சத்தியமார்க்கம்.காம்

இன்னுமொரு நிஜம்! (கவிதை) print Email
கதை-கவிதை - கவிதை
வெள்ளி, 30 மார்ச் 2007 05:14

வளைகுடா நாட்டில்
வாழ்க்கை தேடல்களுக்காக
வாலிபங்கள் இங்கு
விலை பேசப்படுகின்றன!

இல்லை இல்லாள் அருகில்!
இணைவதோ தொலைபேசியில்!
இருதலை கொள்ளி எறும்பாய்

இதயங்களின் துடிப்பு இரட்டிப்பாய்!

தாயகப் பயணம் தந்தது தவிப்பை, மனத் துடிப்பை!
சுமந்து வந்தது நினைவுகளை, எதிர்பார்ப்புகளை!
செலவழித்தது வியர்வைத் துளிகளை!

கொண்டு செல்வது...?

சீரான "செல்வங்கள்" சில
சிறப்புடன் சேர்த்தோம்!
இத்தனை நாள் உழைப்பில் இல்லை,
இடையில் சென்ற விடுப்பில்!

செல்வங்கள் சிரிக்கின்றன,
"
சித்திரத்தில்" - புகைப்பட சித்திரத்தில்!
விசித்திரமாய் வியக்கின்றேன் - காணாமல்

விடுபட்ட செல்வங்களின் வளர்ச்சி கண்டு!

வலிக்கின்றன "சித்திரம்" தடவும் என்
விரல்கள் - காலம் காலமாய்
விசும்பும்
நிழலோடு மட்டுமே பழகிய
விழிகள் இறைஞ்சுவது நிஜத்தை!

வரும் ஒரு நாள்!
வாழ்க்கையை வாழ்வதற்கு!
வசப்படாத மனம்
வசந்தத்திற்கு ஏங்குகிறது!

வளைகுடா நாட்டில்
வாழ்க்கை தேடல்களுக்காக
வாலிபங்கள் இங்கு
விலை பேசப்படுகின்றன!

தேடுகின்ற மனதின் தேம்பல்களுக்கு
தோதாய் மகத்தான மருந்தொன்றை
தேடியலைந்து  பெற்றுக் கொண்டோம்
திருமறையாம் குர்ஆனை ஆய்ந்து பார்ப்பதில்!

இம்மை வாழ்க்கையை மறந்து - மனம்
இலேசாக, வாரத்தில் சில மணித்துளிகளை

செவிசாய்க்கிறோம் நபிமொழிக்கு - சிந்தனையை

சீராக்க, நபிவழியை வேராக்க - "உண்மையான வாழ்க்கைக்கு"!

கவிதை: உம்மு ஹிபா

Trackback(0)
கருத்துக்கள் (8)add comment
0
muslimeen:
BISMILLAHIRRAHUMANIRRAHEEM வளைகுடா நாடுகளில் வேலைத்தேடிச்செல்லும் ஆயிரக்கணக்கான திருமணமான இளைஞர்களின் மனக்குமறலே இக்கவிதை.
1

March 31, 2007 14:49
0
muslimeen:
BISMILLAHIRRAHUMANIRRAHEEM வளைகுடா நாடுகளில் வேலைத்தேடிச்செல்லும் ஆயிரக்கணக்கான திருமணமான இளைஞர்களின் மனக்குமறலே இக்கவிதை.
2

March 31, 2007 15:02
0
அபூ:
//வளைகுடா நாடுகளில் வேலைத்தேடிச்செல்லும் ஆயிரக்கணக்கான திருமணமான இளைஞர்களின் மனக்குமறலே இக்கவிதை.// ஆமா! ஆமா! குடும்பத்தை பிரிந்து கொடூரமாக பாதிக்கப்பட்டவன்.
3

March 31, 2007 15:47
0
ரசாக்:
கீறிய மனதில் வடியும் இரத்தம்.
4

March 31, 2007 15:49
0
மு முஹம்மது.:
அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான கவிதையின் மூலம் வெளிநாடு வாழ் மக்களின் வாழ்க்கை குமுறல்களை மட்டும் வெளி படுத்தாமல் அதற்குரிய மருந்தையும் அடையாளம் காட்டப்பட்டுள்ளது //தேடுகின்ற மனதின் தேம்பல்களுக்கு தோதாய் மகத்தான மருந்தொன்றை தேடியலைந்து பெற்றுக் கொண்டோம் திருமறையாம் குர்ஆனை ஆய்ந்து பார்ப்பதில்! இம்மை வாழ்க்கையை மறந்து - மனம் இலேசாக, வாரத்தில் சில மணித்துளிகளை செவிசாய்க்கிறோம் நபிமொழிக்கு - சிந்தனையை சீராக்க, நபிவழியை வேராக்க - 'உண்மையான வாழ்க்கைக்கு// காயமடைந்த கீரப்பட்ட (மன) ரணங்களுக்கு (//கீறிய மனதில் வடியும் இரத்தம்//)அதன் மூலம் குணமளிக்க அம்மருந்தை தேடி பயன்படுத்த அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன் மு முஹம்மது.
5

April 01, 2007 05:51
0
kalam shaick abdulkader:
The poet has revealed what we are here facing everyday!
6

November 21, 2007 19:57
0
balachander:
துபை வாழ்வு வரமா?சாபமா? எனக்கு புரியவில்லை.தங்களின் கவிதை அனுபவ பூர்வமான உண்மை.சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா?
7

June 08, 2009 09:15
0
Kavianban KALAM, Adirampattinam:
பாலையான வாழ்க்கையைப் பசுஞ்சோலையாய் ஆக்கவே பாலைவன நாட்டுக்கே பறந்து வந்த பறவைகள் நாங்கள்... இச்சையை மறந்தோம்; இன்பத் தாய்நாட்டை துறந்தோம்; பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்; பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்... இருளகற்றும் மெழுகுவர்த்தியானோம்; இனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்; 'பொருளிலார்க்கு இவ்வுலகில்லை' பொருள்பதிந்த திருக்குறளுக்கு பதவுரை ஆனோம்; 'இல்லானை இல்லாலும் வேண்டாள்; ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்;அவன் சொல் செல்லாமல் போய்விடும்' என்றாள் ஔவ்வையார் அன்றே...... மூதாட்டியின் மூதுரைக்கும் முழுமையான விரிவுரை நாங்களே... பாதாளம் வரை பாயும் பணமே பாருலகை இயக்குமென்று புரிந்தது மனமே -'kavianban'KALAM, Adirmapattinam 00971-50-8351499 எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்
8

June 28, 2009 18:47

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:21 மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சம். தூய்மையும்) உடையோராகலாம்.

புதிய கருத்துகள்

kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...


M Muhammad : Assalamu Alaikum Dear Brother J Ameer Ali KSA // Dear editor, would you please send the complete ad...


Li_Brothers : கணக்குகள் சரி பார்க்கப்படும் அந்த மற...


j.ameer ali, ksa : Dear editor, would you please send the complete address of that Elders' orphanage,Rajagiri to my e-...


j.ameer ali, ksa : May Almighty Allah show our society the right path of living. Is there no Imam and Jumma prayers in ...


சுலைமான் : புறம் ஒரு சமூகத் தீமை. கூர்மையான வரிக...


Noor Huq : Thank u for the information. Starting college like this is very neccessary for the women living ar...


faizal : masha allah.Its very useful


mohamed iqbal : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ், ம...



You are here  : முகப்பு கவிதை கேளுங்கள் இன்னுமொரு நிஜம்! (கவிதை)
Twitter
RSS
YouTube
English