சத்தியமார்க்கம்.காம்

திருமறையை இழிவு செய்ததற்காக மன்னிப்புக் கோரிய US இராணுவம்! print Email
செய்திகள் - உலகச் செய்திகள்
வியாழன், 22 மே 2008 12:43

பக்தாத்: அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் அருள்மறை குர்ஆனை தமது துப்பாக்கிச்சூடு பயிற்சிக்குப் பயன்படுத்தி புனித குர்ஆனுக்குக் களங்கம் கற்பித்ததைத் தொடர்ந்து முஸ்லிம்களின் கோபத்திற்கு அஞ்சி மன்னிப்புக் கேட்டுள்ளனர். 
 
துரிதமான அமெரிக்க அதிகாரிகளின் மன்னிப்பு கோரல் இராக்கில் முஸ்லிம்களின் கோபத்தைத் தவிர்க்க எடுத்த ஓர் அவசர நடவடிக்கையாகும்.
 

அமெரிக்க இராணுவம், ஞாயிறன்று அந்த அமெரிக்க ராணுவ வீரரை அடையாளம் காட்டாமல், உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்து இராக்கைவிட்டு வெளியேற்றி விட்டதாகக் குறிப்பிட்டது. முஸ்லிம்களின் புனித வேதத்தின் பிரதியில் தோட்டாக்களினால் ஏற்பட்ட துளைகளை பக்தாத்தில் மே 11 அன்று கண்டெடுத்தவுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தினால் பெறப்பட்ட நிழற்படங்களில் புனித வேதத்தில் குறைந்தது 10 தோட்டாத் துளைகள் காணப்பட்டது.
 
இச்சம்பவம் இராக்கிய இராணுவத்திற்கும் எதிர்பாராத சங்கடமாக அமைந்தது, ஏனெனில் அவர்கள் இராக்கின் அரபுப் பழங்குடியினருடன் நல்லுறவை ஏற்படுத்தி அல்காயிதாவை எதிர்க்க முயன்று வருகின்றனர் (அதில் இது போன்ற சம்பவங்கள் பின்னடைவை ஏற்படுத்தலாம்.) இப்படி நல்லுறவுகள் மூலம் ஆதரவு பெற்றுக் கூட்டுமுயற்சியால் இராக்கில் தொடர்ந்து வரும் வன்முறைகளைக் குறைக்க இயலும் என இராக்கிய இராணுவம் கருதுகிறது.
 
"எனக்குக் கசப்பான இச்சம்பவம் வேதனையளித்தது, ஆயினும் அமெரிக்க இராணுவத்தினர் உடனடியாக இதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டதால் எங்கள் கோபம் தணிந்தது" என்று அரபியப் பழங்குடியினர் குழுவின் தலைவர் ஒருவர் கூறினார்.
 
அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து செயல்படும் பழங்குடியினர் இச்சம்மபவத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் உறவை உடன் முறித்து விடுவோம் என்று அமெரிக்க இராணுவத்தை அச்சுறுத்தியதாகவும் மேலும் அவர் கூறினார்.
 
கர்னல் பில் புக்னர் எனும் அமெரிக்க இராணுவச் செய்தி தொடர்பாளர் இந்தத் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை பற்றி குறிப்பிடுகையில் "இது மிகவும் கவலைக்குரியதும் கேடானதுமாகும்" என்று கூறினார்.
 
அமெரிக்க இராணுவத்திற்கு இராக்கில் உள்ள இந்தப் பழங்குடியினரின் ஆதரவு மிக இன்றியமையாததாகும். அமெரிக்க இராணுவ வீரரின் இந்த இழிசெயல் இஸ்லாமோஃபோபியாவினால் விளைந்ததாகவே கருத முடிகிறது.

கருத்துக்கள் (0)add comment

கருத்து எழுதுக :
தமிழ்
ஆங்கிலம்
சிறிதாக்குக | பெரிதாக்குக
 

busy

 
Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top

இறைமறை

Random Quran Verses

5: 39 எவரேனும், தம் தீயச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர்திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

ஆக்கங்களை அனுப்ப...

புதிய கருத்துக்கள்

peacetrain : எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.


Mohamed Rucknudeen : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். என்று இஸ்லா...


Mohamed Rucknudeen : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். மேலேயுள்ள க...


mohamed : அல்லாஹ அக்பர்.......


kamal : மின் அஞ்ஜஅல் அனுபினென் திரும்ப வந்துவிட்டது.


ABDUL KALAM.M : இன்ஷாஅல்லாஹ் அவள் முழு குர்ஆனையும் இ...


NAINAR MOHAMED.M(KHALEEL) : டாக்டர் முஹம்மட்த் அலி மிக சிரப்பான கட்டுரை தந்து இருக்கின்ரார் பாரட்டுக்கல்


hussain ali : இதனை மக்கள் எந்த அளவுக்குப் புரிந்து...


sheik : 'தேர்ந்தெடுக்கப்படும் நூல், சென்னை ர...


"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம் : முஹம்மத் அலி அவர்களின் சமுதாய அக்கறை...


Mohamed Abubacker Sidique : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). அன்பு சகோத...


பிறைநதிபுரத்தான் : மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லி...


சஃபி : Godhra “witness” escapes to tell his story Vidya Subrahmaniam Husain Mulla says he was not in ...


சஃபி : ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொட...


ர. சிராஜ் முஹம்மது : அஸ்ஸலாமு அலைக்கும் அழகிய தொடர். நம் ...


abdul basith : ‘ஹயாத்து முஹம்மத்’ நூலையே தமிழாக்கம் செய்யலாமா?


அஹமத் .'.பைசல் : அதிகமான இஸ்லாமிய ஆக்கங்கள் படிப்பதற...


Yasin.m : திருகுரானை எப்படி பதிவிறக்கம் செய்வ...



You are here  : முகப்பு செய்திகள் உலக செய்திகள் திருமறையை இழிவு செய்ததற்காக மன்னிப்புக் கோரிய US இராணுவம்!