| பொன்.....! |
|
|
| கதை-கவிதை - கவிதை | |||
| திங்கள், 19 பிப்ரவரி 2007 18:04 | |||
|
முத்திரை பசும்பொன் மட்டுமா உலகில் பொன்? இல்லை இல்லை..... வெள்ளி நிலா ஒளியும் பொன்னே! விடியும்வரை வற்றாத ஜீவ நதிகளும் பொன்னே! வரு மழையும் பொன்னே! வள்ளலாய் நின்று வறியோர்க்கு வாரித்தரும் கரங்களும் பொன்னே! மழலைகளின் கள்ளமிலா சிரிப்பொலியும் பொன்னே! விதவைக்கு வாழ்வளிக்கும் விவேக ஆடவரும் பொன்னே! மதவெறி கொல்லுகின்ற மக்களும் மாசறு பொன்னே! பெண் சிசுவை கொல்லாத பெற்றோரும் உலகில் பொன்னே! உவமையாய் திகழ்ந்து உண்மை பேசுகின்ற உத்தமர்கள் நாட்டின் பொன்னே! கர்ம வீரனுக்கு காலமும் பொன்னே! அவன் செய்யும் கட்டுப்பாட்டில் உள்ள நல்ல குடும்பமும் களிப்புறு பொன்னே! இறையோன் நமக்களித்த இஸ்லாமும் பொன்னே! வல்லோன் அவன் படைத்த இயற்கை அனைத்தும் பொன்னே! இதமான தென்றலும் பொன்னே! ஆக்கம்: அபுயாசின்
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (5)
![]()
பொன்னிலும் இத்தனை வகையுண்டா? மனிதர்களாகிய நாம் தான் குறிப்பிட்ட ஒன்றை மட்டும் பொன் என்கிறோமோ?
3
February 20, 2007 06:07
கருத்து எழுதுக :
|