சத்தியமார்க்கம்.காம்

சிந்தனைக்கு சில...! print Email
நற்சிந்தனைகள் - பொன்மொழிகள்
திங்கள், 20 ஆகஸ்டு 2007 15:50
  • பேசும்முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்; செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.

  • சிலவேளைகளில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

  • யாரிடம் கற்கிறோமோ அவரே நம் ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

  • நாம் மாறும்போது தானும் மாறி, நாம் தலையசைக்குபோது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை. அதற்கு நம் நிழலே போதும்.

  • நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்.

  • நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

  • நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

  • வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

  • சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

  • முழுமையானவன் இன்னும் பிறக்கவில்லை; இனியும் பிறக்க மாட்டான்.

  • பரபரத்து ஓடுவதில் பயனில்லை; உரிய நேரத்தில் புறப்படுங்கள்.

  • எல்லோரையும் நேசிப்பது சிரமம்தான்; ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

  • நல்லவர்களோடு நட்பாயிருங்கள்; நீங்களும் நல்லவனாகலாம்.

  • காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை; ஆனால் கோபத்தின் காரணம் பெரும்பாலும் நல்லதாய் இருப்பதில்லை.

  • விந்தையான சிலரைப் பார்க்கும்போது இவர்கள் ஏன் இப்படி? என்பதைவிட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்ளுங்கள்.

  • யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்.

  • ஆயிரம் முறை சிந்தியுங்கள்; ஒருமுறை முடிவெடுங்கள்.

  • அச்சம்தான் நம்மை அச்சுறுத்துகிறது. அச்சத்தை அப்புறப் படுத்துவோம்.

  • நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக எவருடனும் விவாதிப்பது சிறப்பாகும்.

  • உண்மை புறப்பட ஆரம்பிக்கும்முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

  • உண்மை தனியாகச் செல்லும்; பொய்க்குத்தான் துணை வேண்டும்

  • வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்  தத்துவங்களாக இருக்கட்டும்.

  • தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாறிப் போகிறான்.

  • உலகம் ஒரு நாடக மேடை; ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.

  • செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும்; அப்போதுதான் முன்னேற முடியும்.

  • அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

  • வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்றவனாவான்.

  • தோல்வி ஏற்படுவது, "அடுத்தச் செயலைக் கவனமாகச் செய்" என்பதற்கான எச்சரிக்கை.

  • பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயல வேண்டும்.

  • கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம்தான் கடினம்.

  • ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.

  • சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

  • ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.
Trackback(0)
கருத்துக்கள் (12)add comment
0
ghouse:
excellent. i appreciate writer's time.
1

December 30, 2008 19:52
0
ameer:
அஸ்ஸலாமு அலைக்கும்

நம் வாழ்க்கைக்குத் தேவையான நல்ல செய்தி
2

July 09, 2009 19:04
0
ansaf:
நல்லா இருக்கு.
3

April 12, 2010 10:38
0
bahurudeen:
முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்
4

May 18, 2010 10:54
0
priyaa:
nalla irukku
5

June 02, 2010 17:09
0
priyaa:
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

6

June 02, 2010 17:10
0
priyaa:
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு
7

June 02, 2010 17:11
0
M. J. SYED ABDULRAHMAN:
thanks
very good i have to do insa allah
manosakti
8

June 03, 2010 15:44
0
நிலாப்ரியன், வி.களத்தூர்.:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கோபத்தின் காரணம், அதிகமாக நன்மையான செயல்களினால் ஏற்படுவதில்லை. நூறு சதவீத உண்மை.
9

July 17, 2010 22:25
0
amir:
useful tips
10

December 17, 2010 17:49
0
thaj:
மிக்க நன்றி வாழ்கைக்கு மிக உதவியாக இருக்கும்
11

February 07, 2011 17:03
0
தயாதீசன்:
மற்றவர் உங்களை சமாதானப்படுத்துவதை விட நீங்கள் மற்றவரை சமாதானப்படுத்துங்கள்
12

March 07, 2011 15:04

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
You are here  : முகப்பு
Twitter
RSS
YouTube
English