| ஹிஜாப் தரும் சுதந்திரம்! |
|
|
| கதை-கவிதை - கவிதை | |||
| திங்கள், 14 மே 2007 14:17 | |||
|
{mosimage}என்ன பார்க்கிறாய்?
நாகரீகம் அறியாதவளாக
அந்நிய மோகத்திற்கு அடிமைப்படவுமில்லை ஆண்களின் உணர்வை சீண்டவுமில்லை
நன்றி: திருமதி. ஜெஸிலா, துபாய்
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (5)
![]()
அல்ஹம்துலில்லாஹ்!
இதோ இஸ்லாம் பட்டைத்தீட்டித் தந்த புரட்சிப்பெண்.
யாரங்கே?
பர்தாவை வைத்து
பொல்லாங்கு கூறும்
பொல்லாத அற்பர்கள் எங்கே? எங்கே?
இதோ உங்கள்
அற்ப மனவக்கிரங்களுக்கு
இஸ்லாம் பர்தாவால் தீட்டிய
சவுக்கடி பதில்கள்.
இனியும் நீங்கள் கூறுவீர்களோ,
அரைகுறையுடன் இறுக்கமாக
அலைவது தான் சுதந்திரம்,
பெண்ணுரிமை என்று?
எனில், அற்பர்களே!
நாக்கை தொங்கவிட்டு
அலையுங்கள் அதற்காகவே - நாங்கள்
கற்களுடனும் நிற்கிறோம் அதற்காகவே!
1
May 16, 2007 17:16
ஒரு குழுமத்தில் இக்கவிதைக்கு ஒரு சகோதரர் அளித்த கருத்து கீழே.
சுப்ஹானல்லாஹ்..
சகோதரியின் கவிதையில் தான் எத்தனை பெருமிதம்..பிறப்பின் சிறப்பே இந்த ஹிஜாபில் இருப்பதாய் சந்தோசிக்கும் அந்த கம்பீர வார்த்தையைக் காணும் போதெல்லாம் மனம் சிலிர்க்கிறது.. அல்ஹம்துலில்லாஹ்..
மூடி மறைப்பது கூண்டுக்கிளியா..? முடியை மறைப்பது அநாகரிகமா..? காட்ட மறுப்பது திணிப்பா.?
சாட்டை வரிகள்.. நெஞ்சைத் தாக்கும் வரிகள்..!
ஹிஜாபின் பெருமையைப் படிக்கும் வேளையில் முன்பு பாலகுமாரன் கவிதை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.. பெண்கள் வெளியில் செல்லும் சூழ்நிலையும்..அவர்களின் வேதனையும் பற்றி பாலகுமாரன் எழுதியிருப்பார்.. அதனை பகிர்ந்து கொள்வது பொருத்தமாயிருக்கும் என்று நினைக்கிறேன்..
கொத்திக் கொண்டு போவான்டி
ஆப்பிள் சிவப்பு என் பேத்தி
பாட்டி சொல்வாள் திடத்தோடு
அம்மா விடுவாள் பெருமூச்சு
வெட்டிப் பொழுதைப் போக்காமல்
வேலை தேடேன் எங்கேனும்
அப்பா சொல்வார் தரை நோக்கி
அண்ணன் முறைப்பான் எனைப் பார்த்து
கொத்திக் கொண்டு போவதற்கு
சாதகப் பட்சி வரவில்லை
வெட்டிப் பொழுதின் விழவுக்கும்
வேலை வரலை இது நாளாய்
வேலைத் தேடி எங்கேனும்
வெளியே நடக்க தலைப்பட்டால்
ஈயாய்க் கண்கள் பலமொய்க்க
என்னை உணர்ந்தேன் தெருமலமாய்
(நன்றி: பாலகுமாரனின் கவிதை வரிகளுக்கு)
ஹிஜாப் நமக்கு எந்த அளவு கண்ணியமளிக்கிறது என உணர்ந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம். அல்ஹம்துலில்லாஹ்..
சகோதரிக்கு வாழ்த்துக்கள்.. அல்லாஹ் அவர்களின் ஈருலக வாழ்விலும் கம்பீரமான சந்தோசம் அருள்வானாக..
சகோதரர் இம்தியாஸ் இது போன்ற சிந்தனையாளர்களை வெளிக்கொணர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்..
வஸ்ஸலாம்.
.
இஸ்லாமிய சகோதரன் - ஜலால்..
2
May 17, 2007 15:45
குழுமத்தில் பரிமாறிய மற்றொரு சகோதரரின் கருத்து:
அன்பின் சகோதரி.. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சல்மாக்களுக்கும் தஸ்லீமாக்களுக்கும் சேர வேண்டிய கவிதை.. பாராட்டுக்கள்..
எது நமக்கு தொந்தரவாயிருக்கும் என்று கருதினோமோ அதையே இறைவனின்
திருப்பொருத்தத்திற்காக சந்தோஷமாக மாற்றிக் கொண்டோம் என்று
சொல்லாமல் சொன்ன கவிதை.. உங்கள் இனத்திடமிருந்தே வரும் இந்த
குரல்கள் மகிழ்வைத் தருகின்றன.. மறு மலர்ச்சி என்று சொல்லிக் கொண்டு
சீர்கெட்டு சேற்றில் கிடப்பவர்களுக்கு இந்த கவிதையில் நல்ல பதில் இருக்கிறது.
வாழ்த்துக்கள் மீண்டும் பாராட்டுக்கள் சகோதரி.. நிற்க..
தங்களின் துபாய் இரவில் பெண்களின் சுதந்திர நடமாட்டம் பொருள்
பற்றிய கவிதை சமீபத்தில் குங்குமம் இதழில் படித்தேன்.. தங்களது வலைப்பூவிலிருந்து
எடுத்து வண்ணக்காகிதத்தில் அச்சேற்றியிருந்தார்கள்..சந்தோஷமாக இருந்தது ..இந்த
சகோதரி எனக்கு மடலாற்குழுவில் நன்கு தெரிந்தவர் என எல்லோரிடமும் காட்டி
சின்னதாய் கர்வப்பட்டுக் கொண்டேன்.. முடிந்தால் அதையும் இங்கு பதியுங்கள்
சகோதரி..
நன்றி
3
May 19, 2007 15:03
கருத்து எழுதுக :
|