<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>யார் தீவிரவாதி?</title>
		<description>Comments for யார் தீவிரவாதி? at http://www.satyamargam.com , comment 1 to 31 out of 20 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:42:12 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1628</link>
			<description>//அது நண்பர் சிவா சொன்ன கருத்தை ஒட்டியது. அதாவது, தீவிரவாதத்துக்கும் எந்த மதத்துக்கும் தொடர்பில்லை.//

சகோதரர் நாகூர் ரூமி,

தாங்கள் கூறும் வகையில் சிவா இங்கு கருத்து வைக்கவில்லை. சிரமம் பாராமல் ஒருமுறை கூட இங்கு சிவா கக்கியுள்ள விஷத்தைக் கவனமாகப் படித்துப்பார்த்துத் தங்கள் கருத்தை வைக்கவும்.

இறை நேசன். - இறை நேசன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1627</link>
			<description>//அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும், வணக்கம்.//

இவ்வளவு கருத்தாழமிக்க சிந்தனையைத் தந்த சகோதரர் நாகூர் ரூமி அவர்களிடமிருந்து அர்த்தமில்லா //வணக்கம்// இந்த வார்த்தையை எதிர்பார்க்கவில்லை.

இறைவனை மட்டுமே வணங்க வேண்டிய ஒரு முஸ்லிம் வெறும் வார்த்தையினால் கூறும் சாதாரண ஒரு முகமன் என்ற அர்த்தத்தில் கூட இவ்வார்த்தையை மற்றொரு இறைவனின் படைப்புக்குக் கூறக்கூடாது என்பதை அறியாதவரா சகோதரர் நாகூர் ரூமி அவர்கள்? - அபூ ஃபாத்திமா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1624</link>
			<description>அன்பு சகோதரர்களே

உண்மையில் தீவிரவாதத்திற்கும் அல்லது  பயங்கரவாதத்திற்கும் எந்த மதமும் மார்க்கமும் அங்கீகாரம் அளிப்பதோ,அல்லது இதை போதிப்பதோ இல்லை.

மனித நேயமும்,சமூக நலச்சிந்தனையும் இல்லாத சமூக விரோதிகள் செய்யும் இழிவான செயலே தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஆகும். 

இது ஓரு சிலர் சுயநல நோக்கத்தில் செய்யும் செயல் ஆகையால் இதில் ஈடுபடும் யாருக்கும் எந்த மதத்திற்கும் உண்மையில் ஏதும் முறையான பிடிப்போ அல்லது தொடர்பும் இருக்காது.
 
எந்த மதமும் மனிதர்களில் அப்பாவிகளுக்கு எதிராக இது போன்ற குற்றங்கள் செய்ய போதனையை வழங்காது என்பதே உண்மை. ஆகையால் இதில் ஈடுபடுபவர்கள் எந்த மதத்தை அல்லது மதத்தை சாராதவர்களாக இருப்பினும் மனிதகுல விரோதிகள் எனும் ஒரு கூட்டத்தில் அவர்கள் ஒரே இனத்தவர் ஆவார்கள். ஆகையால் இவர்களை எந்த மதத்திலும்
இணைக்கலாகாது என்பதே சரியானது.

சில போர் காலத்து இறைவசனங்கள் தவறாக கையாளப்பட்டு தவறான பொருள் தரப்படுவதாலும் இது போன்ற வெறுப்புகள் அதிகம் ஆகிறது. ஆனால் குர் ஆன் அத்தியாயம் 9 : வசனம் 6, உங்களீடம் அபயம் தேடி வருபவர்களுக்கு அபயம் அளியுங்கள் மேலும் அவர்களுக்கு அபயம் கிடைக்கும் இடத்தில் அவர்களை கொண்டு சேர்த்து விடுங்கள் என்ற குர் ஆன் வசனம் மறைக்கப் படுகிறது. ஆகையால் இஸ்லாம் முஸ்லிம் அல்லாதவர்களை கண்ட இடத்தில் எல்லாம் வெட்ட சொல்கிறது என்று தவறான பிரச்சாரம் மூலம் குரோதம் வித்திட்டு வளர்க்கப் படுகிறது. 

இதில் பல அப்பாவி சகோதரர்கள் சிக்கி, முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று கருதி, தாமே மனிதாபிமானத்திற்கு எதிராக அப்பாவிகளும் அபலைகளும் கண்ணீரில் மூழ்கிடும் விதமாக செயல்படும் பயங்கரவாதிகளாகி விடுகின்றனர் என்பதை ஏனோ அறிவதில்லை.

இதிலிருந்து விடுபடுவதே மனிதகுலத்திற்கு இவர்கள் செய்யவேண்டிய முதற் கடமையாகும் என்பதை உடன் உணர்ந்து திருந்திடுவார்களாக. - முஸ்பா முஹம்மத்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1622</link>
			<description>அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும், வணக்கம். என் குங்குமம் பேட்டியை மறுபிரசுரம் செய்ததற்காக நான் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நிற்க. அந்த பேட்டி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் எடுக்கப்பட்டது. அதை சுருக்கமாக வெளியிட்டிருக்கிறார்கள். கருத்துக்கள் என்னுடையவைதான். வார்த்தைகள் யாவும், வார்த்தைக்கு வார்த்தை என்னுடயவை அல்ல. 

நான் இன்னொரு கருத்தும் கூறியிருந்தேன். ஆனால் அது வரவில்லை. அது நண்பர் சிவா சொன்ன கருத்தை ஒட்டியது. அதாவது, தீவிரவாதத்துக்கும் எந்த மதத்துக்கும் தொடர்பில்லை. தனி மனிதனோ, அமைப்போ ஜெய் ராம் என்று சொல்லியோ, அல்லாஹு அக்பர் என்று சொல்லியோ கொலை செய்தாலும் அது அந்த தனிமனிதரின் அல்லது அமைப்பின் குற்றமே. எனவே இஸ்லாத்தை மட்டும் குறிவைத்துத் தாக்குவது வருத்தத்திற்குரியது என்ற கருத்தில் நியாயமிருக்கிறது. தீவிரவாதம் செய்யும் முஸ்லிம்கள் இந்தியாவில் கிடையாது. ஆனால் பஜ்ரங்தள், விஎச்பி, ஆரெஸெஸ் போன்ற அமைப்புகள்தான் இந்த நாட்டில் எல்லா அட்டூழியங்களையும் செய்துகொண்டுள்ளன. குஜராத் வன்முறைகளைப் பற்றிப் படிக்கும்போது மனிதாபிமானமுள்ள எந்த மனிதனுக்கும் கோபமும் வருத்தமும் வரும். இந்து தீவிரவாதி என்றோ, கிறிஸ்தவ தீவிரவாதி என்றோ சொல்லிவிட்டால் திருப்தியடைவீர்களா என்று நண்பர் சிவா கேட்டிருப்பது நியாயமான கேள்வி. அப்படிச் சொல்வதும் தவறுதான். ஏனெனில் எந்த மதமும் கொல்லுங்கள், கற்பழியுங்கள் என்று சொல்லவில்லை. சொல்லவும் செய்யாது. எல்லாம் தனி மனித துவேஷம்தான். அதையார் செய்தாலும் தப்புதான். அப்பாவி மக்களின் உடமைகளுக்கும், மானத்துக்கும், உயிருக்கும் பங்களம் விளைவிக்கும் அனைவரும் குற்றவாளிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்தான். எந்த மதத்தையும் அதில் சேர்த்துப் பார்க்க வேண்டாமே என்பதுதான் என் கருத்து.

அன்புடன்
நாகூர் ரூமி - Nagore Rumi</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1617</link>
			<description>அன்பு சகோதரர் சிவா அவர்களே

//எங்கள் ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் ராமச்சந்திர தாஸ் பரமஹம்ஸ் கூறியிருப்பது போல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை நீதிமன்றம் பிச்சையிட்டுத்தான் நாங்கள் வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனை நாங்களே எடுத்துக் கொள்வோம். அதற்கான உரிமை எங்களுக்கு உண்டு.//

நீதி துறையை அவமதிப்பதை போல் நீதி மன்றத்தின் முடிவு வராமல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவையில் இருக்கும் ஒரு சர்ச்சைக்குரிய
ஆதாரமற்ற கூற்றை ஒருவர் கூறினால் அதை நாம் இந்திய அரசியல் சாசனத்திற்கு கட்டுபட்டு நடக்கவேண்டிய நாம் எப்படி ஒத்துக்கொள்வது.

ஒரு நம்பிக்கை உங்கள் மத நம்பிக்கை என்று நீங்கள் வாதாடுவது வேறு விஷயம், ஆனால் இங்கு ஒரு இடம் அதன் உரிமை என்று வரும் போது இவ்வாறு கூற இயலுமா? முறையாகுமா?

நாளை உங்கள் வீடு இன்னொருவருடையது என்று ஒருவர் கூற முற்பட்டால்( நீங்கள் நீதமான முறையில் முடிவு நாடினால்) நீங்கள் என்ன செய்வீர்கள் நீதிமன்றத்திடம் ஆதார ஆவணங்கள் சமர்பித்து முடிவுக்கு காத்திருக்கச் சொல்வீர் அதற்குள் அவர் என் வீடாக நான் கருதும் வீட்டை நான் பிச்சை கேட்கவேண்டாம் நான் அதை மீட்க உரிமை போராட்டம் நடத்துவேன் என்று வேறு விதமாக செயல்பட்டால் அதை உலகம் என்ன வென்று கூறும், தாங்கள் அதை சரி காண்பீர்களா? அப்படி வேறு யாராவது ஒருவர் கூறினால் அவரையும் அவர் கூற்றையும் சரி காணலாமா?

//ராமராஜ்யம் அமைக்கும் உயரிய நோக்கில், பாதையில் எதிர்படும் இடர்பாடுகளை அகற்றுவதாகத்தான் மதிப்பிற்குரிய மோடி கூறியுள்ளார். தவிர அவரது ஆட்சியை கடந்த கால இந்திய அரசும் மக்களும் மெச்சி பாராட்டியுள்ளது என்பதையும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. அனைவருக்கும் பதில் அளிக்க நேரமில்லை. வாய்ப்புக்கு இடமளித்தமைக்கு நன்றி.//

அடுத்து தாங்கள் காண நாடும் ராமராஜ்ஜியம் அமைக்குமாறு இராமர் கூறியுள்ளாரா? என்பதும் அதற்காக இடையூறாக கருதும் உங்களை எதிர்க்காத அப்பாவிகளை கொன்று குவியுங்கள் என்று கூறியுள்ளாரா? என்பது வேறு விஷயம்.. ஆனால் இப்படி மனிதகுலத்தின் இரத்தம் ஓட்டி ராட்சசர்போல் செயல்பட்டு ஆட்சி அமைத்தால் அது ராமராஜ்ஜியம் ஆகுமா அல்லது ராட்சராஜ்ஜியம் ஆகுமா என்றாவது ( தமது ஆட்சியையை மட்டும் குறிக்கோளாக கொண்ட அரசியல் வாதிகள் தான் சிந்திப்பதில்லை) தாங்கள் சிந்திக்கலாமே. 

உங்கள் உடலிலும் அதே மனித இரத்தம் தானே ஓடுகிறது, நீங்களும் சகோதரத்துவ மனித இனத்தில் பிறந்தவர்கள் தானே, இது இறைவனுக்கு உகந்த செயலா? போன்ற என் உள்ளத்திலும் பல நடுநிலையாளர்கள் உள்ளத்திலும் எழும் கேள்வியை தங்கள் சிந்தைக்கு விடுகிறேன்.

     நம்மை படைத்த எல்லாம் வல்ல
  நம் அனைவரின் ஒரே இறைவன் 
நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக. - முஸ்லிம் தமிழன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1611</link>
			<description>அய்யா உரிமைப் போராளி சிவா என்னுடைய கீழ்கண்ட கேள்விக்கு பதிலளிக்கவில்லையே. ஏன்?

//அப்படியே குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இரத்தக்காட்டேறி நரேந்திரமோடியின் தலைமையில் நரவேட்டையாடிய ஆடிய ஹிந்துத்துவத்(கவனிக்கவும்: இந்து எனக் குறிக்கவில்லை)தீவிரவாதிகளைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகின்றீர்கள் என்பதைத் தெரிவிக்கவும்.//

//இந்தியாவின் ஹிந்துக்களுக்கு சொந்தமான ராமஜென்ம பூமியை//

அதாவது பாபர் மஸ்ஜித் இருந்த இடம் தான் இராமன் பிறந்த இடம் - ராமஜென்ம பூமி என்றுக் கூற வருகிறீர்கள். அப்படித்தானே?

//எங்கள் ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் ராமச்சந்திர தாஸ் பரமஹம்ஸ் கூறியிருப்பது போல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை நீதிமன்றம் பிச்சையிட்டுத்தான் நாங்கள் வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனை நாங்களே எடுத்துக் கொள்வோம்.//

அதாவது தெளிவாக 'இந்திய அரசியலமைப்புச் சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது. ஹிந்துக்களாகிய நாங்கள் இந்திய நீதிமன்றத்தீர்ப்பை ஏற்றுக் கொள்ளமாட்டோம்' எனக் கூறவருகின்றீர்கள். அப்படித்தானே?

நான் பிறந்த எனது மண்ணின் உப்பைத் தின்று விட்டு, அது கூறும் சட்டதிட்டங்களை மதிக்கமாட்டோம், கட்டுப்பட மாட்டோம் எனக் கூறும் அளவிற்கு இன்று ஹிந்துத்துவ பயங்கரவாதிகளுக்கும், ஹிந்துத்துவத் தீவிரவாதிகளுக்கும் திமிர் ஏறி விட்டது. இந்தியச் சட்டத்தை மதிக்காத, ஏற்றுக் கொள்ளாத தேச விரோத ஹிந்துத்துவ சக்திகளுக்கு இனி இங்கே இடமில்லை. 

//அதற்கான உரிமை எங்களுக்கு உண்டு.//

எவன் வீட்டுச் சாப்பாடை எவன் உரிமைக் கொண்டாடுவது?

இந்தியச் சட்டத்தை மதிக்கமாட்டோம்; ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனக் கூக்குரலிடும் தேசவிரோத ஹிந்துத்துவ சக்திகளுக்கு இங்கு எவ்வித உரிமையும் இல்லை. தேசவிரொத ஹிந்துத்துவ சக்திகளுக்கு அழிவுக்கான காலம் நெருங்கி விட்டதை மேற்கண்ட திமிர் வாசகங்கள் தெளிவிக்கின்றன.

//முடியும் தருவாயில் உள்ள ராமர் கோவில் கட்டுமானப் பணிக்குப் பின் எல்லாரின் எல்லா கேள்விகளுக்கும் தன்னால் பதில் கிடைக்கும்.//

வீட்டை இழந்த முஸ்லிம்களின் கைகள் என்னமோ மாங்காய் பறித்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்ளும் மடையர்கள், இந்தியாவின் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து அதன் தீர்ப்புக்காக மட்டுமே காத்துள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.

நீதிமன்றத் தீர்ப்பு மட்டும் கிடைக்கட்டும்.....

தேசவிரோத ஹிந்துத்துவ சக்திகளுக்கு சாவு மணியடித்தல் அதிலிருந்து ஆரம்பமாகும் இன்ஷா அல்லாஹ்!

இறை நேசன். - இறை நேசன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1609</link>
			<description>சிவாவை எழுப்ப முடியாது.

சிவா://இந்தியாவின் ஹிந்துக்களுக்கு:// --'ஹிந்து'  என்ற பதமே ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. ஹிந்து என்ற பதத்தின் சரித்திரம் படிக்கவும.

சிவா: //உரிமைப்போராட்டம்// 
 ---இந்தியாவின் மாற்று மதத்தினர்க்கு உரிமை ? ஹிந்து எனற பெயர்தாங்கி பயங்கரவாதிகள் மட்டும் பிறக்கும் போதே உரிமையை கையில் தாங்கிக்கொண்டே பிறந்தார்களோ? இந்தியாவின் தவப்புதல்வர்களான முஸ்லீகளின் உரிமை?

சிவா: //ராமராஜ்யம்// 
:-))) ராமன் யாருடைய கற்பனையில் உதித்த கதாபாத்திரம் என்பதைத் தெரிந்து கொண்டு  ராமனை புரிந்து கொண்டு  ராம ராஜ்யத்துக்கு வரவும.;.

சிவா: // உன்னத  சேவை. + உயரிய நோக்கில்// 
இந்த இரு பதங்களும.; சிவாவின் கையில் கண்ணியம் இழந்தன. 

சிவா:// ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் ராமச்சந்திர தாஸ் பரமஹம்ஸ் //

இவற்றிற்க்கு ராமச்சந்திர தாஸ் பரமஹம்ஸ்  என்ன சொல்லுகிரார்? ;

1. பரமசிவன் தன் தலையில் சூடியிருக்கும் சந்திரனில் ( MOON ) ரஷ்யர்கள் , அமெரிக்கர்கள் கால் பதித்து சிவனை அவமதித்ததற்கு? கர சேவை எப்பொழுது? உரிமைப்போராட்டம்??

2. பரமசிவன் தன் தலையில் சூடியிருக்கும் சந்திரனில் (MOON ) ரஷ்யர்கள் , அமெரிக்கர்கள் கட்டியிருக்கும் கட்டுமானங்களுக்கு கர சேவை எப்பொழுது? உரிமைப்போராட்டம்??

3. இமய மலையில் சிவனும்   சக்தியும்  வசித்து வரும் பகுதியை சீனா தன்னுடைய ஆக்கிரமிப்பில் உள்ளாக்கிக் கொண்டதே !!!  கர சேவை எப்பொழுது? உரிமைப்போராட்டம்??

சிவா: //அரசின் கட்டுப்பாட்டில்  உள்ள நிலத்தை நீதிமன்றம் பிச்சையிட்டுத்தான் இந்தியாவின் ஹிந்துக்களுக்கு நாங்கள் வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை அதனை நாங்களே எடுத்துக் கொள்வோம். அதற்கான உரிமை எங்களுக்கு உண்டு. //

பச்சை பயங்கரமே.!!!! இத்தன்மையை விவரிக்க அகராதியில் வார்த்தை இல்லை.

சிவா: //மோடி ஆட்சியை கடந்த கால இந்திய அரசும் ( மக்களும் மெச்சி பாராட்டியுள்ளது என்பதையும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. /// 
????   :-))))))))))

இறை நேசன்:கண்ணைக் கட்டிக் கொண்டு உலகம் இருண்டு விட்டதாகக் கூறினால் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் உள்ளவர்கள் வேண்டுமானால் அதை நம்பலாம். மற்றவர்களும் நம்ப வேண்டுமா என்ன? 
---------------------------
தூங்குகிறது போல நடிக்கும் சிவாவை  யாராலும் எழுப்ப முடியாது - MOHAMED ALI JINNAH</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1608</link>
			<description>பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 இந்துத்துவா பயங்கரவாதியின் முகம் சிவாவின் மூலம் தெளிவாகி விட்ட நிலையில் இந்த பயங்கரவாதிகளுக்கு நீங்களெல்லாம் என்ன பதிலை அளித்தாலும் அவர்கள் தலையில் ஏறாது.இந்த நாட்டை நேசிக்கக்கூடிய இந்த நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையிலேயே அக்கறையிள்ள மனிதநேயம் கொண்ட மக்களுக்கு ஒருக்கடமையுண்டு அதைக்கட்டாய கடமை என்றே கூறலாம், அது இந்துத்துவா பாஷிஷத்திற்கெதிரான ஒரு நீண்ட போராட்டம்.இந்த பயங்கரவாதிகளை இந்த நாட்டைவிடு அப்புறப்படுத்தும் வரை இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு நிம்மதியில்லை. - muslimeen</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1600</link>
			<description>//உங்கள் ஆட்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்//

என்ற உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்கத் தயாராக இருக்கின்றேன். அதற்கு முன்,

//உங்கள் கண்களுக்கு பயங்கரவாதமாக தெரிவது எங்களுக்கு உரிமை மீட்புப் போராட்டமாக தெரிகிறது.//

பாபரி மஸ்ஜித் மேட்டர் என்ன வகையில் உங்களுக்கு உரிமை மீட்புப் போராட்டமாக ஆகும் என்பதைச் சற்று விளக்கவும்.

அப்படியே குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இரத்தக்காட்டேறி நரேந்திரமோடியின் தலைமையில் நரவேட்டையாடிய ஆடிய ஹிந்துத்துவத்(கவனிக்கவும்: இந்து எனக் குறிக்கவில்லை)தீவிரவாதிகளைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகின்றீர்கள் என்பதைத் தெரிவிக்கவும். 

உரிமை மீட்புப் போராளி சிவா அவர்களின் பதிலுக்காகக் காத்திருக்கும்,

இறை நேசன் - இறை நேசன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1599</link>
			<description>//அபுமுகை, உங்கள் கண்களுக்கு பயங்கரவாதமாக தெரிவது எங்களுக்கு உரிமை மீட்புப் போராட்டமாக தெரிகிறது.//

சிவா, 
இப்படித்தான் எல்லா மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகளும், தமது பயங்கரவாதச் செயலுக்கு ''உரிமை மீட்புப் போரட்டம்'' என கெளரவ முத்திரைக் குத்திக்கொள்கிறார்கள். 

இதில் எந்த மதத்தாரும் விதிவிலக்கல்ல. ஆனால் ஒரு முஸ்லிம் பயங்கரவாதத்தில் ஈடுபடும் போது மட்டும் அவன் சார்ந்த மதத்தோடு சேர்த்து இஸ்லாமியப் பயங்கரவாதி என்று முத்திரைக் குத்தப்படுகிறான். 

இதே நிலை, பாபர் மஸ்ஜிதை இடித்தக் கயவர்களுக்கும் பொருந்தும் என்றாலும் அவர்களை 
இந்துத்வ பயங்கரவாதிகள் என்ற உண்மையை மீடியாக்கள் வெளியிடுவதில்லை. 

இப்போ, இன்னொரு மதம் சார்ந்த வணக்க வழிபாடு ஸ்தலத்தை இடித்தது ''உரிமைப் போரட்டம்'' என்று சரி கண்டிருப்பது மீடியாவையெல்லாம் தூக்கி விழுங்கி விட்டதய்யா! - அபூ முஹை</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1595</link>
			<description>சிவாவின் அசலை வெளிக்கொணர்ந்த அபுமுஹை!!!.

1. சிவா: //ஏன்னா தீவிரவாதம் செய்ற முஸ்லிம் தவிர வேற எவரும் மதத்தினை துணைக்கு அழைத்து கொள்வதில்லை
கருத்து எழுதியவர் சிவா, பதிந்தது: October 25, 2007 நேரம்: 15:08 //

2. சிவா, 2. //சரி. வெட்ட வந்த ஒரு காஃபிர் கூட குரான் ஒலி கேட்டு முஸிலிம் ஆக மாறின வரலாறு இல்லையா? அதுபோல் ஒரு காஃபிரை உள்ளே விட்டால் அவர் காபா மற்றும் இன்னபிற கிரியைகளைக் கண்டு மனம் மாறி முஸ்லிம் ஆக மாறிக்கொள்ள வாய்ப்பு உள்ளதே? அந்த வாய்ப்பு ஏன் மறுக்கிறீர்கள்?
கருத்து எழுதியவர் சிவா, பதிந்தது: October 25, 2007 நேரம்: 15:16   //

3. அபுமுஹை:  சரி, காபாவில் நிறைவேற்றப்படும் கிரியைகளைப் பார்த்து ஒரு காஃபிர் முஸ்லிம் ஆக மாறிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்றால் மக்கா, மதீனா இரு புனிதத்தலங்களின் நேரடித் தொலைக்காட்சிகளைக் கண்டு மாறிலாமே!..........
முறையான திறவுகோல் கொண்டுத் திறந்து வாசலில் நுழையுங்கள் என அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் நன்றி!
4. சிவா: //இஸ்லாத்தில் பெயரால் ஜிகாத் செய்கிறோம் என்று நாங்களா முஸ்லிம் தீவிரவாதிகளை செய்யச் சொன்னோம். அல்லது இல்லாதையா டிவியும், மீடியாவும் சொல்கின்றன? அவர்களாகத்தானே குரானை கையில் தூக்கிப்பிடித்து 'அல்லாகு அக்பர்' என்று குறிக்கொண்டு டிவியில் போஸ் கொடுக்கிறார்கள்.

அதனால் தான் அவ்வாறு சொன்னேன்.
கருத்து எழுதியவர் சிவா, பதிந்தது: October 26, 2007 நேரம்: 7:17//

5. அபுமுஹை: 4.//அவரிடம்(சிவாவிடம்) இப்போ நேரடியாக ஒரு கேள்வி.

ராமன் என்ற கடவுளின் பெயரால் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது. இது மதத்தின் பெயரால் விளைவித்தப் பயங்கரவாதமா இல்லையா?//
 
என்று சிவாவிடம கேட்டு சிவாவின் முகமூடியை கழற்றிய அபுமுஹை. 

6. சிவா:அபுமுகை, உங்கள் கண்களுக்கு பயங்கரவாதமாக தெரிவது எங்களுக்கு உரிமை மீட்புப் போராட்டமாக தெரிகிறது.
கருத்து எழுதியவர் சிவா, பதிந்தது: October 26, 2007 நேரம்: 11:59

முகமூடி கழற்றப்பட்ட சிவா.. - MOHAMED ALI JINNAH</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1606</link>
			<description>கிட்டத்தட்ட நிறைய பேர் ஒரே விசயத்தையே பிடித்து தொங்குவதால் என் பதிலை பொதுவாகவே வைக்கிறேன். நான் கேட்க வந்த கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கா பட்சத்தில் நீங்கள் கேட்டுள்ளவற்றிற்கு என்னால் பதில் கூறவும் முடியும்.

உரிமைப்போராட்டம் என்பது இந்தியாவின் ஹிந்துக்களுக்கு சொந்தமான ராமஜென்ம பூமியை மீட்டெடுக்கும் முயற்சியில் அமைந்த உன்னத சேவை.

எங்கள் ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் ராமச்சந்திர தாஸ் பரமஹம்ஸ் கூறியிருப்பது போல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை நீதிமன்றம் பிச்சையிட்டுத்தான் நாங்கள் வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனை நாங்களே எடுத்துக் கொள்வோம். அதற்கான உரிமை எங்களுக்கு உண்டு.

முடியும் தருவாயில் உள்ள ராமர் கோவில் கட்டுமானப் பணிக்குப் பின் எல்லாரின் எல்லா கேள்விகளுக்கும் தன்னால் பதில் கிடைக்கும்.

ராமராஜ்யம் அமைக்கும் உயரிய நோக்கில், பாதையில் எதிர்படும் இடர்பாடுகளை அகற்றுவதாகத்தான் மதிப்பிற்குரிய மோடி கூறியுள்ளார். தவிர அவரது ஆட்சியை கடந்த கால இந்திய அரசும் மக்களும் மெச்சி பாராட்டியுள்ளது என்பதையும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. அனைவருக்கும் பதில் அளிக்க நேரமில்லை. வாய்ப்புக்கு இடமளித்தமைக்கு நன்றி. - சிவா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1582</link>
			<description>யார் மீதோ உள்ள கோபத்தை சிவா எங்கோ திருப்பி விடுகிறார்.
 
//ஏன்னா தீவிரவாதம் செய்ற முஸ்லிம் தவிர வேற எவரும் மதத்தினை துணைக்கு அழைத்து கொள்வதில்லை//

மதத்தின் பெயரால் பயங்கரவாதம் செய்பவர்கள் முஸ்லிம் மட்டுமே என்ற வகையில் சிவாவின் மேற்கண்ட விமர்சனம் இருக்கிறது. இதற்குப் பதிலாக மதத்தின் பெயரால் இந்துத்வ பயங்கரவாதிகளும் செயல்பட்டிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் மதத்தின் பெயரால் பயங்கரவாதிகள் என அடையாளப் படுத்தப்படவில்லையென தகர்க்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை ஒரு சாம்பிளாக வைத்தோம். அதை ஜீரணித்துக்கொள்ள இயலாத சிவா என்பவர், அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தோரணையில் மீண்டும் வந்திருக்கிறார். அவரிடம் இப்போ நேரடியாக ஒரு கேள்வி.

ராமன் என்ற கடவுளின் பெயரால் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது. இது மதத்தின் பெயரால் விளைவித்தப் பயங்கரவாதமா இல்லையா?

சிவா விளக்கம் எழுதுவாராக! - அபூ முஹை</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1581</link>
			<description>//.....பயங்கரவாதிகள் என ஒரு மிடியாவும் உண்மையை முணங்கியதில்லை.//

அபுமுகை, இந்து தீவிரவாதிகள் என்று மீடியாக்கள் கூறவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியமைக்கும், முசுலிம்கள் அப்படித்தான் என்று ஒப்புக்கொண்டமைக்குக்கும் நன்றி.

இரண்டு பேரையும் சரிக்கு சரியாக மதத்தின் பெயர் சொல்லி தீவிரவாதிகள் என்று சொல்லிவிட்டால் சந்தோஷப்படுவீர்கள் பொலும். - சிவா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1579</link>
			<description>நான் கேட்டிருந்த இரு வரிகளுக்கு ஏகப்பெரிதாக சரித்திரத்தை எழுதியிருந்த முஸ்பாமுகம்மத் அவர்களே, உங்களுக்கு நன்றி.

உல்ஃபா தீவிரவாதிகளும், நக்சலைட் தீவிரவாதிகளும் அவரவர் செயலுக்காக / இயக்கத்துக்காக அவ்வாறு அழைக்கப்ப்படுகிறார்கள் என்று நீங்களே சொல்கிறீர்கள்.

இஸ்லாத்தில் பெயரால் ஜிகாத் செய்கிறோம் என்று நாங்களா முஸ்லிம் தீவிரவாதிகளை செய்யச் சொன்னோம். அல்லது இல்லாதையா டிவியும், மீடியாவும் சொல்கின்றன? அவர்களாகத்தானே குரானை கையில் தூக்கிப்பிடித்து 'அல்லாகு அக்பர்' என்று குறிக்கொண்டு டிவியில் போஸ் கொடுக்கிறார்கள்.

அதனால் தான் அவ்வாறு சொன்னேன். - சிவா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1578</link>
			<description>குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ  .
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26, 2007   
 
முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம் 

குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26, 2007    
    
அகமதாபாத்: குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.

இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது.

குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.

கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது.

அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களில் படம் பிடித்தது.

ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் இவர்கள் பேசியுள்ளனர்.

தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.

இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.

வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி..

கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை, தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார்.

மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் கொலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட்.

போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்...

விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்கள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.

பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்....
பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார்.

மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார்.

நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.

இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.

இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன.

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாஷ் ரத்தோட் என்பவர் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏ மாயா பென் வீதி வீதியாக சென்று முஸ்லீம்களை விரைவாக கொல்லுங்கள், யாரையும் விடாதீர்கள் என்று வேகப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.

சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் கூறுகையில், போலீஸார் எங்களை அழைத்து சில இடங்களை சுட்டிக் காட்டி இங்கு முஸ்லீம்கள் சிலர் ஒளிந்துள்ளனர். அவர்களை விடாதீர்கள் என்று எங்களுக்கு வழி காட்டினர். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று வெளியிலிருந்து கதவுகளை மூடி உள்ளேயே வைத்து அவர்களை எரித்துக் கொன்றோம் என்று தெரிவித்துள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ரமேஷ் தவே கூறுகையில், இதை நாங்கள் இப்போது செய்யவில்லை. கடந்த 20, 25 வருடங்களாகவே எங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் (முஸ்லீம்கள்) கொன்று குவித்துள்ளோம் என்று கூறியுள்ளார் தவே.

அரசு, நீதித்துறை, காவல்துறையின் கூட்டுச் சதி:

குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி ஷா கமிஷன் முன்பு ஆஜரான அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா கூறுகையில்,

கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. முதல்வர் நரேந்திர மோடி உயர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு வாய் மொழியாக உத்தரவிட்டார்.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மோடி மிகவும் அப்செட் ஆக இருந்தார். அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால் முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார்.

முஸ்லீம்களைக் கொன்ற தினத்தை ஆண்டுதோறும் இந்துக்கள் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். அதே சமயம் அவர்களைக் கொல்வதை விட நசுக்குவதுதான் மிகவும் சிறந்தது. இதன் மூலம் முஸ்லீம்கள் காலம் பூராவும் இந்துக்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள்.

முஸ்லீம்களைக் கொல்வதைப் போல அவர்கள் மீது பொருளாதார நெருக்கடியைத் திணிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாண்ட்யா இதை விட பயங்கரமாக, இந்த சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஷா கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டன பாஜக மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், நீதிபதி நானாவதியுடன் கூட்டாக விசாரித்த கே.ஜி.ஷா (இவர்தான் கமிஷனின் தலைவர்) ஒரு பாஜக அனுதாபி என்றும் கூறியுள்ளார் பாண்ட்யா.

வி.எச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்கு சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக அவர்கள் வாதாடினர் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2007/10/26/india-sting-traps-footsoldiers-of-gujarat-riots.html - MOHAMED ALI JINNAH</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1575</link>
			<description>//ஏன்னா தீவிரவாதம் செய்ற முஸ்லிம் தவிர வேற எவரும் மதத்தினை துணைக்கு அழைத்து கொள்வதில்லை// 

ஆஹா வழமையான மிக அருமையான திரித்தல்,
 
ஏன்னா ஒரு மதம் சார்ந்த மக்களின், அதாவது முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டு ஸ்தலாகிய பழம்பெரும் பாபர் மஸ்ஜித் இடித்துத் தகர்க்கப்பட்டது. இது பயங்கர வாதத்தின் உச்ச கட்டமாக இருந்தும் பாபர் மஸ்ஜிதை தரைமட்டமாக்கிய பயங்கரவாதிகள் அவர்களின் மதம் சார்பாக சேர்த்து பயங்கரவாதிகள் என  ஒரு மிடியாவும் உண்மையை முணங்கியதில்லை.
 
இத்தனைக்கும் இந்துத்வ பயங்கரவாதிகள் ராமன் என்ற கடவுளின் பெயரிலியே பயங்கரவாதத்தை அரங்கேற்றினர் என்பதும், எங்கள் மத நம்பிக்கையை நீதிமன்றம் எதுவும் செய்ய முடியாது என்றும் சூளுரைத்த விஷயம் சிவாவுக்கு தெரியுமோ என்னவோ?

இதிலிருந்து, முஸ்லிம்களை மட்டுமே அவர்கள் மதம் சார்ந்த பயங்கரவாதிகளாக சித்தரிப்பது இவர்களின் திட்டமாக இருக்கிறது சிவா உள்பட என்பது உள்ளங்கை நெல்லிக்கனி! - அபூ முஹை</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1588</link>
			<description>//அவரிடம் இப்போ நேரடியாக ஒரு கேள்வி.

ராமன் என்ற கடவுளின் பெயரால் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது. இது மதத்தின் பெயரால் விளைவித்தப் பயங்கரவாதமா இல்லையா?//

அபுமுகை, உங்கள் கண்களுக்கு பயங்கரவாதமாக தெரிவது எங்களுக்கு உரிமை மீட்புப் போராட்டமாக தெரிகிறது.

நான் கேட்க வந்தவைக்கு பதில் சொல்லாமல் கேள்வியை நீங்கள் அடுக்குகிரீர்கள். உங்கள் ஆட்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்றால் நீங்கள் மட்டும் சும்மாவா... அதை இடிக்கலையா? இதை ஊடகங்கள் பெரிதாக்க மறந்துவிட்டது என்கிர்கள்

இதனால் முச்லிம்கள் ஏன் இப்படி? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமலே விடைபெருகிறேன். நன்றி - சிவா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1585</link>
			<description>அன்பு சகோதரர் சிவா அவர்களே

//ஏன்னா தீவிரவாதம் செய்ற முஸ்லிம் தவிர வேற எவரும் மதத்தினை துணைக்கு அழைத்து கொள்வதில்லை//

மேற்கண்ட பின்னூட்டத்தில் நான் உல்ஃபா மற்றும் நக்ஸல்வாதிகளை மட்டும் கூறவில்லை இதே போல் இந்து மத்த்தின் பெயரால் வட இந்தியாவில் நடந்த பிரபலமான் ஒரு சம்பவத்தையும் குறித்து இதனால் நாம் ஒட்டு மொத்த இந்துக்களையோ இந்து தீவிரவாதிகள் இப்படி செய்தார்கள் (என்றோ கூறும் மீடியாக்களோ தினசரிக்களோ பார்க்க முடிவதில்லை) என்பதையும் சுட்டிக் கட்டியுள்ளேன் என்பதை கவனிக்கவும். அதே நேரம் அப்படி கூறுவது சரியான போக்காகாது என்பதே என் நிலை.

அவர்களை கண்டிப்பது, முறையாக  தண்டிப்பது என்பது வேறு அதை ஒரு மதத்தின் சாயம் பூசுவது, தொடர்பு படுத்தி அந்த மதததைப்பற்றி தவறாக் சித்தரிப்பது என்பது இரு வேறு விஷயங்கள் ஆகும்.

//இஸ்லாத்தில் பெயரால் ஜிகாத் செய்கிறோம் என்று நாங்களா முஸ்லிம் தீவிரவாதிகளை செய்யச் சொன்னோம். அல்லது இல்லாதையா டிவியும், மீடியாவும் சொல்கின்றன? அவர்களாகத்தானே குரானை கையில் தூக்கிப்பிடித்து 'அல்லாகு அக்பர்' என்று குறிக்கொண்டு டிவியில் போஸ் கொடுக்கிறார்கள்//

மேலும் சகோதரர் ஜின்னா அவர்களின் பின்னூட்டங்களில் வந்த உண்மைகள், பாபரி மஸ்ஜித் விவகாரம், மததின் பெயரால் கையில் திரிசூலத்துடன் வாயில் ராமர் பெயருடன் அரங்கேறப்பட்டதை உலகம் முழுவதும் நேரடியாக காணமுடிந்ததே அதில் சிலர் நாங்கள் இந்துக்கள் என்று கூறுவதில் பெருமைப் படுகிறோம் என்று கூறியவர்கள். கிரிமினல் குற்றம் வழக்கு மன்றம் மூலம் சாட்டப்பட்டவர்கள், இந்து மத ஆடைகளின் அடையாளங்களான காவியுடை தரித்தவர்கள், முதல் காவல் துறையைச் சார்ந்தவர்களில் சிலர் என்றும் செய்தி இதழ்கள் படத்துடன் செய்தியிட்டன.( தி ஹிந்து, பிரண்ட்லைன் போன்ற பிரபல இதழ்கள் உட்பட)
அதற்காக இந்து தீவிரவாதிகள் என்று குறிப்பிடப்படுவதும் ஒட்டு மொத்த இந்துமதத்தை (அதில் பெரும்பான்மையானவர்கள் சரிகாணாத போது) சம்பந்தப்படுத்தி இந்து மதமும் இந்து மதததினை பின்பற்றுபவர்கள் இவ்வாரு எனும் விதத்தில் இந்து தீவீரவாதிகள் என்று குறிப்பிடுவது என்பதும் வேறு என்பதை மறுக்கமாட்டிர்கள் என்று நினைக்கிறேன், சகோ சிவா அவர்களே.

மேலும் கருத்துக்கள் இருப்பின் தொடருங்கள் என் கருத்தை அளிக்க காத்திருக்கிறேன். - முஸ்பா முஹம்மத்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/653#comment-1573</link>
			<description>அன்பு சகோதரர் சிவா அவர்களே

சற்று நடுநிலையாக நாம் தமது பின்னூடக் கருத்தை ஆய்வு செய்ய முனைவோம்.
பொதுவாக தீவிரவாதம் என்றால் என்ன பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு ஒரு வரையரையோ விளக்கமோ உண்டா என்றால், இல்லை எனும் அள்வில் தான் உள்ளது.
உதாரணத்திற்கு நமது இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்து மீட்க போராடியவர்கள் நாம் தேசபக்தர்களின் புரட்சி என்று கூறி அவர்கள் சுதந்திர இந்தியாவிற்காக செய்த ஏனைய போராட்டங்கள் தியாகங்கள் அனைத்தையும் பாராட்டி அவர்களை கவுரவிப்போம். அதே நேரத்தில் ஆங்கிலேய ஆட்சியும் அரசும் அவர்களை தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டது. ஒரே செயல் இரு வேறு கண்ணோட்டம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இரண்டாவதாக உலக அளவிலும், இந்தியாவிலும் பரவலாக நாம் பார்க்கும்போது அல்ஃபா (ULFA) என்ற பெயரில், நக்ஸல்வாதிகள் எனும் பெயரில்,JKLF எனும் பெயரில் காஷ்மீர் போராளிகள்.(இவர்கள் ஏதும் மதத்தின் பெயரைக் கூறி இது போன்ற வன்முறைகளில் ஈடுபடுவதில்லை என்பதும்,அவர்கள் செயல்களால் பாதிக்கப்படுபவர்களிலும் அவர்கள் சார்ந்த மதம் உட்பட எல்லா மதத்தை பின்பற்றக் கூடிய அப்பாவிகளும் அபலைகளும் உள்ளனர் என்பதும் மறக்கடிக்கப்படும் மற்றும் மறைக்கப் படும் உண்மையாகும்).இவர்கள் ஒரு கோரிக்கைக்காக அக்கோரிக்கையை அவர்கள் சரிகாண்பதால் அப்பாவிகளின் உயிரைப்பற்றியோ இரத்தம் ஒட்டவோ தமது உயிரைப்பற்றியோ கவலைப்படாமல் இது போன்ற கண்டிக்கத்தக்க வன்முறைகளில் மனிதாபிமானமற்ற(இஸ்லாம் உட்பட) எந்த மதமும் அனுமதிக்காத செயலிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களைப்ப் பற்றிய கண்ணோட்டமும் இதுவே அதாவது போராளிகள் / தீவிரவாதிகள்.

 இன்னும் சில இந்து அமைப்புகள் தமது அரசியல் ஆதாயத்திற்காக ஆங்கிலேயர்களால் நாட்டில் உருவாக்கப்ப்பட்ட பிரித்தாளும் சூழ்சியால் ஏற்பட்ட காழ்ப்புணர்வினால், கட்டவிழ்த்து விடும் அரசியல் வெறுப்புணர்வுகளால் செயல்படும் அப்பாவி இந்து மதத்தை சேர்ந்த ஒரு சில சகோதரர்கள், இலங்கையை சேர்ந்த விடுதலைப் புலிகள் போன்று பலரும் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு மதத்தை சார்ந்திருக்கும் போதும் இவர்களை அவர்களின் மதத்துடன் இணைத்து அழைக்கப் படாததும்,உலகள்வில் இயங்கும் மீடியாக்கள் மற்றும் அவற்றின் தாக்கத்தினால்( இஸ்லாம் எனும் சாந்தியான இறைமார்க்கத்திற்கெதிராக) செயல்படுவோர்களின் சூழ்ச்சி அல்லது அறியாமை என்றால் மிகையாகாது.

வட இந்தியாவில் ஒரு கிருத்துவ பாதிரியையும் அவர்கள் குடும்பத்தையும் அவர்கள் வாகனத்தோடு கொளுத்தியது போன்ற இன்னும் தலித்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் ரியல் எஸ்டேட் துறையினர் உலக ஆதாயம் அரசியல் வாதிகள் சூழ்ச்சிகள் என்று பரவலாக பலராலும் அப்பாவிகளுக்கு எதிராக இழைக்கப்படும் ஏனைய தீவிரவாத வன்முறைகளுக்கும், ஈனச் செயல்களுக்கும் அவர்கள் சார்ந்த மதத்தினரை பொறுப்பாக்கினால் வெறுப்பும் அமைதியின்மையும் வன்முறைகலாச்சாரமும் தொடரும் என்பதை அனைவரும் சிந்தித்துணர வேண்டும்.

இன்னும் சொல்வதென்றால் நல்லவர்களும் தீயவர்களும் எல்லா மத்தினரிலும் இருப்பர் அல்லது எந்த மத நம்பிக்கையற்றவர்களிலும் இருப்பர். அவர்களின் செயல்களுக்கு (அது அந்த மத்திற்கு மாறாக இருப்பின்) அந்த மதம் பொறுப்பாகாது.

ஆக மீடியாக்கள் மற்றும் சில அரசியல் நோக்கங்களுக்க்காக உலகளவில் அரங்க்கேற்றப்படும் இச்சுழ்ச்சியை உணர்ந்து நாம் நமது கருத்தை மறுபரீசீலனை செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

அதுவே நாம் அமைதியாக நிம்மதியாக வாழ வழி வகுக்கும் என்பதை நாம் அனைவரும் உணர்வோமாக. - முஸ்பா முஹம்மத்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

