<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>இறையச்சம் (கை)கூடியதா? </title>
		<description>Comments for இறையச்சம் (கை)கூடியதா?  at http://www.satyamargam.com , comment 1 to 1 out of 1 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:51:22 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1288#comment-5811</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்

அல்ஹம்துலில்லாஹ்..  நோன்பின் முக்கிய நோக்கமாகிய இறையச்சம் / இறையுணர்வு என்பது மனிதர்களுக்கும் மனித சமுதாயத்திற்கும் என்றென்றும் தேவையான ஒரு சிறந்த பண்பாகும்.. இதைப் பெற்றிட தரப்படும் ஒருவித ஆன்மீக பயிற்சியே இந்த நோன்பு...

எந்நேரமும் நான் (நாளை மறுமையில் என்னை கேள்விக் கேட்க கூடிய எனது குற்றங்களுக்கு தண்டிக்கக் கூடிய ) எல்லாவற்றையும் கண்காணிக்க வல்ல இறைவனின் நிகரற்ற மேற்பார்வையில் உள்ளேன் என்பதே இந்த இறையச்சம் எனும் உணர்வு

ரமலானின் நோன்பு மூலம் பெறப்படும் / பெறவேண்டிய இவ்வுணர்வு  ( இறையச்சம்) அது உள்ள ஒரு மனிதனுக்கு மட்டுமின்றி அவன் வாழும் சுற்றத்திலும் சமூகத்திலும் நீதமான, சாந்தியான,  மற்றும் ஒழுக்கமான... ஆக்கப்பூர்வ சிந்தனைகள் பரவிடவும் அதனால் எல்லாவற்றிலும் சிறந்த நற்பலன்கள் விளைவிக்கவும் வல்லது. 

நபி( ஸல்) அவர்கள் கூறினார்கள் &quot;
எவர் பொய்யையும் தீயகாரியங்களையும் கைவிடவில்லையோ அவர் வெறுமன உண்ணாமலும் பருகாமலும் இருப்பது அல்லாஹுக்கு தேவையற்றது.


       இந்த இறைவசனத்திலும் நபி மொழியிலும் வலியுறுத்தப்பட்ட பேருண்மையை மறந்து நோன்பை வெறும் சடங்காக நிறைவேற்றும் நிலையில் முஸ்லிம்கள்  இருந்து விட்டால் அல்லது இந்த பெரும் நன்மையை முறையாக பெறாத நிலையில் இந்த நோன்பு மாதம் மூதல் மீதமுள்ள நாட்களும் கழிவது என்ற நிலை இருப்பின், இந்த முக்கிய நோக்கத்தை முறையாக பெறாதலால் அது மிகப்பெரும் கைசேதமாக அமைந்து விடும். இறைவன் இதை ஒரு முக்கிய கடமையாக விதித்துள்ளதன் நோக்கம் பெற்றதாக அமையாது என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்....

கருத்து வேறுபாடுகளை களைந்து / மறந்து ரமளானையும் நோன்பையும் வெறும் சடங்காக நிறைவேற்றிடும் நிலையை தவிர்த்து... இறைமறை மற்றும் நபி வழியில் முழுமையாக இந்த மாத அமல்களை நிறைவேற்றி இந்த பயிற்ச்சியை தக்க வைத்து உளப்பூர்வமாக வாழ்வதன் மூலம்... இந்த &quot;இறையச்சம்&quot; உள்ளவர்கள் எனும் பெரும் பாக்கியத்தை ரமலானின் நோன்பின் போது மட்டுமின்றி என்றும் இழந்து விடாமல் இறுதி மூச்சு வரை இருக்க அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக.  ஆமீன் - மு முஹம்மத்</description>
			<pubDate>Sat, 22 Aug 2009 18:06:31 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

