சத்தியமார்க்கம்.காம்

கனவில் கிடைக்கும் நீதி! print Email
கதை-கவிதை - கவிதை
புதன், 14 மார்ச் 2007 16:54

நீதி தேடும் இதயங்களே!

உறக்கம் உங்களைத் தேடி வராது!

 

உறங்கிக் கொண்டிருக்கும் சதாமின் மண்ணறையில்

உருட்டியவனின் தலை அர்ப்பணிக்கும் வரை!

 

இறுக்கமான இதயத்துடன் - தினமும்

இரவை நான் கழிக்கின்றேன்!

 

விடிவதற்குள் நீதி தேடி

விம்முகிறதென் கனத்த இதயம்!

 

விடிந்தால் அநியாயத்தின் பிறப்பிடம்

புஷ் இல்லா புது உலகம்!

 

நீதியின் மண்ணில் புதுப்பிறவி துளிர்க்க

நிதமும் ஏங்கும் பொல்லா மனம்!

 

இந்த ஏக்கத்துடன் மூடுகிறது என்

இமைகள் இரண்டும்!

 

***********************************

தட்டப்படும் கதவுச்சத்தம் கேட்டு

தடுமாறி எழுந்து நின்றேன்!

 

வீட்டிற்கு வெளியே

உலக மக்களின் ஒன்றிணைந்த ஆரவாரம்!

 

கைகளிலும் கால்களிலும் விலங்கு பூட்டி

இழுத்து வரப்படும் ஸாட்டிலைட் உலக பரோவா!

 

உற்று நோக்கிய பின்னரே

உணர முடிந்தது - அது பரோவா அல்ல புஷ் என்று!

 

ஓங்கியொலிக்கும் குரல்கள்!

ஒன்றுபட்டிருக்கும் மனிதர்கள்!

 

" இப்பாதகனின் கழுத்திற்குத் தூக்குக்கயிற்றைச்

சார்த்துபவன் யார்?"

 

என் இல்லத்திற்குள் ஓடுகின்றேன் - என்

இறைவனைத் தியானிக்க!

 

முட்டி மடக்கி கர்த்தரின் முன்

கை கூப்பி வேண்டுகிறேன்!

 

ஏகமான கரவொலி என் செவியைத் தொட்டது!

எழுந்து நின்று, பைபிளைத் திறக்கிறேன்!

 

என் விழியில் விழுந்ததோ

யோவான் - அத்தியாயம் 8!

 

உங்களில் பாவம் செய்யாதவர் யாரோ

முதலில் அவர் இவளை (வேசியை) கல்லெறியட்டும்...!

 

உலகமெல்லாம் பிணக்குவியல்கள்

ஊடகமெல்லாம் பொய்ப் பிரச்சாரங்கள் என்று

 

இன்னல்கள் பலருக்குத் தந்திட்ட

இரத்தக்கறைகள் தோய்ந்திட்ட

 

பாவங்கள் படிந்திருக்கும் தம் முதுகைப்

பார்த்திராமல் பிறர் செயலைக் கண்டிக்க

 

புஷ்ஷூக்கு உரிமையில்லை!

புனித பைபிளிலும் இடமில்லை!

 

பைபிளைத் தாங்கிப் பிடித்து ஓடுகிறேன்!

பரோவா புஷ்ஷின் கழுத்தில் தூக்குக் கயிற்றை பூட்டுகிறேன்!

 

************************************

கூவும் சேவலின் கூக்குரலோடு - தினமும்

கலைகிறது என் அரை உறக்கம்!

 

பொழுது விடிகிறது!

புதுநாள் மலர்கிறது!

 

துடித்திருக்கும் என் இதயத்திற்கு - தினமும்

கனவிலே நீதி கிடைக்கிறது!

 

நீதி தேடும் இதயங்களே!

உறக்கம் உங்களைத் தேடி வராது!

 

உறங்கிக் கொண்டிருக்கும் சதாமின் மண்ணறையில்

உருட்டியவனின் தலை அர்ப்பணிக்கும் வரை!

 

கவிதை: அருள்தாஸ்

Trackback(0)
கருத்துக்கள் (2)add comment
0
இனியவன்:
சிலிர்க்கவைக்கும் சிந்தனைகள் கவிதை வரிகளாக வெளிப்பட்டு இருக்கிறது. தாமதமான பதிவு போல் தோன்றினாலும் வரிகளின் யதார்த்தம் மனதை உலுக்குகிறது. கவிஞர் அருள்தாஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள்!
1

March 15, 2007 08:12
0
Iqbal Masthan:
In the Name of Allah: Very Fantastic, keep it up Mr. Arul Dass.
2

March 18, 2007 15:13

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:103 அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்ககும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும். இதனை அவர்கள் அறிய வேண்டாமா?

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு கவிதை கேளுங்கள் கனவில் கிடைக்கும் நீதி!
Twitter
RSS
YouTube
English