முகப்பு

தொழு...!

ரு வறை தொடங்கி
கல் லறை அடங்கி
முடி வுறும் நாள்வரை...
இறைவனைத் தொழு!


எத்தனை அழகு
என்னென்ன நிகழ்வு
எல்லாம் உனக்களித்த
ஏகனைத் தொழு!

காணவும் களிக்கவும்

கண்களால் ரசிக்கவும்
பார்வையைத் தந்தவனை
நேர்மையாய்த் தொழு!

கேட்கவும் கிறங்கவும்

கேட்டதை உணரவும்
ஒலி புரியச் செவி தந்த
வலியோனைத் தொழு!

சாப்பிடவும் கூப்பிடவும்

சண்டையின்றிப் பேசிடவும்
நாவும் நல் வாயும் தந்த
நாயன் தனைத் தொழு!

சுவாசிக்கும் நாசியாகவும்

முகர்ந்தறிய மூக்காகவும்
அமைத்தொரு புலன் தந்த
ஆண்டவனைத் தொழு!

கையும் காலும்

கச்சித உடலும்
வாகாய்த் தந்த
வல்லோனைத் தொழு!

முடிந்த இரவை முழுமையாக்கி

விடியும் முன்பு தொழு...
புதிய பூவாய்ப் பூரிப்போடு
மதிய நேரம் தொழு...

மாலை மகுடம் காத்திருக்கு

மாலை வேளை தொழு...
மாலை மயங்கி இரவு தொடும்
வேளையிலும் தொழு...

இன்று நன்றாய் முற்றுப்பெற

இரவு நேரம் தொழு!
காலநேரம் கடக்குமுன்
கவனமாகத் தொழு!

கடமையுணர்ந்து தொழு!

கண்மணி நபி
கற்பித்தவாறு
கவனமுடன் தொழு!

உறுதியாகத் தொழு

உபரியையும் தொழு!
அறுதியாய்ச் சுவனம்
அடைந்திடத் தொழு

உன்

உடல் கிடத்தி
ஊர் தொழு முன்-
உயிரோடு நீ...
தொழு!

 


- சபீர்

Comments:

கருத்துக்கள்   

 
அபுஇபுறாஹிம்
0 #1 அபுஇபுறாஹிம் 2011-06-17 12:43
முன்பு அதிரைப்பட்டினத் தில் பள்ளிவாசல் வாசலில் வைத்திருந்தார்க ள் ஒரு பச்சை நிறப் பலகை "உங்களுக்கு தொழுகை வைக்கப்படும் முன்னர் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்" என்று...

//உன்
உடல் கிடத்தி
ஊர் தொழு முன்-
உயிரோடு நீ...
தொழு!//

கவியின் கருவே இந்த கடைசி வரிகள் இதனை ஒவ்வொருவரும் தன்நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்..

அழகுற அறிவுறுத்தப்பட கவிதை...
Quote | Report to administrator
 
 
சஃபி
0 #2 சஃபி 2011-06-17 15:38
Quote:
உன்
உடல் கிடத்தி
ஊர் தொழு முன்-
உயிரோடு நீ...
தொழு!
அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ளத் தக்க அற்புதமான வரிகள்.
Quote | Report to administrator
 
 
shameed
0 #3 shameed 2011-06-17 18:03
முன்பு சபீர் எங்களுக்கு நண்பராக இருந்தார் தற்போது எங்களுக்கு நண்பரும் + கவிங்கருமாக பதவி உயர்வு பெற்றுள்ளார்
Quote | Report to administrator
 
 
abu hudhaifa
0 #4 abu hudhaifa 2011-06-18 14:13
மாஷா அல்லாஹ் அற்புதமான எழுத்து!அட்டகாச மான வார்த்தைகள்!ஆணி அடித்தாற்போல் சுளீர் என்று இல்லாமல் இதயத்தை வருடும் தென்றல் காற்றாய் வரிகள்!சிறு பிள்ளைக்கும் இலகுவாக புரியும் சீரிய நடை!படைத்தோனின் ஆற்றலையும்,அருட ்கொடைகளையும் இப்படி சுலபமாக கூட சொல்ல முடியுமா?வாழ்த் துக்கள்.
Quote | Report to administrator
 
 
jazeela jalaldeen, silmiyapura, srilanka
0 #5 jazeela jalaldeen, silmiyapura, srilanka 2011-06-19 07:00
அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுல்லாஹி வபரகாதுஹு
உங்கள் இணையத்தளம் பகிர்ந்து கொள்ளும் அனைத்து விடையங்களும் மிகவும் பயனாகவும்
சிறப்பாகவும் இருப்பதுடன் அறிவை விருத்தி செய்வதாகவும் அமையப் பெற்றுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்
உங்கள் பணி மென்மேலும் வளர அல்லாஹ் அருளல் புரிவானாக
ஆமின்
எதிர் வரும் புனித ரமலானை முன்னிட்டு உங்கள் இணையத்தளத்தில் தப்சீர் இப்னு கசீர் தமிழில் இடப்பட்டால் மிகவுமே பயனாக இருக்கும்
Quote | Report to administrator
 
 
fathima
0 #6 fathima 2011-06-20 06:45
அழகான,உரமான உண்மைக் கவிதை.மறு பதிப்பு செய்துள்ளேன்.சப ீர் நானாவுக்கும்,சத ்தியமார்க்கம் குழுவினருக்கும் நன்றி.
Quote | Report to administrator
 
 
sabeer
0 #7 sabeer 2011-06-20 19:49
சந்தோஷமாக இருக்கிறது. தொழச்சொன்னதை இந்தளவு விரும்பி வாசித்தது. மென்மேலும் சந்தோஷமாக இருக்கும்; வாசித்தபடி வாழ விளைந்தால்.
நன்றி சமாவின் வாசகர்களே!
அல்ஹம்துலில்லாஹ்!
Quote | Report to administrator
 
 
ஷாகுல் பாஷா
0 #8 ஷாகுல் பாஷா 2011-06-21 13:35
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இந்த கவிதை நன்றாக இருக்கின்றது ஆனால் இதில் சிறு மாற்றம் தேவை படுகிறது.

கரு வறை தொடங்கி என்பதற்கு பதிலாக 10 வயது தொடங்கி என்று இருந்தால் நன்றாக

இருக்கும்
Quote | Report to administrator
 
 
sathak
0 #9 sathak 2011-06-30 23:55
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை அடைந்த(தும் தொழமலிருந்தால்) அதற்காக அவர்களை அடியுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷூஜபு.
நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்
Quote | Report to administrator
 
 
raja
0 #10 raja 2011-07-09 21:26
yannnal chiya midiyavillyah!. O Allah help me to do it it time.
Quote | Report to administrator
 

ஆரோக்கியமான சிந்தனைப் பரிமாற்றங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த இயலும். வாருங்கள். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


செய்திமடல் (Newsletter)

 

சத்தியமார்க்கம்.காம் தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி!

சமீப கருத்துக்கள்