<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>மாலேகான் பயங்கரவாதத்தின் ...</title>
		<description>Comments for மாலேகான் பயங்கரவாதத்தின் மாஸ்டர்மைண்ட் நானே! - இந்திய இராணுவ உயர் அதிகாரி at http://www.satyamargam.com , comment 1 to 6 out of 6 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 18:08:20 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1096#comment-4271</link>
			<description>அநியாயம் செய்யும் கூட்டத்தினர்க்கு உதவும் காவல் துறையும், நீதித்துறையும், மற்றும் ஊடகங்கள். தன் மத சார்பு நிலையில் ஒரு பக்கமாக சாய்ந்து தன் கடமையை செய்யும் பொழுது. அதில் இந்திய நாட்டின் இறையாண்மை மிதிக்கப்படுகிறது.பாதிக்கப்படும் அபலையின் அழுகுரலும் அனாதையாக்கப்படும் பச்சிளம் குழந்தையும், நீதி மறுக்கப்படும் ஏழ்மை மக்களின் திருப்தி இல்லாமல் இந்தியா உருப்படாது. உருப்படவும் கூடாது.

மா சலாம்
அப்துல் அசீஸ். - abdul azeez</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1096#comment-4270</link>
			<description>கடந்த செப்டம்பர் 29-ல் மகாராஷ்டிராவிலுள்ள மாலேகானில் குண்டு வெடிப்பு நடந்தது. ஆறு பேர் உடல் சிதறி இறந்தார்கள். முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதி அது. அந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நடந்த விசாரணையில் இப்போது அணுகுண்டே வெடித்திருக்கிறது. இந்த குண்டுவெடிப்பு அக்கிரமச் செயலைச் செய்ததற்காக ஸ்ரீகாந்த் புரோகித் என்பவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இவர் இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பொறுப்பை வகிப்பவர். 

அதேபோல் இந்தூரைச் சேர்ந்த பிரக்யா சிங் தாகூரையும் குற்றவாளி லிஸ்ட்டில் சேர்த்திருக்கிறது போலீஸ். இவர் இந்து மதப் பெண் துறவி. இந்தக் குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்களாக மேலும் சில இந்திய ராணுவ அதிகாரிகளும், இந்துமத அமைப்பினரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட, தேசம் இப்போது அதிர்ச்சியின் விளிம்பில். மதிப்பிற்குரிய ராணுவத்தின் நடுநிலைத் தன்மையையும் இந்துமத அமைப்புகளின் தீவிரவாத எதிர்ப்புக் கொள்கைகளையும் மாலேகான் குண்டுவெடிப்பு ஒரே சமயத்தில் காலியாக்கியிருக்கிறது.

``மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம் ஏதோ அபூர்வமான விதிவிலக்கு மாதிரி பேசுகிறார்கள். உண்மையில் அது பெரிய நெட்வொர்க்கின் ஒரு சின்ன பகுதிதான். திட்டமிட்டு குண்டு வெடிப்புகளை நடத்திவிட்டு, அந்தப் பழியை முஸ்லிம்கள் மேல் போடு கிற வேலையை இந்து அமைப்புகள் இதற்கு முன்பும் செய்துள்ளன.'' என்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.   

``இதே மகாராஷ்டிராவிலுள்ள நந்தெத் பகுதியில் 2006லும் 2007-ம் இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்தன. பஜ்ரங்தள் அமைப்பினர் அதில் சம்பந்தப்பட்டிருந்ததை போலீஸ் கண்டுபிடித்தது. பிரபல மனித உரிமை ஆர்வலரும் நீதிபதியுமான கோஸ்லே பாட்டில் `இது எதிர்காலத்தில் நிகழவிருக்கும் இந்து பயங்கரவாதத்துக்கான அறிகுறி' என அப்போதே எச்சரித்தார். 

தமிழகத்தில் கூட இந்து மத அமைப்பினரின் சதி அரங்கேறியிருக்கிறது. கடந்த பிப்ரவரியில் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பிலும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களேதான் சம்பந்தப்பட்டிருந்தார்கள். முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகப் பிரசாரம் செய்கிற போக்கு இனியாவது இந்துமத அமைப்பினரால் நிறுத்தப்பட வேண்டும்'' என்கிறார் மார்க்ஸ்.


எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும், போலீஸ் கண்களை மூடிக்கொண்டு முஸ்லிம்களை கைது செய்யும் அணுகுமுறையையும் மாலேகான் குண்டுவெடிப்பு கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

``இதுவரை குண்டு வெடிப்புகளில் தொடர்புள்ளவர்களாக போலீஸாரால் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் உண்மையிலேயே குற்றவாளிகள்தானா என்ற சந்தேகத்தை மாலேகான் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. 2001-ல் நாடாளுமன்றத் தாக்குதல் முதல் சமீபத்தில் நடந்த மீரட் குண்டுவெடிப்பு வரை முஸ்லிம்கள் தொடர்பு படுத்தப்பட்ட அனைத்து பயங்கரவாதச் சம்பவங்களையும் மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்'' என்று வலியுறுத்துகிறார் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் .


இது போன்ற கொடூரமான தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் அபிநவ் பாரத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த அமைப்பினர் இந்தியாவின் பல்வேறு துறைகளுக்குள்ளும் ஊடுருவி உள்ளனர் என்றும் உளவுத்துறை தகவல்கள் சொல்லுகின்றன.

``ராணுவம் உள்ளிட்ட பல முக்கியத்துறைகளில் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்பினரின் ஊடுருவல் இப்போது வெட்டவெளிச்ச மாகியுள்ளது. இந்த ஆபத்தான போக்குக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்று நடுநிலையாளர்கள் வைக்கும் கோரிக்கையை செவிமடுத்தால், இந்தியாவில் குண்டுவெடிப்புச் சப்தங்கள் குறையும்..

---------------நன்றி: 'குமுதம்' 19-11-2008 - UTHAYAN</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1096#comment-4269</link>
			<description>இந்துத்துவ பயங்கரவாதம் என்னும் நச்சு நாட்டின் பல்வேறு துறைகளிலும் ஊடுருவி, தற்போது ராணுவத்திலும் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கக்கூடியாதகவே இருக்கப்போகிறது என்பது கவலை தரும் விஷயம். இந்த மாதிரியான பயங்கரவாத கும்பல்களை பாதுகாத்து அரவணைக்கத் துடிக்கும் பால் தக்கரே போன்ற தீவிரவாதிகளை தடுக்க முனையாமல் வேடிக்கைப் பார்க்கும் மத்திய அரசு ஒரு கையாலாகாத அரசாகத்தான் தெரிகிறது. 'சுரனையற்ற இந்தியா' என்று கட்டுரை எழுதிய பாசிஷ்டுகள் இப்பொது என்ன செய்கிறார்கள்.? தெகல்கா, குஜராத் இன கலவரத்தைத் தோலுரித்துக் காட்டியும் இந்தியாவில் எவ்வித சலனமுமில்லை, குண்டு வெடித்தவர்கள் இந்துதுவா அமைப்பினர் என்ற போதும் நாட்டில் பெரியளவு எதிர்ப்புமில்லை எனும் போது, நிச்சயமாக தெரிகிறது இது 'சுரனையற்ற இந்தியா'. - உதயன்.</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1096#comment-4273</link>
			<description>WHY NOT CENTRAL GOVERNMENT STILL BAN ALL THE SUNG PARIVAR GROUPS? FOR WHAT THEY ARE WAITING NOW? WHETHER TO 'BUY' ATS? or TO 'BUY 'JUDGES? or TO MAKE ANOTHER 'NANAVATHY COMMISION' ON THESE ISSUES? or WAITING FOR ELECTION OVER? or TO 'CLEAN-UP' ALL EVIDENCES? last but not least IS THE CONGRESS REALLY AN OPPONENT PARTY FOR BJP? or BOTH FROM SUNG PARIVAR GROUPS? (ya Allah! save us) - muhammad</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1096#comment-4268</link>
			<description>வெட்கக்கேடு, இது இந்தியாதானா? 'வேற்றுமையில் ஒற்றுமை', 'மதச்சார்பற்ற ஜனநாயக நாடு' என்றெல்லாம் இனி சொல்வதற்கு இனி இந்தியாவிற்கு தகுதியுண்டா?

நம் மாநிலங்களிலும் மத்தியிலும் முதுகெலும்பற்ற மானங்கெட்ட ஆட்சி நடைபெறுவதால் உண்மைகள் வெளிவராது.

சரி அது போகட்டும், சனநாயகத்தின் தூண்கள் என்று தங்களை அடையாளப்படுத்தும் நாளிதழ்கள் என்ன செய்கின்றன.

பியூஸ் போன பல்பு, சோக், சிறு துண்டு ஒயர்கள், மொபைல் போன், சட்டி பானையெல்லாம் முஸ்லிம்களின் வீடுகளில் கிடைத்தால் பயங்கரஆயுதங்களுடன் முஸ்லிம் தீவிரவாதிகள் கைது என பக்கம் பக்கமாக எழுதும் போது, மூட்டை மூட்டையாக பயங்கர வெடிகுண்டுகள் நாடு முழுவதும் சங்பரிவார (தொண்டர்கள்!!) தீவிரவாதிகள் வீட்டிலும் தொழிற்சாலைகளிலும் கிடைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் எதையும் வெளியிடாமல் மறைப்பதேன்.

இவர்களெல்லாம் முஸ்லிம்கள் இல்லை என்ற காரணத்தினால்தானே?

உப்பு சப்பில்லாத விசயத்திற்கெல்லாம் விடுமுறை நாட்களென்றும் பாராமல் தானாக முன்வந்து விசாரணை செய்யும் நீதிமன்றமும் கண்களைக் கட்டிக்கொண்டிருப்பதேன்.

நீதிவான்களே மனிதநேயம் உள்ளவர்களே நீங்கள் பிறருக்கு எந்த பதிலும் சொல்லவிரும்பாவிட்டாலும் உங்கள் மனசாட்சிக்கேனும் சொல்லிவிடுங்கள். - பரித்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1096#comment-7811</link>
			<description>[b]தட்ஸ்தமிழ் தளத்தில் இன்று (14.12.10) வெளியான செய்தி:[/b]

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில் அபினவ் பாரத் இந்து அமைப்பைச் சேர்ந்த தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் சர்மா ஆகியோர் மீது ஹைதராபாத் கோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந்த இருவரும் ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் மெக்கா மசூதியில், 2007ம் ஆண்டு மே 18ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடித்தது. மசூதி வளாகத்திற்குள் வெடித்த இந்த குண்டில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. வழக்கில் அபினவ் பாரத் என்ற வலதுசாரி இந்து தீவிரவாத அமைப்புக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அமைப்பின் சர்மா, குப்தா உள்ளிட்ட 6 பேர் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் சர்மா, குப்தா ஆஜ்மீர் வழக்கில் சிக்கி கைதாகியிருந்தனர். அவர்களை ஹைதராபாத்துக்குக் கொண்டு வந்து விசாரித்த சிபிஐ, பின்னர் இருவரையும் ஹைதராபாத் சிறையில் அடைத்தது. வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்தீப் சாங்கே, ராமச்சந்திர கல்சங்கரா என்கிற ராம்ஜி ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இன்னொரு குற்றவாளியான சுவாமி அஸ்னிமானந்த் சிபிஐயின் விசாரணை வளையத்தில் உள்ளார். இன்னொரு குற்றவாளியான சுனில் ஜோஷி என்பவர் 2007ம் ஆண்டிலேயே கொல்லப்பட்டு விட்டார்.

இந்த வழக்கில் நேற்று 14வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது சிபிஐ. 80 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில் அபினவ் பாரத் அமைப்புதான் இந்த செயலுக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

[u][b]English summary[/b][/u]

Three years after a blast at Mecca Masjid claimed nine lives in Hyderabad, the CBI yesterday filed a charge sheet against Devendra Gupta and Lokesh Sharma, who are also accused in the Ajmer blast case. The probe agency filed the charge sheet running into 80 pages against Gupta, allegedly linked to right-wing group Abhinav Bharat, and Sharma in the XIV additional chief metropolitan magistrate (ACMM) Court in Hyderabad. The bomb explosion inside the Masjid during Friday prayers on May 18, 2007 here had claimed nine lives while five persons were killed in police firing during clashes that erupted after the blast.
 - முருகேஷ்</description>
			<pubDate>Tue, 14 Dec 2010 13:14:25 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

