<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>அம்பலமாகும் அமெரிக்கப் பொய்கள்! ...</title>
		<description>Comments for அம்பலமாகும் அமெரிக்கப் பொய்கள்! சதாமுக்கும் அல்காயிதாவுக்கும் தொடர்பு இல்லை! at http://www.satyamargam.com , comment 1 to 2 out of 2 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:38:55 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/844#comment-2475</link>
			<description>கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் இதே மார்ச் 20ந்தேதி 5.30 மணியளவில் 170,000 சதுர மைல்களைக் கொண்ட ஈராக்கிய மண் இரத்தத்தில் ஊற ஆரம்பித்தது. 

பொய் ஒன்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு 'Operation Iraqi Freedom' என்ற அகங்காரப் பெயரைப் புனைந்துகொண்டு அமெரிக்கா துவங்கிய இந்தப்போர் மூலம் இலட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் சவக்குழிக்கும், எஞ்சியவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகவும் ஆகினர். பல்லாயிர அமெரிக்க சிப்பாய்களுக்கும் ஈராக் மண்ணில் அமெரிக்காவே சாவு மணி அடித்தது.

இவையனைத்தையும் எதிர்த்து உலகம் கொந்தளித்த வேளையில் அவ்வப்போது அமெரிக்காவின் வாஷிங்டன், நியூயார்க், மியாமி, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் &amp; சான் ஃபிரான்ஸிஸ்கோ ஆகிய மாநிலங்களிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகளும் அதிருப்திகளும் பொதுமக்களிடையே எழுந்திருந்தாலும் அவை அனைத்தையும் ஆளும் வர்க்க ஈகோ வென்றது.

அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்த இச் சுயநலப்போர் பற்றியும் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் கட்டுரை வடித்திருந்தீர்கள்: (http://www.satyamargam.com/index.php?option=com_content&amp;task=view&amp;id=819&amp;Itemid=51)

இப்போது அமெரிக்காவின் Institute of Defence Analysis வெளியிட்டுள்ள அறிக்கை (Saddam and Terrorism: Emerging Insights from Captured Iraqi Documents) ஒன்றில் தான் இதுவரை கைப்பற்றியுள்ள 600,000 ஒரிஜினல் டாக்குமெண்ட்களையும் பல்லாயிரக்கணக்கான மணி நேரங்கள் ஓடக்கூடிய ஆடியோ/வீடியோ ஆதாரங்கள் அனைத்தையும் பரிசீலித்துப் பார்த்ததில் 'ஈராக்கிற்கும் அல்காயிதாவிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை!' என்பதை முழு மனதுடன் ஒப்புக்கொண்டுள்ளது. ஒப்புக்கொண்டு எழுதிக் கையெழுத்திட்டது - Harmony என்று அழைக்கப்படும் US Department of Defense Database!

அடப்பாவிகளா? அப்படியென்றால் இதுவரையில் நடந்த இரத்தக்களறி விளையாட்டுக்காக செய்ததா?

கடந்த 2002 செப்டம்பரில் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலரான டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் போர் துவங்குவதற்குக் காரணமாகக் கூறிய 'US had irrefutable evidence of collaboration between baghdad and Al Qaeda' வில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை என்பது வெட்டவெளிச்சமாகி விட்ட சூழலில் ஒரு நாட்டையே நிர்மூலமாக்கிய கொடியவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தால் தகும்? - அபூ ஸாலிஹா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/844#comment-2478</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்.அனைத்து சகோதரர்களுக்கும். இந்த ஈராக் ஆக்கிரமிப்பு போர் வந்து விளையாட்டுக்காக நடத்தப்பட்டது கிடையாது ரொம்ப சீரியஸ்ஆக தான் முடிவெடுத்து செய்யப்பட்டது அதவாது முஸ்லிம்கள் ஆதிக்கம் குறையனும். தம் சிளுவைக்காரர்கள் தான் உலகத்தை ஆலனும். என்ற ஒரே குறிக்கோள் தான் அவர்கள் வேலை. அடுத்து ஈரான் பக்கம் தலை திருப்பி விட்டார்கள் மற்ற சக முஸ்லீம் நாடுகளெல்லாம் கண்கொள்ளா வேடிக்கை பார்த்துகொண்டிருப்பதால் தான் இந்த அவலம் நடக்கிறது.வேடிக்கை நீடிக்கும் வரை சிலுவை ஆதிக்கம் வளர்ந்துகொண்டே தான் இருக்கும் - abdul azeez</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

