சத்தியமார்க்கம்.காம்

ஈகைப்பெருநாள் வாழ்த்து...! print Email
கதை-கவிதை - கவிதை
வெள்ளி, 12 அக்டோபர் 2007 06:48

{mosimage}பசித்த வயிறின் பான்மை உணர்ந்தோம்
பாவம் போக்கும் பாதை அறிந்தோம்
நிசியில் தொழுதோம்; நிலைகள் உயர்ந்தோம்
நேசம் மிகைத்து நெஞ்சம் மலர்ந்தோம்

புசிக்கும் உணவில் பலரின் உழைப்பு
புரிந்த மனதில் பொதுமை இறையே..
நசியும் உலகை நினைவில் கொண்டு
நாளும் பொழுதும் நன்மைத் தொடர்வோம்.

நோன்பின் பயிற்சி நோற்பில் தெரியும்
நோய்கள் தீரும்; ஞாயம் புரியும்
மாண்பாய் ஈகை மனதில் நிறைக்கும்
மண்ணில் இரக்கம் மலரும் வளரும்

ஆன்மத் தேடல் அகிலம் எங்கும்
அன்பின் வழியில் அறிவுப் பயணம்.
சான்றோர் கூற்று சுமக்கும் காற்று
சொல்லும் செய்தி சுவர்க்கப் பாதை.

மறையும் ஓத மனமும் திறக்கும்
மனிதர் வேண்டும் மகிழ்வே என்றும்.
விரையும் உலகில் வேண்டு மிலக்கு
வேண்டா சிந்தை வேகம் விலக்கு.

முறையாய் எவரும் மார்க்கம் காணின்
மறுமை வெற்றி இறையின் நாட்டம்
இறையின் உவப்பே இனிய நோக்கம்
இன்பப் பரிசாய் பெருநாள் இருக்கும்

 

ஆக்கம்: கவிஞர். இப்னு ஹம்துன்

 

சகோதரர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் தன் நெஞ்சார்ந்த இனிய ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

நைஜீரியாவில் வியாழன் (11/10/2007) அன்றும் ஓமான் தவிர பிற வளைகுடா நாடுகளிலும், ஈரான், நைஜீரியா தவிர்த்த பிற வட ஆப்பிரிக்க நாடுகளிலும் வெள்ளி (12/10/2007) அன்றும் தென் ஆப்பிரிக்கா, சிங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட தூரக்கிழக்கு நாடுகளிலும், அமெரிக்கக் கண்டங்களிலும் சனி (13/10/2007) அன்றும் பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trackback(0)
கருத்துக்கள் (5)add comment
0
அபுசுஃபா:
தகப்பல்லாஹ் மின்ஹா வ மின்கும். புனித ஈதுல் அழ்ஹா நல்வாழ்த்துக்கள். நபி(ஸல்) அவர்களின் ஈத் வாழ்த்தாக ஹதீஸ்களிலிருந்து அறியப்படும் மேற்கண்ட துஆவை உங்களின் இந்த வாழ்த்துச்செய்தியில் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
1

October 13, 2007 13:42
0
இப்னு ஹமீது:
ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்! சகோதரர் அபுசுஃபா, 'தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்' என்பது தான் சரி. 'ஈதுல் அழ்ஹா' என்பது பக்ரீத் எனப் பொதுவாக அறியப்படும் தியாகத் திருநாள். அதற்கும் சேர்த்து இப்போதே வாழ்த்துத் தெரிவித்து விட்டீர்கள் போல! ஈதுல் ஃபித்ர் நல்வாழ்த்துக்கள்
2

October 13, 2007 14:23
0
அபூ முஹை:
அனைவருக்கும், இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
3

October 13, 2007 17:18
0
முஸ்லிம் தமிழன்:
அஸ்ஸலாமு அலைக்கும் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள் 'தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்' இதன் பொருள் அல்லாஹ் உங்களிடமிருந்தும் நம்மிடமிருந்தும் ஏற்றுக்கொள்வானாக என்பதாகும். இது பொதுவாக தொழுகை போன்ற ஏனைய நல்ல அமல்கள் அனைத்திற்கு பிறகும் 'தகப்பலில்லாஹ்' அல்லாஹ் இதை ஏற்றுக் கொள்வானாக என்று ஒருவர் கூற 'தகப்பல் மின்னா வ மின்கும்' அல்லாஹ் உங்களிடமிருந்தும் நம்மிடமிருந்தும் என்று மற்றவர் கூறும் விதத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளதை காணலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்... அல்லாஹ் நாம் அனைவரும் அதிகமான நல்லமல்கள் செய்து நம் அனைவரிடமிருந்தும் அதை ஏற்றுக் கொள்வானாக. முஸ்லிம் தமிழன்
4

October 15, 2007 08:23
0
அபுசுஃபா:
திருத்தங்களுக்கு நன்றி சகோதரர் இப்னு ஹமீது அவர்களே. ஃபித்ர் என்பதையே அழ்ஹா எனத் தவறுதலாகக் குறிப்பிட்டேன். தவறுகள் அறிந்தோ அறியாமலோ ஒரு சகோதரனிடம் நிகழும் பொழுது அதனை கிண்டல் செய்து, சொந்த சகோதரனின் கவுரவத்தை பொதுவில் போட்டு மிதித்து அவன் மனதை வேதனைப்படுத்தி தங்களை மிகப்பெரிய அறிவாளிகள் போன்று காட்டிக் கொள்ளும் ஒற்றுமை/சகோதரத்துவத்திற்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் தலைவர்கள்/தொண்டர்கள் நிறைந்து காணப்படக்கூடிய சமுதாய சூழலில் என்னிடம் ஏற்பட்ட தவறை அழகான முறையில் சுட்டிக்காட்டியதும் அல்லாமல், அதனை நேர்மறையான கண்ணோட்டத்தோடு எடுத்துக் கொண்டு வேறொரு விஷயத்தை நான் குறிப்பிட்டிருப்பேன் என்ற தொனியில் கூறி சகோதரத்துவத்திற்கு முன்னுதாரணம் காட்டிய சகோதரர் இப்னு ஹமீது அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அனைத்து நற்பாக்கியங்களையும் தந்தருள்வானாக. அனைத்து சகோதரர்களுக்கும் இனிய ஈதுல் ஃபித்ர் மற்றும் அட்வான்ஸ் ஈதுல் அழ்ஹா நல்வாழ்த்துக்கள்
5

October 15, 2007 08:46

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:168 மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு கவிதை கேளுங்கள் ஈகைப்பெருநாள் வாழ்த்து...!
Twitter
RSS
YouTube
English