"குர் ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள்" எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி அவ்ன் அன்ஸார் இஸ்லாஹி.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிறப்புக்கு முன்பிருந்த அரேபியாவில் ஆணாதிக்கமும் அராஜகமும் அநாகரீகமான செயல்பாடுகளும் தலைவிரித்தாடிய அன்றைய சூழலில், அல்லாஹ் தனது நேசர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூலமாக மானுட வர்க்கம் நேர்வழி பெறவும் உலகில் சாந்தி, சமத்துவ நல்லொழுக்கம் நிலைபெற்றிடவும் அருளப்பட்ட அற்புதம்தான் அல்குர்ஆன்.
நிற வேற்றுமை, குலப்பெருமை, மொழிப் பெருமை, பொருளாதார உயர்வு, இனப்பெருமை போன்ற பாகுபாடுகளை அடியோடு அறுத்தெறிந்து அழகிய சமுதாயமாய் பரஸ்பரம் சகிப்புத்தன்மை, மனிதநேயம் மற்றும் உயர்பண்புகளுடைய சமுதாயமாய் மாற்றியது இந்த அருள்மறையாம் அல்குர்ஆன். (திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாய மாற்றங்களை மேலும் வாசிக்க: http://www.satyamargam.com/877)
Comments:
கருத்துக்கள்
RSS feed for comments to this post