<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>நோன்பு உங்களைத் ...</title>
		<description>Comments for நோன்பு உங்களைத் தூய்மையுடையோராக்கலாம்! at http://www.satyamargam.com , comment 1 to 5 out of 5 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:56:44 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1018#comment-3564</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து முஸ்லிம்களுக்கும். இன்று ( திங்கள் ) முதல் நோன்பு ஆரம்பமாகிவிட்டது. எல்லோருக்கும் ``ரமதான் கரீம்' வாழ்த்துக்கள். அனைத்து தரப்பினருக்கும் தகுந்தது போல் செய்து. பெருநாள் வரைக்கும் செய்யக்கூடிய அனைத்து காரியங்களையும் விவரித்தமைக்கு பாராட்டுக்கள். மற்றும் நன்றிகள் 
மா சலாம். 
அப்துல் அசீஸ். - abdul azeez</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1018#comment-8701</link>
			<description>அஸ்ஸலாமு அலைகும் (வரஹ்)  குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மட்டும் தான் மார்க்கத்தின் அடிப்படை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்று எண்ணுகின்றேன். கலாம் அதிராம்பட்டினம் என்பவர் பதிந்துள்ள கவிதை பின்னூட்டத்தை  நன்றாக படித்து பார்க்கவும்.  அதில் சில வார்த்தைகள் பலகீனமான ஹதீஸை பயன்படுத்தியுள்ளார். முதல் பத்து ரஹ்மத் இரண்டாம் பத்து  பாவமன்னிப்பு, மூன்றாம் பத்து நரகத்திலிருந்து விடுதலை இந்த வார்த்தைகள் பலகீனமான ஹதீஸாகும்.  - riyas</description>
			<pubDate>Fri, 22 Jul 2011 08:56:07 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1018#comment-8698</link>
			<description> நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யும் எல்லா அமல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்காக (கூலி) கொடுக்கப்படுகின்றது. அது(நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்) அவனுடைய இச்சையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகின்றான். நோன்பு திறக்கும்போதும், இன்னும் அவனுடைய இறைவனை சந்திக்கும் போதும் ஆகிய இரு சந்தோஷங்கள் நோன்பாளிக்கு இருக்கின்றன. நிச்சயமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாயிருக்கும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த ஹதீஸில் நோன்புக்குத் தான் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மை கிடைப்பதாக சொல்லப்படுகிறது. உங்கள் மொழியாக்கத்தில் நோன்பு அல்லாத அமல்களுக்குத் தான் அந்த சிறப்பு என்பது போன்று குறிப்பிட்டுள்ளீர்கள். அரபு மூலத்தை ஒப்பிட்டு சரிபார்க்கவும். - ஹனா</description>
			<pubDate>Fri, 22 Jul 2011 00:52:10 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1018#comment-7274</link>
			<description>பகலெலாம் பசித்து 
இரவெலாம் விழித்து 
அகமெலாம் நிறைந்து 
அல்லாஹ்வைத் துதித்து 
முகமத்(ஸல்) உம்மத்து 
முழு மாதம் நோன்பு பிடித்து 
அகமும் முகமும் 
அமல்களால் அலங்கரித்து 
இகம் பரம் ஈடேற்றமும் இறையின் 
ரகசிய அறிவும் பெற்று தரும் 
ரமளானே வருகவே...!!! 

பசித்தவரின் பசியினை 
பட்டு நீ உணர்த்திடும் பட்டினி- ஊனில் 
வசித்திடும் ஷைத்தானை 
வதைத்திட வைத்திடும் உண்ணாமை 

குடலுக்கு ஓய்வுக் கொடுத்து; 
குர்-ஆனின் ஆய்வு தொடுத்து;- மஹ்ஷர் 
திடலக்கு தயார்படுத்துதல் உன் கவனம்; 
திண்ணமாய் கிட்டும் சுவனம் 

பாவம் தடுத்திடும் 
பாதுகாப்பு கேடயம்; 
கோபம் வென்றிடும் 
குணத்தின் பாடம் 

அல்லாஹ்வுக்காகவே நோன்பு; 
அல்லாஹ் மட்டுமே அறியும் மாண்பு 
அல்லாஹ்வே அதற்கான சாட்சி; 
அல்லாஹ்வே தருவான் மாட்சி 

முப்பது நாட்களை மூன்றாய் வகுத்து 
முப்பதின் முதல் பத்தில் ரஹ்மத்து; 
முப்பதின் இரண்டாம் பத்தில் மக்பிரத்து; 
முப்பதின் மூன்றாம் பத்தில் நஜாத்து; 
தப்பாது வேண்டிட வேண்டியே 
தகை சான்றோர் வேண்டினரே 

வானில் இருந்த இறைவேதம் 
வஹியின் வழியாக 
தேனினும் இனிய திருநபியின் (ஸல்) 
திருவதனம் மொழிய வந்த மாதம் 

ஆற்றல் மிக்கதோர் இரவின் பிறப்பு; 
ஆயிரம் மாதங்களினும் மிக்க சிறப்பு; 
போற்றிடுவோம் பெற்றிடுவோம் அவ்விரவு; 
புனிதமிகு ரமளானின் வரவு...!!! 

ஈகைத் திருநாளாம் 
ஈத் பெருநாளைக்கு முன்பாகவே 
வாகைத்தரும் பித்ரா தர்மம் 
வழங்குவோம் ஏழைகட்கு அன்பாகவே 

&quot;கவியன்பன்&quot; கலாம், அதிராம்பட்டினம் 

குறிப்பு: தடிமன் எழுத்துக்களில் உள்ளவைகள் அரபி பதங்கள்: அதன் பொருள் இதோ: 

உம்மத்து= சமுதாயம் 
அமல் = செயல் 
மஹ்ஷர்= மறுமை தீர்ப்பு நாளின் பெருவெளி மைதானம் 
ரஹ்மத்து= இறையருள் 
மக்பிரத்து= இறைமன்னிப்பு 
நஜாத்து= நரக விடுதலை 
வஹி= வானவர் ஜிப்ராயில்(அலை)மூலம் இறைத் தூது 
பித்ரா= ஏழைகட்கு ஈந்துவக்கும் தானிய தர்மம் (அதனாற்றான் இந்த நோன்பு பெருநாளை &quot;ஈதுல் பித்ர்&quot; (ஈகைத் திருநாள்) என்பர்.
 - &quot;கவியன்பன்&quot; கலாம், அதிராம்பட்டினம்</description>
			<pubDate>Thu, 12 Aug 2010 10:42:28 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1018#comment-7273</link>
			<description> ``ரமதான் கரீம்' வாழ்த்துக்கள். அனைத்து தரப்பினருக்கும் தகுந்தது போல்  பெருநாள் வரைக்கும் செய்யக்கூடிய அனைத்து காரியங்களையும் விவரித்தமைக்கு பாராட்டுக்கள்.
 மற்றும் நன்றிகள்.

JAZAKALLAHU KHAIRAN - S.S.K</description>
			<pubDate>Thu, 12 Aug 2010 06:10:37 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

