| தியாகப் பெருநாள் செய்தி! |
|
|
| ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம் | |||
| செவ்வாய், 18 டிசம்பர் 2007 05:18 | |||
|
அன்புமிக்க சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு, இவையன்றி, பிறப்பால் அனைவரும் சமம் என்ற உண்மையை உரத்து முழங்கும் இஸ்லாத்தின் மீள்எழுச்சியைத் தடுப்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கி விடப் பட்டிருக்கும் 'எழுத்துத் தீவிரவாத'க் கூலிக் கும்பல் இஸ்லாத்துக்கு எதிராக எல்லாவித உத்திகளோடும் புற்றீசல்கள் போலப் புறப்பட்டிருக்கும் இவ்வேளை, இஸ்லாத்துக்கு எதிரானத் திட்டமிட்டத் திரித்தல்களையும் திருகுதாளங்களையும் எதிர் கொண்டு முறியடிக்கவும் சரியான தகவல்களைச் சான்றுகளோடு எடுத்து வைக்கவும் எழுத்துப் போராளிகள் நம் சமுதாயத்துக்கு ஏராளமாகத் தேவைப்படுகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் போராளிகள் எதிர் கொள்ள வேண்டியவர்களாக சல்மான், தஸ்லீம் போன்ற அபகீர்த்தியால் அறியப் பட்ட முஸ்லிம் பெயரைத் தாங்கிய இஸ்லாத்தின் எதிரிகளும் அதிகமாக அறியப் படாதவர்களாகத் தமிழுலகில் சிலரும் உளர். அதே போன்று தனது பக்க நியாயத்தை உலகில் எவருமே நடுநிலையாக வெளிப்படுத்தத் தயாரில்லாமல் தனக்கு எதிராக அமெரிக்கா போர் தந்திரங்களைக் கையாண்டு காய்களை நகர்த்திக் கொண்டிருந்த வேளையில் 'ப்ரஸ்' என்ற பெயரில் ஒளிபரப்பைத் தொடங்கிய ஒரு (ஈரானியத்) தொலைக் காட்சி, தனது பக்க நியாயங்களையும் அமெரிக்காவின் போர் அட்டூழியங்களையும் அநியாயங்களையும் ஆதாரங்களுடன் பட்டியல் போட்டு காண்பித்தது. இன்று அதன் பக்கத்திலுள்ள நியாயங்களைப் பேசுவதற்கும் "அமெரிக்காவின் செயல் தவறானதுதான்" எனக் குரல் எழுப்பும் வகையில் மற்ற முக்கிய நாடுகளைத் தூண்டுவதற்கும் அணி திரளவும் ஒரு தூண்டுகோலாகாத் திகழ்கிறது. அவ்வளவு தூரம் போவானேன். இந்தியாவில் சங் பரிவாரத்தின் தோற்றம், நோக்கம், செயல்பாடுகளை அறியாதவர்கள் மிகச் சொற்பம். சங் பரிவாரத்தின் அரசியல் பிரிவு பாஜக ஆட்சியில் இராணுவத்திற்குச் சவப்பெட்டி வாங்கியதில் செய்த ஊழலிலிருந்து பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாங்கிய லஞ்சம் வரை, இன்று காவி அரக்கன் நரேந்திரமோடி முஸ்லிம்களைக் குஜராத்தில், மக்களைக் காக்க வேண்டிய அரசு இயந்திரங்களை மக்களுக்கு எதிராக உபயோகித்து, சொந்த மாநில மக்களையே வெறித்தனமாகக் கொன்று குவித்ததையும் தெளிவான ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி அனைத்து மக்கள் முன்னிலையிலும் கயவர்களின் முகமூடியைத் 'தெஹல்கா' தெளிவாக விலக்கிக் காண்பித்தது. 2000க்கு முன்னர்வரை மேற்குலக ஊடகங்களால் மூளைச் சலவை செய்யப் பட்டிருந்த மத்திய கிழக்கு நாடுகள், தற்பொழுது தம்மைத் தாமே சுயபரிசோதனை செய்து கொள்ளத் துவங்கியுள்ளன. அதற்கு உதவியது அல்ஜஸீரா மற்றும் ப்ரஸ் தொலைகாட்சியின் பேனா கரங்களே. அவ்வாறே, இந்திய முஸ்லிம்களின் இரத்தத்தையும் சதையையும் உண்டு வாழும் காவிக் கூட்டமும் மக்கள் பணத்தை உண்டு வாழும் அரசியல்வாதிக் கூட்டமும் கவலையுடன் தங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. இந்த மாற்றத்தை ஏற்படுத்தியதில் தெஹல்கா என்ற பேனா முனைகளுக்கு முக்கியப் பங்குண்டு என்பதை மறுக்க இயலாது.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (6)
![]()
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
'அனைவருக்கும் தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்'
எழுத்துப் பணியில் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் உள்ள பொறுப்பையும் - கடமையையும் மிக அழகாக, ஆழமாக உணர்த்தியுள்ளீர்கள்.
தியாகப் பெருநாளின் செய்தியாக, அருமையான சிந்தனையோட்டங்கள் - வாழ்த்தும், பாராட்டும்.
நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
1
December 18, 2007 08:50
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். (99:7)
////இதயத்திற்கு ஓய்வில்லை மூச்சுக் காற்றுச் சுழலும் வரை;
எழுதுகோல் ஏந்தும் கைகளுக்கு ஓய்வில்லை நீதி நிலைநாட்டப்படும் வரை!///
இந்த புனிதமிக்க தியாக பெருநாளின் சிறப்பு செய்தியாக சத்தியமார்க்கத்தின் ஆக்கம் வரவேற்க்கதக்கது!!! அனைத்து முஸ்லிம்களுக்கும் தியாக பெருநாளின் வாழ்த்துகள்!!!!
ஹனீஃப்-குவைத்
2
December 18, 2007 13:15
மிக ஆழமான உண்மை! ஊடக வலிமையின்மையால் நம் இந்திய முஸ்லிம் சமுதாயம் கேட்பாரற்ற நிலையில் உள்ளது. பேனா (ஊடகம்) ஆட்சிகளைக் கொண்டு வந்தது; ஆட்சிகளைக் கவிழ்த்தது. அதன் வலிமையை நம் சமுதாயம் உணர்ந்து பயன் படுத்தும் வரை வெற்றி தொலைவில்தான்.
சிறந்த ஆக்கம். சத்தியமார்க்கம் தளத்திற்குப் பாராட்டுகள்.
3
December 18, 2007 21:10
'அல்லாஹ் முதலில் படைத்தது எழுதுகோலைத்தான்'என்பது அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களின் ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.எனவேதான்'எழுதுகோலின்(பேனாவின்)முனை, வாள் முனையை விட கூர்மையானதாக இருக்கிறது'என்று சொல்லப்படுகிறது.இது யாராலும் மறுக்கமுடியாத அதன் மகிமையாகும்.அல்லாஹ் அதற்கு அவ்வளவு பெரிய சக்தியை கொடுத்துருக்கிறான்.அப்படிப்பட்ட எழுதுகோலுக்கு தூண்டுதலாகவும்,துணையாகவும்,வசதியாகவும்,அந்த எழுதுகோல்கள் படைக்கும் சத்தியவார்த்தைகளுக்கு அடைக்கலமாகவும்,உறைவிடமாகவும் திகழ்கிற'சத்திய மார்க்கம்.காம்'குழுவினருக்கும்,அதன் எழுத்தாளர்களுக்கும்,வாசகர்களுக்கும்,ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த'ஈதுல் அழ்ஹா'நல்வாழ்த்துக்கள்.
4
December 18, 2007 23:04
சிரிக்க வைக்கும் 'சில்லறை' கூத்துக்களுக்காக அடித்துக் கொண்டு அசிங்கப்பட்டு நிற்கும் சமுதாய அங்கங்களை உணர்வடையச் செய்யும் அற்புதமான வரிகள். வெல்டன் சத்தியமார்க்கம்.காம்.
உன் சீரிய எண்ண ஓட்டங்கள் சமுதாயத்தை விழிப்புணர்வடைய வைக்கவும் புதிய ஓர் அத்தியாயம் படைக்க வைக்கவும் வாழ்த்துக்கள்.
முழங்கட்டும் சத்திய வார்த்தைகள்!
உயரட்டும் சத்தியமார்க்கம்!
5
December 19, 2007 05:59
மிக அருமையான ஆக்கம்,
ஒவ்வொரு இஸ்லாமியனுக்குமுள்ள இன்றய தேவையை மிக அழகாக விளக்கியுள்ளது கட்டுரை. இன்று இஸ்லாத்திற்கெதிரான எழுத்து பயங்கரவாதத்தை ஒரு சில வலைத்தளங்களுக்கு சென்றாலே விளங்கிக் கொள்ளலாம். இஸ்லாத்திற்கெதிரான வசைபாடல்கள் நேசமுடன் உண்மையாடியார்களாக எழில் மிக்க வார்த்தை ஜாலங்களுடன் ஜயம் பெற்றிருக்கிறதென்றால் அது மிகையாகது.
சல்மான் ருஷ்டி மற்றும் தஸ்லிமா நஸ்ரின் போன்றோருக்கு கிடைக்கும் பப்ளிசிட்டிகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
//ஒரு வாள் சாதிக்க இயலாததை ஒரு பேனா முனையால் சாதிக்க இயலும்' எனக் கூறுவதன் அர்த்தம் நடைமுறையில் எதிர்மறையாகச் சாதிக்கப்பட்டு இன்று உலக அரங்கில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளது முஸ்லிம் சமுதாயம்.//
என்ன செய்ய? மறுக்கவியலாத உண்மை.
6
December 25, 2007 20:12
கருத்து எழுதுக :
|