உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்-2

Share this:

உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்-1

தொடர்ச்சி …

தமிழக அரசு, மாற்றுத் திறனாளிகளுக்குக் கீழ்க்கண்ட ஊக்கத் திட்டத்தினை அறிவித்துள்ளது. அவை, சமுதாயத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும்; அதற்கு நீங்களெல்லாம் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றை இங்குத் தருகிறேன்:

  • அரசு பஸ்களில் நான்கில் ஒரு பங்குக் கட்டணச் சலுகை

  • தொழிலுக்காகக் கடனுதவி பெறுவதற்கு அரசு அளித்து வரும் உத்திரவாதத் தொகை ரூபாய் நான்கு கோடியிலிருந்து, எட்டு கோடியாக உயர்வு.

  • திருமண உதவித் தொகை ரூபாய் 20 ஆயிரத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாக உயர்வு.

  • பத்தாவது, பிளஸ் 2 தேர்வில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடத்தைப் பிடிப்போருக்கு ரொக்கப் பரிசுத்தொகை மூன்று மடங்காக உயர்வு.

  • ஒன்றுக்கு மேற்பட்ட அங்கக்குறைபாடுகள் உடையவர்களுக்கு வழங்குவதற்காக ஓராண்டுக்கு 1500 மடக்கு சக்கர நாற்காலிகள்.

  • முடக்கு வாதத்தால் பாதித்தவர்களுள் 500 பேருக்குச் சிறப்பு நாற்காலிகள்.

  • சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, வேலூர் ஆகிய முக்கிய மாவட்டங்களில் தசைப்பயிற்சி மையம் அமைத்தல்.

  • அங்கன்வாடி ஊழியர்கள் பணியமர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை.

மேலும், பெரும்பாலான ஏழை முஸ்லிம் பெண்கள் வீட்டுவேலை செய்கிறார்கள். அவர்களுக்கு அங்கன் வாடியில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில் சமுதாய, அரசியல் கட்சிகள்/அமைப்புகள் முனைப்புடன் உதவி செய்து, அவர்களை அரசு அரவணைக்கும் ஊழியர்களாக ஆக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு ஓய்வூதியமும் உண்டு என்று அண்மையில் அறிவிப்பு வந்துள்ளது.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.