முகப்பு

ஷஃபான் மாத அமல்களும் ஷப்-ஏ-பராஅத்தும்

ரமலானை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில், ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஃ'பானில் செய்ய வேண்டிய அமல்கள் என்ன என்பதைப் பற்றி முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலானோர், அறியாமையில் இருக்கிறார்கள்.

ஷஃ'பான் எனும் இந்த மாதத்தை, மரணித்துப்போன நம் பெற்றோர்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் பெயரால் ஃபாத்திஹா ஓதி, விஷேச அமல்கள், துவாக்கள் செய்து அதன் மூலம் நன்மையை அவர்களுக்குச் சேர்க்கக்கூடிய(?) ஒரு மாதமாகவே இந்த மாதம் தவறாகக் கருதப்படுகிறது. இதன் 15ம் நாளை, 'ஷப்-ஏ-பராஅத்' எனும் பெயரில் சில முஸ்லிம்கள் பரவலாகக் கடைபிடித்து வருகிறார்கள்.

இஸ்லாத்தில் கூறப்படாத இத்தகைய அனாச்சாரங்கள் தற்போது ஓரளவு குறைந்துள்ளன என்றாலும், இன்றும் பலர் இதை ஒரு சிறந்த அமலாக, நன்மை தரும் காரியமாகக் கருதி, விதவிதமான சமையல்கள், இனிப்புவகைகள் என்று சமைத்து, பயபக்தியுடன் பரவசத்துடன் குழுமியிருந்து ஃபாத்திஹா ஓதி, மரணித்த தமது உறவினருக்கு நன்மைகளை நாடிப் பிரார்த்திப்பதாகச் செயல்படுத்தி வருகின்றனர்.


இந்த நூதனச் செய்முறைக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரமில்லை. புனித குர்ஆனின் ஹதீஸ்களின் மூலமொழி அரபியாகும். 'ஷப்-ஏ-பராஅத்' இல் உள்ள  'ஷப்' என்பது அரபிச் சொல் கிடையாது; 'இரவு' என்ற பொருளில் வரும் பார்ஸிச் சொல்லாகும். 'ஏ'காரம் என்பது அரபு மொழியிலேயே இல்லாத ஓர் ஒலி. இப்படியிருக்கையில் தானாக உருவாக்கிக் கொண்ட ஒரு புதிய நடைமுறைக்கு 'ஷப்-ஏ-பராஅத்' என்ற பெயர் சூட்டி முஸ்லிம்களின் புனித ரமலான், ஹஜ்ஜுப் பெருநாள் போன்ற விஷேசமான இதர பண்டிகைகளின் பட்டியலில் காலங்காலமாக இதனையும் சேர்த்து விட்டனர். ஆனால் இது நபி (ஸல்) அவர்கள் மூலம் ஏவப்பட்ட ஒரு நபி வழியா? நல்ல அமலா? இதனைச் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? இதற்கு நன்மை கிடைக்குமா கிடைக்காதா? அல்லது ஒருவேளை இது ஒரு பாவமான காரியமாகி தண்டனையைப் பெற்று தருமா? என்றெல்லாம் அவர்கள் சிந்திக்கத் தவறி விடுகின்றனர்.


எவர் ஒருவர் என்னால் ஏவப்படாத (மார்க்கக்) காரியத்தை நன்மையான காரியம் என்று கருதித் செயல்படுகிறாரோ அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் . இதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்).


இந்த ஒரு ஹதீஸே நாம் மார்க்கம் என்றும் நன்மையென்றும் கருதி இப்படி நபி (ஸல்) காட்டித்தராத செயல்களைப் புதிதாக உருவாக்கவோ, சேர்க்கவோ அல்லது அதைப் பலரும் செய்கிறார்கள் என்பதால் செயல்படுத்தவோ கூடாது என்பதை மிகத் தெளிவாக அறிவுறுத்துகிறது. இதைப்போன்று பல ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்களால் காட்டித் தராத ஒன்றைச் செயல்படுத்த நேரடியான தடையுள்ளதையும் நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும்.


அல்லாஹ்விடம் நன்மையை நாடி, தமது உறவினர்களுக்கு நன்மையை வேண்டிப் பிரார்த்திக்கவும், தமக்கு நன்மைகளும் அபிவிருத்தியும் ஏற்படும் என்று கருதி, இப்படிப்பட்ட அமல்கள் செய்பவர்கள் நபி (ஸல்) அவர்கள் இதை நமக்கு காட்டித்தரவில்லை என்பதையும் சிந்திப்பதில்லை.


நிச்சயமாக ஒருவர் இறந்தபின் மூன்றைத் தவிர அவருடைய அமல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகின்றன. அம்மூன்றாவன:

  1. அவர் விட்டுச்சென்ற நிலையான தர்மங்கள் (இறையில்லங்கள் கட்டுவது, மரங்கள் நடுவது, கிணறுகள் அமைப்பது, கல்விச்சாலைகள் நிறுவுவது போன்றவை)
  2. அவர் தந்த பயன் தரும் கல்வி (ஈருலக வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு அவர் கற்றுக் கொடுத்த கல்வி)
  3. ஸாலிஹான அவரின் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனைகள்.

இம்மூன்றைத் தவிர வேறு எவ்வழியிலும் ஒருவர் இறந்தபின் அவருக்கு நன்மைகள் சேருவதில்லை. (ஆதார நூல்கள்: முஸ்லிம். அபூ தாவூத், திர்மிதி, நஸயீ)


நபியவர்கள் காட்டித் தந்த வழி இவ்வாறிருக்க, இறந்து போன உறவினருக்கு பராஅத் இரவில் பாத்திஹாக்கள் ஓதினால் எந்தப் புண்ணியமும் கிட்டப்போவதில்லை என்பதுதான் உண்மை. தவிர, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத புதிய ஒரு வழிமுறையை மார்க்கமாகச் செய்யும் பாவத்தையும் சுமக்க வேண்டிவரும்.


நபி (ஸல்) அவர்கள் மற்ற எல்லா மாதங்களையும்விட - ரமலானுக்கு அடுத்தபடியாக - ஷஃ'பான் மாதத்தில்தான் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள்.


ரமலான் மாதத்திற்கு முந்தைய மாதமான ஷஃ'பானில் நோன்பு வைப்பது நபியவர்களால் மிகவும் வலியுறுத்திக் கடைபிடிக்கப்பட்ட ஓர் அமல் ஆகும் என்பதைக் கீழ்வரும் ஹதீஸ்கள் நமக்கு பறைச்சாற்றுகின்றன:


"நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃ'பானும் அதைத் தொடர்ந்துள்ள ரமளானுமாகும்" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூற, தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவூத், நஸயி).

 

நபி (ஸல்) அவர்கள், 'நோன்பை விடவேமாட்டார்களோ' என்று நாம் நினைக்கும் அளவுக்கு (சிலபோது) நோன்பு நோற்பவர்களாகவும் 'நோன்பிருக்க மாட்டர்களோ' என்று நினைக்கும் அளவுக்கு நோன்பு நோற்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமளானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் அறியவில்லை. நபியவர்கள் அதிக நாட்கள் நோன்பு வைத்த மாதம் ஷஃ'பானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்).


அமல்கள் உயர்த்தப்படும் மாதம்:

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! ஷஃ'பானைப் போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை' என்று கூறிய போது, நபியவர்கள், "மனிதர்கள் ரஜப், ரமளான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள (ஷஃ'பான் என்ற) ஒரு மாதத்தின் விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில், அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன்" என கூறினார்கள். (ஆதாரம்: நஸயி, அஹ்மத்).


இதற்கு மாற்றமாக ஷஃ'பான் மாதத்தில், பிறை 15ல் மட்டும் நோன்பு நோற்பதும், அதன் இரவில் மூன்று யாஸீன்கள் ஓதுவதும், ரொட்டி மற்றும் இனிப்புப் பண்டங்களை வைத்து சாம்பராணிப் புகையுடன் ஃபாத்திஹா ஓதிய பின்னர் அதையும் இதர உணவுகளையும் பரிமாறிக் கொள்வதும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத ஒரு 'பித்அத்' தான காரியமாகும்.


நமக்கு இஸ்லாத்தையும் நன்மை தீமைகளையும் கற்றுத்தர அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்கள் நமக்கு இவற்றைக் கற்றுத் தரவில்லை. அவர்களுக்குப் பின்னர் யாரோ சிலர் உருவாக்கியவைதான் இவையும் இவை போன்றவையும் என்பதைப் பலரும் அறிவதில்லை. நமக்கு நன்மைகள் வேண்டுவது அல்லது நமது நெருங்கிய உறவினர்களுக்கு துஆச் செய்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல; துவாச் செய்வது தவறும் அல்ல. இதை, தினந்தோறும் தவறாமல் நாம் செய்து வர வேண்டும். அதிகமாகவும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும், தஹஜ்ஜுத் எனும் இரவுத் தொழுகைகளிலும் செய்ய வேண்டும். அதுவே நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியாகும்.


வருடத்தில் ஒரு நாள் அல்லது ஒருசில நாட்கள், அதுவும் அல்லாஹ்வோ நபி (ஸல்) அவர்களோ காட்டித் தராத ஒரு நாளில் இதுபோன்ற அமல்களைச் செய்வது எந்தப் பலனையும் விளைவிக்காது என்பதை நாம் உணர வேண்டும். பலகாலமாக நமது மூதாதையர் செய்வதாலோ நம்முடைய உறவினர்கள், நமது ஊரார்கள் எல்லாம் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அவற்றைச் செய்யாமல், இவையெல்லாம் பொல்லாப் புதுமைகள் என்பதை அறிந்து கொண்டு, இதுபோன்றவற்றை விட்டு விலகி இருந்து, பிறருக்கும் உணர்த்தி விலக்கி அவர்களையும் நேர்வழிக்கு அழைக்க வேண்டும்.


இந்தியாவில் சிலபகுதிகளில் இரவு விழித்து விசேஷமான, தஸ்பீஹ்கள் தொழுகைகள் மற்றும் பொதுக் கல்லறைகளுக்கு இரவில் கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் சென்று துவா செய்யும் வழக்கமும் இருக்கிறது, இந்த வழக்கம், நபி (ஸல்) அவர்கள் பெண்கள் கப்ரு ஜியாரத்தைக் கண்டித்ததற்கும் எச்சரித்ததற்கும் எதிரானதாகும் என்று உணர்த்தி இப்பழக்கத்தையும் கைவிடச்செய்ய நாம் முயலவேண்டும்.


ரமளானுக்கு ஒரிரு நாட்கள் இருக்கும் போது நோன்பு நோற்கலாகாது:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மீதி இருக்கும்போது (ஷஃபானின் இறுதியில்) நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். (திங்கள், வியாழனில்) வழமையாக நோன்பு நோற்பவர் தவிர, அவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதார நூல் :புகாரீ).


மேற்கண்ட ஹதீஸ் திங்கள், வியாழன் ஆகிய இருநாட்களில் தொடர்ந்து வழக்கமாக நோன்பு வைத்து வருபவர்களைக் குறிக்கின்றது என்பதுடன், இதுபோன்ற திங்கள்-வியாழன் நோன்புகள் வைப்பது நபி(ஸல்) அவர்கள் தாமும் கடைபிடித்து வந்ததுடன் பிறருக்கும் ஆர்வமூட்டிய அழகான தெளிவான வழிமுறையாகவுமுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு முறையாகப் பயனடைய முயல வேண்டும்.


அதேபோல்தான் குர்ஆன் ஓதுதலும் ஆகும். திருமறையின் எந்த அத்தியாயத்தை ஓதினாலும் அதற்கு ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் உண்டு என்பதை உணர்ந்து நாம் தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிகமாக ஓதிவரவேண்டும், மேலும் நபி (ஸல்) அவர்கள் காட்டியுள்ள திக்ருகள், துஆக்கள், தர்மங்கள் நஃபிலான வணக்கங்கள் மூலம் நன்மையையும் அல்லாஹ்வின் அருளையும் உதவியையும் பெற்றிடத் தொடர்ந்து முயன்று, இம்மை-மறுமை வெற்றியைப்பெற முயலவேண்டும்.


அற்புதமான இந்த ஷஃ'பான் மாதத்தை பித்அத்களில் வீணாக்காமல், இறைத்தூதர் காட்டித்தந்த வழியில் கடைப்பிடித்து ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.


ஆக்கம்: அப்துல்லாஹ்

Comments:

கருத்துக்கள்   

 
Abdul Kareem
0 #26 Abdul Kareem 2010-07-23 12:29
ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)

ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்ட ிய பித்அத்துகளாகும ். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )

فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)

(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாக ும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )
Quote | Report to administrator
 
 
Sahana
0 #27 Sahana 2010-07-24 11:46
அஸ்ஸலாமு அலைக்கும்,
நீங்கள் சொல்வதெல்லாம் பார்த்தால் அப்போது பராத் இரவு அன்று எல்லா பள்ளிகளிலும் இரவு தொழுகை நடத்துகிறார்களே . அப்படி என்றால் அவர்களுக்கு எல்லாம் மார்க்கம் பற்றி தெரியாமல் அப்படி செய்கிறார்களா? நான் நிறைய தளங்களிலும் , நூல்களிலும் , பிரசுரங்களிலும் படித்ததில் எல்லா கருத்துகளும் பராத் இரவுக்கு முன்னுக்கு பின் முரனனதகதான் இருக்கிறது . நான் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறேன் . தயவு செய்து என் குழப்பத்தை தீர்க்கவும் .
Quote | Report to administrator
 
 
Abdul Samad
0 #28 Abdul Samad 2010-07-26 23:08
பராஅத் இரவு என்ற பெயரில் ... இம்தியாஸ் ஸலபி
இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடை பிடிக்கும் அமல்கள் (செயற்பாடுகள்) ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த அமல்கள், இபாதத்கள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள், மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன.
அமல்களை நிர்ணயிப்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித் தோன்றல்களோ அல்ல! துர திஷ்டவசமாக இன்று இந்நிலை பரவலாக காணமுடிகிறது.
மார்க்கத்தில் எல்லை மீறி செல்கின்ற போது தனி மனித வழிபாடும், மூட நம்பிக்கைகளும், வழிகேடுகளும் தோற்றம் பெறுகின்றன. இறுதியில் கைசேதப்பட்டவனாக மனிதன் நரகில் நுழைகிறான். இந்த அபா யத்திலிருந்து பாதுகாப்பதற்காக த்தான் நபியவர்கள் ”மார்க்கத்தில் எல்லை மீறி செல்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன்” (நூல் முஸ்லிம்) என்றும் ”எங்களுடைய கட்டளையில்லாமல் எவர் ஒரு செயலை (அமலை) செய்கிறாரோ அது நிராகரிக்கப்படு ம் (நூல்: முஸ்லிம்) என்றும் கண்டித்துள்ளார்கள்.
எனவே எந்த ஒரு அமலை செய்வதானாலும் அதற்கு நபிவழியில் ஆதாரமுண்டா? என்று பார்க்க வேண்டும். இருந்தால் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஒதுங்கி விட வேண்டும். இதுவே சுன்னாவை கடைபிடிக்கும் ஒழுங்கு முறையாகும்.
இன்று பராஅத் இரவு என்ற பெயரில் முஸ்லிம்களால் ஒரு இரவு விசேடமாக கொண்டாடப்படுகிற து. அன்றைய இரவில் நின்று வணங்கியும், நோன்பு நோற்றும் மூன்று வகையான பிரார்த்தனைகளை (1. உணவு விஸ்தீரணம், 2. நீண்ட ஆயுள், 3. எல்லாவித துன்பங்களை விட்டும் நீங்கியிருத்தல் போன்ற துஆக் களை) கேட்டும், மூன்று யாசீன் ஒதியும் விஷேடமான தொழுகைகளை நடாத்தியும் இன்னும் இது போன்ற செயல்களையும் செய்கிறார்கள். பள்ளிவாசல்களிலு ம் விசேடமான நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்படுகின்ற ன. இதற்கான ஆதாரங்கள் உண்டா? என்பதை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.
”ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு வந்துவிட்டால் அவ்விரவில் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு பிடியுங்கள். அன்றைய நாளில் சூரியன் மறைந்த பின் அல்லாஹ் கடைசி வானத்திற்கு இறங்கி வந்து ”என்னிடம் பாவமன்னிப்பு கோருபவர் உண்டா? நான் அவருக்க மன்னிப்பு வழங்குகிறேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவருக்கு உணவளிக்கி றேன். சோதனைக்கு ஆளாவனவர் உண்டா? அவருக்கு நிவாரணம் வழங்குகிறேன் என்று சுபுஹ் நேரம் வரை கேட்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரழி) அறிவிக்கிறார்கள ். இந்தச் செய்தி இப்னு மாஜாவில் பதிவாகியுள்ளது.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை யில் ‘இப்னு அபீசப்ரா’ என்பவர் இடம்பெறு கிறார். இவர் பலஹீனமாவர். இவர் பொய் யான ஹதீஸ்களை இட்டுக் கட்டக் கூடிய வர் என இமாம் அஹ்மத் (ரஹ்), இப்னு ஹன்பல் (ரஹ்) இமாம் இப்னு முயீன் (ரஹ்) குறிப் பிடுகிறார். எனவே இந்த ஹதீஸைக் கொண்டு செயல்பட முடியாது.

ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்: ”நான் (ஸல்) அவர்களை இரவில் படுக்கையில் காணாததால் அவர்களைத் தேடி வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் ‘பகீய்’ மையவாடியில் இருந்தார்கள். அப்போது ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவில் அல் லாஹ் கடைசி வானத்திற்க இறங்கி ஆட்டின் உரோமத்தின் எண்ணிக்கையை விட அதிகமாக பாவமன்னிப்பு வழங்குகிறான் என்று நபி (ஸல்) கூறினார்கள் என்று ஆயிஷா (ரழி) அறிவிக்கும் செய்தி திர்மிதியில் பதிவாகியுள்ளது.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ‘ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத்’ என்பவர் இடம்பெறுகிறார். இவர் மற்ற அறிவிப்பாளரான யஹ்யா இப்னு அபூ கஸீல் என்பவரிடம் எதையும் செவியுற்றதில்லை . இது பலஹீனமான செய்தி என்று இமாம் புகாரி (ரஹ்) விமர்சனம் செய்கிறார்கள் என இமாம் திர்மிதி (ரஹ்) குறிப்பிடுகிறார ்க்ள. எனவே இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டும் செயல்பட முடியாது.

”ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் இணைவைப்பவனுக்கு ம் குரோதம் பாரட்டுபவனையும் தவிர அல்லாஹ் தன்னுடைய எல்லா படைப்பினங்களுக் கும் மன்னிப்பு வழங்குகிறான்.. என நபி (ஸல்) கூறினார்கள்.(இப்னுமாஜா)
இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் இப்னு லஹீஆ என்பவர் பலஹீனமானவர் என்றும் வலீத் இப்னு முஸ்லிம் செய்திகளை இருட்டடிப்பு செய்பவர் என்றும் ஹதீஸ் துறை அறிஞர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.
எனவே ஷஃபான் பதினைந்தாம் இரவின் சிறப்பு மற்றும் நோன்பு பற்றி வரக்கூடிய எந்தச் செய்தியும் ஸஹீஹானதாக இல்லை என்று ஹதீஸ் கலை இமாம்களே தெளிவுப்படுத்து கிறார்கள். உண்மை இவ்வாறு இருக்கும்போது பலஹீனமான செய்திகளைக் கொண்டு எப்படி அமல் செய்ய முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல ‘பராஅத் இரவு’ என்று குறிப்பிட்டுஎந் த ஒரு ஹதீஸும் வரவில்லை. இதற்கு எப்படி இந்த பெயரை சூட்டினார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கிறது.
‘இந்த இரவில் நோன்பு நோற்றால் தப்பில்லையே அதுவும் நன்மைதானே என்று மேலேயுள்ள விபரங்களை தெரிந்த பின் சில நேரம் கேட்கலாம்.
‘தப்பில்லையே! நன்மை தானே, என்று நாமாக சமாதானம் கூறிக் கொள்ளவோ ஆறுதல் அடையவோ எமக்கு எந்த அதிகார முமில்லை. எதை எப்படி எந்த நேரத்தில் எந்த இடத்தில் எந்த முறையில் செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக் கூறுவதற்குதான் அல்லாஹ் இறைத்தூதரை அனுப்பி வைத்தான்.இறைத்த ூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தராத எந்த செயலும் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மேலேயுள்ள ஹதீஸ் தெரிவிக்கின்றது.
இமாம் நவவீ (ரஹ்) அவர்கள்: ரஜப் மாதத்திலும், ஷஃபான் மாதத்திலும் விசேடமான தொழும் தொழுகை மோசமான நிராகரிக்கக் கூடிய பித்அத்கள். (இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை) என்று கூறுகிறார்கள். நூல்: அஸ்ஸுனனு வல்முப்த திஆது) இது தவிர ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் நிரூபனமாகும் சுன்னத்தான நோன்புகளை நோற்க பழகிக் கொள்ள வேண்டும். எனவே உண்மையைஅறிந்து கொண்ட பின் அதனடிப்படையில் செயல்பட அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக.
Quote | Report to administrator
 
 
k.karthic
0 #29 k.karthic 2010-08-06 19:07
i am hind but iam நோன்பு வைக்ககலாமா?
Quote | Report to administrator
 
 
M . Muhammad
0 #30 M . Muhammad 2010-08-07 11:00
Dear Brother Karthik

Thanks for your below question which is welcome

// i am hind but iam நோன்பு வைக்ககலாமா? //

please find below extract from an article for your clarification....

நோன்பு உங்களைத் தூய்மையுடையோரா க்கலாம்!

www.satyamargam.com/1018

Even if one is a Muslim ....

// யார் நோன்பை இந்த உயரிய நோக்கமின்றி வெறும் சடங்குக்காக நோற்கின்றாரோ அதில் எந்தவித பிரயோஜனமும் இல்லை. யார் கெட்ட பேச்சுக்களையும் , கெட்ட செயல்களையும் விட்டு விடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளைக் கட்டுப்படுத்துவ து போல் மற்ற எல்லாப் பாவங்களையும் கட்டுப்படுத்திக ் கொள்ள வேண்டும். ரமளான் மாதம் இஸ்லாம் கூறக்கூடிய எல்லா நற்செயல்களையும் ஞாபகப்படுத்தக்க ூடிய ஒரு மாதமாகும். தொழாதவர்கள் தொழ ஆரம்பித்து விடுகின்றனர். தர்மமே செய்யாதவர்கள் தர்மம் செய்கின்றனர். உம்ராச் செய்யாதவர்கள் உம்ராச் செய்கின்றனர். குர்ஆன் ஓதாதவர்கள் ஓத ஆரம்பித்துவிடுக ின்றனர். தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள் அதை நிறுத்திக் கொள்கின்றனர். இன்னும் இது போன்ற பல நல்ல செயல்களையும் கற்றுத்தருகின்ற து இந்த நோன்பு. ஏன் இந்த நல்ல பண்புகளை நோன்பு அல்லாத மாதங்களிலும் தொடரக்கூடாது? நோன்பு மாதத்தில் எந்த இறைவனை அஞ்சி இந்த நல்ல செயல்களில் ஈடுபட்டோமோ அவன் நோன்பு அல்லாத மாதங்களில் நம்மைக் கண்காணிப்பதில்ல ையா? நோன்பு அல்லாத மாதங்களில் நாம் மரணிப்பதற்கு வாய்ப்பில்லையா? ஏன் நோன்பு மாதத்தோடு இந்த நல் அமல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்? சிந்தியுங்கள்! விடை கிடைக்கும். நல் அமல்களை, தொடர்ந்து செய்வதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானா க...! //

If you need to know more pls write and contact the Satyamargam team...
www.satyamargam.com/1018
Quote | Report to administrator
 
 
கவியன்பன்கலாம், அதிராம்பட்டினம்
0 #31 கவியன்பன்கலாம், அதிராம்பட்டினம் 2010-08-07 14:42
பகலெலாம் பசித்து
இரவெலாம் விழித்து
அகமெலாம் நிறைந்து
அல்லாஹ்வைத் துதித்து
முகமத்(ஸல்) உம்மத்து
முழு மாதம் நோன்பு பிடித்து
அகமும் முகமும்
அமல்களால் அலங்கரித்து
இகம் பரம் ஈடேற்றமும் இறையின்
ரகசிய அறிவும் பெற்று தரும்
ரமளானே வருகவே...!!!

பசித்தவரின் பசியினை
பட்டு நீ உணர்த்திடும் பட்டினி- ஊனில்
வசித்திடும் ஷைத்தானை
வதைத்திட வைத்திடும் உண்ணாமை

குடலுக்கு ஓய்வுக் கொடுத்து;
குர்-ஆனின் ஆய்வு தொடுத்து;- மஹ்ஷர்
திடலக்கு தயார்படுத்துதல் உன் கவனம்;
திண்ணமாய் கிட்டும் சுவனம்

பாவம் தடுத்திடும்
பாதுகாப்பு கேடயம்;
கோபம் வென்றிடும்
குணத்தின் பாடம்

அல்லாஹ்வுக்காகவ ே நோன்பு;
அல்லாஹ் மட்டுமே அறியும் மாண்பு
அல்லாஹ்வே அதற்கான சாட்சி;
அல்லாஹ்வே தருவான் மாட்சி

முப்பது நாட்களை மூன்றாய் வகுத்து
முப்பதின் முதல் பத்தில் ரஹ்மத்து;
முப்பதின் இரண்டாம் பத்தில் மக்பிரத்து;
முப்பதின் மூன்றாம் பத்தில் நஜாத்து;
தப்பாது வேண்டிட வேண்டியே
தகை சான்றோர் வேண்டினரே

வானில் இருந்த இறைவேதம்
வஹியின் வழியாக
தேனினும் இனிய திருநபியின் (ஸல்)
திருவதனம் மொழிய வந்த மாதம்

ஆற்றல் மிக்கதோர் இரவின் பிறப்பு;
ஆயிரம் மாதங்களினும் மிக்க சிறப்பு;
போற்றிடுவோம் பெற்றிடுவோம் அவ்விரவு;
புனிதமிகு ரமளானின் வரவு...!!!

ஈகைத் திருநாளாம்
ஈத் பெருநாளைக்கு முன்பாகவே
வாகைத்தரும் பித்ரா தர்மம்
வழங்குவோம் ஏழைகட்கு அன்பாகவே

"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்

குறிப்பு: தடிமன் எழுத்துக்களில் உள்ளவைகள் அரபி பதங்கள்: அதன் பொருள் இதோ:

உம்மத்து= சமுதாயம்
அமல் = செயல்
மஹ்ஷர்= மறுமை தீர்ப்பு நாளின் பெருவெளி மைதானம்
ரஹ்மத்து= இறையருள்
மக்பிரத்து= இறைமன்னிப்பு
நஜாத்து= நரக விடுதலை
வஹி= வானவர் ஜிப்ராயில்(அலை) மூலம் இறைத் தூது
பித்ரா= ஏழைகட்கு ஈந்துவக்கும் தானிய தர்மம் (அதனாற்றான் இந்த நோன்பு பெருநாளை "ஈதுல் பித்ர்" (ஈகைத் திருநாள்) என்பர்
Quote | Report to administrator
 
 
M Muhammad
0 #32 M Muhammad 2011-07-15 13:07
பராஅத்தும் மத்ஹபுகளும்

மத்ஹபைப் பின்பற்றுபவர்கள ்தான் பள்ளிவாசலுக்குத ் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்க ள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.

ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)

ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்ட ிய பித்அத்துகளாகும ். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )

فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)

(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாக ும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )

وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)

பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலு ம் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)
அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோ டு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தா ன் நாங்கள் எடுத்துக்காட்டி ய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது . இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா ? சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்ட ிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார ்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
Quote | Report to administrator
 
 
ummu hudhaifa
0 #33 ummu hudhaifa 2012-06-27 21:01
//ரமளான் மாதம் இறுதியில் நோன்பு நோற்பதை அனுமதித்து முஸ்லிம் நூலில் சில அறிவிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள ன. நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் ''நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?'' என்று கேட்டார்கள். அம்மனிதர் 'இல்லை' என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''நீர் ரமளான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக'' என்று கூறினார்கள். (முஸ்லிம்) இந்த ஹதீஸ் ஷஅபான் மாதம் இறுதியில் நோன்பு நோற்பதை அனுமதிக்கிறது//

2008ம் ஆண்டு சகோதரர் முஸ்லிம் அவர்களால் பதிவு செய்யப்பட்ட கருத்தாகும் இது.இதில் எனக்கு ஏற்படும் சந்தேகம் என்ன வென்றால் இந்த ஹதீஸை வைத்துப்பார்க்க ப்போனால் ஷஃபான் நோன்பு கட்டாய கடமை அதை நோற்காவிட்டால் பின்னர் அதை கழா செய்ய வேண்டும் என்பது போன்றல்லவா தோன்றுகிறது?விள க்கம் தேவை
Quote | Report to administrator
 
 
S.S.K
0 #34 S.S.K 2012-06-27 21:44
பின்னூட்டம் 22
// Muslim:
புகாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1983

முதர்ரிஃப்(ரஹ்) அறிவித்தார்.

இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அவர்களிடமோ, அவர்கள் செவிமடுத்துக் கொண்டிருக்க வேறொருவரிடமோ நபி(ஸல்) அவர்கள் 'இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா? ' என்று கேட்டார்கள். அம்மனிதர் 'இல்லை! இறைத்தூதர் அவர்களே!" என்றார். நபி(ஸல்) அவர்கள் 'நீர் நோன்பைவிட்டுவி ட்டால் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள்.


"நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தைக் கருத்தில் கொண்டே. 'இம்மாதம்' என்று சொன்னதாக எனக்கு இதை அறிவித்தவர் (மஹ்தீ இப்னு மைமூன்) கூறினார்கள் என நான் நினைக்கிறேன்!" என்று அபுந் நுஃமான் கூறுகிறார். 'நபியவர்கள் ரமளானையே கருத்தில் கொண்டு 'இம்மாதம்' என்று சொன்னதாக நான் நினைக்கிறேன்!" என்று அறிவிப்பாளர்களி ல் ஒருவரான 'ஸல்த்' என்பவர் கூறவில்லை.


'ஷஅபானின் கடைசி' என்று மற்றோர் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.


அன்புச் சகோதரர் s.s.k


இந்த அவிப்புத் தொடர்பான விரிவுரையில்,


''இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா? '' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டது ஷஅபான் மாதத்தின் கடைசியைத்தான் என்கிற மற்றொரு அறிவிப்பே சரியானதாகும். விடுபட்ட நோன்புகளை களா செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் சொன்னதற்குக் காரணம், அவை அவராகத் தன் மீது கடமையாக்கிக் கொண்ட இரு நேர்ச்சையான நோன்புகள் என்பதே! (ஃபத்ஹுல்பாரீ, உம்தத்துல் காரீ) //


22
Quote | Report to administrator
 
 
மு.முஹம்மது அப்பாஸ்
0 #35 மு.முஹம்மது அப்பாஸ் 2012-07-01 14:44
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்,

ஷபே பராஅத் பற்றி கட்டுரை தொகுத்து கொண்டு இருக்கிறேன் இன்சா அல்லா நீண்ட கட்டுரையாக வெளியிடுவேன், ஆதாரபூர்வமாக ஹதிஸ்களுடன். அதுவரைக்கும் சற்று பொறுமையை காத்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறேன்.

சத்தியத்தை சரியாக சொன்னால் யாரும் விமர்ச்சிக்க போவது கிடையாது, சத்தியதை மறைத்து சொன்னால்........

இங்கு நடந்து கொண்டிருக்கும் கருத்துபரிமாற்றதிலிருந்து...

// ''ஷஃபான் பாதியியை அடையும் போது, மற்றொரு அறிவிப்பில் ஷஃபானில் பாதி மீதியிருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்க் கள். திர்மிதி, அபுதாவூது, நஸாயீ, மற்றும் இப்னு மாஜா ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ள்ளது//

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நோன்பு குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொடர்ந்து)னோன் பு நோற்கிறார்கேளா என்று நாங்கள் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்கள்; நோன்பே நோற்கமாட்டார்கே ளா என்று நாங்கள் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்காமல் இருந்துவிடவும் செய்வார்கள். அவர்கள் ஷஅபானைத் தவிர வேறந்த மாதத்திலும் அதிக நாட்கள் நோன்பு நோற்றைத நான் கண்டதில்லை. ஷஅபான் மாதம் முழுவதும் அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார ்கள். ஷஅபானில் சில நாட்கள் மட்டும்
னோன்பு நோற்றும் இருக்கிறார்கள்' ' என்று விடையளித்தார்கள ் என அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள ். (இமாம் முஸ்லிம்(ரஹ்).

நபி(ஸல்) அவர்கள் சில ஆண்டுகள்(முதலில ்) சில நாட்கள் ஷஅபானில் நோன்பு நோற்று இருப்பார்கள்,நப ி(ஸல்) அவர்கள் சில ஆண்டுகள்(இறுதிய ில்) ஷஅபான் முழுவதும் நோன்பு நோற்று இருப்பார்கள், என பொருள் கொண்டால் நமக்கிடையில் குழப்பம் எதுவும் வராது.

நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் பதினைந்தாம் நாள் நோன்பு வைக்குமாறு சொன்ன ஹதிஸும் இடம் பெற்றுள்ளது, இதன் படி அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாத்தினார்கள் நோன்பு வைத்து கொண்டு இருக்கிறார்கள், தவறு என்று சொல்ப்பவருக்கு எந்த ஒரு அதிகாரம் கிடையாது,

நபி (ஸல்) அவர்கள் "என்னிடம்' அல்லது "நான் செவியுற்று கொண்டிருக்க மற்றொரு
மனிதரிடம்' "நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் நடுப்பகுதியில்( பதினைந்தில்) நோன்பு நோற்றீரா?'' என்றுகேட்டார்கள ். நான், "இல்லை' என்றேன். நபி (ஸல்) அவர்கள், "நீர் (ரமளான்) நோன்பைமுடித்தது ம் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!'' என்று கூறினார்கள் இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள ்.இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள ். (இமாம் முஸ்லிம்(ரஹ்)

சில ஹதிஸ்களில் இறுதிபகுதியும் இடம் பெற்றுள்ளது என்பதை மறுக்க வில்லை, நடுப்பகுதி என்றும் உள்ளது, அதை எடுத்து செயல்படகூடாது என்று சொல்ல எவருக்கும் உரிமை இல்லை, ஏனென்றால் அதுவும் நபி(ஸல்) அவர்கள் அறிவித்தாக தான் இடம் பெற்றுள்ளது.
Quote | Report to administrator
 
 
M Muhammad
0 #36 M Muhammad 2012-07-03 09:04
Assalamu Alaikum


SATYAMARGAM COM CHAKOTHARARKALE


INTHA HATHEESIN ARABU MUULATHTHAI PAARTHU NADU PAKUTHI ENRU VAACHAKAM ULLATHAA MEELUM ITHU AATHAARA POORVAMNATHA ENRU VILAKKAUM

// நபி (ஸல்) அவர்கள் "என்னிடம்' அல்லது "நான் செவியுற்று கொண்டிருக்க மற்றொரு
மனிதரிடம்' "நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் நடுப்பகுதியில்( பதினைந்தில்) நோன்பு நோற்றீரா?'' என்றுகேட்டார்கள ். நான், "இல்லை' என்றேன். நபி (ஸல்) அவர்கள், "நீர் (ரமளான்) நோன்பைமுடித்தது ம் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!'' என்று கூறினார்கள் இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள ்.இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள ். (இமாம் முஸ்லிம்(ரஹ்) //

ALSO READ THE BELOW ARTICLES AS PER LINK

salaf-us-saalih.com/.../...


javeria.wordpress.com/.../...

பராஅத்தும் மத்ஹபுகளும்

மத்ஹபைப் பின்பற்றுபவர்கள ்தான் பள்ளிவாசலுக்குத ் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்க ள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.

ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)

ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்ட ிய பித்அத்துகளாகும ். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )

فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)

(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாக ும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )

وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)

பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலு ம் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)
Quote | Report to administrator
 
 
மு முஹம்மத்
0 #37 மு முஹம்மத் 2012-07-03 21:18
மு அப்பாஸ் அவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த ஹதீஸ் எண் மற்றும் அரபி மூலத்தை தருக.

// நபி (ஸல்) அவர்கள் "என்னிடம்' அல்லது "நான் செவியுற்று கொண்டிருக்க மற்றொரு
மனிதரிடம்' "நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் நடுப்பகுதியில்( பதினைந்தில்) நோன்பு நோற்றீரா?'' என்றுகேட்டார்கள ். நான், "இல்லை' என்றேன். நபி (ஸல்) அவர்கள், "நீர் (ரமளான்) நோன்பைமுடித்தது ம் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!'' என்று கூறினார்கள் இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள ்.இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள ். (இமாம் முஸ்லிம்(ரஹ்) //
Quote | Report to administrator
 
 
மு.முஹம்மது அப்பாஸ்
0 #38 மு.முஹம்மது அப்பாஸ் 2012-07-04 00:07
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹீ

அரபியில்

hadith.al-islam.com/.../

باب صوم سرر شعبان
1161 حدثنا هداب بن خالد حدثنا حماد بن سلمة عن ثابت عن مطرف ولم أفهم مطرفا من هداب عن عمران بن حصين رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال له أو لآخر أصمت من سرر شعبان قال لا قال فإذا أفطرت فصم يومين


‏عن ‏ ‏عمران بن حصين ‏ ‏رضي الله عنهما ‏‏أن رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏قال له ‏ ‏أو لآخر ‏ ‏أصمت من ‏ ‏سرر ‏ ‏شعبان قال لا قال فإذا أفطرت فصم يومين

ஆங்கிலத்தில்

theonlyquran.com/.../...

2607.
'Imran b. Husain (Allah be pleased with them) reported Allah's Messenger (may peace he upon him) having said to him or to someone else: Did you fast in the middle of Sha'ban? He said: No. Thereupon he (the Holy Prophet) said: If you did not observe fast, then you should observe fast for two days.
2608.
Imran b. Husain (Allah be pleased with them) reported that Allah's Apostle (way peace heupon him) said. to a person: Did you observe any fast in the middle of this month (Sha'ban)? He said: No. Thereupon the Messenger of Allah (may peace be upon him) said: Fast for two days instead of (one fast) when you have completed (fasts of) Ramadan.
2609.
'Imran b. Husain (Allah be pleased with them) reported that the Apostle of Allah (may peace be upon him) said to a person: Did you observe fast in the middle of this month. i. e. Sha'ban? He said: No. Thereupon he said to him: When it is the end of Ramadan, then observe fast for one day or two (Shu'ba had some doubt about it) but he said: I think that he has said: two days.
2610.
This hadith is narrated by 'Abdullah b. Hani b. Akhi Mutarrif with the same chain of transmitters.
Quote | Report to administrator
 
 
மு முஹம்மத்
0 #39 மு முஹம்மத் 2012-07-04 05:13
அஸ்ஸலமு அலைக்கும்
சகோ மு அப்பாஸ்

நீங்கள் சுட்டிக் காட்டிய்ள்ள அரபி வாசகங்களின் தளத்தின் ஆங்கிலத்தில் நடு என்ற வாசகம் இல்லை என்பதை கவனிக்கவும். அதில் கீழுள்ளவாரே இறுதியில் என்று உள்ளது.

hadith.al-islam.com/.../

649 'Imran bin Husain, may Allah be pleased with them, reported: The Messenger of Allah (may peace be upon him) asked him (or he asked another person and he was listening to it): O so and so, did you observe Fast in the last days of Sha'ban? He said: No. Thereupon he (the Messenger of Allah) said: When you break this Fast (of Ramadan), then observe Fast for two days.


புகாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1983

இந்த அறிவிப்புத் தொடர்பான விரிவுரையில்,

'இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா? '' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டது ஷஅபான் மாதத்தின் கடைசியைத்தான் என்கிற மற்றொரு அறிவிப்பே சரியானதாகும். விடுபட்ட நோன்புகளை களா செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் சொன்னதற்குக் காரணம், அவை அவராகத் தன் மீது கடமையாக்கிக் கொண்ட இரு நேர்ச்சையான நோன்புகள் என்பதே! (ஃபத்ஹுல்பாரீ, உம்தத்துல் காரீ) //

மேலும் இது பற்றிய ஹதீஸ்கள் இட்டு கட்டப் பட்டவை என்ற அறிஞர்கள் கருத்தையும் இதர ஆதார பூர்வமான ஹதீஸ்களையும் கவனத்தில் கொண்டு இதை அணுக வேண்டும். அல்லாஹ் மிக அறிந்தவன்
Quote | Report to administrator
 
 
மு.முஹம்மது அப்பாஸ்
0 #40 மு.முஹம்மது அப்பாஸ் 2012-07-04 14:32
அலைக்கும் ஸலாம்

இங்கு வருபவர்கள் யாரவது நீங்கள் கேட்ட கேள்வியை கேட்பார்கள் என எண்ணினேன் ஆனால் அதில் நீங்கள் முந்திவிட்டீர்கள்,

நீங்கள் தான் உங்களுக்கு வேணுகிற போது வளைத்து கொள்கிறீர்கள், அது மார்க்கத்திற்கு நல்லது அல்ல, உங்களுக்கு ஏற்று கொள்ள மனம் வருவில்லை என்று சொல்லுங்கள், அது தான் உண்மை, சத்தியத்தை உங்கள் சுயநலத்திற்காக அழித்துவிடாதீர் கள், உண்மை உண்மையாய் கூறுங்கள் பெரும்பான்மையான இமாம்கள் ஷ அபான் மாதம் நடுப்பகுதியை தான் குறிக்கும் ஏனென்றால்,

سرر என்ன அர்த்தம்?

இதில் அறிஞர்களிடைய கருத்து வேறுபாடு உள்ளது, ஆனால் பெரும்பான்மையான ோர் இதற்கு நடுப்பகுதி தான் என்று மொழியாக்கம் செய்து உள்ளார்கள், ஏனென்றால் முஸ்லிம் இரண்டும் வேற வேற இடத்தில் பதிவு செய்து உள்ளார்கள், ஆனால் நீங்கள் இணையதளத்தில் எந்த ஒரு இணையதளத்திலும் சென்றாலும் சரி நீங்கள் முஸ்லிம் எண் 2607-யை سرر எனற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் இதற்கு மிடில் என மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்டுள்ள து,

இமாம் நவவி(ரஹ்) அவர்கள் سرر எனற் வார்த்தை நடுப்பகுதி என்று கூறியுள்ளார்கள்

மேலும் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் கூறுகிறார்கள்

அபூ உபைத்(ரஹ்) سرر என்ற சொல்லுக்கு மறைதல் என்று பொருள் அதாவது சந்திரன் மறைக்கிற நாள் 28ம் நாள், 29ம் நாள், 30 ம் நாள் குறிக்கும்,

அவ்ஸாயி(ரஹ்) மற்றும் அப்துல் பின் ஹஜிஸ்(ரஹ்) அவர்கள் سرر என்ற சொல்லுக்கு மாதத்தின் ஆரம்ப பகுதி எனப் பொருள் கொண்டார்கள் என இமாம் அபூதாவுத்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்காத்தாபி(ரஹ்) அவர்கள் மற்றும் பலர் سرر என்ற சொல்லுக்கு மாதத்தின் நடுப்பகுதியை தான் குறிக்கும்.

இந்த மூன்றையும் குறிப்பிட்டு இதில் பெரும்பான்மையோன ோர் நடுப்பகுதியை தான் ஆதாரவு அளித்துள்ளார்கள ் என இமாம் அபூதாவுத்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள ், மேலும் سرر என்பதற்கு பன்மையில் தொப்புள்(உடலின் மையப்பகுதி) என்று அழைக்கப்படும், எனவே நடுப்படுதி தான் மிகவும் பலாமானது எனப் பெரும்பான்மையோன ோரால் ஊக்கு விக்கப்படுகிறது , மேலும் பெரும்பான்ம்மைய ோனோர் இறுதி பகுதியை ஆதரிக்க வில்லை ஏனென்றால் ஷஅபான் இறுதிப் பகுதியில் நோன்பை வைக்க தடைச் செய்யப்பட்டுள்ள து இதை இமாம் நவவி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், எனவே இமாம் நவவி(ரஹ்) அவர்கள் நடுப்பகுதிக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள் , இதனை கருத்தில் கொண்டு தான் இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்கள் நடுப்பகுதியில் என வரும் ஹதிஸ்களில் தொகுத்துள்ளார்க ள், (இமாம் முஸ்லிம்(ரஹ்) கருத்து அதுவாகும்),

இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்கள் இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்கள் பதித்துள்ள இந்த ஹதிஸ் நடுப்பகுதியை தான் குறிக்கும் ஏனென்றால் இறுதி பகுதி நோன்பு வைக்க கூடாது என்று இடம் பெற்றுள்ளது, எனவே அதற்கு மாற்றமாக இருப்பதினால் அது நடுப்பகுதிதான் குறிக்கும்., ஆனால் பெரும்பான்மையான ோர் இதற்கு நடுப்பகுதி தான் என்று மொழியாக்கம் செய்து உள்ளார்கள், ஏனென்றால் முஸ்லிம் இரண்டும் வேற வேற இடத்தில் பதிவு செய்து உள்ளார்கள், ஆனால் நீங்கள் இணையதளத்தில் எந்த ஒரு இணையதளத்திலும் சென்றாலும் சரி நீங்கள் முஸ்லிம் எண் 2607-யை سرر எனற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் இதற்கு மிடில் என மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்டுள்ள து,

ரமலானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள ்(இமாம் முஸ்லிம்(ரஹ்), இமாம் புஹாரி(ரஹ்),

இந்த ஹதிஸிக்கு நீங்கள் பதிதிருக்கும் கீழ் ஹதிஸ் மாற்றமாக உள்ளது என பெரும்பான்மையான இமாம்களின் கருத்து.

//இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா? '' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டது ஷஅபான் மாதத்தின் கடைசியைத்தான் என்கிற மற்றொரு அறிவிப்பே சரியானதாகும். விடுபட்ட நோன்புகளை களா செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் சொன்னதற்குக் காரணம், அவை அவராகத் தன் மீது கடமையாக்கிக் கொண்ட இரு நேர்ச்சையான நோன்புகள் என்பதே! (ஃபத்ஹுல்பாரீ, உம்தத்துல் காரீ)//

நபி(ஸல்) அவர்கள் இறுதியில் நோன்பு வைக்க தடை செய்யும் போது, மற்றொரு இடத்தில் இறுதியில் நோன்பு வைக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்களா? இல்லை, இறுதியில் என்பது தவறாக அறிவிப்பு செய்யப்பட்டிருக ்கும்,அது நடுப்பகுதியை தான் குறிக்கும் என பெரும்பான்மையான இமாம்களின் கருத்தாகும்,

அது தான் ஏற்கனவே நான் கூறினேன்

//சில ஹதிஸ்களில் இறுதிபகுதியும் இடம் பெற்றுள்ளது என்பதை மறுக்க வில்லை, நடுப்பகுதி என்றும் உள்ளது, அதை எடுத்து செயல்படகூடாது என்று சொல்ல எவருக்கும் உரிமை இல்லை, ஏனென்றால் அதுவும் நபி(ஸல்) அவர்கள் அறிவித்தாக தான் இடம் பெற்றுள்ளது.// முன்பு நான் பதித்தது.

மேலும் உங்களுக்கு சந்தேகம் இருப்பில் கிழுள்ள லிங்கை கிளிக் செய்து, அதில் ஹதிஸ் எண் 2150-யையும்(நடு ப்பகுதி),ஹதிஸ் எண் 2154-யையும்(இறு திப்பகுதி) படித்து பார்க்கவும், உங்கள் பிடித்திருந்தால ் எடுத்து கொள்ளுங்கள், இல்லை என்றால் விலகி இருங்கள், எனக்கு எல்லாம் தெரியும், நான் சொல்வது தான் சரி, மற்றவர்கள் செயல்படுவது எல்லாம் தவறு என் அறிவுக்கு அது மாற்றமாக உள்ளது என்று சொல்பவீர்கள் என்றால் அதற்கு நான் பொருப்பல்ல, அஸ்ஸலாமு அலைக்கும்.... உண்மையை உண்மையாய் கூறுங்கள், அதனால் தான் நான் இரண்டு ஹதிஸையும் சுட்டிகாட்டினேன ், அஸ்தஃபருல்லா உங்கள் அறிவுக்கு ஒத்து வரவில்லை என்று ஒரு நபி மொழியை இட்டுகட்டியுள்ள து என கூறுகிறீர்களே இது நியாயமா?

onlinepj.com/.../athiyayam_14

எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்(அல ்குர்ஆன் 17:36)

அல்லா அனைத்தும் அறிந்தவன்
Quote | Report to administrator
 
 
மு முஹம்மத்
0 #41 மு முஹம்மத் 2012-07-04 21:48
அஸ்ஸலமு அலைக்கும்
சகோ மு அப்பாஸ்

தங்கள் நீண்ட விளக்கத்தை கண்டேன், நடு பகுதி என்று கருத்து கூறியவர்களின் ஆதாரங்களையும் கண்டேன் . மேலும் தாங்கள் என்னை பற்றி வெளிபடுத்திய கருத்துக்களும் கண்டேன்.

ஆனால், நான் சுட்டிக் காட்டியதற்கு hadith.al-islam.com/.../ ஏதும் கருத்து கூறாமல் விட்டு விட்டீர்கள் என்பதை மீண்டும் நினைவு கூறுகிறேன், ஆகையால் எனது அந்த பின்னூட்டத்தை மீண்டுமொரு முறை பார்வையிடவும், அதை பற்றியும் தங்கள் கருத்தை வெளியிடவும். ஒரே தளத்தில் அரபியில் ஒன்று இருந்ததை ஆதாரமாக தந்து அதையே ஆங்கிலத்தில் இறுதி என்று இருந்ததி சுட்டிக் கேட்டதற்கு ஏதும் பதில் தராமல், பத்குல் பாரியின் விளக்கம் பற்றியதற்கும் கருத்திடாமல் நான் உண்மையை ஏற்க மறுப்பதாக கூறுவதில் என்ன நியாயம் உள்ளது சகோதரரே, மேலும் நான் தெளிவை நாடியே இங்கு பின்னூட்டம் இட்டு வருகிறேன் என்பதை அல்லாக் அறிவான்.

மேலும் தாங்கள் சுட்டிய தளத்திலும் ஒரே அறிவிப்பாளர் பெயரில் அதே கருத்து நான்கு முறை பதிவாகியுள்ளது 2150,2154,2155, 2156 இதில் 2150ல் நடு பகுதி என்றும் மற்ற மூன்றில் இறுதி என்றும் உள்ளது என்பதையும் கவனிக்கவும் onlinepj.com/.../athiyayam_14

.

மேலும் ஒரு வாதத்திற்காக அது நடுபகுதி என்று எடுத்தாலும் "பத்ஹுல் பாரி"யின் அது அவருக்கு என்ற நேர்ச்சை என்றதற்கு என்ன பதில் உள்ளது?. மேலும் இட்டுகட்டபட்டதா க நான் கூறவில்லை பல அறிஞர்கள் கூறியுள்ளதி கவனத்டில் கொண்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றேன் நான் கூறுவதாக கூறியுள்ளீர்கள் . கவனிக்கவும்.

// எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்(அல ்குர்ஆன் 17:36)

அல்லா அனைத்தும் அறிந்தவன்//

அல்லாஹ் நமக்கு சந்தேகமானதை விட்டு விலகி சரியானதை பின்பற்றி ஈடேற்றம் பெற அருள் புரிவானக. ஆமீன் வஸ்ஸலாம்.
Quote | Report to administrator
 
 
மு.முஹம்மது அப்பாஸ்
0 #42 மு.முஹம்மது அப்பாஸ் 2012-07-05 09:33
அலைக்கும் ஸலாம்,

சகோதரரே அதுக்கு தான் இரண்டும் வழிகளிலும் உள்ளது என்று நான் முதன் முதலில் பதிக்கும் போதே கூறினேன், நீங்கள் நான் சொல்வது தான் சரி என்று கூறினதினால் தான் நான் பிறகு இமாம்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது என்று அறிவித்தேன், நான் இறுதி பகுதி இல்லை என்று மறுத்தால் நீங்கள் கேட்பது நியாயம்?, அதற்கு தான் நான் கூறினேன், உங்கள் விருப்ப்பம் இருந்தால் எடுத்து கொள்ளுங்கள் இல்லை என்றால் விலகி இருங்கள், நடுப்பகுதியும் என்று பொருள் உள்ளது, அது தவறு என்று சொல்லாதீர்கள் என்னுடைய கருத்து, இறுதி பகுதி தான் சரி என்று உங்கள் விருப்பத்திற்கு தோன்றினால் தாரளாமாக எடுத்து செயல்படுங்கள் ஏனென்றால் அதுவும் நபி(ஸல்) அவர்கள் அறிவித்தாக வருகிறது. ஏனென்றால்

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்ற ிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ((திருகுர்ஆன் 33:36)
Quote | Report to administrator
 
 
மு முஹம்மத்
0 #43 மு முஹம்மத் 2012-07-05 18:33
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் மு அப்பாஸ் அவர்களே

மீண்டும் தாங்கள் நான் சுட்டிக் காட்டிய அறிஞர்கள் கருத்தை நான் கூறியதாக கூறியுள்ளீர்கள் மேலும் நடுப் பகுதி என்றும் உள்ளது, ஆரம்பம் என்றும் உள்ளது இறுதி எறும் உள்ளது என்றும் கூறியுள்ளீர்கள்.

இவற்றை கவனிக்கும் போது ஒரே அரபி வாசகத்தை மொழியாக்கியவர்க ள் மூன்று கருத்திலும் சிலர் ஒரே வாசகத்திற்கு நடுப் பகுதி என்றும் கடைசி என்றும் மொழி பெயர்த்துள்ளனர் என்பதும் தெளிவு. அல்லாஹ் மிக அறிந்தவன்.

புகாரியின் விளக்கவுரையாகிய ஃபத்ஹுல் பாரியில் , இறுதி என்பது சரியானது என்றுள்ளதை சுட்டிக் காட்டியிருந்தேன ், அதுவும் அவருடைய பிரத்யேகமான நேர்ச்சை என்ற விளக்கத்தையும் பின்னூட்டதில் சகோதரர் முஸ்லிம் அவர்கள் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டினேன்.

// ''ஷஃபான் பாதியியை அடையும் போது, மற்றொரு அறிவிப்பில் ஷஃபானில் பாதி மீதியிருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்க் கள். திர்மிதி, அபுதாவூது, நஸாயீ, மற்றும் இப்னு மாஜா ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ள்ளது//

(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாக ும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )

وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)

பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலு ம் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)



இந்நிலையில் நாம் "நடுப்பகுதியில் " என்று பொருள் கொள்வதும் ஷஃபான் 15 என்று கூறி "ஷபேபராத்" என்ற ஒரு நாளை உருவாக்கி சிறப்பித்து நபி வழியற்ற பித்தத்தான காரியங்களுக்கு துணையாக அன்று மட்டும் நோன்பு வைப்பதும் விசேஷ தொழுகைகள் போன்ற அமல்கள் செய்வதும் நபிவழிக்கு மாற்றமான செயல் ஆகும் என்பதே எனது புறிதல். அல்லாஹ் மிக அறிந்தவன்

ஆக நபிவழியற்ற பித்ததான காரியங்களை தவிர்த்து நபி வழிகளை பேணி வாழ்ந்திட அல்லாஹ் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானக என்று துவா செய்வோமாக.
Quote | Report to administrator
 
 
மு.முஹம்மது அப்பாஸ்
0 #44 மு.முஹம்மது அப்பாஸ் 2012-07-06 16:08
அலைக்கும் ஸலாம்,

மு.முஹம்மத் உங்கள் கேள்வி:
//புகாரியின் விளக்கவுரையாகிய ஃபத்ஹுல் பாரியில் , இறுதி என்பது சரியானது என்றுள்ளதை சுட்டிக் காட்டியிருந்தேன ், அதுவும் அவருடைய பிரத்யேகமான நேர்ச்சை என்ற விளக்கத்தையும் பின்னூட்டதில் சகோதரர் முஸ்லிம் அவர்கள் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டினேன்.//

மு.முஹம்மத் அவர்களே உங்கள் கேள்விக்கு நீங்களே பதிலும் அளித்துள்ளீர்கள்:

// ''ஷஃபான் பாதியியை அடையும் போது, மற்றொரு அறிவிப்பில் ஷஃபானில் பாதி மீதியிருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்க் கள். திர்மிதி, அபுதாவூது, நஸாயீ, மற்றும் இப்னு மாஜா ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ள்ளது//

சகோதரரே,

நீங்கள் தெரிந்து கொண்டு கேட்கின்றீர்களா ? இல்லை வேணுமென்றே வம்புக்கு இழுக்கிறீர்களா? , இதையும் நீங்கள் அடுத்து கேட்பீர்கள் என தெரியும், அதற்கும் இமாம்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்,

அந்த ஹதிஸை பதிவு செய்து விட்டு இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்களும்,இமாம் நவவி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், ஷபான் 15ம் நாள் பிறகு நோன்பு நோற்க கூடாது தனி பாடமாக தொகுத்து அதற்கு கீழ் விளக்கத்தையும் அளித்து ஷபான் 15ம் நாள் பிறகு நோன்பு பிடிக்க கூடாது என்று கூறியுள்ளார்கள்,

மேலும் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஒவ்வொரு மாதமும், பதின்மூன்றும், பதினான்காம், பதினைந்தாம் இந்த மூன்று நாட்கள் நோன்பு வைக்குமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்க ள் என அபூதர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள ்(இமாம் நஸயி(ரஹ்))

இதை அறிவித்துவிட்டு பெரும்பான்மையான இமாம்கள் ஷபான் 15ம் பிறகு தான் என்று விளக்கம் அளித்துள்ளார்கள ்,, மேல் உள்ள ஹதிஸிற்கு விளக்கம் அளித்துள்ளார்கள்,

இப்போதே உங்கள் வாயில் இருந்தே அல்லா ஒரு உண்மை வர வைத்துள்ளான்,
அது தான் இறுதி பகுதி, எனவே நீங்கள் அறிவித்துவிட்டீ ர்கள், ஷபான் மாதம் பாதி அடைந்து விட்டால் நோன்பு நோற்க கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் எனவே இறுதிபகுதி வராது அது நடுப்பகுதிதான் என நீங்களே தற்போது ஏற்று கொண்டு உள்ளீர்கள், என்னை மடக்க பார்த்தீர்கள், அல்லா உங்களை மடக்கிவிட்டான், இதற்கு ஒரு முடிவு தற்போது நீங்கள் அமைத்துவிட்டீர் கள், அல்லாவுக்கே புகழ் அனைத்தும்.. இதற்குமேலும் நீங்கள் அது நடுப்பகுதி இல்லை இறுதி பகுதி என்று கூறினால் அது விவாதம் அல்ல, பிடிவாதம் ஆகும். இதற்கு மேல் நாம் தொடங்கினால் அது மக்களுக்கு எரிச்சல் ஊட்டப்படும் என்று நான் கருதுகிறேன்.

மேலும் நீங்கள் மத்ஹப் நூல்களைப் பற்றி குறிப்பிட்டு உள்ளீர்கள், அதையும் நான் தொகுத்து கொண்டுதான் இருக்கிறேன் இன்சா அல்லா, நான் ஏற்கனவே நான் அதைப் பற்றி தெரிவித்திருக்க ிறேன், தற்போதைக்கு ஒரே ஒரு ஹதிஸ் ஆதாரபூர்வமான தொடரில் தற்போது பதிவு செய்கின்றேன்

وعن معاذ بن جبل ، عن النبي - صلى الله عليه وسلم - قال :

" يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان ، فيغفر لجميع خلقه ، إلا لمشرك ، أو مشاحن " .

رواه الطبراني في الكبير والأوسط ورجالهما ثقات

ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் இணைவைப்பவனுக்கு ம் குரோதம் பாரட்டுபவனையும் தவிர அல்லாஹ் தன்னுடைய எல்லா படைப்பினங்களுக் கும் மன்னிப்பு வழங்குகிறான் என நபி (ஸல்) கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
இதை இமாம் தப்ரானி(ரஹ்) அவர்கள் ஸஹிஹ் வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள் ,

மேலும் இதை இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) அவர்களும் உறுதி செய்துள்ளார்கள் இதில் இடம் பெரும் அறிவிப்பாளார்கள ் நம்பகமானவர்கள் என்று கூறுகிறார்கள். இதை ஸஹிஹ்வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள் ,

மேலும் இமாம் இப்னு ஹஜர் ஹைதமி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் தனது கித்தாபில் இந்த ஹதிஸை பதிவு செய்து விட்டு இதில் இடம் பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் ஆவார்கள், சிலர் விமர்ச்சனம் செய்து உள்ளார்கள், அது தவறு. எனவே இது ஹசன் தரத்தில் கூட கூற முடியாது இது ஸஹிஹ் வான ஹதிஸ் ஆகும்.

மேலும் இமாம் முந்தரி(ரஹ்) அவர்கள் வழியாக தஹ்ரிப் தஹ்ரிப் லும், இமாம் சூயூத்தி(ரஹ்) அவர்களும் இதில் இடம் பெறும் அறிவிப்பாளார்கள ் மிகவும் நம்பகமானவர்கள் ஆவார்கள் என கூறியுள்ளார்கள் .

ஒரு ஹதிஸ் தான் தற்போது பதிவு செய்துள்ளேன், என்னிடம் அழகான தொடரில் பல ஹதிஸ்கள் உள்ளன், ஏனென்றால் கருத்து பதிக்கும் போது விமர்ச்சிபவர்கள ் நிறைய பேர் இருக்கின்றனர், அவசரப்பட்டு பதித்துவிட்டால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கொடுக்க வேண்டும், அறிவிப்பாளர் தொடரை மட்டும் அறிவித்தால் மட்டும் போததாது அவர்கள் விமர்ச்சனத்திற் கு பதில் அளிக்க வேண்டும் அதனால் தான் தாமதம்.
Quote | Report to administrator
 
 
மு முஹம்மத்:
0 #45 மு முஹம்மத்: 2012-07-08 01:17
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் மு அப்பாஸ்

ஒரு விஷயத்தைப் பற்றி ஒன்றுக்கு மேலான் ஹதீஸ் இருந்து அனைத்தும் ஸஹீஹாக இருக்கும் பட்சத்தில் அனைத்தையும் இணைத்து ஒru முடிவுக்கு வர வேண்டும் என்பது -ஹதீஸ் கலையின் ஒரு விதி. ஆனால் ஹதீஸ் பலவீனமானதாக் இருந்தால் அதை புறம் தள்ளிவிட வேண்டும் என்பதே அறிஞர்கள் கருத்து.

கைர் மீண்டும் நீங்கள் ஏதேதோ கூறியுள்ளீர்கள் கருப் பொருள் ஷஃபான் பதினைந்தில் மட்டும் நோன்பு நோற்கலாமா என்றால் கூடாது என்பதாகும், மாதம் தோரும் 13, 14.15 என்றும் ஷஃபானில் வரும் போது கூடாது என்று அல்ல.

அதேபோல் ஷ்ஃபான் 15க்கு பிறகு நோன்பு நோற்கலாகது என்பது வழமையாக திங்கள் வியாழன் நோன்பு நோற்பவர்களுக்கு அல்ல என்பதும் "ஷஃபான் இறுதியில் நோன்பு நோற்காதீர்கள் வழமையாக நோன்பிருப்பவரைத ் தவிர" என்ற நபிமொழியிலிருந் தும் விளங்கலாம்.

மேலும் இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய ஹதீஸும் நடுப் பகுதி என்ற கருத்தை தரவில்லை அதே வாசகம் ஆரம்பம், நடு, இறுதி என்று மொழிபெயர்க்கப்ப ட்டுள்ளது என்று கூறியிருந்தேன் மேலும் அது அவருடைய நேர்ச்சை என்று ஃபத்ஹுல் பாரியில் உள்ளதை குறித்திருந்தேன்.

இதற்கு மேலும் நீங்கள் ஷஃபான் 15ல் மட்டும் விஷேசமாக நோன்பும் அமல்களும், ஷபே பராத்தும் அனுமதிக்கப்பட்ட து என்று கருதினால் இன்னும் சில பிரபல அறிஞர்கள் விளக்கம் ஆங்கிலத்தில் தருகிறேன். தேவையெனில் தமிழிலும் தருவேன். அல்லா-ஹ் மிக அறிந்தவன்.

மேலும் தாங்கள் சுட்டியுள்ள "ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் இணைவைப்பவனுக்கு ம் குரோதம் பாரட்டுபவனையும் தவிர அல்லாஹ் தன்னுடைய எல்லா படைப்பினங்களுக் கும் மன்னிப்பு வழங்குகிறான் ஹதீஸும் பலவீனமானது" என்பதற்கும் அதிகமான சான்றுகள் உள்ளன என்பதை கவனிக்கவும்.

Ruling on Celebrating the 15th of Sha'ban

1. The Middle of Sha’baan Should Not Be Singled Out For Worship There is no saheeh marfoo‟ report that speaks of the virtue of the middle of Sha‟baan that may be followed, not even in the chapters on al-Fadaa‟il (chapters on virtues in books of hadeeth etc.). Some maqtoo‟ reports (reports whose isnaads do not go back further than the Taabi‟een) have been narrated from some of the Taabi‟een, and there are some ahadith, the best of which are mawdoo‟ (fabricated) or da‟eef jiddan (very weak).

These reports became very well known in some countries which were overwhelmed by ignorance; these reports suggest that people‟s life spans are written on that day or that it is decided on that day who is to die in the coming year. On this basis, it is not prescribed to spend this night in prayer or to fast on this day, or to single it out for certain acts of worship. One should not be deceived by the large numbers of ignorant people who do these things. And Allah knows best. Shaykh Ibn Jibreen.

If a person wants to pray qiyaam on this night as he does on other nights – without doing anything extra or singling this night out for anything – then that is OK. The same applies if he fasts the day of the fifteenth of Sha‟baan because it happens to be one of the ayyaam al-beed, along with the fourteenth and thirteenth of the month, or because it happens to be a Monday or Thursday. If the fifteenth (of Sha‟baan) coincides with a Monday or Thursday, there is nothing wrong with that (fasting on that day), so long as he is not seeking extra reward that has not been proven (in the saheeh texts). And Allaah knows best. Sheikh Muhammed Salih Al-Munajjid

What is narrated concerning the virtue of praying, fasting and worshipping on the fifteenth of Sha‟baan (al-nusf min Sha‟baan) does not come under the heading of da‟eef (weak), rather it comes under the heading of mawdoo‟ (fabricated) and baatil (false). So it is not permissible to follow it or to act upon it, whether that is in doing righteous deeds or otherwise.

A number of scholars ruled that the reports concerning that were false, such as
Ibn al-Jawzi in his book al-Mawdoo‟aat, 2/440-445; I
bn Qayyim al-Jawziyyah in al-Manaar al-Muneef, no. 174- 177;
Abu Shaamah al-Shaafa‟i in al-Baa‟ith „ala Inkaar al-Bida‟ wa‟l-Hawaadith, 124-137; al-„Iraaqi in Takhreej Ihyaa‟ „Uloom il-Deen, no. 582.
Shaykh al-Islam [Ibn Taymiyah] narrated that there was consensus on the fact that they are false, in Majmoo‟ al-Fataawa, 28/138.
Shaykh Ibn Baaz said in „Ruling on celebrating the fifteenth of Sha‟baan‟: “Celebrating the night of the fifteenth of Sha‟baan (Laylat al-Nusf min Sha‟baan) by praying etc, or singling out this day for fasting, is a reprehensible bid‟ah (innovation) according to the majority of scholars, and there is no basis for this in sharee‟ah.” And he (may Allah have mercy on him) said: “There is no saheeh hadeeth concerning the night of the fifteenth of Sha‟baan (Laylat al-Nusf min Sha‟baan).
All the ahadith that have been narrated concerning that are mawdoo‟ (fabricated) and da‟eef (weak), and have no basis. There is nothing special about this night, and no recitation of Qur‟aan or prayer, whether alone or in congregation, is specified for this night. What some of the scholars have said about it being special is a weak opinion.
It is not permissible to single it out for any special actions. This is the correct view. And Allah is the Source of strength.” Fataawa Islamiyyah, 4/511.
iloveAllaah.com

நாகரீகமான முறையில் கருத்து பரிமாறுவது அனுமதிக்கப்பட்ட து அல் குர் ஆன் 16 :125, 4 :59 ( ஆக மடக்குவது, மாட்டுவது என்று அல்லாமல் உண்மையை உணர வேண்டும் எனும் எண்ணத்தில் தொடரந்தால் ) வாசகர்கள் யாரும் எரிச்சல் அடைய மாட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடருங்கள், அல்லாஹ் உதவி புரிவானாக.
Quote | Report to administrator
 

ஆரோக்கியமான சிந்தனைப் பரிமாற்றங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த இயலும். வாருங்கள். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


செய்திமடல் (Newsletter)

 

சத்தியமார்க்கம்.காம் தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி!

சமீப கருத்துக்கள்