| திசை மாறும் இயக்கங்கள் |
|
|
| இஸ்லாம் - இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள் | |||
| செவ்வாய், 11 ஜூலை 2006 14:23 | |||
|
இஸ்லாமிய இயக்கங்களின் தோற்றம் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் விட்டுச்சென்ற நற்பணியை தொடர்வதற்கே ஆகும். நபியவர்கள் இறைக்கட்டளைகளை பல சிரமங்களுக்கு முகம் கொடுத்தும், சில சறுக்கல்களின் போது இறைவனின் கண்டனத்திற்கும் ஆளாகி நன்னடத்தைகளின் சிகரமாய் விளங்கி இப்பெரும் பணியை இனிதே நிறைவு செய்தார்கள். அவர்கள் வழி வந்த சத்திய ஸஹாபாக்களின் காலங்களுக்குப் பின் வந்தவர்களிடம் ஏற்பட்ட ஒழுக்க வீழ்ச்சி மற்றும் கொள்கை புரட்டல்களின் காரணமாகவும்,ஆடம்பர உலக ஆசை காரணமாகவும் இஸ்லாத்தின் அடிப்படைகளை விளங்க மறுத்து, மனம் போன போக்கில் ஆட்சி புரிந்ததின் விளைவாக இப்பணி நலிவடைந்து திசைமாறி சென்றது. உலகெங்கும் பரவி வாழ்ந்த முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாம் பற்றிய விளக்கம் திரிபடைந்து, உண்மையான இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளுக்கு மாறாக அவர்களின் நடைமுறைகள் அமைந்தன. இது போன்ற ஒரு வாய்ப்பிற்காகக் காத்திருந்த இஸ்லாத்தின் எதிரிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான அவதூறுகளை முனைப்புடன் பரப்பத் தொடங்கினர். இதனால் பலதரப்பட்ட மக்களுக்கு மத்தியில் வாழ்ந்த இஸ்லாமியப் பெயர்தாங்கிகளின் நடைமுறைகளே இஸ்லாம் என மற்ற மதத்தினரால் கருதப்பட்டது. இதனைச் சீர் செய்வதற்குக் காலத்திற்கு காலம் பல அறிஞர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் தோன்றினார்கள். அவர்கள் பிறந்த மண்ணின் சூழலுக்கேற்ப முஸ்லிம்களின் மீள் எழுச்சிக்காகப் பல திட்டங்களை முன்மொழிந்து சென்றார்கள்.அவற்றின் அடிப்படையில் அமையப்பெற்றவைதான் இன்று நாம் காணும் இயக்கங்கள். இறை திருப்திக்காக தொண்டாற்றும் இயக்கங்கள் பல சோதனைகளுக்கிடையே வாய்மையுடனும், தூய்மையுடனும் பணி செய்யும் நிலையில் உள்ளன. இப்பணி இருவகையாக அமைகின்றது. முதலாவதாக இஸ்லாத்தை பற்றி அறியாத அல்லது தவறாக விளங்கி வைத்திருக்கிற பிற சமய மக்களிடம் தூய இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி உண்மையான வெற்றியின் பக்கம் அழைப்பது. அடுத்ததாக முஸ்லிம் பெற்றோர்க்குப் பிறந்ததாலும், பெயரில் மட்டும் இஸ்லாமிய அடையாளத்தை கொண்டிருப்பவர்களிடமும், மேலும் தவறான வழிகாட்டுதல்களினால் பிற கலாச்சாரத்தோடு கலந்துக்கொண்டிருக்கும் முஸ்லிம்களை, நபிகளாரின் வழிமுறைகளை பின்பற்றுவதன் அவசியத்தை எடுத்துச்சொல்வதாக இப்பணி அமைய வேண்டும். இப்படித் திசை மாறிக் கொண்டிருக்கும் இயக்கங்கள் தங்களைச் சீர்திருத்திக்கொள்ள வேண்டும். உலகளாவிய அளவில் முஸ்லிம்களுக்கு எதிராக தீட்டப்படும் சதிகளை உணர்ந்து தங்களுக்கிடையேயான சில்லறைப்பிரச்சனைகளை பின்னுக்கு வைத்துவிட்டு ஒன்றுபட முன்வர வேண்டும். இப்பணி "இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெறுவதற்கே" என்பதை இயக்கங்கள் உணர்ந்து தூய இஸ்லாத்தின் மாபெரும் எழுச்சிக்கு வித்திட இறைவனை இறைஞ்சிடுவோம். கட்டுரையாக்கம்: இப்னுஇலியாஸ் (மூலம்: அல்ஹஸனாத், மார்ச்-2006)
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (4)
![]()
சமுதாயத் தலைவர்களும் ஈமெயில் வீரர்களும் படித்து, சிந்தித்து, சீர்திருந்தத் தக்கக் கருத்துகளை அல்ஹஸனாத்தில் எழுதிய இபுனு இல்யாஸ் அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!
1
July 11, 2006 17:43
இக்கட்டுரை அல்ஹஸனாத் சஞ்சிகையில் தலையங்கமாக தீட்டப்பட்டது.
அதில் இதனை எழுதியவர் இப்னு இல்யாஸ் அவர்கள் என்பதை இந்த தளத்தை பார்வையிட்ட பிறகு தான் தெரிய வந்தது.
நல்ல கருத்தாழமுடன் எழுதப்பட்ட ஆக்கம்.
இப்னு இல்யாஸ் அவர்கள் தொடர்ந்து இது போன்ற ஆக்கங்களை தர கோருகிறோம்.
சத்திய மார்க்கம் தளம் ஜமாஅத் செயல்படும் அதே பாணியில் யாரையும் ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்யாமல் நடுநிலையாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கது.
நீங்கள் ஏன் ஜமாஅத்தின் தளமாக உங்களை காட்டிக் கொள்ளவில்லை.
2
July 12, 2006 05:34
அல்ஹஸனாத் மார்ச்(2006) இதழில் தலையங்கமாக தீட்டப்பட்ட கருத்தை மையமாக கொண்டு சிறிய மாற்றங்களுடன் சத்திய மார்க்கம் தளத்திற்கு நான் அனுப்பிய கட்டுரை நிர்வாகிகளால் இங்கு பதிக்கப்பட்டமைக்கு நன்றி.அல்ஹஸனாத்தின் ஆசிரியர் கருத்தாக வந்ததை வாசகன் என்ற வகையில் படித்து நல்ல விஷயத்தை அனைவருக்கும் அறிய தர வேண்டும் என்ற நோக்கத்திலேயே சிறு மாற்றங்களுடன் அனுப்பி இருந்தேன்.அல்ஹஸனாதின் தலையங்கத்தை தழுவி எழுதப்பட்டதே இக்கட்டுரை.இதை தவிர அல்ஹஸனாத்தின் தலையங்கத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை அன்புடன் கூறிக்கொள்கிறேன்.
3
July 12, 2006 07:39
சகோ. வஹ்ஹாபி மற்றும் அருளடியான் அவர்களுக்கு தன்னிலை விளக்கமளித்த சகோ. இப்னு இல்யாஸ் அவர்களுக்கு நன்றி.
சத்தியமார்க்கம்.காம் எந்த ஓர் அமைப்பையோ அல்லது இயக்கத்தையோ சார்ந்ததல்ல என்பதை இத்தளத்திற்கு வருகை தரும் சகோதரர்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகின்றோம். (காண்க: http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=150&Itemid=40 )
சத்தியமார்க்கம்.காம் தளத்திற்கு அனுப்பித்தரப்படும் ஆக்கங்கள் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் பட்சத்தில் நிர்வாகத்தினரால் பரிசீலிக்கப்பட்டு எவரையும் தரம் தாழ்ந்து விமர்சிக்காமல் ஆக்கப்பூர்வமான வகையில் இருப்பின் அது உடனடியாக பிரசுரிக்கப்பட்டு வருகிறது.
எனவே சகோதரர்கள் மீண்டும் சத்தியமார்க்கத்தை ஏதாவது இயக்கத்தோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
4
July 12, 2006 08:46
கருத்து எழுதுக :
|