<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>குர்பானியின் சட்டங்கள்</title>
		<description>Comments for குர்பானியின் சட்டங்கள் at http://www.satyamargam.com , comment 1 to 14 out of 14 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:12:36 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/691#comment-1923</link>
			<description>அன்பின் சகோதரர் அபூ முஹை. 

குர்பானி(நரபலி) கொடுப்பது இப்ராஹிம் (அலை) அவர்களின் காலத்திற்கு முன்பே இருந்ததாகவும், மேலும் இறைவன் குர்பானி கொடுக்க இப்ராகிம் (அலை) அவர்களுக்கு கட்டளையிடுவதன் மூலம் நரபலியை இஸ்லாம் ஆதரிப்பதாகவும், இதில் தியாகம் என்ற ஒன்றுக்கே இடமில்லை என்றும் கூறுகிறார் நானும் என்னால் முடிந்த விளக்கங்களை கூறியும் அவர் சமாதனமாகவில்லை. இதுபற்றி உங்களின் கருத்து என்ன?.

உங்களின் விளக்கங்கள் மிக அருமையாகவும், எளிமையாகவும் உள்ளது அல்லாஹ் உங்களுக்கு இரு உலகளிலும் வெற்றியை வழங்கட்டும் ஆமின். - ஸயீத்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/691#comment-1933</link>
			<description>'பெரூநாள் கொண்டாடுங்கள்; அந்த சிறப்புத் தொழுகையை நிறைவு செய்யுங்கள்; அதன் பின்னர் ஆடு மாடு ஒட்டகங்களை பலியிடுங்கள்' வேதத்தில் கட்டளையிடப் பட்டுள்ளதா? 'பிற்காலத்தவர்க்காக ஒரு ஞாபகத்தை விட்டு வைத்திருக்கின்றோம்' என்ற மொழி பெயர்ப்பிலிருந்து தான் ஹஜ்ஜு பெருநாளில் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கட்டளையாக எடுத்து கொண்டீர்களா? - jenifer</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/691#comment-1902</link>
			<description>சகோதரி ஜெனிஃபர் அவர்களின் கேள்வி நியாயமானதாகத் தோன்றினாலும் திருக்குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்கியக் கேள்வியாகக் கருத முடியவில்லை. யாரோ சொல்லிக்கொடுத்து அதை இங்கே கேட்டிருக்கிறார்.
 
''ஹஜ் அல்லது உம்ரா செய்பவர்கள்'' (002:158)

''ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்'' (002:196)

மேற்காணும் வசனங்களில் ஹஜ் வேறு உம்ரா வேறு என இறைவன் பிரித்துக் கூறுகிறான். கேள்வியோடு தொடர்பு இருப்பதால் இதை இங்கு குறிப்பிட்டுள்ளோம். 

எனவே,
குறிப்பிட்ட நான்கு மாதங்களுக்குள் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றலாம் என்று திருக்குர்ஆனில் கட்டளையிருப்பதாக கருதுபவர்களுக்கு!

குறிப்பிட்ட அந்த நான்கு மாதங்கள் எவை?
 
அந்த மாதங்களின் பெயர் என்ன?

என்பதை திருக்குர்ஆனிலிருந்தே விளக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இதை ஜெனிஃபர் விளக்கினாலும் சரி. அல்லது அவர் யாரிடம் அறிந்து கொண்டாரோ அவர்களிடம் விளக்கம் கேட்டு எழுதினாலும் சரி.
 
பின்னர்,
//கூறப்படுவது உண்மையா?// 

என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிடும், மீண்டும் தொடரலாம் நன்றி! - அபூ முஹை</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/691#comment-1894</link>
			<description>'குறிப்பிட்ட நான்கு மாதங்களுக்குள்' ஹஜ் கிரியைக்ளைச் செய்யலாம் என்று குர்-ஆனில் கட்டளையிடப்பட்டிருப்பதாகவும்; பின்னர் குறிப்பாக துல்ஹஜ் மாதத்தில் தான் செய்வது என்று செயல்படுத்துவதால், நெருக்கடியும் இறப்புகளும் எற்பட்டு விட்டன என்பதாக கூறப்படுவது உண்மையா? - jenifer</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/691#comment-1885</link>
			<description>لَّيْسَ الْبِرَّ أَن تُوَلُّواْ وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَـكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللّهِ وَالْيَوْمِ الآخِرِ وَالْمَلآئِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّآئِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُواْ وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاء والضَّرَّاء وَحِينَ الْبَأْسِ أُولَـئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَـئِكَ هُمُ الْمُتَّقُونَ

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).  (2:177)

 //சரியான நேரத்தில் இந்த சிறப்பு மிக்க துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளை அளித்த சத்தியமார்க்கத்திற்க்கு வாழ்த்துகள்//
ஹனீஃப்-குவைத் - haneefm</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/691#comment-1889</link>
			<description>وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِن ذُرِّيَّتِي قَالَ لاَ يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ

(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்;. அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்;. நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்' என்று அவன் கூறினான்;. அதற்கு இப்ராஹீம்; 'என் சந்ததியினரிலும்(இமாம்களை ஆக்குவாயா?)' எனக் கேட்டார்;. என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.  (2:124)

மிக சரியான நேரத்தில் தான் இந்த ஆக்கம் வெளியிட்டுவுள்ளீகள் தொடரட்டும் உங்கள் பனிகள்&gt;&gt;&gt;...
ஹனீஃப்-குவைத் - haneefm</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/691#comment-1979</link>
			<description>//குர்பானி(நரபலி) கொடுப்பது இப்ராஹிம் (அலை) அவர்களின் காலத்திற்கு முன்பே இருந்ததாகவும், மேலும் இறைவன் குர்பானி கொடுக்க இப்ராகிம் (அலை) அவர்களுக்கு கட்டளையிடுவதன் மூலம் நரபலியை இஸ்லாம் ஆதரிப்பதாகவும், இதில் தியாகம் என்ற ஒன்றுக்கே இடமில்லை என்றும் கூறுகிறார்//

அன்பின் சகோதரர் அபூ முஹை!

மிக அருமையான விளக்கம்!, நான் இவ்விளக்கத்தை அவரிடம் கூறி இப்ராகிம் (அலை) அவர்களின் காலத்திற்கு முன்பு நரபலி இருந்ததற்க்கான ஆதாரத்தைக்கேட்ட பொழுது அவர் யூகத்தின் அடிப்படையில்தான் கேட்டிருக்கிறார் என்பது தெளிவாக விளங்கியது. அவரிடம் தெளிவான விளக்கம் இல்லாது அவர் மென்று விழுங்கியது தற்கால மீடியாக்களின் இஸ்லாமிய எதிர்ப்புப் போக்கின் பிரதிபலிப்புதான்.

//''இதுதான் மகத்தான சோதனை'' (037:106)//

//பல வருடங்களாக பிள்ளை இல்லாமல் பிறந்த மைந்தரை இழக்கத் தயாரானார் தந்தை.//

இப்ராகிம் (அலை) அவர்கள் இறைவனின் தூதுச் செய்தியை அக்கால மக்களுக்கு எடுத்துச் சொல்ல வந்த்தவர்கள், அவர்களின் ஏக இறை நம்பிக்கையின் உறுதியை அம்மக்களுக்கு எடுத்துரைக்கவே இச் சம்பவத்தை இறைவன் அவர்களுக்கு மாபெரும் சோதைனையாக பல வருடங்கள் குழந்தையே இல்லாமல் இருந்து பெற்றெடுத்த குழந்தையை இறைவனுக்காக தியாகம் செய்யுமாறு பணிக்கிறான். நரபலி என்பது சாதரணமான ஒரு விஷயமாக தியாகம் என்ற ஒன்றுக்கே இடமில்லையென்றால் இவ்விஷயத்தை இவ்வளவு வியாபித்துக்கூற வேண்டிய அவசியம் இல்லை.

பெரும்பாலும் நரபலிகள் மந்திரவாதிகள், பூசாரிகள் அல்லது மதவேடம் தரித்த குருமார்களின் தூண்டுதலின் பேரில் 'நீ உனது குழந்தையை பலியிட்டால் உனக்கு அது கிடைக்கும், இது கிடைக்கும்' என்ற ஆசை வார்த்தைகளின் பேரிலேயெ நடக்கிறது. 

ஆனால் இங்கோ!

//பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார், 'என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!' (மகன்) கூறினார், 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ், நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள். (அல் குர் ஆன்)//

பல வருடங்கள் குழந்தையில்லாது ஒரு சோதனை, அதன் பிறகு பெற்ற குழந்தையை நடமாடும் வரை தன்னுடன் இருக்கச்செய்து விட்டு குழந்தைக்கு அனைத்தும் அறிந்து கொள்ளூம் பருவம் வந்தவுடன் அவனை பலியிட வேண்டும் என்ற கட்டளையின் மூலம் மாபெரும் சோதனை.

இதில் இறவனின் திருப்தியைத்தவிர வேறு ஒரு நோக்கம் இல்லையென்றும் இது அப்பழுக்கற்ற தியாகம் என்பதும் நியாமாக சிந்திப்போருக்கு நிச்சயமாக விளங்கும். மேலும் இப்ராகிம் (அலை) இதை தானாக செய்து விடவில்லை பெற்ற மகனிடம் செய்தியைக்கூறி அவரிடமும் அனுமதியை வாங்கிக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை, 'யா இப்ராஹீம்!' என்றழைத்தோம். 'திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம் என்று கூறினோம். 
நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். பெரிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.' (அல்குர்ஆன், 037:100௰8)

'பெரிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.' என்ற வசனத்தின் மூலம் இஸ்லாத்தில் நரபலிக்கு இம்மியளவும் இடமில்லை என்று தெளிவாக விளங்கிக்கொள்ளலாம்.

மனதில் ஊசலாட்டங்களை ஏற்படுத்தும் ஷைத்தானின் தீங்குகளிருந்து வல்லோன் நம் அனைவரையும் காப்பானாக அமீன். - ஸயீத்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/691#comment-1981</link>
			<description>//குர்பானிகொடுப்பவர் 10 நாட்களுக்கு நகம் முடி வெட்டகூடாது என்பது உன்மையா? அப்படிவெட்டிவிட்டால் அதற்குபரிகாரம் என்ன?//  - லியாகத்

''நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும்வரை தனது முடியையும் நகத்தையும் வெட்ட வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, பைஹகீ.)

வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)

அன்பின் சகோதரர் லியாகத்,

இது தொடர்பாக இருவேறு கருத்துகள் உள்ளன. குர்பானி கொடுக்க எண்ணியவர் துல்ஹஜ் மாதம் பிறை ஒன்றிலிருந்து, பிறை 10ல் குர்பானி கொடுக்கும் வரை தலை, தாடி, அக்குள், மறைவிடம் போன்ற முடிகளைக் களையவோ வெட்டவோ கூடாது, நகத்தையும் வெட்டக் கூடாது என மேற்கண்ட நபிமொழி அறிவிக்கிறது. இஹ்ராம் அணிந்தவருக்குத்தானே இந்த விதி உண்டு என்பது போல் தோன்றுகிறது.

இது பற்றிய வேறு அறிவிப்புகளும் உள்ளன,

''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்தே பலிப் பிராணியை கஅபாவிற்கு அனுப்பி வைப்பார்கள். எனவே, அவர்களது  பலிப் பிராணியின் கழுத்தில் (அது பலிப் பிராணி என்பதற்கு அடையாளமாகத்) தொங்கவிடப்படும் மாலையை நான் திரிப்பேன். (பலிப் பிராணியை அனுப்பிய) பின்னர் 'இஹ்ராம்' கட்டியவர் தவிர்த்துக்கொள்ளும் எதையும் அவர்கள் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள்'' என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், 2546. புகாரி, 5566)

''இஹ்ராம் கட்டியவர் தடுத்துக்கொள்ளக்கூடிய எதையும் - தமது பலிப் பிராணி பலியிடப்படும்வரை - அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமக்காகத்) தடுத்துக்கொண்டதில்லை.'' (முஸ்லிம், 2557)

இதிலிருந்து, இஹ்ராம் கட்டியருக்கு உள்ள விதிகள், சொந்த ஊரில் குர்பானி கொடுக்க எண்ணுபவருக்கு இல்லை. முடி, நகம் வெட்டிக்கொள்ளலாம். தாம்பத்திய உறவும் கொள்ளலாம் என மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்க முடிகிறது.

முடிகளையும் நகங்களையும் வெட்டக்கூடாது என்பது அது பேணுதல் என்ற கருத்தில்தானே தவிர, அது முற்றாகத் தடை செய்யப்பட்டது என்ற கருத்தில் அல்ல என்பதே அறிஞர்களின் கருத்தாகும். 

துல்ஹஜ் முதல் 10 நாட்களில் முடி, நகத்தை வெட்டாமல் ஒருவர் பேணுதலாக இருந்து கொள்ளலாம். வெட்டிக்கொண்டால் அதற்கு பரிகாரம் ஏதுவும் சொல்லப்படவில்லை.

(அல்லாஹ் மிக அறிந்தவன்) - அபூ முஹை</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/691#comment-1977</link>
			<description>சகோதரர் அபூ முஹை அவர்களே,

அழகான விளக்கத்திற்கு அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தரட்டும்.

அதோடு சகோதரர் ஸயீத் அவர்களுக்கு,

//நரபலி நியாயமற்ற ஒரு கொலை - பாதகச் செயல்.//

அநியாயமாக ஓர் உயிரைக் கொன்றவன் ஒரு சமுதாயத்தையே கொலை செய்தக் குற்றம் புரிந்தவன் ஆவான் என்பது இஸ்லாம் காட்டும் நெறி. 

இஸ்லாமிய அரசு நிறைவேற்றும் தண்டனைக்காகவேயன்றி மனிதக் கொலையை இஸ்லாம் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. - இப்னு ஹமீது</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/691#comment-1976</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும். சுவையான கேள்வி பதில்கள். என் கேள்வி: குர்பானிகொடுப்பவர் 10 நாட்களுக்கு நகம் முடி வெட்டகூடாது என்பது உன்மையா? அப்படிவெட்டிவிட்டால் அதற்குபரிகாரம் என்ன?தய்வுசெய்துகூருங்கள். - Liyakath</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/691#comment-1966</link>
			<description>அன்பின் சகோதரர் ஸயீத்,

//குர்பானி(நரபலி) கொடுப்பது இப்ராஹிம் (அலை) அவர்களின் காலத்திற்கு முன்பே இருந்ததாகவும், மேலும் இறைவன் குர்பானி கொடுக்க இப்ராகிம் (அலை) அவர்களுக்கு கட்டளையிடுவதன் மூலம் நரபலியை இஸ்லாம் ஆதரிப்பதாகவும், இதில் தியாகம் என்ற ஒன்றுக்கே இடமில்லை என்றும் கூறுகிறார்//
  
''இவ்வாறே இணை கற்ப்பிப்பவர்களில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாகக் காட்டி, அவர்களை அழித்து அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன..'' (006:137)

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இணை வைப்பவர்களிடம் நரபலி கொடுக்கும் வழக்கம் இருந்ததாக  இந்த வசனத்திற்கு சில அறிஞர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். நரபலி எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. இன்றும் நரபலி கொடுப்பது பற்றி செய்திகளில் வாசிக்கிறோம்.  நரபலியை இஸ்லாம் ஆதரிக்கிறது என்பதற்கு எவ்வித ஆதாரமும் நாமறிந்து இஸ்லாத்தில் இல்லை!
  
'யா இப்ராஹீம்! அக்கனவை உண்மைப்படுத்தி விட்டீர்'' (037:104-105)
 
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுப்பது போல் கண்ட கனவு, இறைவனிடமிருந்து வந்த செய்தி - கட்டளை என்பதையே மேற்கண்ட வசனம் கூறுகிறது. மேலும், ''என் தந்தையே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்'' (037:102) என்று இஸ்மாயீல் (அலை) அவர்கள் கூறுவதிலிருந்து இது இறைவனின் கட்டளை என்பதை உறுதிப்படுத்துகிறது.

மனிதனை அறுப்பது இறைவனின் கட்டளையாக இங்கு சுட்டிக் காண்பிப்பதால் இஸ்லாம் நரபலியை ஆதரிக்கிறது எனச் சிலர் தவறானக் கருத்துக்கு வந்து விடுகின்றனர். தக்கக் காரணமின்றி மனிதக் கொலையை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நரபலி நியாயமற்ற ஒரு கொலை - பாதகச் செயல். இதை இஸ்லாம் ஆதரிப்பதாகச் சொல்பவர்கள் அதற்கான ஆதாரங்களை வேறு குர்ஆன் வசனம், அல்லது நபிமொழியிலிருந்து எடுத்து வைக்கட்டும்.

''இதுதான் மகத்தான சோதனை'' (037:106)

இச்சம்பவத்தை பெரும் சோதனையாக இறைவன் கூறுகிறான். தந்தை, மைந்தர் இருவரும் இச்சோதனையை அப்பழுக்கற்ற நிலையில் இறைவனுக்காக நிறைவேற்ற முன் வந்தார்கள். இது அறிவுக்கு பொருந்தாத ஒரு சம்பவமாக வைத்துக்கொணடாலும், ''இருவரும் கீழ் படிந்தார்கள்'' (037:102) இறைவனுக்காக மறு பேச்சின்றி இன்னுயிரையும் இழக்கத் தயாரானார் மைந்தர். 

பல வருடங்களாக பிள்ளை இல்லாமல் பிறந்த மைந்தரை இழக்கத் தயாரானார் தந்தை.

இறைவனின் கட்டளைக்காக இருவருமே தியாகம் செய்ய ஆயத்தமானார்கள்.

தியாகத்திற்கு அர்த்தம் அறியாதவர்களே இது தியாகம் இல்லை என்று வாதிடுவார்கள்.

நன்றி! - அபூ முஹை</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/691#comment-1935</link>
			<description>ஜெனிஃபர்,

நீங்கள் ஒரு கேள்வியிலிருந்து மற்றொரு கேள்விக்குத் தாவுவது சரியல்ல. நீங்கள் எதையும் அறிந்து கொள்ள வேண்டும், விளக்கம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கேள்வி கேட்பது போல் தெரியவில்லை.

உங்கள் நோக்கம் என்ன என்பதை முதலில் தெரியப்படுத்துங்கள்.

உண்மையிலேயே சரியான விளக்கம் பெற்றுக் கொள்வது மட்டுமே உங்கள் நோக்கம் எனில், நீங்கள் முதலில் கேட்ட,

//'குறிப்பிட்ட நான்கு மாதங்களுக்குள்' ஹஜ் கிரியைக்ளைச் செய்யலாம் என்று குர்-ஆனில் கட்டளையிடப்பட்டிருப்பதாகவும்;//

இந்தக் கேள்வியில் உள்ள அந்த நான்கு மாதங்கள் எவை என்பதையும், அவ்வாறுக் குறிப்பிடும் வசனம் எது என்பதையும் முதலில் திருக்குர்ஆனிலிருந்து எடுத்துக் காண்பித்து அது தொடர்பான விளக்கத்தை முடித்து விட்டு அடுத்த கேள்விக்கு செல்லுங்கள். - அல் அமீன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/691#comment-1934</link>
			<description>لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ

தங்களுக்குரிய பவன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குhபான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.  (22:28)
وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ

இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குhபான் கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீருhக!  (22:34)
لِيَجْعَلَ مَا يُلْقِي الشَّيْطَانُ فِتْنَةً لِّلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ وَالْقَاسِيَةِ قُلُوبُهُمْ وَإِنَّ الظَّالِمِينَ لَفِي شِقَاقٍ بَعِيدٍ

ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்) பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள்.  (22:53)
يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَن يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.  (22:73)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்; நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள்.  (22:77)
அல்ஹம்துலில்லாஹி!!!!
Jenifer என்ற பெயரில் கருத்து எழுதும் சகோதரிக்கு!!!
அல்லாஹ் ஒருவன் இன்னும் அவன் இருதி  துதர் முஹம்மது நபி [ஸல்] அவர்கள் என்றும் இந்த சிறப்பு மிக்க குர்கான் அல்லாஹ்வினால் இறக்கப்பட்டது என்று எற்றுக்கொண்டவர்கள் தான் முஸ்லிம்கள்,தன்தொன்றி தனமாக குர்கானில் இல்லாததை செயல்படுத்த முயல்பவன் நிச்சயாமாக முஸ்லிம்களாக இருக்கமுடியாது இன்னும் அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கிறான்
ஹனீஃப்- குவைத் - haneefm</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/691#comment-9254</link>
			<description>
அஸ்ஸலாமு அலைக்கும்.

குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும் உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது” (அத்தியாயம் 22: வசனம் 37) &quot;

 //பல வருடங்கள் குழந்தையில்லாது ஒரு சோதனை, அதன் பிறகு பெற்ற குழந்தையை நடமாடும் வரை தன்னுடன் இருக்கச்செய்து விட்டு குழந்தைக்கு அனைத்தும் அறிந்து கொள்ளூம் பருவம் வந்தவுடன் அவனை பலியிட வேண்டும் என்ற கட்டளையின் மூலம் மாபெரும் சோதனை. இதில் இறவனின் திருப்தியைத்தவிர வேறு ஒரு நோக்கம் இல்லையென்றும் இது அப்பழுக்கற்ற தியாகம்//

நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் எப்படி தன் மகனைக் கூட அல்லாஹ்விற்காக பலியிட முன்வந்தார்களோ அதைப்போன்று நாமும் முன்வருவோம் என்பதை எடுத்துக் காட்டும் வண்ணமே ‘குர்பானி” கொடுக்கிறோம். இந்த குர்பானி கொடுப்பதன் நோக்கம் இறையச்சமேத் தவிர, வேறில்லை.’
 
 - M Muhammad</description>
			<pubDate>Fri, 04 Nov 2011 08:47:20 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

