படைத்தவன் உதவி !

Share this:

குத்தவன் உதவி
வந்திட்டபோது – வழிவகை
விதித்தவன் வெற்றி
வாய்த்திட்டபோது

அலையலையாய் யாவரும்
அணி திரண்டுவந்து
ஆண்டவன் மார்க்கத்தில்
அவர் இணையும்போது

ஆண்டவன் புகழை
அதிகம் துதித்திடுவீர் – அவன்றன்
அளப்பரிய அருளை
அழுது கேட்டிடுவீர்;

மன்னிப்பை ஏற்குமந்த
மாண்புடையோன் முன்னிலையில் – எல்லாப்
பாவமும் பிழைகளும்
பொறுத்தருள வேண்டிடுவீர்!

(மூலம்: அல் குர்ஆன் / சூரா: 110 அந் நஸ்ரு)

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.