<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>ஒற்றுமையும் தமிழக முஸ்லிம் ...</title>
		<description>Comments for ஒற்றுமையும் தமிழக முஸ்லிம் இயக்கங்களும்! at http://www.satyamargam.com , comment 1 to 32 out of 20 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:40:36 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-3025</link>
			<description>சத்தியமார்க்கம் தளத்தினரே, இக்கட்டுரையைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து நின்று சமுதாயத்தைப் பலவீனப்படுத்தும் நமது சமுதாய இயக்கங்களுக்கு அனுப்பி கொடுத்தீர்களா?. அவர்கள் என்ன பதிலைத் தந்தனர்?

ஒற்றுமை குறித்து நமது சமுதாய இயக்கங்களின் நிலைபாட்டினை அறிய ஆவலாக உள்ளோம். குறைந்தப் பட்சம் இக்கட்டுரை குறித்த அவர்களின் கருத்துகளையாவது. அவர்கள் தந்தப் பதில்களை வெளியிடுவீர்களா?

அல் அமீன் - அல் அமீன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-3023</link>
			<description>//www.tamilislam.webs.com//

இத்தளத்தில் முஸ்லிமின் தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையே. தேர்ந்தெடுக்கப்பட்ட 500 ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பு மட்டும் தான் காணப்படுகின்றது. அதுவும் ஏற்கெனவே தமிழ்முஸ்லிம் என்ற தளத்தில் வெளியிடப்பட்டதைப் பிரதி எடுத்து ஒவ்வொரு பக்கங்களிலும் தனது பெயரைப் பதித்து வேறு எவரும் எடிட் செய்து விடா வண்ணம் பாஸ்வேர்ட் போட்டு வைத்துள்ளார். 

திருக்குர்-ஆனையும் ஹதீஸையும் எவரும் தங்களின் சுய இலாபத்திற்காகவோ விளம்பரத்திற்காகவோ பயன்படுத்திக் கொள்வது சரியான செயல்பாடல்ல. 

சகோதரர் சுல்தான் அவர்கள் உடனடியாக இக்குறைகளைச் சீர் செய்து அனைவரும் பயன்படுத்தும் வகையிலும் மறு பிரதிகள் எடுக்கும் வகையிலும் அதனை வெளியிட வேண்டும்.

அல் அமீன் - அல் அமீன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-2077</link>
			<description>//ஒவ்வொரு இயக்கமும் மற்ற இயக்கங்களுடனான நல்லுறவை வளர்க்கவும் பரஸ்பரப் புரிந்துணர்வுடன் செயல்படத் தங்களுக்குள் மாதாந்திரக் கூட்டங்கள் நடத்திக் கொள்ளலாம்; கலந்தாலோசனைகள் மூலம் சமூகத்தின் பொதுப் பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்துப் பாடுபடலாம்; இணைந்து போராடலாம்; ஒருவர் மற்றவர்கள் பணிகளைப் பாராட்டி, ஊக்குவிக்கலாம்; தவறுகள் இருந்தால் கண்ணியமான முறையில், மனதை நோகடிக்காமல் தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டலாம். //

//பிரிந்து நிற்கும் சகோதரர்கள் பெருநாட்களில் வாழ்த்து பரிமாறிக் கொள்ளலாம்; நலம் விசாரிக்கலாம்; சகோதரத்துவத்தை நிலைநிறுத்தலாம்; ஒரே மாதிரியான சமுதாயக் களப்பணிகளில் ஒன்றுபடலாம். உலகில் மனிதர்களது பாராட்டை விட, மறுமையில் கிடைக்கப் போகும் அல்லாஹ் தஆலாவின் உவப்பை ஆசை வைக்க வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற எண்ணத்துடன் கூட்டுச் சேராமல், சமுதாயப் பணிகளுக்காக ஒருவருக்கொருவர் கைகோர்க்க வேண்டும்//.

ஆழ்ந்த சிந்தனையின் விளைவாக வந்த வலிமையான கருத்து இது.

'நாங்க அவய்ங்க மேடைலெ பேச மாட்டோம்; அவய்ங்களையும் எங்க மேடைலெ பேச அனுமதிக்க மாட்டோம்.'

' ஏங்க?'

' அவய்ங்க கொள்க வேறெ; எங்க கொள்க வேறெ.'

'ஒங்க கொள்க என்ன?'

' குர் ஆன் ஹதீஸ்'

'அவங்க கொள்க என்ன?'

'அது.. வந்து.. அவய்ங்களும் குர் ஆன் ஹதீஸ் தான் சொல்றாய்ங்க'

'பின்னெ என்ன பிரச்னெ?'

சிக்கல் என்ன, எங்கே என்று ஆய்ந்தால், அது தனி மனித ஆணவம் (EGO) என்பது தெள்ளெனப் புலப்படும்.

சகோதரியின் ஆக்கப்பூர்வமான கட்டுரை, சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் சீரிய முயற்சியின் முதல் படியாகட்டும். 

//எந்தச் சகோதரர்கள் மூலம் வல்ல நாயன் இஸ்லாத்தின் உயிர் மூச்சான ஓரிறைக் கொள்கையைத் தமிழக முஸ்லிம்களில் பலருக்கும் உறுதிபடப் பின்பற்ற வழி வகுத்தானோ,
எந்தச் சகோதரர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் மூலம் பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, மன்னித்தல், கோபம் தவிர்த்தல் ஆகிய இஸ்லாத்தின் அறிவுரையை ஆழப்பதித்தானோ,
திருமறைக் குர்ஆனின் உன்னதத்தையும் அதை ஊன்றிப் படிக்க வேண்டிய அவசியத்தையும் ஆசையையும் மனதில் விதைத்தானோ,
அந்தச் சகோதரர்களிடம் இந்தச் சகிப்புத்தன்மையும் மன்னிக்கும் மனப்பாங்கும் ஒற்றுமையும் ஏற்படாதது ஏன்?. சகோதர முஸ்லிமுடன் உறவாடாமல், பகைமை மனப்பான்மையினால் - இயக்க வெறியினால், ஒன்றுபட்டுச் செயாலாற்றாமல், முகம் பார்த்துப் பேசாமல், ஏன் - ஸலாமுக்குக் கூட மறுமொழி கூறாமல் வெறுப்பு காட்டுவது இஸ்லாம் கற்றுத் தந்ததா?//

தாங்களும் பிரிந்து சமுதாயத்தையும் பிரித்து வைத்துள்ள ஓரிறைக் கொள்கை இயக்கங்களின் தலைவர்கள் அனைவர்க்கும் கட்டாயம் அனுப்பப்பட வேண்டிய ஆவணம் இது.

கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள். - நாஞ்சிலன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-2105</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்

//'பின்னெ என்ன பிரச்னெ?'

சிக்கல் என்ன, எங்கே என்று ஆய்ந்தால், அது தனி மனித ஆணவம் (EGO) என்பது தெள்ளெனப் புலப்படும்.

சகோதரியின் ஆக்கப்பூர்வமான கட்டுரை, சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் சீரிய முயற்சியின் முதல் படியாகட்டும்.// 

அன்பு சகோதரியின் ஆக்கத்தின் பின்னூட்டத்தில் நாஞிலன் அவர்கள் குறிப்பிட்ட வாசகங்கள் குறிப்பாக 

//சிக்கல் என்ன, எங்கே என்று ஆய்ந்தால், அது தனி மனித ஆணவம் (EGO) என்பது தெள்ளெனப் புலப்படும்.//

மும்பையில் அண்மையில் நடந்த பீஸ் மாநாட்டில் ஒரு பேச்சாளர் இந்த EGO என்பதற்கு கொடுத்த விரிவாக்கத்தை கவனத்திற்கு கொண்டு வர ஆசைப்படுகிறேன்.
EGO is Edging God Out 
     (இறைவனை புறக்கணித்தல் )
இறைவனை மறக்கச்செய்து இறைவனை புறக்கணிக்கச் செய்யும் இந்த EGO வை புறக்கணித்து வாழ முயலாதவரை சமுதாயத்தில் சுமூகம் ஒற்றுமை அன்பு அமைதி நிலவுவது அரிது என்பதை அனைவரும் குறிப்பாக முஸ்லிம்களின் தலைவர்கள் உணர்ந்து உணர்த்தி ஈடேற்றம் பெற அல்லாஹ் அருள் புரியவேண்டும்.
மனித நேயமும் அமைதியும் உலகில் என்றும் மலர வேண்டும் என்று நாடும் சகோதரன். - மும்பைகர்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-2098</link>
			<description>மாஷா அல்லாஹ்... 

தமிழக முஸ்லிம் மக்கள் அனைவரின் எண்ணங்களை ஒரே ஒரு கட்டுரையின் மூலம் பிரதிபலித்துள்ள சகோதரி உம்மு ஹிபா அவர்களின் சமூக சிந்தனை மென்மேலும் வளர்ந்து அவர்கள் சமுதாய கடமைகளை நிலைநிறுத்துவதற்கு வல்ல ரஹ்மான் அருள்புரியட்டும். மேலும் இந்த கட்டுரையைப் படிக்கின்ற ஒவ்வொரு முஸ்லிம் சகோதர, சகோதரிகளும் நம் சமுதாய ஒற்றுமைக்கு எந்தெந்த வழிகளில் உதவிடமுடியுமோ அந்தந்த வழிகளில் முனைந்து செயல்பட முன்வர வேண்டும்.

நாமும் சகோதரி தனது கட்டுரையில் தெளிவு படுத்தியதுபோன்று பகைமை மறந்து ஒற்றுமையாக வாழவும் அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டிதந்த வழிமுறைகளைப் பின்பற்றி நடக்கவும் வல்ல ரஹ்மான் நமக்கு அருள்புரியட்டும். ஆமீன்... - mdrafi</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-2322</link>
			<description>நண்பர் நஸீம் அவர்களுக்கு1 அஸ்சலாமு அலைக்கும். தங்களின் தேவைகளான புகாரி,முஸ்லிம் ஹதீஸ்களை தமிழில் பதிவிறக்கம் செய்ய எனது இளைய தளமான www.tamilislam.webs.com க்கு சென்று பதிவிறக்கம் செய்யலாம். உங்களது கருத்துக்களையும் Feed back பக்கத்தில் தவறாமல் பதிவு செய்யவும். நன்றி. - er_sulthan (குலசை சுல்தான்)</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-2310</link>
			<description>Where can I download a copy of Bukhari and other hadith books in the Tamil Language? - Nazim</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-2059</link>
			<description>தௌஹீதின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களை நன்றாக தோலுரிக்கும் கட்டுரை.

உபதேசம் ஊருக்கு மட்டும் தானா? என கேட்கும்,

//'தனது சகோதர முஸ்லிமை இழிவுபடுத்துவதே ஒருவர் மோசமானவர் என்பதற்குப் போதிய சான்றாகும்' (அபூஹுரைரா( ரலி), புகாரி). ஆக, எந்த முஸ்லிமையும் இன்னொரு முஸ்லிம் இழிவாகக் கருதக்கூடாது; கருதக் கூடாது என்பது மட்டுமல்ல மற்றவர்கள் முன் அவ்வாறு இழிவுபடுத்தும் வகையில் எவ்வித நடவடிக்கையும் கூட மேற்கொண்டு விடக்கூடாது. எத்தனையோ ஹதீஸுகளை ஆய்வு செய்த அறிஞர் பெருமக்களுக்கு இந்த ஹதீஸும் தெரியும். பயான்கள் பேசப்படுவதற்கு அல்ல; பின்பற்றபடுவதற்காகதானே?. கற்றதையும் மற்றவர்களுக்குப் போதிப்பதையும் செயல்பாட்டில் கொண்டு வந்தால் மிக மகிழ்ச்சியாக இருக்கும்!//

மேற்கண்ட வரிகள் உணர்வுள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் சிந்திக்க வைக்கும். உபதேசம் செய்பவர்கள் திருந்துகின்றார்களோ இல்லையோ அவர்களின் உபதேசத்தைக் கேட்டு ஆஹா ஓஹோ என ஆட்டுமந்தைகளாக தலையாட்டிச் செல்லும் தொண்டர்களில் சிலபேரையாவது தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்ய வைக்கும்.

ஒற்றுமை, ஒற்றுமை என முழங்கி சமுதாயத்தைப் பிரித்துக் கொண்டு செல்பவர்களிடையே எவ்வகையில் அந்த ஒற்றுமையை பிரச்சினை இல்லாமல் கொண்டு வரலாம் என பல்வேறு உதாரணங்களுடன் சகோதரி விளக்கி இருக்கும் விதம் அருமையானது.

அதிலும் குறிப்பாக,

//யார்? என்ற கேள்விக்கு 'நான் தவ்ஹீத்வாதி', 'நான் ஷாஃபி', 'நான் ஹனஃபி' என அறிமுகப் படுத்தப்படுவதைவிட 'நான் முஸ்லிம்' என்றே தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும்.//

மேற்கண்ட வழிமுறையை ஒவ்வொருவரும் பின்பற்ற தலைபட்டால் நிச்சயம் சமுதாயம் ஒற்றுமையின் அருமையினை ருசிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

சகோதரிக்கும் இதனை வெளிக்கொணர்ந்த இத்தளத்தினருக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்!

உங்களின் நன்முயற்சியை அல்லாஹ் வெற்றிபெறச் செய்வானாக.

உங்களின் இவ்வரியப் பணியில் என்னையும் இணைத்துக் கொள்ள விரும்புகின்றேன். - அல் அமீன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-2056</link>
			<description>சமுதாயம் சிந்திக்க வேண்டிய அருமையான கருத்துக்களை உள்ளடக்கிய நல்ல கட்டுரை. சத்தியமார்க்கம் தளத்தினர் இதனை நிச்சயம் இயக்கத் தலைவர்களுக்கும் சமுதாய நலன் விரும்பிகளுக்கும் அனுப்பி வைப்பார்கள் என நம்புகின்றேன்.

அவர்கள் தரும் பதிலையும் இங்கு வெளியிட்டால் சமுதாய ஒற்றுமை விஷயத்தில் அவர்கள் என்ன கருத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதை ஒற்றுமையை விரும்பும் என்னைப் போன்ற சமுதாய மக்கள் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

சத்தியமார்க்கம் தளத்தினர் செய்வார்களா? - அருளடியான்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-2049</link>
			<description>அல்ஹம்துலில்லாஹ்!

பெரும்பாலான சகோதர, சகோதரிகளின் மனதிலுள்ள வருத்தத்தை சகோதரி சித்தாரா அவர்கள் கட்டுரையாகத் திரட்டியுள்ளார்.

சத்தியமார்க்கம் சைட்டினர் கண்டிப்பாக இதை - ஒருவர் இரைச்சியை மற்றவர் தின்னும் - இயக்கத்தவர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும். - யாசின்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-2040</link>
			<description>தகுதிவாய்ந்த  கட்டுரை!(Deserved Article) - அல்ஹம்துலில்லாஹ்.

//'ஒவ்வொருவரும் தனது பொறுப்பைக் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவர்...' (அனஸ்(ரலி), இப்னு ஹிப்பான்). //

//'தனது சகோதர முஸ்லிமை இழிவுபடுத்துவதே ஒருவர் மோசமானவர் என்பதற்குப் போதிய சான்றாகும்' (அபூஹுரைரா( ரலி), புகாரி).// 

//'எவர் மென்மையை இழந்தாரோ, அவர் நன்மையை இழந்தார்.' (ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி), முஸ்லிம்).// 

மேலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அனைத்து குர்ஆன்-ஹதீஸ் வசனங்களும்.. மிகப் பொருத்தமாக தம்மை சமுதாயத்தலைவர்களாக கருதிக் கொண்டிருப்பவர்களுக்கும், ஏனையோருக்கும் என்றென்றும் நினைவில் நிறுத்தவேண்டியவை. - பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-2039</link>
			<description>இயக்கங்களின் மூலம் சமுதாயத்தைக் கூறுபோடும் தலைவர்களும் தொண்டர்களும் தங்களின் செயல்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்க்க வைக்கத் தூண்டும் ஓர் இஸ்லாமிய அழைப்பு.

ஆம், இஸ்லாமிய அழைப்பு என்றே கூறத் தோன்றுகிறது. அவ்வளவு அருமையாகத் தலைவர்கள்/வழிகாட்டிகள் செய்யும் அதி பயங்கரத் தவறுகளை அன்பான வார்த்தைகளால் சுட்டிக்காட்டி ஆதங்கத்துடன் ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கிறார் சகோதரி.

சகோதரியின் எண்ண ஓட்டமே தற்போதையச் சமுதாயத்தின் எண்ண ஓட்டமும் என பொங்கி வந்திருக்கும் பின்னூட்டக் கருத்துக்களும் பறை சாற்றுகின்றன.

இனி இயக்கத்தலைமைகளுக்கு வேறு வழியில்லை.

சமுதாயம் மிகச் சரியான வழியிலேயே சிந்திக்கத் தலைப்பட்டு விட்டதன் அடையாளம் இது. இனியும் செம்மறியாட்டுக் கூட்டங்களாக இச்சமுதாயத்தை ஓட்டிச் செல்வது கடினம் என்பதைத் தலைமைகள் புரிந்து கொண்டு உடனடியாகத் தங்களின் நிலைபாடுகளை மறுசீரமைப்புச் செய்து கொள்ளட்டும்.

இல்லையேல் காலத்தின் ஓட்டத்தில் அவை கரைந்து போகும் என்பது உறுதி.

அன்புடன்
இறை நேசன். - இறை நேசன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-2044</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சமுதாய மற்றும் இயக்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் கட்டுரையாகும். சகோதரிக்கு பாராட்டுக்கள்.  சுட்டிக்காட்டப்படவேண்டிய விசயம்.

ஒவ்வொரு முஸ்லிமும் தன் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியவனாவான். குடும்பத்தைப் பிரிந்து விட்டு மார்க்கத்திற்காக மாதங்கள் பல, ஊர் ஊராகச் செல்பவர்களும் தவறு சுட்டிக்காட்டப்படும் போது, அதைத் திருத்திக் கொண்டு, நபி(ஸல்) அவர்கள் வழிமுறைப்படி வாழவேண்டும். மார்க்கத்தின் பெயரைச் சொல்லி, குடும்பப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது. 

மார்க்கத்திற்காக குடும்பத்தைவிட்டுச் செல்பவர்கள், குடும்பப்பொறுப்பை நிச்சயமாக தட்டிக்கழிப்பதில்லை. மார்க்கத்திற்காக அவர்கள் வெளிக்கிளம்பி செல்லும்பொழுது குடும்பத்தின் அனைத்துவிசயங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து முன்ஏற்பாடு செய்துவிட்டுத்தான் செல்கிறார்கள்.  மீண்டும் திரும்பவந்தும் குடும்பசூழ்நிலையோடுதான் மார்க்கப்பணி செய்துவருகிறார்கள்.
தாங்களும் இன்ஷாஅல்லாஹ் அந்தஅழைப்புப்பணியில் செல்லும்பொழுது தங்களுடன் கூடவரும் அப்பணியாளர்கள் குடும்பவிசயத்தில் எவ்வளவு பொறுப்புடன் செயல்படுகிறார்கள் என்பது விளங்கும்.

சகோதரன்
கனி - கனி</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-2036</link>
			<description>ஆங்கிலத்தில் தட்டச்சும் சகோதர, சகோதரியரின் பார்வைக்கு:
http://www.satyamargam.com/index.php?option=com_wrapper&amp;Itemid=161

நமது தளத்திலுள்ள மேற்காணும் சுட்டிக்குச் சென்று, அல்லது தளத்தின் இடப்புறம் அடுக்கப் பட்டுள்ள பலகைகளில் 'Tamil Typing'இல் சொடுக்கித் தமிழில் தட்டச்சலாம்.

நன்றி! - சத்தியமார்க்கம்.காம்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-2035</link>
			<description>assalamu alaikkum(warahu)
otrumaien avaciathai athagathodu eluthiirukkerkal,samuthayam sitharundu kidakkirathu ontrupadutha vantha thalaivarkalo 2pattu nirkintranar allah anaivarkalukkum nal vali katuvanaha alhamdulillahi rabbil alameen..wassalam - mujira</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-2031</link>
			<description>//சீரழிவிலிருந்து இஸ்லாமியச் சமூகத்தைக் காப்பாற்றத்தானே 'லா இலாஹா இல்லல்லாஹ்' -வை அடித்தளமாகக் கொண்டு மேம்பட்ட இஸ்லாமியக் கட்டடத்தை எழுப்பிட முயன்றார்கள்?. இன்றையச் சமூகத்தின் ஒற்றுமையில்லாதச் சீரழிந்தப் போக்கை மாற்றுவது யார்?. அதற்காக உழைக்க முன்வருவது யார்?. 'இவர்கள் செய்யத் தவறும் பொழுது இவர்களை அழித்து விட்டு வேறோர் உன்னத, நடுநிலையான சமூகத்தைக் கொண்டுவருவதாகக்' கூறும் இறை வசனம் உண்மையாகக் காத்திருக்கிறார்களா?. இயக்கவெறி இஸ்லாத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.//

இயக்கம் அமைய 'இஸ்லாத்தை வளர்த்தல்' காரணமாகக் கூறப்பட்டது.

ஆனால் நிலைமையோ இயக்கம் வளர இஸ்லாம் பயன்படுத்தப்படுகிறது.

சகோதரியின் ஒவ்வொரு வார்த்தைகளும் நெஞ்சில் தைத்து இறங்குபவை - நெஞ்சம் இருப்பவர்களுக்கு.

நல்ல மாற்றம் வர இறைஞ்சுவோம். - அபுசுஃபா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-2030</link>
			<description>மென்மையாகச் சொல்லப் பட்டுள்ள வலிமையான கருத்துகள்!

சகோதரியின் ஆசை நிறைவேறினால் தமிழகம் ஒரு புது எழுச்சியைக் காணும். - அதி. அழகு</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-2029</link>
			<description>இஸ்லாமிய வாழ்க்கை பாடத்தை கட்டுரையாக தந்த சகோதரி உம்மு ஹிபா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

அருமையான ஒருசில வரிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன்

\இஸ்லாமியப் பாலர் பாடங்களை ஆசிரியர்களுக்கு நினைவு படுத்த வேண்டியுள்ளதே என்று மனம் சங்கடப்படுகிறது!// 

\எதிரிக்கு எதிரி நண்பன் என்ற எண்ணத்துடன் கூட்டுச் சேராமல், சமுதாயப் பணிகளுக்காக ஒருவருக்கொருவர் கைகோர்க்க வேண்டும்.
'அல்லாஹ் தஆலா உங்கள் உடலையோ, தோற்றத்தையோ பார்ப்பதில்லை. மாறாக உங்களது உள்ளங்களையும் செயற்பாடுகளையும் பார்க்கிறான்' (அபூஹுரைரா (ரலி), புகாரி).//

சகோதரி அவர்களின் எண்ணஓட்டத்தை நிறைவேற்றி வைப்பானாக! - ஹாஜா முகையிதீன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-2025</link>
			<description>அல்ஹம்துலில்லாஹ்

ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இருக்கும் எண்ணவோட்டங்களை மிகத் தெளிவாக முன் வைத்திருக்கிறார் கட்டுரையாளர். 

கருத்தாளர்களும் ஆதங்கங்களை கவலையோடு வெளிப்படுத்தி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

அனைத்து ஓரிறைக் கொள்கைவாதிகளும் அல்லாஹ்வுக்காக ஒன்று படவேண்டுமென்பதே நம்மனைவரதும் அவா.

அல்லாஹ் இந்த அவாவை நிறைவு செய்வானாக. - Abu Fawzeema</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/702#comment-2024</link>
			<description>//சமூகத்தில் இஸ்லாம் ஓங்கப் பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தை நிலை நிறுத்தியவர்கள், இஸ்லாமிய அகீதாவைப் சரிவரப் பின்பற்ற முஸ்லிம்களை வற்புறுத்தியவர்கள்,

'...நீங்கள் ஒருவரை ஒருவர் துருவி ஆராயாதீர்கள்...' (அல்குர்ஆன் 49:12) என்று குர்ஆன் கட்டளையிடுவதை மறந்து, 'பிற இயக்கங்களின் குறைகளை அம்பலப்படுத்துவதும் அறிக்கைகள் விடுவதும் தரக் குறைவாக விமர்சிப்பதும் அடுத்த இயக்கங்களின் எண்ண ஓட்டத்தைக் கண்டறியத் துப்பு துலக்குவதும்' என்று தங்களின் நேரத்தை - தஃவாவிலும் சமுதாயப் பணிகளிலும் கழிக்க வேண்டியப் பொன்னான நேரத்தை - வீண் ஆராய்ச்சிகளில் கழிக்கின்ற நிலைக்கு இன்று கீழிறங்கி விட்டனர்.//

//உழைத்துச் சம்பாதிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும், இஸ்லாமியச் சமூகம் ஆன்மீகத்திலும் வாழ்வியலிலும் மேம்பட வேண்டும் என்ற எண்ணத்தில், அதற்காக உழைப்பார்கள் என்ற நம்பிக்கையில் தங்கள் வியர்வைகளால் சமுதாய இயக்கங்களின் கஜானாக்களை நிரப்புகிறார்கள். அறிக்கையாகவும், பிறர் குறைகளை வெளிப்படுத்தத் தயாரிக்கப்படும் குறுந்தகடாகவும் உருமாறும் இந்த வியர்வைத் துளிகள் கணக்குக் காட்ட வேண்டிய இடத்திற்கு வந்து சந்தி சிரிக்கிறது. அல்லாஹ்விடத்தில் கணக்குக் காட்ட வேண்டிய அமானிதமாக மாறி விடுகிறது. இதைப் பற்றி யாராவது கேட்டால், 'நாங்கள் சமூகத்தின் சீரழிவுக்குக் காரணமானவர்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறோம்' என்று பதிலளிக்கின்றனர்.//

//சீரழிவிலிருந்து இஸ்லாமியச் சமூகத்தைக் காப்பாற்றத்தானே 'லா இலாஹா இல்லல்லாஹ்' -வை அடித்தளமாகக் கொண்டு மேம்பட்ட இஸ்லாமியக் கட்டடத்தை எழுப்பிட முயன்றார்கள்?. இன்றையச் சமூகத்தின் ஒற்றுமையில்லாதச் சீரழிந்தப் போக்கை மாற்றுவது யார்?. அதற்காக உழைக்க முன்வருவது யார்?. 'இவர்கள் செய்யத் தவறும் பொழுது இவர்களை அழித்து விட்டு வேறோர் உன்னத, நடுநிலையான சமூகத்தைக் கொண்டுவருவதாகக்' கூறும் இறை வசனம் உண்மையாகக் காத்திருக்கிறார்களா?. இயக்கவெறி இஸ்லாத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. //

அல்ஹம்துலில்லாஹ்!

லட்சங்களின் கொதிக்கும் மனதை வார்த்தைக்கு வார்த்தை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள் சகோதரி.

அல்ஹம்துலில்லாஹ்!

இறையச்சமுடியவர்களுக்கு, சிந்திக்கக் கூடியவர்களுக்கு, உண்மையான சமுதாய அக்கறைக் கொண்டவர்களுக்கு, தூய இஸ்லாமியச் சிந்தை கொண்டவர்களுக்கு தங்களின் நிலைபாடுகளை மறுபரிசீலனை செய்து, தவறுகளைக் களைந்து, சமுதாய ஒற்றுமைக்காகக் குரல் கொடுக்கவும் அனைத்து சகோதரர்களையும் தமது மார்க்கச் சகோதரர்களாகக் கருதி அவர்களுடன் ஒன்றிணைந்து நிற்கவும் முன்வர இதனை விட வேறு அறிவுரைகளும் ஆதங்கங்களும் தேவையில்லை.

உடனடியாக சமுதாயத் தலைவர்கள், இயக்க/குழு செயல்வீரர்கள் கூடி அமர்ந்து சமுதாய ஒற்றுமைக்கான வழிமுறைகளை ஆலோசித்து முடிவுக்கு வர வேண்டும்.

சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.

- ஹாஜியார். - ஹாஜியார்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

