சத்தியமார்க்கம்.காம்

நண்பனின் நினைவில்.....! print Email
கதை-கவிதை - கவிதை
புதன், 04 ஏப்ரல் 2007 15:40

ஆயிரம் நண்பர்கள் என் வாழ்க்கைப்படகில்
அருகிலிருந்து பயணத்திருந்தாலும்
ஆதரவாக உடனிருந்து துடுப்பு
அதிகம் போட்டவன் நீ மட்டும்தான்!

நண்பா!

 

நீ ஈருலகத்தையும் கற்றுக்கொண்டிருந்தாய்

நான் உன்னை கற்றுக்கொண்டிருந்தேன்!

 

எனக்கு நண்பனாய், நடமாடும் நூலகமாய்

பல்கலைக்கழகமாய், பகுத்தறிவாளனாய்

பசிபோக்கும் அன்னையாய் இருந்தாய் - ஆனால்

வாழ்நாளை வளமாக பெற்றிருக்கவில்லையே!

 

அல்லாஹ் மிகப்பெரியவன் என கடைசியாக

சொல்லிவிட்டு நீ சென்ற பிறகு, என்னிடம்

ஞ்சியிருப்பது  நீ விட்டுச்சென்ற நினைவுகளும்

நான் கற்றுக்கொண்ட பாடங்களும்தான்!

 

படிப்பை பாதியிலேயே விட்டு விட்ட

பாதிப்பு மட்டுமல்ல எனக்கு!

பள்ளி சென்று, தோள் சேர்த்து முன்போல்

பரவசமுடன் தொழ எழும் ஆதங்கமும்தான்!

 

நண்பா! 

 

நீ ஈருலகத்தையும் கற்றுக்கொண்டிருந்தாய்

நான் உன்னைக் கற்றுக்கொண்டிருந்தேன்!

 

நான் கரையை தொலைத்திருந்த போது

கலங்கரை விளக்காய் இருந்த நீ, நான்

கரைவந்து சேரும்போது, கைபிடித்து

தோள் சேர்க்க கரைக்கு ஏன் வரவில்லை?

 

உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு

உன்னிடம் உள்ளதைக் கொடு என்று

எனக்கு உபதேசித்து விட்டு, கேளாமலேயே

எளியோருக்கு நீ அள்ளிக் கொடுத்தாயே!

 

நண்பா!

 

அல்லாஹ் மிகப்பெரியவன் என கடைசியாக

சொல்லிவிட்டு நீ சென்ற பிறகு, என்னிடம்

மிஞ்சியிருப்பது நீ விட்டுச்சென்ற நினைவுகளும்

நான் கற்றுக்கொண்ட பாடங்களும்தான்!

 

"உலகில் உள்ளவர்களில் என்னுடைய முஃமினான அடியானுக்கு மிகப் பிரியமான

நண்பன் ஒருவனின் உயிரை நான் பறித்துக் கொள்ளும்போது, அதனை எனக்காக

அவ்வடியான் பொறுமையாக  தாங்கிக் கொண்டிருந்தால்அத்தகைய விசுவாசமுடைய

அந்த அடியானுக்கு சுவனத்தை தவிர என்னிடத்தில் வேறு  சன்மானம் இல்லை"

 

பள்ளியில் ஹதீஸ் குத்ஸி அறிவிக்க கேட்டேன்!

பொறுமையாக இருக்கிறேன், நம் மறுமை

வெற்றிக்கான துஆவுடன் - நாம்

ஒன்றிணையும் மகிழ்ச்சியான அந்நாளுக்காக!

 

நண்பா! 

 

நீ ஈருலகத்தையும் கற்றுக்கொண்டிருந்தாய்

நான் உன்னை கற்றுக்கொண்டிருந்தேன்!!

 

அல்லாஹ் மிகப்பெரியவன் என கடைசியாக

சொல்லிவிட்டு நீ சென்ற பிறகு, என்னிடம்

மிஞ்சியிருப்பது நீ விட்டுச்சென்ற நினைவுகளும்

நான் கற்றுக் கொண்ட பாடங்களும் தான்!

 

ஆக்கம்: அபுஷிஃபா

Trackback(0)
கருத்துக்கள் (3)add comment
0
அபூநஜ்லா:
அபுஷிஃபா அவர்களே. நெருங்கிய நண்பரின் பிரிவை கவிதையாக வடித்திருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். தங்கள் உணர்வுகளை மென்மையாகவும், உள்ளத்தை தொடும் வகையிலும், வரம்பிற்குட்பட்டும் அழகாக வெளிப்படுத்தியுள்ள பாங்கு பாராட்டுக்குரியது.
1

April 05, 2007 13:19
0
haseena:
ungal kavithai very very good.neengal therivu seitha hading romba super.
2

May 05, 2007 11:58
0
bahurudeen:
அல்லாஹ் மிகப்பெரியவன் என கடைசியாக

சொல்லிவிட்டு நீ சென்ற பிறகு, என்னிடம்

மிஞ்சியிருப்பது நீ விட்டுச்சென்ற நினைவுகளும்

நான் கற்றுக் கொண்ட பாடங்களும் தான்!
3

May 18, 2010 11:01

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:183 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

புதிய கருத்துகள்

kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...


M Muhammad : Assalamu Alaikum Dear Brother J Ameer Ali KSA // Dear editor, would you please send the complete ad...


Li_Brothers : கணக்குகள் சரி பார்க்கப்படும் அந்த மற...


j.ameer ali, ksa : Dear editor, would you please send the complete address of that Elders' orphanage,Rajagiri to my e-...


j.ameer ali, ksa : May Almighty Allah show our society the right path of living. Is there no Imam and Jumma prayers in ...


சுலைமான் : புறம் ஒரு சமூகத் தீமை. கூர்மையான வரிக...


Noor Huq : Thank u for the information. Starting college like this is very neccessary for the women living ar...


faizal : masha allah.Its very useful


mohamed iqbal : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ், ம...



You are here  : முகப்பு கவிதை கேளுங்கள் நண்பனின் நினைவில்.....!
Twitter
RSS
YouTube
English