<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>உங்களுக்கு ஆட்சி அதிகாரம் ...</title>
		<description>Comments for உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டால் ...? at http://www.satyamargam.com , comment 1 to 8 out of 8 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:53:12 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1204#comment-5211</link>
			<description>ம்ம்..

//இங்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டுரையோ 'ஒரு இஸ்லாமிய ஆட்சி எவ்வாறு இருக்க வேண்டும்?' என்பதை மிக அழகாக விவரிக்கிறது.//

இதற்கு மாற்று கருத்து உண்டா??

கட்டுரையாளர் என்ன சொல்கிறார்?

- அல் அமீன் - அல் அமீன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1204#comment-5147</link>
			<description>அன்புச் சகோதரர் அல் அமீன்,

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாது ஹு  

கட்டுரையை 'கேள்வி பதில்' 'பட்டிமன்ற தலைப்பு ' போன்று நோக்காமல்,
இச்சமூக பிரதிநிதி ஆட்சியாளராக தனக்கு கிடைக்கபெற்ற ஆட்சி அதிகாரத்தை

எவ்வாறு 'உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டால் ...? ' நடந்துகொள்ள வேண்டும் என்பதையே  கட்டுரையாளர் மிக தெளிவாக


// 'மனிதர்களின் அரசன் அல்லாஹ் ஒருவனே!' (114:2).

இறைவனுக்குச் சொந்தமான ஆட்சியையும் அதிகாரத்தையும் அமானிதமாகக் கிடைக்கப் பெற்றவர், ஆட்சியதிகாரத்தை விரும்பிக் கேட்காதவருக்கு அது வழங்கப் பட்டால் அதற்காக அல்லாஹ் உதவி செய்வான் (புகாரி). 

அல்லாஹ்வின் உதவி கொண்டு குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும் பின்பற்றி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தைச் செலுத்தி நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து, நீதி-நேர்மையை நிலைநாட்டி, சமுதாய ஒற்றுமையைப் பாதுகாத்து, உறுதி கொண்ட நெஞ்சுடன் எளிதில் யாவரும் அணுகக் கூடியவராகவும் மறுமையில் தனது பொறுப்புப் பற்றிக் கேள்வி கேட்கப்படும் எனும் இறையச்சத்துடன் சிறந்த வழிகாட்டியாக ஆட்சி புரிய வேண்டும். அவரே இஸ்லாமிய ஆட்சித் தலைவர். 

அவ்வாறான ஒரு தலைவரை உலக முஸ்லிம்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்த வேண்டும். இஸ்லாமிய ஆட்சியை உலகம் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் அருள்வானாக! ஆமீன்.//

'குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும் பின்பற்றி' நெறி தவறாமல் வல்ல அல்லாஹ்விடமிருந்து பெற்ற அமானிதத்தை காக்கவேண்டும் என்று புரிந்து மீண்டும் ஒரு முறை கட்டுரையை வாசித்தீர்கள் என்றால் உள்ளங்கை நெல்லிக்கனி.

சீரிய சிந்தனை கொண்ட ஒரு சகோதரியின் சிறப்பான ஆக்கத்தை முறையாக அங்கீகரித்த 'சத்யமார்க்கம்' தள நடுவர்களின் முடிவு சரியே

சகோதரி மேலும் பல நல்ல கட்டுரைகள் வெளிக்கொணர்ந்து சமுதாய கடமை ஆற்ற  மனமார வாழ்த்துகிறேன் - அபூ நஸீஹா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1204#comment-5146</link>
			<description>சகோதரர் ஜமீல்,

உங்களுக்குப் புரிந்த படிமங்கள், முன்/பின் நவீனத்துவங்கள் என்னைப் போன்ற பாமரர்களுக்கெல்லாம் புரியாது. சத்தியமார்க்கம்.காம் முன் நவீனத்துவப்பாணியிலான கட்டுரைகளையே முதன்மையானதாக தேர்வு செய்யும் என்பதும் எனக்கு தெரியாது.

முஸ்லிம் சமுதாய பெண்கள் முன் நவீனத்துவ பாணியில் எழுத ஆரம்பித்துள்ளனர் என்பது மகிழ்ச்சியான செய்தி.

வாழ்த்துக்கள்!

- அல் அமீன் - அல் அமீன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1204#comment-5145</link>
			<description>அன்புச் சகோதரர் அல் அமீன்,

பள்ளிகளில் கொடுக்கப்படும் தலைப்புகளுக்கு ஒப்புக்கு எழுதுவதுபோல் எழுதாமல்,

'ஆட்சியும் அதிகாரமும் அல்லாஹுக்கே!' என்பதை எப்போதும் மனதில் கொண்டு, 'ஆட்சியாளருக்குரிய பண்பு'களான 'தக்வா'வின் அடிப்படையில் இஸ்லாமிய 'வழிகாட்டுதல்'களின்படி 'இஸ்லாமிய அறிவை' வளர்த்துக் கொண்டு, 'எளிமை'யான வாழ்க்கை வாழ்ந்து, 'இஜ்திஹாத்' செய்து நவீன பிரச்சினைகளை அணுகி, 'மக்களின் உரிமைகள்' முழுமையாகப் பாதுகாக்கப் படுவதற்கு 'நீதி' வழங்குவதற்காகத் தகுதியுடையோரிடம் 'கலந்தாலோசனை' செய்து அனைத்துவகை மக்களும் 'உரிமையும் சுதந்திரமும்' கிடைக்கப் பெற்றவர்களாக, 'சமுதாய ஒற்றுமை'யோடு வாழ்வதற்குத் தேவையான 'கல்வி'யைக் கட்டாயம் அவர்களுக்கு அளிப்பதற்கு முழுமையாக 'ஜிஹாத்' செய்வேன் என்று சகோதரி இந்தக் கட்டுரையின் மூலம் படிமங்களாக உணர்த்துகிறார்.

நான் மேற்கோள்குறிகளுடன் குறிப்பிட்டிருப்பதைக் கட்டுரையில் சகோதரி அடிக்கோடிட்டுக் கூறியுள்ளார்.

இது சற்றே முன் நவீனத்துவ பாணியாகும்.

சத்தியமார்க்கம் தளத்தினர் இந்தக் கட்டுரையைச் சரியாகத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள் என்பது எனது கருத்து. - ஜமீல்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1204#comment-5144</link>
			<description>பள்ளியில் படிக்கும் வேளையில் இலக்கிய போட்டிகளின் போது கொடுக்கப்படும் தலைப்புகளில், 'நான் முதலமைச்சரானால்...' என்றொரு கட்டுரை தலைப்பு மிக பிரபலமானது.

அதில் குறைந்தபட்சம், 'நான் முதலமைச்சரானால்....' என்றொரு வரியாவது கட்டுரையின் ஆரம்பத்தில் வந்திருக்க வேண்டும்.

பின்னர் வரும் பத்திகளில் எல்லாம், 'நான் முதலமைச்சரானால்....... நாட்டில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர முயற்சிப்பேன், என் நிர்வாகம் எப்படி இருக்கும்' என்பவை விளக்கும் வகையில் கட்டுரை அமைய வேண்டும்.

இது 'நான் முதலமைச்சரானால்....' என்ற கட்டுரை தலைப்புக்காக எழுதப்படும் கட்டுரைகளைப் போட்டியில் பரிசீலிக்க வைக்கப்படும் அடிப்படை தகுதியாகும்.

இங்கும் அது போன்ற தலைப்பே கொடுக்கப்பட்டுள்ளது.

'உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டால்...?'

கட்டுரை எழுதும் நபர், 'எனக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தால் நான் என்னென்ன செய்வேன், எப்படி செயல்படுவேன்' என்பதை விவரிக்க வேண்டும். ஆனால், இங்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டுரையோ 'ஒரு இஸ்லாமிய ஆட்சி எவ்வாறு இருக்க வேண்டும்?' என்பதை மிக அழகாக விவரிக்கிறது.

ஆனால் கட்டுரையின் தலைப்போடு தொடர்புபடுத்தி கட்டுரையாளர் ஒரு வரி கூட எழுதவில்லை.

என்ன அடிப்படையில் இதனை முதல் பரிசுக்குரியதாக தேர்வு செய்தீர்களோ? ஆச்சரியமாக உள்ளது!

- அல் அமீன் - அல் அமீன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1204#comment-5143</link>
			<description>அருமையான கட்டுரை. இஸ்லாமிய ஆட்சி எவ்வாறு இருக்கும்? என்பதைச் சகோதரி மிக அழகாக ஆதாரங்களுடன் விளக்கிக் கூறியுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

சகோதரிக்கு வல்ல அல்லாஹ் சிந்தனையை மென்மேலும் விரிவாக்கி அருள்வானாக.

சத்தியமார்க்கம்.காம் கட்டுரை போட்டி நடுவர் குழுவினரிடம் எனக்கு ஒரு கேள்வி:

இந்தக் கட்டுரையின் தலைப்பிற்குப் பொருத்தமில்லாமல் கட்டுரை எழுதப்பட்டுள்ளதே. நீங்கள் கொடுத்திருக்கும் கட்டுரை தலைப்பினூடாக போட்டியாளர்களிடமிருந்து இவ்வகையிலான கட்டுரையைத் தான் எதிர்பார்த்தீர்களா? முதல் பரிசு வேறு கொடுத்துள்ளீர்கள். அதனால் தான் கேட்டேன்.

- அல் அமீன் - அல் அமீன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1204#comment-5125</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்

எக்காலத்திற்கும் ஏற்ப ஆக்கம்.

கட்டுரையாளருக்கும் சத்தியமார்க்கம்,காம் நிர்வாகத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள்..

தக்வா : (இறையச்சம்)

//ஆட்சித் தலைவர்கள் இறையச்சமுடையவர்களாக இருக்க வேண்டும். நபி (ஸல்) கூறினார்கள்: '... ஓர் ஆட்சித் தலைவர், அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்துக் கேள்வி கேட்கப்படுவார்' (புகாரி-884; முஸ்லிம்-3408) மறுமையில் தனது செயல் குறித்து இறைவனிடம் கேள்வி உள்ளது என்ற இறையச்சம் உடைய தலைவரே மக்களை நேர்வழியில் செலுத்த முடியும்.//

அதிகாரம் என்பது ஒரு அமானிதம் என்பதை உணராமல் அதற்கு ஆசைப்பட்டு போட்டி போடும் மாந்தர்களுக்கு அது நிறைவேற்றப்பட வேண்டிய வழிமுறைகளையும் வரையறைகளையும் இறைமார்க்கம் இஸ்லாம் தெளிவாக விளக்குகின்றது.

அதை இறைவழிகாட்டுதல் படி இறையச்சத்துடன் விளங்கி தேர்வு செய்து செயல்வடிவம் தர முன்வர நாடுபர்களே ஆட்சி வகுக்க தகுந்தவர்கள் என்பதை ஆட்சியதிகாரம் நாடுபவரும் அதை வழங்கவேண்டியவர்களும் உணரவேண்டும்.

மு முஹம்மத் - மு முஹம்மத்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1204#comment-5124</link>
			<description>மாஷா அல்லாஹ .மிக சிற்ப்பாக புரியும் படி ஒவ்வொரு தலைப்பையும் அடிக்கோடிட்டு  அதற்கான் குரான் வசனத்தையும் விள்க்கி இருக்கிறீர்கள். மேலும் இது போன்ற் கட்டுரைகள் எழுதவும். - Aysha siddeeqa</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

