| சரித்திரம் சரிகிறதே! (கவிதை) |
|
|
| கதை-கவிதை - கவிதை | |||
| புதன், 20 டிசம்பர் 2006 13:42 | |||
|
காந்தி பிறந்தமண் இரத்தக்கறை படியக் கிடக்கிறதே! சாந்தி தவழ்ந்த மண்ணின் சரித்திரம் சரிகிறதே!
தியாகத் தலைமுறையை தீப்பந்தம் மறைக்கிறதே! அபாயம் நீங்கி - நல்ல அமைதியை மனம் நாடிடுதே!
கடவுளின் பெயராலே கலகங்கள் நடக்கிறதே! மதவெறி தலைதூக்கி மனிதநேயத்தை அழிக்கிறதே! விஞ்ஞான இரகசியங்கள் விலைபேசப் படுகிறதே! மெய்ஞான மடங்களிலே - தேசம் மண்டியிட்டுக் கிடக்கிறதே!
அரசியல் கழிசடைகளால் - நாடு அசிங்கமாகிப் போனதே! சரித்திரச் சின்னங்கள் சரிக்கப்பட்டு கொண்டிருக்கிறதே! விருப்பு வீழ்கிறதே! வெறுப்பு வளர்கிறதே! அகிம்சை தளர்கிறதே! இம்சை துளிர்க்கிறதே!
ஆக்கம்: இனியவன் ஹாஜி முஹம்மது
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (1)
![]() கருத்து எழுதுக :
|