சத்தியமார்க்கம்.காம்

இரண்டு யூதர்கள்! print Email
நற்சிந்தனைகள் - வாழ்வியல்
சனி, 21 ஆகஸ்டு 2010 02:44

வர்கள் சாமுவேல் மற்றும் பெஞ்சமின். நெடுந்தொலைவு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இரு யூதர்கள். ஒரு பாலைவனத்தைக் கடந்து செல்லும்போது ஏற்பட்ட கடும் மணற்புயலால் தம் திசையைத் தொலைத்து விட்டனர்.

 


எங்கு அலைந்து தேடியும் செல்ல வேண்டிய வழி புலப்பட வில்லை. கையில் கொண்டு வந்திருந்த உணவும் நீரும் தீர்ந்து விட்டதால் பசியின் பிடியில் சிக்கித் தவித்தனர்.

கிட்டத்தட்ட சுய நினைவை இழக்கும் தருவாயில், விடிகாலை நேரத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி கண்ணில் பட்டது கண்டு மகிழ்ச்சியடைந்தனர் இருவரும். தொழுகைக்கான பாங்கு சப்தம் அந்த இடத்திலிருந்து கேட்க, நெருங்கிச் சென்று பார்த்தபோது அது ஒரு பள்ளிவாசல் என்பதைக் கண்டனர்.


ஏதோ உணர்ந்தவனாக சாமுவேல் கூறினான். "பெஞ்சமின்.. இதோ பார். இது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்பது நிச்சயம். நாம் முஸ்லிம்கள் என்று நடித்தால் மட்டுமே உணவு கிடைக்கும். எனவே, என் பெயரை முஹம்மத் என்று சொல்லப்போகிறேன்."

பெஞ்சமின் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. "என் பெயர் பெஞ்சமின் தான். பொய் சொல்லி அவர்களை ஏமாற்றி உண்ண விரும்பவில்லை!"

களைத்துத் தளர்ந்து போய் பள்ளிவாசலுக்குள் புகுந்த இருவரையும் கனிவோடு வரவேற்ற இமாம், அவர்களிருவரின் பெயர், விபரங்களை விசாரித்தார்.

"நான் முஹம்மத்" என்றான் சாமுவேல்

"நான் பெஞ்சமின், நானொரு யூதன்" என்றான் பெஞ்சமின்

அவர்களின் உருவத்தை வைத்தே பசியில் இருப்பதை அறிந்து கொண்ட இமாம், பள்ளிவாசலின் உட்புறம் திரும்பி உதவியாளர்களை அழைத்தார்.

"தயவு செய்து உடனடியாக பெஞ்சமினுக்கு உணவு கொண்டு வாருங்கள்"

அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருந்த சாமுவேலிடம் இமாம் கூறினார். "முஹம்மத், இது ரமளான் மாதம் என்பதை நீங்கள் அறிவீர்கள்"

- அபூ ஸாலிஹா

(ஆங்கில சொற்பொழிவு ஒன்றின் தோராய தமிழாக்கம்)


Trackback(0)
கருத்துக்கள் (25)add comment
0
mohamed ali jinnah:
அருமையான கதை ..படிக்கும் பொழுது என்ன முடிவு என்று அறிய முடியால் இருந்து நல்ல முடிவுடன் அமைந்த கதை.மாசா அல்லாஹ். MASAALLAH
1

August 21, 2010 09:51
0
mohamed asmeen:
story is well but,where is end
2

August 21, 2010 13:28
0
Haseena:
சாமுவேல் போலவே சற்றும் எதிர்பார்க்காத சம்மட்டி அடியாக இருந்தது முடிவு. மிகவும் அருமை.

முஸ்லிம்கள் என்றால் பிற மதத்தினரிடம் மனித நேயமற்றவர்கலாக இருப்பார்கள் என்ரு மிக தவறாக கருதப்படும் எண்ணத்திர்கு விடையாக இருக்கிறது இந்த சிந்தனை.
3

August 21, 2010 14:38
0
peacfulmuslim:
கதை கதையாகவே நம் வாழ்க்கை போயிடுமோ என பயம்...... இதே மாதிரி யூதனும் , நாசரானியும் இந்துவும் கூட கதை சொல்கிறார்கள்..... அவர்கள் முஸ்லிம்களுக்கு உதவுவது போல் கதை என்ன திரைப்படமே எடுத்து பிரச்சாரம் செய்கின்றார்கள்......
..மேலும்,

இந்த கதையில் வரும் இமாமுக்கு முஸ்லிம்களுக்கு பயணத்தில் நோன்பு கடமை இல்லை என்று தெரியாத அளவுக்கு அறிவ்வீனமா ? யார் இதை எழுதியது..... இவற்றை எல்லாம் சொற்பொளிவாற்றி என்ன சாதிக்கப் போகிறார்கள்....
இஸலாம் பிரக்டிகல் ஆக வரணும்..
4

August 21, 2010 18:59
0
Abdulhameed:
நல்ல சிந்தனை முன் வைக்கப்பட்டுள்ளது. எழுதியவருக்கு வாழ்த்துக்கள்!

இங்கே peacfulmuslim என்ற பெயரில் எழுதியவருக்கு,

இவர்களும் சொல்கிறார்கள் அவர்களும் சொல்கிறார்கள் என்ற உங்களின் புலம்பல் மட்டும் புரியுது... அப்படியே ஆக்கப் பூர்வமா என்ன செய்ய வேணும் என்பதையும் புரியும்படி சொன்னா நல்லா இருக்கும்.

இமாமுக்கு அறிவீனமா என்று போடு போட்டீர்கள். இந்த சம்பவத்தில் வரும் நிகழ்ச்சி இன்னும் தொடர்வது போன்று காட்டப்பட்டிருந்தாலும் "யூதன் என்று சொன்னால் உணவு கொடுக்க மாட்டார்கள் முஸ்லிம்கள்" என்ற நச்சுக் கருத்துக்கு நச்சென்று அடி விழுந்துள்ளதே?

அப்புறம் பிராக்ட்டிகல் இஸ்லாம் பற்றி நீங்களே ஒரு சிந்தனை எழுதி இந்த தளத்துக்கு அனுப்புங்களேன், படித்து பார்த்து விட்டு வாசகர்கள் என்ன கமெண்ட் அடிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

5

August 22, 2010 04:09
0
Mohammed Maheen:
ஆர்வத்தில் கதையாசிரியர் அவ்வாறு எழுதிவிட்டார் போலும். நீங்கள் பயணியாயிற்றே? நோன்பா? என்று இமாம் முஹம்மதிடம் கேட்பதாக ஒரு வார்த்தை எழுதி இருக்கலாம். சகோ.PeacefulIslam அவர்கள் கோபத்துடன் எழுதியது போல் தோன்றுகிறது. தங்களது எழுத்துக்களில் இஸ்லாம் பிராக்டிக்கலலாக இல்லையே? பயணிகளுக்கு நோன்பை விட அனுமதி இருக்கின்றதே(சலுகை) தவிர பயணம் செய்தும் ஒருவரால் நோன்பு இருக்க இயலுமென்றால் அதற்கு தடையேதும் இல்லை. இமாம் அறிவீனனா? இதை யார் எழூதியது? என்ன சாதிக்க போகிறார்கள் என்ற வாசகங்கள் தேவை தானா சகோதரரே? நமது வார்த்தைகள் பிறரது உள்ளத்தில் உத்வேகத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்த வேண்டுமே தவிர வெறுப்பை உருவாக்கிவிடக் கூடாது. அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
6

August 22, 2010 05:02
0
Mohammed Maheen:
peaceful Islam என்பதை Peace Ful Muslim என மாற்றிக் கொள்ளுங்கள்.
7

August 22, 2010 05:04
0
அல் அமீன்:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சகோதரர் மாஹீன் அவர்களின் கருத்து மெச்சத்தக்கது. எதிலும் குறைகண்டுபிடித்து விமர்சனம் செய்து கொண்டிருப்பதே வாழ்க்கையாகக் கொண்டிருப்பதை விட, ஆக்கப்பூர்வமாக "இவ்வாறு இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்" என்று எடுத்துக் கூறுவது பலருக்குப் பயன்விளைவிப்பதோடு நமக்கும் நன்மை வந்தடையும்.
8

August 22, 2010 15:16
0
ஹசன் சாப்:
சலாம்

அழகானதகவும், சிந்திக்ககூடியதகவும் இருந்தது. இன்ஷ அல்லாஹ் இதைப் போல் மென்மேலும் எதிர்ப்பர்கிரோம்.
9

August 22, 2010 19:23
0
நசீம்:
திடிர் என்று முடிந்தாலும் பல்வேறு சிந்தனைகளை எழுப்பும் வண்ணம் துல்லியமாக இச்சம்பவம் முன் வைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவருக்கு ஜஸாக்கல்லா ஹைர்.

இமாம் அடுத்து என்ன சொல்லியிருப்பார் என்று சொல்லி முடித்திருந்தால், அதற்கு சாமுவேல் என்ன சொன்னார் என்று சொல்லவே இல்லையே என்பது போன்ற அதிருப்திக் கேள்விகள் என்றென்றும் இருக்கும். சொல்ல வந்த நோக்கம் மனதில் ஒட்டும்படி தெளிவாக உள்ளது.

வாழ்த்துக்கள்.
10

August 22, 2010 22:17
0
peacfulmuslim:
||||peaceful Islam என்பதை Peace Ful Muslim என மாற்றிக் கொள்ளுங்கள்.|| maheen.....

I not agry brother.......... I fed of of reading such and such artcles in so many occasiions which is being writen vise versa so that i wrote this comment..

My ID NAME NOT AS YOU WROTE ..But its ALREADY AS YOU SUGGESTED that is peacefulmuslim..

..PL,BROTHERE b4 write have a good concentration...... MAY ALLAAH GUIDE ALL........

11

August 23, 2010 04:01
0
peacfulmuslim:

இரண்டு முஸ்லிம்கள்......... ( யூதர்களின் காருண்யம் )

அவர்கள் அத்னான் மற்றும் யூசுப் நெடுந்தொலைவு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இரு முஸ்லிம்கள் ஒரு பாலைவனத்தைக் கடந்து செல்லும்போது ஏற்பட்ட கடும் மணற்புயலால் தம் திசையைத் தொலைத்து விட்டனர்.

எங்கு அலைந்து தேடியும் செல்ல வேண்டிய வழி புலப்பட வில்லை. கையில் கொண்டு வந்திருந்த உணவும் நீரும் தீர்ந்து விட்டதால் பசியின் பிடியில் சிக்கித் தவித்தனர்.

கிட்டத்தட்ட சுய நினைவை இழக்கும் தருவாயில், விடிகாலை நேரத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி கண்ணில் பட்டது கண்டு மகிழ்ச்சியடைந்தனர் நெருங்கிச் சென்று பார்த்தபோது அது ஒரு யூத குடியிருப்பு என்பதைக் கண்டனர்.

ஏதோ உணர்ந்தவனாக யூசுப் கூறினான். "ATHNAAN , .. இதோ பார். இது யூதர்கள் வசிக்கும் பகுதி என்பது நிச்சயம். நாம் யூதர்கள் என்று நடித்தால் மட்டுமே உணவு கிடைக்கும். எனவே, என் பெயரை பெஞ்சமின் என்று சொல்லப்போகிறேன்."

அத்னான் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. "என் பெயர் அத்னான் தான். பொய் சொல்லி அவர்களை ஏமாற்றி உண்ண விரும்பவில்லை!"

களைத்துத் தளர்ந்து போய் அங்கிருந்த ஓர் யூத ஆலயத்தில் புகுந்த இருவரையும் கனிவோடு வரவேற்ற ஆலயக் குறு ரப்பாய் அவர்களிருவரின் பெயர், விபரங்களை விசாரித்தார்.

"நான் பெஞ்சமின் " என்றான் யூசுப்.......

"நான் அத்னான் நானொரு முஸ்லிம் " என்றான் அத்னான் ......

அவர்களின் உருவத்தை வைத்தே பசியில் இருப்பதை அறிந்து கொண்டரப்பாய் , ஆலயம் உட்புறம் திரும்பி உதவியாளர்களை அழைத்தார்.

"தயவு செய்து உடனடியாக அத்னானுக்கு உணவு கொண்டு வாருங்கள்"

அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருந்த யூசுபிடம் கூறினார். "பெஞ்சமின் , இது யோம் கிப்பூர் ( FASTING DAY ) நாள் என்பதை நீங்கள் அறிவீர்கள்"

இப்போது இதை யூதர்கள் பேச்சுக்களில் , கதைகளில் எழுதும்போது , உங்கள் கருத்து என்ன ??


smilies/grin.gif
12

August 24, 2010 12:01
0
fathima johra:
இந்தக் கதை எனக்கு பிடித்துள்ளது.இத என் வலைத்தளத்தில் பதிந்துள்ளேன்,நீங்கள் அனுமதி தருவீர்கள் எனும் நம்பிக்கையோடு

http://anboduungalai.blogspot.com/
13

August 24, 2010 12:43
0
Seasons Nidur:
அருமையான இந்த சிந்தனை peacfulmuslim போன்றவர்களுக்கு ஏன் குத்துகிறது குடைகிறது எனத் தெரியவில்லை. இச் சிந்தனையை நன்றியுடன் மீள்பதிவு செய்துள்ளோம்.

http://seasonsnidur.wordpress.com/2010/08/21/இரண்டு-யூதர்கள்
14

August 24, 2010 16:45
0
peacfulmuslim:
NIDUR ,bro,

"" அருமையான இந்த சிந்தனை SEAONS NIDUR போன்றவர்களுக்கு ஏன் குத்துகிறது குடைகிறது எனத் தெரியவில்லை. ""

Bro Nidur, whatever you hear don just spread it blindly..... think it deeply on the meaning of it..... so tha i can post the same comment by you reverse........... ISLAAM NEEDS NO STUPID TALES......... Bicos others too make the same.........hp you wil understand...........
15

August 25, 2010 07:45
0
IndianMuslim:
Perhaps the article is good enough, But it make me laugh louder by seeing "Reverse" thoughts all over this comments section. He earlier reversed the Yahoodhi names & now trying to post the comments.

Come on brothers, Commenting is easy ... YOU act provocative!

It is highly recommended for this site admins to accept one story from "peacfulmuslim"
Let'z see how he handle "Forward" approach.
16

August 25, 2010 22:41
0
Mohammed Abuthahir:
சாமுவேல் போலவே சற்றும் எதிர்பார்க்காத சம்மட்டி அடியாக இருந்தது முடிவு. மிகவும் அருமை.

முஸ்லிம்கள் என்றால் பிற மதத்தினரிடம் மனித நேயமற்றவர்கலாக இருப்பார்கள் என்ரு மிக தவறாக கருதப்படும் எண்ணத்திர்கு விடையாக இருக்கிறது இந்த சிந்தனை.
3
17

August 26, 2010 05:51
0
AC Muhammad Khadhafi (sir lanka):
very good story.
18

August 26, 2010 13:56
0
mohamed:
peaceful முஸ்லிம் சொல்வது மிகச் சிறந்த கருது . கதைக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை. இன்னும் இதுபோன்ற கதைகளை வெளியிட்டால் உங்கள் தளத்தின் நம்பகத் தன்மை போய்விடும். நானும் உங்கள் தளத்திற்கு வருவதை நிறுத்தி விடுவேன்.சலாம்.
19

August 28, 2010 18:24
0
Mohamed Mahir:
அருமையான கருத்தினை முன்வைக்கும் நிகழ்ச்சி.
சிறப்பான பதிவினை வெளியிட்டிருக்கும் சத்தியமார்க்கம் தளத்தினருக்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து இது போன்ற பதிவுகளைத் தாருங்கள். நன்றி.
20

August 29, 2010 03:51
0
mohamed:
சீசன் நீடூர் அவர்களுக்கு peacefulmuslim இஸ்லாத்தை மிகச் சிறந்த முறையில் அறிந்து வைத்திருப்பதால் தான் இந்த கதைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏனென்றால் இஸ்லாம் கதைகளால் வளரவில்லை. உண்மை சம்பவங்கள் இறைவனின் வார்த்தைகள் நபி ஸல் அவர்களின் உண்மையான வாழ்க்கை இவைகளால் தான் வளர்கிறது. உங்களை போன்றவர்களுக்கு தான் கதைகள் தேவைப்படுகிறது. முதலில் இஸ்லாத்தின் தனித்தன்மையை அறிய முற்படுங்கள். நமக்கும் மற்ற சமயத்தவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. அவர்கள் தான் இதுபோன்ற கட்டுக் கதைகளால் அவர்கள் சமயத்தை வளர்க்கிறார்கள்.
21

August 30, 2010 21:28
0
mohamed:
சத்திய மார்க்கம் தளத்தினருக்கு அன்பான வேண்டுகோள். உங்கள் தளத்தில் இதுபோன்ற கதைகளை பிரசுரிக்காதீர்கள். ஏனென்றால் உங்கள் தளத்திலேயே இஸ்லாத்தின் பெயரால் கட்டுக் கதைகள் என்று ஒரு தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளீர்கள். இப்போது நீங்களும் அவர்களை போன்று ஆகிவிட முயற்சிக்கிறீர்களா? பார்க்க http://satyamargam.com/301
22

August 30, 2010 21:39
0
Karthik:
எது எப்படியோ peacefulmuslim & mohamed போன்றவர்களினால் சாதாரண இந்த கதை கூட பெரும் ஹிட்டாகி விட்டது. நல்லா இரிங்க ;-)
23

August 31, 2010 16:47
0
peacfulmuslim:
enna 100 naal oduma ? haa..smilies/grin.gif
24

September 01, 2010 11:19
0
வ.சாதிக் பாஷா :
நான் peacefulmuslim - ஐ வழிமொழிகிறேன். ஆனால் அவர் பயன்படுத்திய கடினமான் சொற்பிரயோகத்தை ஏற்கவில்லை. நிச்சயமாக இஸ்லாம் கதைகளால் வளரவில்லை. இஸ்லாத்தை அழிக்க படை நடத்தி வந்த விரோதிகளுக்கு அவர்கள் போர்க்கைதிகளாக பிடிபட்ட பிறகும் அவர்களுக்கு வயிறு நிறைய ரொட்டிகளை உண்ணக் கொடுத்துவிட்டு முஸ்லிம்கள் அனைவரும் வெறும் பேரீச்சம் பழங்களை உண்டனர் என்ற உண்மையை எழுதுங்களேன்.
25

February 28, 2011 14:31

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:190 உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு வாழ்வியல் இரண்டு யூதர்கள்!
Twitter
RSS
YouTube
English