| நம் குடும்பத்தில் ஒரு முஸ்லிம்! |
|
|
| பொதுவானவை - பொதுவானவை |
| ஞாயிறு, 29 ஜூன் 2008 12:15 |
|
முஸ்லிமாக மாற விரும்புபவர் மிக எளிமையாக, இரு முஸ்லிம்களின் சாட்சியுடன் ‘வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த உலகிற்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்’ என்ற உறுதிமொழியை மொழியவேண்டும். அவ்வளவுதான். அதற்குமேல் எந்தச் சடங்குமில்லை.
மூலம்: http://news.bbc.co.uk/1/hi/programmes/3663771.stm
தமிழில் : இப்னு பஷீர் கருத்துக்கள் (4)
![]() எழுதியவர்: abdul azeez , June 30, 2008 03:40 சிந்திக்கின்ற மக்களுக்கு அல்லாஹ் நேர் வழியை காட்டுகின்றான். இஸ்லாம் சிந்தனையை தூண்டும் மார்க்கம். அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதி காண்பிக்கப்பட்டால் குருடர்கள், செவிடர்கள் போல் அவற்றின் மீது விழுந்துவிடமாட்டார்கள். ஒரு செய்தி : சகோதரி சாஜிதா அவர்களுக்கு உதவி செய்யும் படி அனைத்து சகோதரர்களிடமும் குறிப்பிட்டு இருந்தீர்கள். இன்னும் கும்பகோணம் ஹாளிமா எடுகேசினல் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு தெரியபடுத்தினதை ஜூனியர் விகடன் பத்திரிக்கை எழுதினது என்றெல்லாம் அதை பற்றி எழுதி விபரமாக பார்த்தோம் இருந்தாலும் எனக்கு மனதில் குழப்பமாக இருந்த காரணத்தால் கும்பகோணம் ஹாளிமா எடுகேசினல் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு போன் செய்து விபரத்தை கேட்டேன். அவர் பெயர் ஜாகிர் அவர் சொன்னது ஜூனியர் விகடன் பத்திரிக்கை நிருபர்கள் எங்களிடம் பேட்டி எடுத்தது உண்மை தான் ஆனால் அது அந்த சகோதரிக்கு தெரியாது என்றார். தற்போது அந்த பெண் எங்கள் பொறுப்பில் இல்லை அதிராம்பட்டினம் பைத்துல் மால் மூலம் அந்த ஜமாஅத் ஏற்றுகொண்டது என்று என்னிடம் சொன்னார். நான் கேட்டேன் அப்படி என்றால் நீங்கள் உதவி செய்வது இல்லை என்றேன். அப்படி கிடையாது எப்ப வேண்டும் என்றாலும் நாங்கள் செய்ய தயார். என்றார். இருந்தும் என்னுடைய நண்பர் சிராஜுதீன் அவர்களை வேலையை போட்டுவிட்டு அந்த ஊருக்கு போய் நன்றாக விசாரித்து விட்டு வா என்றேன். அவர் சனிக்கிழமை அன்று புறப்பட்டு போய் ஒத்தயடி பாதையாம் பஸ் மரத்தில் மோதி விபத்து ஆகி பாதி வழியில் திரும்பி வந்துவிட்டார். மறு நாள் ஞாயிறு போனார். சரியான குக்கிராமம் கீற்று வீடு அதுவும் சொந்தவீடு அல்ல பேராவூரநியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தெரு விளக்கு கிடையாது. ஆட்டோ வசதியோ கார் வசதியோ எதுவும் இல்லை. கொலை பன்னி போட்டால் கூட யாருக்கும் தெரியாது. அந்த சகோதரியின் டீச்சர்கள் தான் விண்ணப்பம் அனுப்பி இருந்தார்களாம். அண்ணா யுனிவர்சிடிக்கு இதுவரை எந்தவொரு ரிப்ளையும் இல்லை கவுசளின் வந்தால் தான் தெரியும் என்கிறார். அந்த அக்கௌன்ட் நம்பர் எல்லாம் சரிதான் என்கிறார். உங்களுக்கு உதவி செய்பவர்கள் யார் ? பைத்துல் மால் மூலம் வந்தார்களாமே ! என்று என் நண்பர் கேட்டார். அதற்க்கு நாலு அல்லது ஐந்து பேர் வந்தார்கள் அதில் ஒருவர் அஜ்ரத் பார்த்தார்களாம் பிறகு அப்துல் ரஹ்மான் ஜகாத் புன்ட் பௌண்டேசின் தெரியபடுதிவிட்டு போய்விட்டார்கள். அந்த இடத்திலிருந்து இதுவரை உதவி விண்ணப்பம் வரவில்லை என்கிறார் ஷாஜிதாவின் தாயார். அந்த சகோதரிக்கு அபுதாஹிர் என்று பதினோரு வயதில், ஒரு தம்பியும் அப்சல் ஹசீனா என்று ஆறு வயதில் ஒரு தங்கையும் உள்ளார்கள். அவரின் தாயார் அதே வேலையை தான் தொடர்ந்து செய்துகொண்டுவருகிறார். அவருக்கு ஒரு அண்ணன் ஒரு தம்பியாம். திருமணம் ஆகி வெளியூரில் இருக்கிறார்களாம். சகோதரி சாஜிதாவுக்கு டெலிபோன் வசதி மற்றும் மொபைல் வசதி இல்லை. எதிர் வீட்டுக்கு போன் செய்து சாஜிதாவை வரவழைத்து அனுப்பும் தொகை கிடைத்த விபரம் கேட்கலாம். எதிர் வீட்டு சகோதரியின் பெயர் பௌசியா பேகம். இதை எல்லாம் எதற்கு எழுதுகிறேன் என்றால். கும்பகோணம் நிர்வாகம் ஏற்றதை பைத்துல் மால் சகோதர்கள் பெருமனதோடு ஏற்று பிறகு கை கழுவி விட்ட மாதிரி இருக்கு தானும் படுக்க மாட்டேன் தள்ளியும் படுக்கமாட்டேன் என்கிற கதையா இருக்கு அதனால் அந்த சகோதரிக்கு இந்த தளத்தில் உள்ள அனைத்து சகோதரர்களும் உதவி செய்யுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும். powjiyaa begum mobile no: +919750298306 மா சலாம். அப்துல் அசீஸ். எழுதியவர்: சிராஜ் , June 30, 2008 16:22 முஸ்லிமாக மாறுவோர் எண்ணிக்கை அதிகமானதும் தாங்களும் 'மதமாற்றம்' என்ற பெயரில் நான்கு முஸ்லிம்(?) இளைஞர்களைப் பிடித்து வந்து இந்து மதத்துக்கு ;) மாறி விட்டதாக காமெடி செய்த RSS க்கு இச்செய்தியை அனுப்பியே ஆகவேண்டும். மேலும் சகோதரி சாஜிதா பற்றிய கூடுதல் தகவல் தந்த சகோதரர் அப்துல் அசீஸ்க்கு நன்றி ஆனால் சம்பந்தமில்லா ஆக்கத்தின் அடியில் பதிந்துள்ளீர்களே அசீஸ்? எழுதியவர்: abdul azeez , July 01, 2008 01:49 உண்மை தான் நானும் அந்த சகோதரி தொடர்பான ஆக்கத்தை இந்த தளத்தில் தேடி பார்த்தேன். நேரம் தான் போகிறது தவிர கண்டு பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் எந்த இடத்தில் வைத்தால் என்ன ? அந்த சகோதரிக்கு நம் சகோதரர்களின் உதவிகள் எப்படியும் போயாகவேண்டும் என்ற நோக்கத்தில் உடனடி தகவல் கிடைத்ததை முன்னிட்டு இதில் பதிந்துவிட்டேன். இதில் பதிந்ததற்கு வருந்துகிறேன். மறுபடி கும்பகோணம் ஹாளிமா அறக்கட்டளை நிர்வாகிக்கு நேற்று காலை போன் செய்து இப்படி செய்து விட்டார்கள் பைத்துல் மால் சகோதரர்கள் என்று விபரத்தை சொல்லி மறுபடி நீங்கள் போருப்பெற்றுக்கொள்ளுங்கள். என்று பரிந்துரைத்தேன். என் நண்பர் பெயரையே ! வைத்துள்ள சகோதரர் சிராஜ் அவர்களுக்கும் ஏனைய முஸ்லீம் சகோதரர்களுக்கும் அஸ்ஸலாமு அழைக்கும். மா சலாம். அப்துல் அசீஸ். எழுதியவர்: சத்தியமார்க்கம்.காம் , July 01, 2008 06:29 அன்புச் சகோதரர் அப்துல் அஜீஸ், உங்கள் உதவி மனப்பான்மைக்கும் ஆர்வத்திற்கும் அல்லாஹ் நற்கூலி அளிப்பானாக! வருங்காலத்தில் நீங்கள் அதிக நேரம் செலவிடாமல் தேவைப் படுவதை சத்தியமார்க்கம் தளத்தில் எளிதாக உடனே கண்டு பிடிப்பதற்கு வழி இருக்கின்றது. முகப்பின் மேல் (கிழமைக்குக் கீழ்) வலப்புறக் கடைசியில் 'உதவி' என்ற சொல்லில் மவுஸை வைத்தால் நான்காவதாக 'யுனிகோடில் தேட' என்று வரும். அதில் நீங்கள் தேடும் சொல்லைத் தமிழில் உள்ளிட்டால் நொடியில் உங்களுக்கு விடை கிடைக்கும். தேடிப்பாருங்கள் ... சொல்: ஸாஜிதா மிக்க நன்றி! கருத்து எழுதுக :
|