ்லிம்கள் தமக்கு கற்பிக்கப்படும் அவப்பெயரை களைய ஒன்றிணைந்தோ அல்லது ஒன்றிணையும் காலம் வரை (தமக்குள் உள்ள கருத்துவேறுபாடுகளை பெரிது படுத்தி ஒருவரை ஒருவர் சாடிட இயன்ற வகையில் எல்லாம் தமது ஆற்றலையும் நேரத்தையும் வீணடிப்பதை தவிர்த்து) முஸ்லிம்களின் நலன் நாடி முஸ்லிமகளின் முஸ்லிமாக வழ்வதின் உண்மையான தோற்றத்தையும் நன்மையையும் உலகிற்கு உணர்த்திட முன் வர வேண்டும்...

அதற்கு அல்லாஹ்வின் உதவியை நாடி அல்லாஹ்விடம் இறைஞ்சிட வேண்டும் என்று கூறி அல்லாஹ்விடம் இறைஞ்சிடும்...
உங்கள் அன்பு சகோதரன்.
மு முஹம்மத். - மு முஹம்மத்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

