<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>ஜெர்மனில் தலைவிரித்தாடும் ...</title>
		<description>Comments for ஜெர்மனில் தலைவிரித்தாடும் இஸ்லாமோஃபோபியா! at http://www.satyamargam.com , comment 1 to 25 out of 20 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 18:09:53 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5659</link>
			<description>POOVAI-RIJVAN

அஸ்ஸலாமு அலைக்கும் 

அழகிய ஒரு முன்மாதிரியாக வாழ்ந்த சகோதரிக்கு நிலையான மறுமையின் வாழ்க்கையில் அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்து வழங்கிட பிராத்திப்போமாக. ஆமீன். 

அல்லாஹ் கூறுகிறான்....

(ஆகவே,) நிச்சயமாக, எதனை அவர்கள் பொருந்திக் கொள்கிறார்களோ, அந்நுழையு மிடத்தில் அவர்களை அவன் நுழையச் செய்வான். மேலும், நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறவன், சகிப்புத் தன்மையுடையவன்.
(அத்தியாயம் : அல் ஹஜ் - ஹஜ், வசனம்: 59)


[b][/b][b][/b][b][/b][b][/b] - RIJVAN</description>
			<pubDate>Sun, 02 Aug 2009 07:10:37 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5652</link>
			<description>POOVAI UMMAR

ASSALAMU ALAIKUM


அழகிய முன்மாதிரியாக வாழ்ந்த சகோதரிக்கு நிலையான மறுமையின் வாழ்க்கையில் அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்து (சுவர்கம்)வழங்கிட பிராத்திப்போமாக. ஆமீன். 
12


மாஷா அல்லாஹ், அந்தச் சகோதரிக்காக துஆ செய்வோம் - UMMAR</description>
			<pubDate>Sun, 02 Aug 2009 03:58:42 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5616</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் அன்பான சகோதரர்களே இப்படியான கொடுமைகள்  காட்டுமிராண்டித்தனம் இனிமேல் எங்கும் நடக்கக்கூடாது அதற்க்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம், அத்துடன் இந்த ஆக்கத்தினை நான் வேறு ஒரு இணையத்துக்கு மற்றவர்களின் பார்வைக்காக அப்படியே கொடுத்துள்ளேன் உங்கள் அனுமதியையும் வேண்டுகிறேன் நான் இலங்கையைச்சேர்ந்த [b]முனாஸ் சுலைமான் சவுதி அரேபியா. நன்றி - munas sulaiman</description>
			<pubDate>Sat, 25 Jul 2009 20:36:31 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5605</link>
			<description>[b]காட்டுமிராண்டித் தனமான செயல். மூளை மழுங்கிய அந்த ஜெர்மெனிய மிருகம்  ஹிஜாபின் அவசியம் உணராமல் மத வெறி கொண்டு ஆத்திரத்தில் செய்த இந்த படுகொலைக்கு மூன்று வயது பிள்ளையின் தாய் (இன்னும் கர்பிணி)  பலியானது நெஞ்சை உலுக்கும் கொடூரம்.[/b] - ஆக்கூர் சாதிக் அலி</description>
			<pubDate>Fri, 17 Jul 2009 04:35:25 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5604</link>
			<description>அந்த சகோதரியின் தியாகத்திற்கு உரிய கூலியை இறைவன் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட அவர்தம் குடும்பத்திற்கு எம் இரங்கல்கள்.

உங்கள் செய்தியை எமது வலைத்தளத்திலும் பதிந்துள்ளோம்

http://opjameen.blogspot.com/2009/07/blog-post_7583.html - OPJ.அமீன் லால்பேட்டை</description>
			<pubDate>Fri, 17 Jul 2009 04:22:14 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5601</link>
			<description>உருக்கமான செய்தி... ஹிஜாபின் கண்ணியம் உணரா சகோதர, சகோதரிகளுக்கு ஷெர்பினியின் மரணம் ஒரு பாடம்.

நன்றியுடன் மீள்பதிவு செய்துள்ளோம்.

http://unmai4u.blogspot.com/2009/07/blog-post.html - Abu Areej, Sri Lanka</description>
			<pubDate>Fri, 17 Jul 2009 03:57:59 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5600</link>
			<description>[b]மர்வா அல் ஷெர்பினி: 'நீதி'யின் முன் 'அநீதி'யிழைக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்![/b]

நீதிமன்றில்....
நீதிபதிகள் பார்த்திருக்க...
அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்...
ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....?

இது ஒன்றும் &quot;ஜாஹிலிய்யாக்' காலத்தில் மனிதப் பண்புகள் வளர்ச்சியுற்றிராத ஒரு தேசத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. சரியாக பதினைந்து நாட்களுக்கு முன் (ஜூலை 01) ஜேர்மனியின் &quot;ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் நடந்தேறிய &quot;அசிங்கம்'தான் இது.

&quot;மர்வா அல் ஷெர்பினி' எனும் 32 வயதேயான கர்ப்பிணித் தாய்தான் இவ்வாறு அநியாயமாகக் கொல்லப்பட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் &quot;எல்வி அலி ஓகாஸ்' எனும் இளைஞரைக் கரம்பிடித்தார். ஓகாஸ் ஒரு பொறியியலாளர். ஷெர்பினி &quot;மருந்தாளர்' துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவர்களுக்கு முஸ்தபா எனும் பெயரில் மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.

துருக்கியைச் சேர்ந்த இத்தம்பதியர் 3 வருடங்களுக்கு முன்னர்தான் ஜேர்மனியில் குடியேறினார்கள்.2008ஆம் ஆண்டு ஷெர்பினி தனது மகன் முஸ்தபாவுடன் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது &quot;அலெக்ஸ்' எனும் 28 வயது இளைஞன் ஷெர்பினியைப் பார்த்து &quot;தீவிரவாதி' என அழைத்ததுடன் மிக மோசமான தூஷண வார்த்தை ஒன்றையும் பிரயோகித்துள்ளான்.ஷெர்பினி இஸ்லாமிய முறையில், ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணமாகும்.

தன்னையும், தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற ஷெர்பினி &quot;ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சுக்கு 780 யூரோ பணத்தை தண்டமாக விதித்தார். அப்போதுதான் அந்த அகோரச் சம்பவம் நடந்தேறியது.

திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன்று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்.நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்கவே இச்சம்பவம் நடந்தேறியது. அச்சமயம் அலெக்ஸை சுட்டுத் தள்ள வேண்டிய பொலிசாரோ தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஓகாஸ் மீதே துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஓகாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவித் தாயான ஷெர்பினி நீதிமன்றத்தில் வைத்தே உயிர் துறந்தார். ஷெர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றில் சுமந்திருந்த மூன்று மாதக் கருவும் அங்கு உயிர் துறந்தது.மூன்றே வயதான மகனான முஸ்தபா முன்னிலையிலேயே அவனது தாய் உயிரைத் துறந்தார். தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

&quot;தீவிரவாதம்', &quot;பயங்கரவாதம்', &quot;மனித உரிமை' பற்றி அதிகம் கொக்கரிக்கும் மேற்குலகில் நடந்த இச்சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக எகிப்தியர்களை பெரிதும் கொதிப்படையச் செய்துள்ளது.தனது மார்க்கத்திற்காக அதன்படி தனதுடலை மறைத்து வாழ்ந்தமைக்காக உயிர் துறந்த மர்வா அல் ஷெர்பினியின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 6ஆம் திகதி எகிப்தின் அலெக்ஸாண்டிரா நகரில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் கலந்து கொண்ட இந் நல்லடக்க நிகழ்வில் ஜேர்மனுக்கும் யூதர்களுக்கும் எதிரான கோஷங்கள் வானைப் பிளந்தன. இஸ்லாத்திற்காக தன்னுயிர் நீத்த மர்வாவுக்கு ஆதரவாக இன்று சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. &quot;ஹிஜாபுக்காக ஷஹீதான பெண்' என இவரை முஸ்லிம் உலகில் பலரும் வர்ணித்துள்ளனர். அத்துடன் எகிப்திலுள்ள அலெக்சாந்திரா நகர வீதி ஒன்றுக்கு மர்வாவின் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் மர்வாவின் கொலையை மூடி மறைத்து விட்டன.இச்சம்பவம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையிடலையும் மேற்குலக ஊடகங்கள் செய்யவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் துருக்கியின் அல்சுகூர் தினசரியின் ஆசிரியர் அப்துல் அஸீம் ஹம்மாத் ஒரு யூதர் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மேற்கு ஊடகங்கள் அதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மர்வாவின் படுகொலை குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு கொலைகாரனான அலெக்சுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என மர்வாவின் சகோதரர் தாரிக் அல் ஷெர்பினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் கடந்த இச்சம்பவம் குறித்து ஜேர்மன் அரசு உரியவிசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் வெளியிட்டுள்ள ஈரானிய தலைமை நீதிபதி ஆயத்துல்லாஹ் மஹ்மூத் சரோதி இச்சம்பவத்தின்போது நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இச்சம்பவம் பற்றி ஜேர்மன் அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என எகிப்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர.

அண்மையில் பிரான்சில் 'புர்கா' எனும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையைத் தடை செய்வது குறித்து நிகலஸ் சார்கோஸி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. சார்கோசியின் இந்த வெறுப்பேற்றும் கருத்து அலெக்ஸின் கொலை வெறிக்குப் பின்னணிக் காரணமாக அமைந்திருக்க முடியும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இஸ்லாத்துக்கெதிராக மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இவ்வாறான பிரச்சாரங்களே முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி...போன்ற ஊடகங்களின் வார்த்தைப் பிரயோகங்கள்தான் அலெக்ஸ் போன்றவர்களை மூளைச்சலவை செய்கின்றன.உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் தமது கருத்துநிலை குறித்து ஒருகணம் சிந்திப்பதற்கு மர்வாவின் கொலை ஒரு நல்ல உதாரணம் எனலாம்.

உண்மையாகவே தான் அவமானப்படுத்தப்பட்டமைக்காக வன்முறைகளைக் கையாளாமல் நீதிமன்றத்தை நாடிய மர்வா தீவிரவாதியா? அல்லது நீதிபதியின் தீர்ப்பினால் கோபமுற்று ஓர் கர்ப்பிணித்தாயையே ஈவிரக்கமின்றி கொலை செய்த அலெக்ஸ் தீவிரவாதியா?

ஒரு பெண் கண்முன்னால் கொல்லப்படுகையில் அவளை காப்பாற்ற முனையாது வேடிக்கை பார்த்த ஜேர்மனிய பொலிசாரையும் நீதிபதிகளையும் இந்த ஊடகங்கள் எவ்வாறு வர்ணிக்கப்போகின்றன?

ஒரு கொலைகாரனின் கையில் அகப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்றுவதற்கான உரிமையைக் கூட வாங்காத ஜேர்மனின் &quot;மனித உரிமை'யின் லட்சணம் இதுதானா?

மேற்குலகு முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க நாகரிகம் எனும் பேர்வையில் ஹிஜாபைக் கழற்றி எறிந்து விட்டு நடைபயிலும் &quot;முஸ்லிம்' பெண்மணிகளே...உங்கள் எல்லோருக்கும் ஷஹீத் மர்வா அல் ஷெர்பினியின் தியாகம் உறைக்கிறதா என்ன?

நன்றி: http://fairoozmbm.blogspot.com/2009/07/blog-post_15.html
16.07.2009 - MBM.FAIROOZ</description>
			<pubDate>Fri, 17 Jul 2009 00:27:56 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5593</link>
			<description>மனதைக் காயப்படுத்திய இந்தச் செய்தியை மீள் பதிவு செய்துள்ளேன். நன்றி!
இறக்க நேரிடும் என்று நன்கு தெரிந்தும் இறைக்கட்டளையான ஹிஜாப் அணிந்த இந்த சகோதரிக்கு உயரிய ஷஹீத் அந்தஸ்தை இறைவன் அளிக்க துஆக்கள்.

[url]http://karim74.wordpress.com/2009/07/13/where-is-humanisum/[/url]

இங்கே நடைபெரும் கலந்துரையாடலை காண நேரிட்டது.


ஸ்மைலி என்று இங்கே சகோதரர்கள் அழைத்துக் கொள்வது[b] Emotions [/b]என்ற குறியீடு பற்றி எண்ணுகிறேன். இது ஒரு யுனிவர்சல் குறியிடுதான். இஸ்லாமிய அடிப்படைகளை சரியான கோணத்தில் புரிந்து கொள்ளாமல் அறிவியல் ரீதியில் சுபாவத்தைப் பாதிக்கும் அது இது என்று எல்லாம் தம்மைச் சுற்றிய வட்டத்தினை குறுகலாக்கி சிலர் இறுக்கிக் கொள்கின்றனர் என்பது புலப்படுகிறது.


எமோஷன்களை இத்தனை சீரியஸாக எடுத்துக் கொண்டால் ஒருவர் தம்முடைய குழந்தையை பள்ளிக்கூடத்தில் கூட சேர்க்க முடியாது. ஏனெனில் உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்கள், சிறு உருவங்கள் இல்லாத இடங்கள் இல்லை. எதற்கு முக்கியத்துவம் தருகிறோம். எதனை நபியவர்கள் தடுத்தார்கள் என்பதை விளங்காமலேயே வாழ்நாள் முழுவதும் இது போன்று சில சகோதரர்கள் குழம்பி அடுத்தவர்களையும் குழப்பி வருகிறார்கள்.

அத்துடன் நம் சகோதரர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தங்கள் குடும்ப நியதிகளைப் பொதுவில் திணிக்க வேண்டாமே? என்ற வேண்டுகோளுடன் விடைபெறுகிறேன். - karim74</description>
			<pubDate>Wed, 15 Jul 2009 07:43:13 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5586</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் முஹம்மத அவர்களே

அல்லாஹ் நம் அனைவரின் பிழைகளயும் மன்னிப்பானாக.  ஆமீன்...

எனது சிறிய மகனை இது போன்ற ஸ்மைலிக்கள் ஈமேயில் உபயோகிப்பதை தவிர்க்குமாரு நான் கூறியுள்ளேன் காரணம் இது தேவையற்ற உருவப்படமாக இருப்பது மட்டுமின்றி, அறிவியல் ரீதியாக சுபாவத்தை பாதித்து பிறரை பரிகாசம் செய்யும் கேலி செய்யும் விதமாகவும், எதையும் இலேசாக எடுத்துக் கொள்ளும் சுபாவத்துக்கு வழி கோலும், அதன் மூலம் சிறிது சிறிதாக இதைப் போன்ற இன்னும் பல புதிய பழக்கங்கள், கர்ஸர்கள் ஸ்க்ரீன் ஸேவர்கள் என்று இஸ்லாமிய நெறிகளையும் கலாச்சாரத்தையும் விட்டு விலகிட வைத்து விடும் என்ற அச்சமே..

ஆனால் இப்போது நான் விரும்பி படிக்கும் சத்தியமார்க்கம்.காம் இணையதளத்தில் இது இருக்கும் போது அவனை எப்படி சமாதானப் படுத்துவது.... கைர் அல்லாஹ் போதுமானவன்....

&quot; ரப்பனா லா துஜிஃகுலூபனா பாத இஜ்ஹதய்தனா, வ ஹப்லனா மில்லதுன்க ரஹ்மதன் இன்னக அன்தல் வஹ்ஹாப் &quot;

&quot;எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!&quot;            (அல் குர் ஆன் 3 : 8 ) - மு முஹம்மத்</description>
			<pubDate>Mon, 13 Jul 2009 14:33:38 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5585</link>
			<description>அன்று மதீனாவில் முஸ்லிம் பெண்மணியின் மேலாடையை இழுத்து வம்புக்கிழுத்த யூதனின் தலையை, அக்கொடுமையைப் பார்க்க நேர்ந்த சஹாபி வெட்டியதாகப் படித்துள்ளோம்.

இன்று, நம்மிடையிலே ஒரு முஸ்லிம் சகோதரி கொடுமையாகக் கொல்லப்பட்டிருக்கிறார். நாம் அதற்கு வருத்தம் தெரிவிக்கும் அடையாளங்களை எழுத்துக்களில் பயன்படுத்துவதைத் தலைபோகும் பிரச்சனையாக்கிக் கொண்டிருக்கிறோம். 

இத்தகைய தாழ்ந்த நிலையில் இருக்கும் இன்றைய முஸ்லிம் சமுதாயம் தான், சஹாபாக்களை விட மேலானவர்கள் என்று ஒரு மார்க்க அறிஞர் புகழாரம் வேறு சூட்டிக் கொள்கிறார்.

என்னே இச்சமுதாயத்தின் கேடு!

அல்லாஹ் தான் நம் அனைவருக்கும் உணர்வைக் கொடுக்க வேண்டும். - அன்ஸாரி</description>
			<pubDate>Mon, 13 Jul 2009 08:31:39 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5584</link>
			<description>சகோதரர் மு முஹம்மத் அவர்களே பின்னூட்ட பெட்டி நன்ராக உள்ளது என்ற என் கருத்து உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

இந்த தளத்தில் கருத்துக்களை சுதந்திரமாக இட்டால் பதிக்கிறார்கள் என்பதால் அவ்வாறு இட்டிருந்தேன். ஸ்மைலிக்களை நீக்கவேண்டும் என்ற உங்கள் கருத்தை அனுமதித்த இந்த தளத்தினர், ஸ்மைலிக்கள் வேண்டும் என்று என்னைப்போல சிலர் கேட்டதையும் அனுமதித்தமைக்கு குறை சொல்லுகிரீர்களே? இஸ்லாம் காட்டும் வழியா என்ற கேள்வி வேறு...  அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்ட துஆக்கள். - முஹம்மத்</description>
			<pubDate>Mon, 13 Jul 2009 06:44:47 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5581</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புள்ள சத்தியமமர்க்கம்.காம் சகோதரர்களுக்கு.

ஒரு சோகமான உண்மைச் சம்பவத்தின் பின்னுட்டத்தில் வெறும் ஸ்மைலிக்கள் மற்றும் அதை சுட்டிக் காட்டியவரை குத்திக்காட்டும் விதமாக....

// பின் குறிப்பு: உங்கள் தளத்தின் பின்னூட்ட கருத்துப் பெட்டி மிகவும் நன்றாக உள்ளது)

சுட்டிக் காட்டப்பட்ட பின்பும் இவ்வாரு கருத்துக்களையும் ஸ்மைலிக்களையும் பின்னூட்டம் இடுபவர்கள், அதற்கு வழி வகுத்து அதை அனுமதிப்பவர்கள் அனைவரும் எதை சாதிக்க நாடுகிறார்களோ தெரியவில்லை.  இது தான் இஸ்லாம் காட்டும் வழியா???  கைர்....

அல்லாஹு அஃலம்.

அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழிகாட்டிட துவா செய்வோமாக.

( இனி பின்னூட்டம் இடவோ கருத்திடவோ கூட மனம் இடந்தரவில்லை. 

அல்லாஹ் போதுமானவன்.)




  - மு முஹம்மத்</description>
			<pubDate>Sun, 12 Jul 2009 18:44:53 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5578</link>
			<description>மிகவும் கொடுமையான செய்தி இது...அந்த வீர சகோதரிக்கு துஆக்கள்  &gt;:(

இதனை தமிழில் வெளிக்கொண்டு வந்த சத்தியமார்க்கம் தளத்திற்கு நன்றி.

(பின் குறிப்பு: உங்கள் தளத்தின் பின்னூட்ட கருத்துப் பெட்டி மிகவும் நன்றாக உள்ளது) - முஹம்மத்</description>
			<pubDate>Sun, 12 Jul 2009 14:13:20 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5577</link>
			<description>:'(
 அஸ்ஸலாமு அலைக்கும் 

அழகிய முன்மாதிரியாக  வாழ்ந்த சகோதரிக்கு நிலையான மறுமையின் வாழ்க்கையில் அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்து (சுவர்கம்)வழங்கிட பிராத்திப்போமாக. ஆமீன்.
 - Nasoordeen</description>
			<pubDate>Sun, 12 Jul 2009 02:30:25 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5572</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் நிவாஸ் அவர்களுக்கு

//இஸ்மைலி நமது எண்ணங்களை சில பாராக்கள் எழுதுவதை சில நேரம் ஒரு க்ளிக்கில் பிரதிபலித்து விடுமே//

மேலே Muhammad எனும் ஒரு சகோதரர் தமது பின்னூட்டத்தில் இந்த இஸ்மைலி எனும் உருவங்கள் நான்கை மட்டும் போட்டு முடித்துள்ளார். இதை தவிர ஒரு வார்த்தையும் இல்லை. இதை எப்படி விளங்குவது. சற்று அவர் அல்லது தாங்கள் விளக்குவீர்களா.

தெளிவான தமிழ் வார்த்தகள் மூலம் நமது உள்ள ஆதங்கத்தையும் வேதனையையும் உணர்வுகளையும் அனைவருக்கும் புரியும் விதமாக வெளிபடுத்துவதை விட்டு இது போன்ற சந்தேகமான முறையை அதுவும் இது போன்ற உருவங்கள் பரிகாசம்,  கேலி செய்யும் விதமாக, விநோதமாக உள்ளது என்பதை மறுக்க இயலாது.

ஒரு சகோதரி இஸ்லாத்தின் கடமையாகிய ஹிஜாபுக்காக உயிரைத் தியாகம் செய்த கண்ணீர் மல்க செய்யும் செய்தியுடன் இது போன்ற உருவங்கள் அதன் தாக்கத்தை குறைத்து கேலி செய்வதாகவே அமைகின்றது. உணர்வுகள் முறையாக எழுத்துக்களாலும் சொற்களாலும் வெளிப்படுத்த சந்தேகமற்ற வழியிருக்கும் போது இது போன்ற சந்தேகமான குறுக்கு வழிகள் தேவையற்றது, மற்றும் பத்தோடு பதினொன்று எனும் நிலையில் உள்ளது. அல்லாஹு அஃலம்.  - மு முஹம்மத்</description>
			<pubDate>Fri, 10 Jul 2009 18:52:16 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5568</link>
			<description>

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் நிவாஸ் அவர்களே...
தங்கள் பின்னூடத்தில்...

//மேலே கருத்திட்டுள்ள சகோதரர் அப்துல்லாஹ் அவர்களே இஸ்மைலி நமது எண்ணங்களை சில பாராக்கள் எழுதுவதை சில நேரம் ஒரு க்ளிக்கில் பிரதிபலித்து விடுமே. அதனால் சத்தியமார்க்கம் தளத்தினரே நீக்க வேண்டாம். மேலும் இஸ்லாத்தில் ஸ்மைலி உர்வங்கள் கூடாது எனில் மேலே சகோதரரி குடும்பத்தினர் போட்டாவும் நீக்கனும். மேலும் தளத்தின் அத்தனை போட்டாவையும் நீக்கவேண்டும். இத்தகைய தவறான புரிதல் வேனாமே] //

கூறியுள்ளதற்கு எனது புரிதல் விளக்கம்.
உருவப்படம் உகைப்படம் உபயோகிக்க்லாமா என்பதில் நிர்ப்பந்தம் , தேவை மற்றும் அவசியமான கல்வி போன்ற பலன் நிமித்தம், செய்திகளுக்காக , அறிமுகத்திற்காக உபயோகிப்பது என்பதும் இது போல் ஸ்மைலியாக உபயோகிப்பதும் ஒன்றாகாது.  அல்லாஹ் மிக அறிந்தவன்.



 - அப்துல்லாஹ் M</description>
			<pubDate>Thu, 09 Jul 2009 19:46:35 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5567</link>
			<description>மாஷா அல்லாஹ், அந்தச் சகோதரிக்காக துஆ செய்வோம் - ameer</description>
			<pubDate>Thu, 09 Jul 2009 14:20:17 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5561</link>
			<description>துயரமான செய்தி இது!

முஸ்லிம் ஒருவர் பிற மதப் பெண் ஒருத்தியை இதே போன்று படுகொலைச் செய்திருந்தால் - அவருக்குக் கிடைத்திருக்கும் பட்டங்களும் விளம்பரங்களும் என்ன என்பதை எண்ணிப் பார்த்தேன்.

தமிழ் ஊடகங்களில் முதல் முறை காண நேர்ந்த செய்தி. அறியத் தந்தமைக்கு நன்றி! இந்த கொடுரத்திற்கு ஜெர்மன் தலைகுனிந்துள்ளது.

செய்திக்கான சுட்டி:  http://inneram.com/index.php/20090709912/germany-regrets-hijab-murder

புர்கா கொலை: ஜெர்மனி வருத்தம்! 
--------------------------------------------------------

கடந்த ஜூலை 5 ஆம் தேதி எகிப்திய மர்வா செர்பினி என்ற 32 வயது முஸ்லிம் பெண் ஒருவர் ஹிஜாப் எனப்படும் முஸ்லிம் பெண்கள் அணியும் உடையை அணிந்ததற்காக ஏற்பட்ட சர்ச்சையில் நீதிமன்றத்திலேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதை எதிர்த்து எகிப்திய மக்கள் கெய்ரோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து ஜெர்மனி இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனி அதிபர் ஏங்கலா மெர்க்கெல் எகிப்திய அதிபர் ஹொஸ்னி முபாரக்கைச் சந்தித்து இச்சம்பவம் குறித்த ஜெர்மனி தரப்பு விளக்கம் அளிப்பார் என ஜெர்மன் அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

&quot;இது போன்ற ஒரு மதத்துக்கு எதிரான கடுமையான வெறுப்பு உமிழ்தலை ஜெர்மனி ஏற்றுக் கொள்ளவில்லை; மர்வா என்ற முஸ்லிம் பெண்ணைக் கொன்ற அக்சன் என்ற ரஷ்ய நபர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனை வழங்கப்படுவார்&quot; என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.

அரபு லீக் பொதுச்செயலர் அமர் மூசா, &quot;இது மனித இனத்துக்கு எதிரான வன்கொடுமை; இதை அனுமதிக்கக் கூடாது&quot; என்று கூறியுள்ளார்.

 - நிஜாமுத்தின்</description>
			<pubDate>Thu, 09 Jul 2009 07:41:28 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5559</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் 

அழகிய ஒரு முன்மாதிரியாக வாழ்ந்த சகோதரிக்கு நிலையான மறுமையின் வாழ்க்கையில் அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்து வழங்கிட பிராத்திப்போமாக. ஆமீன். 

If a Muslim is involved in Killing, the whole Islam and Muslim is condemned, anyhow just read this story also which held last week in Sri lanka.
http://www.asfarm.20m.com/1209.htm 
 - asfar</description>
			<pubDate>Thu, 09 Jul 2009 01:42:34 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1249#comment-5558</link>
			<description>இதுவும் இறைவனின் செயல் தான். ஒரு உயிர் இழப்பால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் உணர்வுகளையும் ஒன்று திரட்டியுள்ளான். - nizam kuraisi. koothanallur</description>
			<pubDate>Wed, 08 Jul 2009 16:21:21 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

