| மதியை அழிக்கும் மது! |
|
|
| இஸ்லாம் - இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள் | |||
| வியாழன், 08 மே 2008 06:42 | |||
|
{mosimage}மது அருந்துவது மூளையின் செயல்பாட்டைக் குறைத்து, திடீரெனத் தோன்றும் இடையூறுகளை உணர முடியாமல் செய்கிறது என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று (National Institutes on Alcohol Abuse and Alcoholism) வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. 'மது அருந்தியிருப்பவர்கள் வலுச் சண்டைகளில் அதிகம் ஈடுபடுவதற்கு இதுவே காரணம்' என்று, அந்த ஆய்வை நிகழ்த்திய திரு. ஜோடி கில்மன் ஒரு பேட்டியில் தெரிவித்தார். மிதமான குடிப்பழக்கம் உடைய 12 பேரிடம் இந்த ஆய்வு நிகழ்த்தப் பட்டது. அவர்கள் மது அருந்தியிருந்த நிலையிலும் தெளிவாக இருந்த நிலையிலும், பயமுறுத்தும் முகத்தோற்றங்கள் மற்றும் சாதாரண முகத்தோற்றங்களைக் கொண்ட நிழற்படங்கள் அவர்களுக்கு காண்பிக்கப் பட்டன. அப்போது அவர்களின் மூளைகளின் எதிர்வினைகளும் பதிவு செய்யப் பட்டன. அவர்கள் தெளிவாக இருந்த நிலையில் பயமுறுத்தும் முகத்தோற்றங்களை பார்த்த போது, மூளைகள் ஒருவித அச்சுறுத்தலை உணர்ந்தன. அவர்கள் மது அருந்தியிருந்த நிலையில் அதை உணரவில்லை.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (7)
![]()
மது பழக்கத்தால் அழிவை நோக்கிச் செல்பவர்களுக்கு எச்சரிக்கையாக இந்த ஆக்கம் அமைந்துள்ளது.
மதுவைத் தவிக்கும்படி இஸ்லாம் கூறுவது மனிதனின் நலனுக்குத்தான் என்பதை மது அருந்துபவர்கள் சிந்திக்க வேண்டும்.
1
May 08, 2008 09:21
சமுதாயத்திற்குத் தேவையான ஆக்கம்.
மது மதியை மட்டுமின்றி உயிரையும் அழிக்கும். மது அருந்தியவர் தனக்கு அளிக்கப்பட்ட அமானிதமான உடலை அழிப்பதோடு, தன் குடும்பத்திற்க்கும் பெரும் தீங்கு செய்கிறார்.
எச்சரிக்கை தரும் ஆக்கத்தை அளித்தமைக்கு நன்றி!
2
May 08, 2008 09:30
சமுதாய சிந்தனையுள்ள பதிவுக்கு நன்றி சத்தியமார்க்கம்.
இங்கே யதார்த்தம் என்ன தெரியுமா? குடிகாரர் எவரிடம் கேட்டாலும் 'ஆமா! மூளையை மழுங்கடிக்கத்தான் செய்யும். நல்லா தெரியுமே' என்பார். இத்தகையவர்களை திருத்த அறிவுரை பத்தாது. இரும்புக்கரம் தான் வேண்டூம்.
தவிர மது அருந்துவதை தூண்டும், குடிகாரர்களை உற்சாகப்படுத்தும் காரணிகளை கண்டுபிடித்து வேரோடு வெட்டி எறிய வேண்டும்.
தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களில் (அது சினிமாவாகட்டும் சீரியலாகட்டும்) மது அருந்துவது ஸ்டேட்டஸ் & ஸ்டைல் மற்றும் உயர்தர வர்க்கத்தினரின் செய்கையாக காண்பிக்கப்படுகிறது. இதில் எரிச்சலூட்டும் படியாக 'மது உடல்நலத்திற்குக் கேடு' என்று பிட் நோட்டிஸ் வேறு காட்டப்படும். இது பார்க்கும் எளிய தட்டு மக்களையும், மாணவ உள்ளங்களையும் சீரழிக்கும் படி உள்ளது.
ஊடகங்களின் இந்த இரட்டை வேஷ அயோக்கியத்தனத்தை முற்றிலும் களைய வழி வகையினை ஆளும் அரசாங்கம் செய்யவேண்டும்.
குறைந்த பட்சம் குடி, போதை, காட்சிகளோ வசனங்களோ வந்தால் அவை கத்தரிக்கப்படும் என்று ஒரு விதியினை சென்சார் போர்டு அறிவிக்க வேண்டும்.
டாக்டர் ராமதாஸ் ஆட்சிக்கு வந்தால் முதலில் நாங்கள் செய்யும் காரியம் தமிழகத்தில் மதுவை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவோம் என்கிறார். இவரைப் போன்றவர்கள் ஓரணியில் திரண்டு - ஒரு தொற்று நோயினை சமூகத்தினை விட்டு ஒழித்துக்கட்டுவது போல் செய்திட வேண்டும்.
3
May 15, 2008 11:07
சீனிவாசன் உங்கள் கருத்துக்களும் மதுவை ஒழிக்க திட்டமிடும் ஆலோசனைகளும் அருமை.
//டாக்டர் ராமதாஸ் ஆட்சிக்கு வந்தால் முதலில் நாங்கள் செய்யும் காரியம் தமிழகத்தில் மதுவை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவோம் என்கிறார். இவரைப் போன்றவர்கள் ஓரணியில் திரண்டு - ஒரு தொற்று நோயினை சமூகத்தினை விட்டு ஒழித்துக்கட்டுவது போல் செய்திட வேண்டும்.//
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழித்துக்கட்டுவோம் என்று ஆண்ட ஆளும் கட்சிகளெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தபின் மாறி மதுக்கடைகளைத் திறந்திருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகளுக்கெல்லாம் மக்களின் நலனைவிட மதுவினால் கிடைக்கும் கொழுத்த வருமானம் மிக முக்கியம் எனக்கருதி தடம் மாறி விடுகின்றன. இதற்கு எந்த அரசியல் கட்சியும் விதிவிக்காகுமா என்பது குதிரைக் கொம்புதான்.
4
May 15, 2008 20:56
மனிதர்களின் சட்டங்களுக்கு மனங்கள் மாற்றம் பெறுவது கிடையாது. மாறாக, மனிதர்களை படைத்து அவன் புனிதமாக வாழ வழிகாட்டும் வான்மறை தந்த வல்ல இறைவனின் சட்டம் மூலம் தான் மது,திருட்டு,விபச்சாரம்,கொலை போன்ற பெரும்பாவங்களில் மூழ்கி கிடந்த மனிதர்களை உலமே வியக்கும் புனிதர்களாக மாற்றியதும்; இன்றுவரை இறை சட்டங்களினால் தரப்படும் தண்டனைகளினால் அவ்விறை வேதம் இறங்கிய மண்ணில் மேற்கூறிய குற்றங்கள் தடைச் செய்யப்பட்டு மக்களும்;பொருட்களும் பாதுகாப்புடன் இருக்க வழிகாட்டியதும் கண்கூடாக உலகம் காணும் பேருண்மை.மாறாக, மனிதர்க்ளின் சட்டம் பொய்த்து விட்டதற்கு இதோ சான்றுகள்: விபச்சாரத்தைத் தடுக்க வேண்டிய காவலரே விபச்சாரிகளின் வலையில் சிக்கியதும்; மதுவினால் கேடு என்று விளம்பரம் செய்யும் அரசே மதுவை விற்பனை செய்வதும்;ஊழல் என்னும் திருட்டும்- பூட்டிய வீட்டில் திருடர்களின் கைவரிசை யாவும் தினமும் நடைபெறும் சாதாரண நிகழ்ச்சிகளானதும்; பெண்கள்- சிறுமியர்-மாணவியர் கற்பழிப்புகளும் தினச்செய்திகளானதும் ஏன்????எப்படி??? எங்கே??? ஒரே பதில்: எங்கு இறைவனின் சட்டம் அமல் படுத்தப்படவில்லையோ- அங்கே-அப்படி-அதன் காரணத்தால். எங்கே இறைவனின் சட்டம் அமல் படுத்தப்படுகின்றதோ அங்கே மனிதர்களைத்திருத்த ஆர்ப்பாட்டம் தேவையில்லை.மனிதன் தன்னைப் படைத்த இறைவனின் சட்டம் தனக்கும் தன்னைச் சுற்றியிருப்பவர்கட்கும் 'நன்மை' தரவே என்பதை உணர வேண்டும்; அதற்கு தான் அல்-குர்-ஆன் என்ற 'இறைவனின் இறுதிச் சட்ட நூலாம்- இறுதி வேத' த்தின் தமிழ்மொழி பெயர்ப்பைப் படியுங்கள்-பரப்புங்கள் சகோதரர்களே......அறிந்து கொள்வீராக இறைசட்டம் அமல் படுத்தப்ப நாட்டில் பெண்கள் மிகவும் சுதந்திரமாக நடக்க முடியும்; கண்ணுக்கு இமையை பாதுகாப்பாக அமைத்த அதே இறைவன் பெண்ணுக்கு'பர்தா'வை பாதுகாப்பாக அமைத்தான்.
5
May 17, 2008 11:35
நானும் ஒரு மது அருந்துபன். இன்று விடமுடியாமல் அவதிபடுபவன். இளையதலைமுறை தயவு செய்து ஒருமுறை கூட மதுவை அருந்திவிடாமல் இதுபோல் அறிவூட்டும் கட்டுரைகளை படித்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
6
December 02, 2009 05:11
மனிதர்களின் சட்டங்களுக்கு மனங்கள் மாற்றம் பெறுவது கிடையாது. மாறாக, மனிதர்களை படைத்து அவன் புனிதமாக வாழ வழிகாட்டும் வான்மறை தந்த வல்ல இறைவனின் சட்டம் மூலம் தான் மது,திருட்டு,விபச்சாரம்,கொலை போன்ற பெரும்பாவங்களில் மூழ்கி கிடந்த மனிதர்களை உலமே வியக்கும் புனிதர்களாக மாற்றியதும்; இன்றுவரை இறை சட்டங்களினால் தரப்படும் தண்டனைகளினால் அவ்விறை வேதம் இறங்கிய மண்ணில் மேற்கூறிய குற்றங்கள் தடைச் செய்யப்பட்டு மக்களும்;பொருட்களும் பாதுகாப்புடன் இருக்க வழிகாட்டியதும் கண்கூடாக உலகம் காணும் பேருண்மை.மாறாக, மனிதர்க்ளின் சட்டம் பொய்த்து விட்டதற்கு இதோ சான்றுகள்: விபச்சாரத்தைத் தடுக்க வேண்டிய காவலரே விபச்சாரிகளின் வலையில் சிக்கியதும்; மதுவினால் கேடு என்று விளம்பரம் செய்யும் அரசே மதுவை விற்பனை செய்வதும்;ஊழல் என்னும் திருட்டும்- பூட்டிய வீட்டில் திருடர்களின் கைவரிசை யாவும் தினமும் நடைபெறும் சாதாரண நிகழ்ச்சிகளானதும்; பெண்கள்- சிறுமியர்-மாணவியர் கற்பழிப்புகளும் தினச்செய்திகளானதும் ஏன்????எப்படி??? எங்கே??? ஒரே பதில்: எங்கு இறைவனின் சட்டம் அமல் படுத்தப்படவில்லையோ- அங்கே-அப்படி-அதன் காரணத்தால். எங்கே இறைவனின் சட்டம் அமல் படுத்தப்படுகின்றதோ அங்கே மனிதர்களைத்திருத்த ஆர்ப்பாட்டம் தேவையில்லை.மனிதன் தன்னைப் படைத்த இறைவனின் சட்டம் தனக்கும் தன்னைச் சுற்றியிருப்பவர்கட்கும் 'நன்மை' தரவே என்பதை உணர வேண்டும்; அதற்கு தான் அல்-குர்-ஆன் என்ற 'இறைவனின் இறுதிச் சட்ட நூலாம்
7
July 05, 2011 10:11
கருத்து எழுதுக :
|