சத்தியமார்க்கம்.காம்

ஊன தினம்! print Email
கதை-கவிதை - கவிதை
ஞாயிறு, 12 பிப்ரவரி 2012 11:37

ரண்டாவது மாதத்தின்
இரண்டுங்கெட்டான் தினம்...
காதலர் தினம் - ஒரு
கலாச்சார ரணம்!

வெள்ளைக்காரன் கண்டெடுத்த

கருப்புக்கறை தினம்!
பண்பாடு கலாச்சாரம்
புண்படும் விழாக்காலம்!


காமுகர் மனம்
கண்டெடுத்த தினம்...
வக்கிரத்தின் வடிகாலாய்
வந்துசேர்ந்த தினம்!

கலவியென்று களித்தது

கற்காலக் காதல்...
குளவியெனக் கொட்டுவது
தற்காலக் காதல்!

வெள்ளையனை வெளியேற்றி -அவன்

கொள்கைதனில் புரையோடி
கலாச்சாரக் காதல்கூட
விபச்சாரம் ஆகியதே!

அன்னைக்கென்றொரு தினம்

அப்பனுக்கென்றொரு தினம்
நண்பனுக்கென்றொரு தினம்
நல் உழைப்பாளிக்கென்றொரு தினம்

இறைவன் படைப்பிலே

எத்தினமும் நல்தினம்,
இவர்கள் யார் இவ்வுலகில்
இஷ்டம்போல் பகுத்துரைக்க?

காதலர்தினம் எனும்

கண்றாவிப் புறக்கணிப்போம்,
காதலென்றால் காமமில்லை
அன்பென்று அறிய வைப்போம்!

இந்தியனுக் கென்றொரு

இன்றியமையாப் பொறுப்புண்டு
இளைய சமுதாயத்தின்
இதய ஊனம் களைய வேண்டும்!

காதலர் தினம்...

கன்னியர்க்குக் கண்ணிவெடி
காளையர்க்குக் கள்ளுகுடி
பெற்றோருக்குப் பேரிடி
பொதுப்பாதையில் ஒரு புதைகுழி!

 

- சபீர்

<பிப்ரவரி 14 - ஆபாச தினம்>
Trackback(0)
கருத்துக்கள் (7)add comment
0
Zakir:
//இறைவன் படைப்பிலே
எத்தினமும் நல்தினம்,
இவர்கள் யார் இவ்வுலகில்
இஷ்டம்போல் பகுத்துரைக்க?//

காதலர் தினம்...
கன்னியர்க்குக் கண்ணிவெடி
காளையர்க்குக் கள்ளுகுடி
பெற்றோருக்குப் பேரிடி
பொதுப்பாதையில் ஒரு புதைகுழி! //

Suuper

1

February 13, 2012 07:12
0
அபு நிஹான்:
காதலர் தினம் சமுதாயத்தினை கெடுக்க வந்த கலாச்சாரம் என்று இந்த கவிதை நிறுத்துவதோடு இறைவன் படைத்தவற்றில் எல்லா தினமும் நல்ல தினமே அதனால் தகப்பன், தாய்க்கென்று தனித்தனியாக கொண்டாட தினம் இல்லை என்றும் புரிய வைத்த் சகோ சபீர் அவர்களுக்கு வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக.
2

February 13, 2012 07:22
0
apuraihan:
///இறைவன் படைப்பிலே
எத்தினமும் நல்தினம்,
இவர்கள் யார் இவ்வுலகில்
இஷ்டம்போல் பகுத்துரைக்க?///

அன்பு சகோ.சபீர்...
எத்தினத்தினையும் பகுத்துரைக்க கூடாது என்றால் அதில் மீலாது விழாக்களும் அடங்குமே இதை யார் கேட்பது?
3

February 13, 2012 21:15
0
S.S.K.:
Dear apuraihan :அன்பு சகோதரர் அபுரய்ஹான்

//அன்பு சகோ.சபீர்...
எத்தினத்தினையும் பகுத்துரைக்க கூடாது என்றால் அதில் மீலாது விழாக்களும் அடங்குமே இதை யார் கேட்பது? //

இதற்கு பதில் அறிய இந்த ஆக்கத்தை படிக்கவும் ....... http://www.satyamargam.com/470


4

February 14, 2012 08:30
0
apuraihan:
நல்லது சகோதரரே நான் ஏற்கனவே வாசித்துவிட்டேன். நமக்கு அமல்கள் எல்லாம் ஏட்டு சுரைக்காயகவே இருக்கிறது. மேலும் அந்த கட்டுரையில் ஜெஸீலா துபையில் மிலாது விழா இஸ்லாத்தை அறியவே என்கிற சப்பை கட்டு பித்ஹத் கொண்டுபோய் விடுகிறது.

அதாவது புனிதம்/ தேவை என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத ஒன்றுக்கு கொஞ்சம் வளைந்து கொடுக்கிறோம் இது நல்லதா?
5

February 14, 2012 20:19
0
abumuhai:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

சகோதரர் apuraihan

மார்க்க அமல்கள் ஏட்டுச் சுரக்காயகவேயுள்ளது என்கிற கருத்தைத் தவிர்க்கவும். அமல்களில் சிலர் அலட்சியமாக இருந்தாலும் அது கூட அறியாமையினால் இருக்கலாம்.

மார்க்கம் குறித்தான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அனைவருக்கும் சுதந்திரம் வழங்கப்படவேண்டும். அதன் அடிபடையில் மறுமொழியின் கருத்துகளுக்கு எதிர்கருத்து இருக்குமாயின் அதை சம்பந்தப்பட்ட பதிவுகளில் பதிவு செய்யுங்களேன்.
6

February 15, 2012 07:54
0
sabeer abushahruk:
சகோதரர் அபு ரைஹான்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்தப் பதிவை வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி.

நாட்களின் நெற்றியில் நல்லநாள் கெட்டநாள் என்றோ தந்தையர்தினம் அன்னையர்தினம் என்றோ லேபில் ஒட்டும் கலாச்சாரம் ஒரு சமுதாயச் சீரழிவின் அடையாளமே. அதிலும் குறிப்பாக காமத்தைக் கொண்டாட காதல் எனும் முகமூடி இட்டு தனித்தினமாகக் கொண்டாடுவதைச் சாடியும் எதிர்த்துமே இதை எழுதினேன்.

மனத்தின் நோக்கங்களை மறைதந்தவனே அறிவான். இதை வாசித்து வழிகேட்டில் உழன்ற ஒரு ஜோடியாவது வருந்தினாலே அது திருந்தும் என்பதுதான் ஆறுதல்.

இதில் மீலாது நபி எங்கு வருகிறது? (என்னைப்பொருத்தவரை என் கண்மணி நபி பிறந்தநாள் ஒரு அருட்கொடை. கொண்டாடச் சொல்லுது மனிதனாகிய என் மனோ இச்சை, தடுக்கப்பட்டது என்பதை ஈமான் ஏற்றதால் கொண்டாடுவதில்லை. மற்றபடி, குற்றம் கண்டுபிடிக்கும் அளவுக்குக் கொடிய நாளா அது? விந்தை!)
7

February 15, 2012 17:23

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:114 இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.

புதிய கருத்துகள்

jasminamjad : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் Indha pottiyil eppadi kalandhu kolvadhu......


sasma : assalamu alaikum thank u


sasma : this is very useful for all.....


Ruknudeen : கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப...


abinaya : This not that much clear for students make it very clear. don't confuse them.


abdul hameed : சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி...


syeed : subahanaala


ummu hudhaifa : மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற...


Poovai Ansary : மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த...


Abdul Azees from trichy : அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ...


mbm sajeeth : jazakallaaku kair


Haja : In the name of allah. Its good attempt. This article must send it all our people. We have to united...


நல்லடியார் : அன்பு சகோ.அப்துல் அஜீஸ், ஒப்பீட்டிற்...


abdul azeez : வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே...


நல்லடியார் : //தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த...


karthikeyan : [i]very useful medical tips.Thankyou.



You are here  : முகப்பு கவிதை கேளுங்கள் ஊன தினம்!
Twitter
RSS
YouTube
English