சத்தியமார்க்கம்.காம்

இலவசம் வந்தது: இல்லம் தொலைந்தது! print Email
கதை-கவிதை - கவிதை
சனி, 11 ஆகஸ்டு 2007 12:12

{mosimage}வந்து சேர்ந்தது வீட்டுக்கு
வண்ணத் தொலைக்காட்சி
வைத்துப் பார்ப்பதற்கேற்ற
வாட்டமான இடம்
விவாதத்துக்கிடையில்
ஒருவழியாக முடிவானது.

கூடத்து மூலையில் கிடந்த
கிழவியின் படுக்கை
திண்ணைக்குப் போனது
கேட்க ஆளின்றி
பாட்டியின் கதைகளும், அனுபவமும்
பேச்சு மறந்து வீணாய்ப் போனது.

ஆட்டிவிடும்போது
தொலைக்காட்சிக்கு
அடிபட்டுவிடும் என்று
குழந்தையின் தொட்டிலும்
கழட்டப்பட்டது.

 

முன்வாசலில்,
கேபிள் கொடி படர்வதற்கு
இணங்காத
முருங்கையின் கிளை
முறிக்கப்பட்டது.

 

ஆறுமணி

தொடர் பார்ப்பதற்கு
ஊறு நேராதவாறு
ஐந்து மணிக்கெல்லாம்
கோழியின் கூடை கவிழ்க்கப்பட்டது.

 

தண்ணீர் வேண்டி கத்திப்பார்த்த
சினையாடு
கண்டு கொள்ள ஆளில்லாமல்
வேலிதாண்டி கர்ப்பம் கலைந்தது.

 

படாத

இடத்தில்
தொலைக்காட்சிக்குப்
பட்டுவிட்டால் வருமா எனப்பயந்து
பையனின் "ஒளிந்து பிடித்து'
விளையாட்டும்
வீட்டை விட்டு விரட்டப்பட்டது.

 

விளம்பர

இடைவேளைக்கிடையே
கொஞ்சம் விசாரிப்பு பின்பு
வெடுக்கென்று முகத்தை திருப்பி
"கோலங்கள்".

 

குடும்பத்தின் "கவனிப்பு" தாங்காமல்
சொல்லாமலே ஓடிப்போனான்
சொந்தக்காரன்.

 

தொலைக்காட்சிப் பூவில்
தேனெடுக்கத் தவித்து
சுருண்டு விழுந்த வண்டைப் பார்த்து
பரிதாபத்தோடு
'இச்சு' கொட்டியது பல்லி.

 

மனிதக்குரலற்று

வெறிச்சோடிய
வீதியைப் பார்த்து
பீதியுற்று அலறியது தெருநாய்.

 

கதவைத் திறந்து கொண்டு
வந்தவனின்
மனிதக்குரைப்பைக் கேட்டு
நடுங்கிப் போனது நாய்.

 

""ச்சீ... நல்ல நாடகம் ஓடுறப்ப
இங்க வந்தா கத்துற நாயே...!'' என
அடிக்கப் பாய்ந்து வந்த
குடும்பத்தலைவனின் விழிகளில்

 

இதற்கு முன் இப்படியொரு
வெறித்தனத்தைப்
பார்த்திராத தெருநாய்
உயிர்ப்பிழைத்தால் போதுமென்று ஊரை விட்டே ஓடியது.

 

கவிதை: துரை. சண்முகம்

Trackback(0)
கருத்துக்கள் (2)add comment
0
sidiq:
miga arumai
1

August 13, 2007 11:11
0
நண்பர்:
மனதை சுட்டெரிக்கும் உண்மைகள். நல்லதொரு கவிதை! இதைப் போன்ற இன்னொரு கவிதை: தொலை(ந்த)க் காட்சி(கள்) ----------------------- 1975: வேலை முடிந்து வரும் அப்பாவின் பை பறித்து இனிக்கும் மணக்கும் அன்பைத் தேடிய எங்களின் இளம்பிராயம் புகைப்படமாகிவிட்டது மனசுக்குள்ளே.. 2005: இப்போதும்.. வேலை முடிந்து வரும் என் பை பறிக்க வருவதில்லை மனைவியோ.. பிள்ளைகளோ..!. எதிரே.. கவர்ச்சியாய் சிரிக்கும் நீள்சதுரப்பெட்டியில் தொலைந்துவிட்ட காட்சிகள் அவை.
2

August 21, 2007 12:32

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:188 அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள். மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.

புதிய கருத்துகள்

kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...


M Muhammad : Assalamu Alaikum Dear Brother J Ameer Ali KSA // Dear editor, would you please send the complete ad...


Li_Brothers : கணக்குகள் சரி பார்க்கப்படும் அந்த மற...


j.ameer ali, ksa : Dear editor, would you please send the complete address of that Elders' orphanage,Rajagiri to my e-...


j.ameer ali, ksa : May Almighty Allah show our society the right path of living. Is there no Imam and Jumma prayers in ...


சுலைமான் : புறம் ஒரு சமூகத் தீமை. கூர்மையான வரிக...


Noor Huq : Thank u for the information. Starting college like this is very neccessary for the women living ar...


faizal : masha allah.Its very useful


mohamed iqbal : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ், ம...



You are here  : முகப்பு கவிதை கேளுங்கள் இலவசம் வந்தது: இல்லம் தொலைந்தது!
Twitter
RSS
YouTube
English