<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>இஸ்லாம் கூறும் எளிய தர்மம் - புன்னகை!</title>
		<description>Comments for இஸ்லாம் கூறும் எளிய தர்மம் - புன்னகை! at http://www.satyamargam.com , comment 1 to 5 out of 5 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:49:40 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/687#comment-1822</link>
			<description>கழுதையை ஒரு தட்டுத் தட்டினால்? 

இஸ்லாம் கூறும் எளிய தர்மம் - புன்னகை! என்ற   அருமையான கட்டுரையுடன் இதையும் சிந்தியுங்கள்.

‘‘கழுதையை ஒரு தட்டுத் தட்டினால் என்ன செய்யும்?’’

‘‘பின்னால் எட்டி உதைக்கும்.’’

‘‘எருமையை ஒரு தட்டுத் தட்டினால்?’’

‘‘கொஞ்சங்கூட கண்டுகொள்ளாது .’’

‘‘குதிரையை ஒரு தட்டுத் தட்டினால்?’’

‘‘பிச்சிக்கிட்டு பறக்கும். அசுர வேகத்தில் ஓட ஆரம்பிக்கும்.’’

‘‘ஆம். குதிரையாகுங்கள்’’ 

ஒரு தட்டுத் தட்டினால் கழுதை பின்னால் எட்டி உதைக்கும். எருமை அதே இடத்தில் நிற்கும், ஆனால் குதிரை முன்னால் பாய்ந்தோடும்.

அதேபோல் யாராவது ஒரு திட்டுத் திட்டினால் சிலர் மீண்டும் திட்டுவார்கள். இல்லை, கண்டுகொள்ளாமல் சும்மாயிருந்துவிடுவார்கள். 

ஆனால், ஒரு சிலர் மட்டுமே வாங்கிய திட்டுக்கும், கிடைத்த அவமானத்திற்கும் நேர் எதிராகச் செயல்படுவார்கள். குதிரையைப் போல முன்னோக்கிப் பாய்வார்கள்.

பின்னால் எட்டி உதைப்பதும், சரிக்குச் சமமாய் சண்டக்கு நிற்பதும் ஒன்றே. இதனால் முன்னேற்றத்துக்குப் பதில் பின்னேற்றம்தான் மிஞ்சும். சக்தி முன்னோக்கிப் பாயாததால் இப்படிப்பட்டவர்களுக்கு வளர்ச்சி என்பதே சாத்தியமில்லை. வீழ்ச்சி மட்டுமே சாத்தியம்.

கண்டுகொள்ளாமல் சும்மாயிருப்பதும், வாயை மூடிக் கொண்டிருப்பதும் ஒன்றே. இப்படியிருப்பவர்களின் வாழ்க்கையானது வளர்ச்சியற்றதாக வெறுமையானதாக தொடருவதை யார் நினத்தாலும் தடுக்க முடியாது.

முன்னோக்கி ஓடுவதும், திட்டியவரின் மீது வஞ்சம் கொள்ளாமல் அதையும் தன்னைத் திருத்திக்கொள்ளும் ஒரு வாய்ப்பாகவோ அல்லது தன்னப்பற்றிய ஆராய்ச்சிக்கான ஒரு வாய்ப்பாகவோ பயன்படுத்திக் கொள்வதும் ஒன்றே. 

இப்படிப்பட்டவர்களின் முன்னேற்றமானது அசுர வளர்ச்சியாக இருக்கும்.

‘‘முரட்டுத்தனமாக என்னை மற்றவர்கள் நடத்தும்போது , என்ன செய்யட்டும்’ 

‘‘முதலில் அவர்களுக்கு நன்றி சொல். உன்னை நோக்கி அடுத்து  அவர்களின் முரட்டுத்தனம் தூண்டப்படுமளவுக்கு, உன்னிடமிருக்கும் குறைகளைக் கண்டுபிடி.

கடைசியாக, கண்டுபிடித்த குறைகளைத் தூக்கியெறிந்து விட்டு உற்சாகமாய் முன்னேறு.’’

நீங்கள் வேகமாக வளர விரும்பினால், முரட்டுத்தனமாக திட்டப்படும் நேரங்களையும், கேவலமாக நடத்தப்டும் நேரங்களயும் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள். குதிரையைப் போல் உங்களின் உணர்வான உற்சாகமாக முன்னோக்கிப் பாயும்படி மாறி விட்டால் உங்களின் வளர்ச்சியும் அசுர வளர்ச்சியாகும். -
நன்றி : குமுதம் - MOHAMED ALI JINNAH</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/687#comment-1819</link>
			<description>அல்ஹம்துலில்லாஹ்!

அருமையான சிந்தனை. சமுதாயம் மறந்து விட்ட நல்லதொரு இஸ்லாமியப் பழக்கத்தை நினைவுபடுத்தியுள்ளீர்கள். 

இந்தியாவில் இஸ்லாத்தைப் பரப்ப வந்த இந்திய மொழிகள் அறியா ஆரம்பகால முஸ்லிம்களின் புன்னகை மாறா முகங்களும், சகோதர வாஞ்சையுடனான பழக்கவழக்கங்களுமே நமது முன்னோர்களான இந்திய மக்களின் மனதினை இஸ்லாத்தின் பால் ஈர்த்தன. ஆரம்ப கால அதிவேக இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை விட இஸ்லாமியக் கலாச்சாரமான இப்பழக்க வழக்கங்களே அதிகம் துணை புரிந்துள்ளன என்பதையும் இன்றைய பிரச்சாரகர்கள் கவனத்தில் கொண்டுத் இதுபோன்ற இஸ்லாமியக் கலாச்சாரங்களைத் தங்களின் செயல்பாடுகளில் வெளிப்படுத்த முன்வருவார்களாக!

Keep it Up தம்பி அபூ ஸாலிஹா!

- ஹாஜியார். - ஹாஜியார்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/687#comment-1814</link>
			<description>மாஷாஅல்லாஹ் அபூசாலிஹா அவர்களின் ஆக்கம் மிகவும் அருமை.அவர்கள் எத்தனையோ ஆக்கங்களை கொடுத்திருந்தாலும் என்னைப்பொருத்தவரை மற்ற ஆக்கங்களை விட,இந்த ஆக்கம் தான் மிகவும் அருமை.மேலும் அவர்களின் திறமைக்கு இது மிகப்பெரும் எடுத்துக்காட்டு.வல்ல அல்லாஹ் இன்னும் பல நல்ல ஆக்கங்களை வழங்க தவ்ஃபீக் செய்வானாக.இக்கட்டுரைக்கு என் சார்பாக சில வரிகள்: 
اتقوالنار ولوبشق تمرة فمن لم يجد فبكلمة طيبة (متفق عليه)ஒரு பேரீத்தம்பழத்தை(தர்மம் செய்வது)மூலமேனும் நரக நெருப்பை பயந்து கொள்ளுங்கள்.ஒருவரிடம் அது இல்லாவிட்டால்,நல்ல வார்த்தைகள் பேசுவது மூலமேனும்(பயந்து கொள்ளட்டும்)என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்:அதி இப்னு ஹாதிம்-நூல்:புகாரி,முஸ்லிம்.
لاتحقرن من المعروف شيئاولوأن تلقي أخاك بوجه طلق (நல்லவற்றில் எதையும் நீங்கள் மதிப்புக்குறைவாக கருதிவிடவேண்டாம்.உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதாயினும் சரியே)என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்:அபூதர்-நூல்:முஸ்லிம். - ஷாஹ் மைந்தன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/687#comment-1872</link>
			<description>Proficient article, blending of islam and science concepts. Well organized thoughts. Thanks to sathia margam for presenting such worthy articles - Sathick</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/687#comment-6235</link>
			<description>மிக அருமையான ஆக்கம். இது தொடர்பாக சில கூடுதல் மருத்துவ குறிப்புகளைக் கண்டேன். - நியாஸ் - நியாஸ்</description>
			<pubDate>Wed, 18 Nov 2009 05:43:35 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

