<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>உம்ரா கட்டாயக் கடமையா?</title>
		<description>Comments for உம்ரா கட்டாயக் கடமையா? at http://www.satyamargam.com , comment 1 to 12 out of 12 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 18:07:10 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1197#comment-5097</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பின் சகோதரர் சுல்தான் 

சத்தியமார்க்கம் இணையதள சார்பாக வைக்கப்பட்ட உம்ராச் செய்வது கட்டாயக் கடமை அல்ல என்ற கருத்து சரி எனப்படுகின்றன.

//உம்ராச் செய்வதும் கடமையாகும் என்பதை உணர்த்தும் பல நபிமொழிகள் வந்துள்ளன. அவைகளில் சில: 

ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாம் என்றால் என்னவென்று வினவியபோது,

(الإِسْلاَمُ : أَنْ تَشْهَدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّداً رَسُوْلُ اللهِ، وَتُقِيْمَ الصَّلاَةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ، وَتَحُجَّ الْبَيْتَ وَتَعْتَمِرَ، وَتَغْتَسِلَ مِنَ الْجَنَابَةِ، وَتُتِمَّ الْوُضُوْءَ، وَتَصُوْمَ رَمَضَانَ)

இஸ்லாம் என்பது: நிச்சயமாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை என்றும் 
நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்றும் நீர் சாட்சி கூறுவது, தொழுகையை 
நிறைவேற்றுவது, ஜகாத் கொடுப்பது, (அல்லாஹ்வுடைய) வீட்டை ஹஜ் செய்வது, உம்ராச் செய்வது, பெருந்தொடக்கிற்காக -ஜனாபத்திற்காக- குளிப்பது, உளுவை முழுமையாகச் செய்வது, ரமலானில் நோன்பு நோற்பது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு உமர் -ரலி, நூற்கள் : இப்னு குஸைமா, தாரகுத்னீ -இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்த அறிவிப்பின் அறிவிப்பாளர் வரிசை தரமானது, ஸஹீஹானது என்று கூறியுள்ளார்கள்.)// 

- நீங்கள் சுட்டிக்காட்டிய தளத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்தில் இந்த ஹதீஸை ஸஹீஹான ஹதீஸ் என்றே வைத்துக்கொண்டாலும் இதில் உம்ராச் செய்வது கடமையாகும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
 
வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இஸ்லாம் என்றால் என்ன? என்று கேள்வி கேட்கிறார். உம்ராச் செய்வதும் இஸ்லாம் என்கிற ரீதியில் நபி (ஸல்) அவர்களின் பதில் அமைந்துள்ளது. உம்ராச் செய்வதும் இஸ்லாம் என்றே புரிந்து கொள்ளவேண்டும்.

ஸஹீஹான ஹதீஸ்கள் 

//( بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ )

இஸ்லாம் ஐந்து காரியங்களின்மீது நிறுவப்பட்டுள்ளது. அவை: நிச்சயமாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை என்றும் நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது, ரமலானில் நோன்பு நோற்பது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர்: இப்னுஉமர் -ரலி, நூற்கள் : புகாரீ,முஸ்லிம்)//

புனியல் இஸ்லாம் அலல் கம்ஸா - இஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.

1) ஓர் இறைவனை நம்பிக்கை கொள்வது
2) தொழுவது
3) (கடமையான) ஸகாத் கொடுப்பது
4) நோன்பு நோற்பது
5) ஹஜ் செய்வது (இது சக்திப்பெற்றவர் மீது கடமையாகும்)

உம்ராச் செய்வதும் கடமை என்றால் 6) ஆகிவிடும். பெருந்தொடக்கிற்காக குளிப்பது 7) ஆகிவிடும். உளுவை முழுமையாகச் செய்வது 8) ஆகிவிடும். 

உம்ராச் செய்வது கடமை என்பதற்கு ஸஹீஹான ஹதீஸென நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸை ஏற்றுக்கொண்டால் இவ்வளவு முரண்பாடுகள் ஏற்படும். எனவே உம்ராச் செய்வது கடமை என்பதற்கு அப்படிச் சொல்லாத ஒரு ஹதீஸை வைத்திருப்பது இங்கு பொருத்தமாக இல்லை.

இங்கே சொல்லியதில் மாற்றுக் கருத்து இருப்பின் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் சத்தியமார்க்கம் தொடர் வாசகர் பலரில் ஒருவனாகிய நானும் உம்ராச் செய்வது கட்டாயக் கடமை அல்ல என்ற கருத்தில் இருப்பதால் ஆதாரங்களுடன் வைக்கப்படும் கருத்தை ஏற்றுத் திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.

நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள அடுத்தக் கருத்துகளையும் தொடர்ந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ். - முஸ்லிம்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1197#comment-5090</link>
			<description>உம்ராச் செய்வதும் கடமையாகும் என்பதை உணர்த்தும் பல நபிமொழிகள் வந்துள்ளன. அவைகளில் சில: 

ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாம் என்றால் என்னவென்று வினவியபோது,

(الإِسْلاَمُ : أَنْ تَشْهَدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّداً رَسُوْلُ اللهِ، وَتُقِيْمَ الصَّلاَةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ، وَتَحُجَّ الْبَيْتَ وَتَعْتَمِرَ، وَتَغْتَسِلَ مِنَ الْجَنَابَةِ، وَتُتِمَّ الْوُضُوْءَ، وَتَصُوْمَ رَمَضَانَ)

இஸ்லாம் என்பது: நிச்சயமாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை என்றும் நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்றும் நீர் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, ஜகாத் கொடுப்பது, (அல்லாஹ்வுடைய) வீட்டை ஹஜ் செய்வது, உம்ராச் செய்வது, பெருந்தொடக்கிற்காக -ஜனாபத்திற்காக- குளிப்பது, உளுவை முழுமையாகச் செய்வது, ரமலானில் நோன்பு நோற்பது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு உமர் -ரலி, நூற்கள் : இப்னு குஸைமா, தாரகுத்னீ -இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்த அறிவிப்பின் அறிவிப்பாளர் வரிசை தரமானது, ஸஹீஹானது என்று கூறியுள்ளார்கள்.)

عَنْ عَائِشَةَ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَلْ عَلَى النِّسَاءِ مِنْ جِهَادٍ قَالَ نَعَمْ عَلَيْهِنَّ جِهَادٌ لَا قِتَالَ فِيهِ الْحَجُّ وَالْعُمْرَةُ 

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! பெண்கள் மீது ஜிஹாத் கடமை ஏதும் உள்ளதா? என்று ஆயிஷா (ரலி) அவர்கள் வினவியதற்கு, ஆம்! அவர்கள் மீது சண்டை இல்லாத ஜிஹாத் செய்வது கடமையாகும். அது ஹஜ்ஜும் உம்ராவும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். 
(அறிவிப்பவர்: ஆயிஷா -ரலி, நூற்கள்: அஹமத், இப்னுமாஜா)

ஹஜ்ஜும் உம்ராவும் வாழ்நாளில் ஒரு தடவை மட்டுமே கடமையாகும். 

(اَلْحَجُّ مَرَّةٌ فَمَنْ زَادَ فَهُوَ تَطَوُّعٌ)

ஹஜ் ஒரு தடவைதான் (கடமையாகும்). அதற்கு அதிகமாகச் செய்வது உபரியாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் -ரலி, நூல் :அஹ்மத்)

உபரியான ஹஜ் மற்றும் உம்ராவை அதிகமாக நிறைவேற்றுவது சுன்னத்தாகும். 

( اَلْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ )

ஒரு உம்ரா மற்றொரு உம்ராவிற்கு இடைப்பட்ட (காலங்களில் நிகழும்) பாவங்களுக்கு பரிகாரமாக அமைகின்றது. ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சொர்க்கத்தைத் தவிர வேறில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா-ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)

http://www.islamkalvi.com/fiqh/haj/01.htm
நன்றி: இஸ்லாம்கல்வி.காம் - சுல்தான், குவைத்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1197#comment-5089</link>
			<description>அஸ்ஸலமு அலைகும்,

எனது கேல்விக்கு பதில் அலித்தமைகு எனது மனமர்ன்ட நன்றிகல், மேலும் தொடர்ந்தும் இவ்வாரானா நடவடிக்கைகலை மேட்கொல்வதட்கு வல்ல அல்லாஹ் அருல் புரிவானாஹா,

இப்படிக்கு 
ஹஸன் - Hassan</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1197#comment-9324</link>
			<description>டாக்டர்,
வ அலைக்குமுஸ்ஸலாம்.

உங்களுக்கும் எனக்கும் எனும்போதுதான் க்கும் கவும் சேர்ந்து 'காஃப்'ன் ஒலி கிடைக்கிறது.  பழகும் விலகும் என்று 'கு' மட்டும் தனித்தால் 'ஹு' (hu) என்று 'ஹ்ஹே'யின் ஒலியே ஒலிக்கிறது என்பதைக் கவனியுங்கள்

நன்றி. - Sabeer abuShahruk</description>
			<pubDate>Wed, 16 Nov 2011 16:43:33 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1197#comment-9322</link>
			<description>அஸ்ஸலாமு அலைகும் வரஹ்....
இத்தளத்தில் கேள்வி கேட்கும் பெரும்பாலானவர்களும்,அதற்கு பதிலளிக்கும் தாங்களும் கூட “அஸ்ஸலாமு அலைக்கும்”
”வ அலைக்குமுஸ்ஸலாம்” என்றும் “க்”  என்ற எழுத்தைச் சேர்த்தே எழுதுகிறீர்கள்.அரபு மொழி உச்சரிப்பைத் தமிழில் துல்லியமாக கொண்டுவர முடியாதுதான்.ஆனால் இவ்விடத்தில் “க்” ஐத் தவிர்ப்பது சரியான உச்சரிப்புக்கு நெருக்கமாக இருக்குமல்லவா? தெளிவு படுத்தவும். - Dr.Mohamed</description>
			<pubDate>Wed, 16 Nov 2011 13:06:54 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1197#comment-6757</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் ரிஃப்ஸீன்,
&quot;மேலும், ஹஜ்ஜையும் உம்ராவையும் நீங்கள் அல்லாஹ்வுக்காக நிறைவு செய்யுங்கள்..&quot; எனத் தொடங்குகின்றது அந்த வசனம்.
ஹஜ் உம்ரா மட்டுமல்ல, அனைத்து காரியங்களையும் அல்லாஹ்விற்காக (அல்லாஹ்வின் திருப்திக்காக) செய்ய இஸ்லாம் வலியுறுத்துகிறது. அப்படியாயின், நம் வாழ்வில் செய்யும் அனைத்து நற்செயல்களும் கடமையாகிவிடுமா?
மேலும், அதன் முந்தைய வசனமும் &quot;இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்&quot; எனத் தொடங்குகிறது. பின்னர் எவ்வாறு கடமையான தர்மமும் (ஜக்காத்) கடைமையல்லாத உபரியான தர்மமும் (ஸதகா) வந்தது.
அது போலத்தான் இதுவும்..
நிறைகள் இறைவனைச் சேரும். குறைகள் என்னைச் சேரும். எனது கருத்தில் ஏதேனும் தவறு இருப்பின் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன். - Basheer</description>
			<pubDate>Tue, 18 May 2010 09:36:08 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1197#comment-6755</link>
			<description>சகோதரர் முஹம்மது அபூபக்கர் சித்தீக்,

உங்களுக்கான பதில்

http://tamilmuslimtube.magnify.net/video/2986300729932992300929653021296 - தமிழ்முஸ்லிம்ட்யூப்</description>
			<pubDate>Tue, 18 May 2010 08:04:03 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1197#comment-6745</link>
			<description>சகோதரி ஜஸீமா,

வ அலைக்குமுஸ்ஸலாம்.

தங்கள் கேள்விகளுக்கு மேலதிக விளக்கங்களை நமது சகோதர தளமான இஸ்லாம்கல்வி.காம் வெளியிட்டுள்ளது:
http://www.islamkalvi.com/fiqh/haj/index.htm

கேட்டுப் பயனடையுங்கள். - சத்தியமார்க்கம்.காம்</description>
			<pubDate>Tue, 18 May 2010 05:37:43 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1197#comment-6736</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
என் கேள்விகளுக்கு விரிவாக பதில் தரவும். அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவான். - jasima</description>
			<pubDate>Mon, 17 May 2010 10:13:17 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1197#comment-6627</link>
			<description>assalamu alaikkum, insha allah adutha matham naan umravukku selkiren.yenathu santhekathai theerthu vayyungal.
1. kabavin vasalukkum hajarul asvath kallirum idaippatta idathilum ketka padum dua yetrukollapaduma?
2. madhinavil ulla kuba pallivasalil 2 rakath tholuvathu , 1 umra seithathu polaguma?
3. masjid nabavi-yil sorgathin poonga yenum idathil 7 thoongal irukkindranavaam,andha thoongalukku pakkathilnindruthola venduma?
*azhuthu munangum thoon
*paathukaappu thoon
*thoothu kuluvinar thoon
*abu lubabavudaiya thoon
*kattilin thoon
*zibril thoon
*ayisha thoon
4. zam zam thanneer kudikkum pothu yethenum dua irukiratha? appodhu ketkum dua yetrukkolla paduma?
5.jabal uhad, jabal noor, jabal rahmath agiya malaikalukku sendral tholugalama? dua ketkalaama? adhartkaga yethenum sirappu irukkiratha?
please! konjam viraivil bathil anuppavum, assalamu alaikkum(var........) - jasima</description>
			<pubDate>Mon, 19 Apr 2010 09:15:55 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1197#comment-6497</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்பு சகோதரர்களே,
உம்ரா பற்றி எனக்கொரு சந்தேகம். இந்த மாதம் நான் உம்ரா பயணம் மேற்கொள்கிறேன். இது தான் முதல் முறை. நான் மக்காவில் இருக்கும்போது, மரணித்த மற்றொருவருக்காக அவர் சார்பிலும் நான் உம்ரா நிறைவேற்றலாமா? தயவுசெய்து இது குறித்து அறிவுறுத்துங்கள்.

நன்றி. அன்புடன்,
முஹம்மத் அபூபக்கர் சித்தீக்
 - Mohamed Abubacker Sidique</description>
			<pubDate>Wed, 10 Mar 2010 09:37:55 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1197#comment-5527</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நீங்கள் கூறுவது போல் உம்ரா கடமையில்லை என்றால், அல் குர்ஆன் 2:196 ஆவது வசனத்தின் அர்த்தம் என்ன? - rifzeen</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

